Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலர் தினத்தில் எழுதிய கவிதை...

Featured Replies

இது எதோ ஒரு காதலர் தினத்தில் எழுதிய கவிதை ....

பெண்ணென்று பிறந்து

கண் முன்னே

அங்கம் அங்காங்கே

காட்டி நடந்து

கொல்லாமல் கொல்கின்றார்

அம்மா

கொழும்பில்

எம் குலத் தமிழ்க்

கிளிகள்!

பிரான்ஸ்,

ஜேர்மன்,

சுவிஸ் என்று

பறந்து

கொட்டும்

பனியில் கொட்டாவி

விடக்கூட மறந்து

அண்ணனுடன்

அப்பா சேர்த்து

அனுப்பும் பணம்

கையில்லாச் சட்டை

வாங்கவும்

அங்கம் கொப்பளிக்கும்

ஆடை வாங்கவும்

உதட்டுக்குச்

சாயம் அடிக்கவும்

இன்னும் பலப்... பல...

செய்யவும்

வீணாகக்

கரைகின்றது.

இந்த 'மேக்கப்' பின்

பின்னால் உள்ள

உண்மை

உருவம் அறியாது

நீண்ட

'கியூ' வில் நிற்கின்றாரம்மா

பாவம் எம்

இளைஞர்!

சில நாள்

பின்தொடர

'சீ பாவம்' என

அவளும் புன்னகைக்க

பரிதாபத்தில்

தொடங்கியது

காதல்

பிறகென்ன

கையோடு கை

சேர்ந்து நடக்குமளவு

நெருக்கம் வந்தது.

பஸ்சில் ஏறினால்

அருகருகே

உரசி இருத்தல்

கிசு கிசுப்பாய்

காதல் வசனம்

இன்னும் சில

சொல்ல முடியாத

சங்கதிகள்

பாவம்

பக்கத்தில்

இருப்பவர்

கூச்சத்தில் நெளிவார்.

காதலுக்கு

கண்ணில்லை என்பது

சரிதான்!

கோல்பேஸ்

வந்ததும்

கையில் குடை

விரியும்

ஒதுக்குப் புறமாய்

அமர்ந்து

கொள்வார்கள்

என்ன செய்வார்களோ

யாம் அறியோம்!

அது

மட்டுமா?

திரையரங்கில்

நுழைந்து பாருங்கள்

வரிசையாய்

இளஞ்ஜோடிகள்!

மனம் படமா

பார்க்கும்?

எது காதல்

என்றறியாது

ஏதேதோ

செய்கின்றார்

ஐயகோ

மோகத்தில்

அவிகின்றார்.

கண்டதும்

கை அணைப்பது தான்

காதலா?

வாய் நிறைய

பொய் உரைப்பது தான்

காதலா?

கை நிறைய

காசு கேட்பது தான்

காதலா?

கட்டி அணைத்து

முத்தம் தருவது தான்

காதலா?

கறுப்பென்றும்

வெள்ளையென்றும்

நிறம் பார்த்து

வருவது தான்

காதலா?

எது காதல்?

இன்று நாம்

செய்வதெல்லாம்

உண்மைக்

காதலா?

சத்தியமாய் இல்லை

இன்றைய காதல்

காமத்தின்

கருக்கட்டல்!

பின்

எது தான்

காதல்?

அன்பெனும் கயிறு

திரித்து?

இரு இதயம் கட்டி

இணைத்து?

வெண்பனி போல

மெல்ல நெஞ்சம்

உருகி,

கடலென பரந்து

வருவதே காதல்!

கவிதை நன்று

காவியக் காதலை ஐயா

இக் கழுதைகளிடம் எதிர்பார்க்கலாமோ.. :blink:

  • தொடங்கியவர்

கவிதை நன்று

காவியக் காதலை ஐயா

இக் கழுதைகளிடம் எதிர்பார்க்கலாமோ.. :lol:

விகடகவி உங்கள் விகடம் நன்று. கழுதைகள் என்ற சொல்லிவிட்டீர்கள்.... காலால் அடி வாங்க நான் தயாரில்லை... :rolleyes:

அந்த கழுதைகளில் நானும் ஒருவன்..

கழுதையினம் ஒன்றை ஒன்று உதைக்காதென்று சொல்லிவிட்டேன்..

உதைக்கும்? :rolleyes:

  • தொடங்கியவர்

ஆக மொத்தத்தில் என்னையும் கழுதை என்று சூசகமாக (நாசுக்காக) சொல்கிறீர்களா விகடகவி? சரி இருந்திட்டுப் போவம்.... உதைக்காது தான் இப்ப... (திருப்பி உதைத்தாலும் என்ற பயத்தில.... ) :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக இருக்கிறது கவிதை...நீங்கள் சொல்வது நடக்கிறது...உண்மையை தைரியமாக சொல்லியிருக்கிறீர்கள்...யாரி

Edited by naathan

கவிதை நன்றாக உள்ளது. ஆனால்

அதை விட

கவிக்கும்---- விகடகவிக்கும்

இடையில் நடக்கும் வார்த்தைகள்

இன்னும் நன்றாக உள்ளது.

  • தொடங்கியவர்

என்ன மருமகன் நீங்க.... விலக்கு தீர்பீங்க என்று பார்த்தால் உசுப்பேத்தி விடுறீங்க... பிறகு நாங்கள் உண்மையாகவே உதைச்சுக் கொண்டாலும் கொள்ளலாம்.... நாங்க பேசினது உங்களுக்கும் கேட்டுவிட்டதா? (விகடகவி அப்ப இவரும் எமக்கு தெரிஞ்சவரோ? )

  • கருத்துக்கள உறவுகள்

உங்க கவிதை அழகு. எது காதல் எண்டு தான் தெரியல

காதல் இதயக்கனம் கேட்டால்

காவியக்காதல்..

கையிருப்பின் கனம் கேட்டால் கழுதைக்காதல்..

உடல்க்குறை காணாத காதல் காவியக்காதல்..

உடல்க்குறையை சொல்லும் காதல் கழுதைக்காதல்..

காவியக்காதலைச் செய்பவர்கள்..

நாயகர்கள்..

கழுதைக்காதலைச் செய்பவர்கள்

கழுதைகள்..

மெய் சொன்னால்..

நானனும் ஒரு கழுதை..

நீங்கள் மெய் சொல்லுங்கள் எத்தனை நாயகர்..

எத்தனை கழுதைகள்.. :D

  • தொடங்கியவர்

விகடகவி,

உங்க எண்ணங்களுடன் நான் நிறையவே உடன்படுறன்....

ஆரோக்கியமான சொல்லாடலுக்கு நன்றி...

//உங்க கவிதை அழகு. எது காதல் எண்டு தான் தெரியல //

காபி...

காதல்

எதுவென தெரியாதவரை

காப்பியம்

தெரிந்தபின் வெறும்

காகிதம்!

அழகான விசயங்கள், ரசனைக்குரிய விசயங்கள் எல்லாம் எட்ட இருந்து ஆகா ... என்று வியக்்குறவரை...

அருகே போனாலோ அசிங்கமாகி 'சீ...' என்று சினக்க வைக்கலாம்....

ஆகவே எது காதல் என்று தெரியாதவரை அது அருமந்த பொருள்.... தெரியமாலே இருக்கட்டுமன்....

இது எதோ ஒரு காதலர் தினத்தில் எழுதிய கவிதை ....

அன்பெனும் கயிறு

திரித்து?

இரு இதயம் கட்டி

இணைத்து?

வெண்பனி போல

மெல்ல நெஞ்சம்

உருகி,

கடலென பரந்து

வருவதே காதல்!

நல்ல கவி ரூபன் அண்ணா நீங்கள் சொன்ன காதலுக்காக தான் நான் காத்திருக்கிறேன்

:D

  • தொடங்கியவர்

காத்திருப்பதற்கு ஒரு கால எல்லை வைச்சுக்கொண்டு காத்திருங்கள் ஜமுனா.... வாழ்த்்துக்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

கவிருபன் உங்கள் கவி நன்றாக இருக்கிறது.

ஆனால் நானும் என் கருத்தைச் சொல்கிறேனே!

காதலிக்கும்போது கொஞ்சம் அப்படி யிப்படி இருப்பது சகஜமானதே!

கடற்கரைக்குப் போவதும், சனமில்லாத தியேட்டருக்குப் படம் பார்க்கப் போவதும் கொஞ்சம் குறும்பு பண்ணத்தான் என இருவருக்குமே தெரிந்துதான் போகிறார்கள். இவையெல்லாம் மரங்களில் பொய்ப்பூக்கள் பூக்குமே அதைப் போன்றதே. பின் இதைக் கடந்து கலியாணம் செய்து ஒருத்தர் மீது ஒருத்தர் அன்பு வைத்து, பிள்ளைகள் கண்டு பாசம் பொழிந்து வாழ்க்கையில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களுக்கு முகங்கொடுத்து அப்போதும் அன்பு மாறாமல் பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்து அவர்கள் சுயமாக நிற்கும்போது இவர்கள் மனதில் ஓர் நிம்மதி வருமே அப்போதுதான் அவர்களது காதல் பூவின் நிஜமான மொட்டு கருக்கட்டுகிறது. பிறகென்ன காதல் நந்தவனம்தான். :D:D

  • தொடங்கியவர்

Suvy உங்கள் கருத்துக்கு முதல்ல நன்றி .... என் வருத்தமெல்லாம் அப்படி இருந்தபின்னும் மாறுகிற சிலர் பற்றியது....

அன்பெனும் கயிறு

திரித்து?

இரு இதயம் கட்டி

இணைத்து?

வெண்பனி போல

மெல்ல நெஞ்சம்

உருகி,

கடலென பரந்து

வருவதே காதல்!

ஆஹா இதுதான் காதலா ? ஹிஹி நன்னாயிருக்கு உங்க கவிதை...!

வாய் நிறைய

பொய் உரைப்பது தான்

காதலா?

உஹும் இதுதான் இப்ப கூட நடக்குது :lol: B)

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் கவிரூபன்!

உங்கள் கவிதை ஒரு சினிமாப் படத்தைப் பார்தமாதிரி உள்ளது.

அது சரி இந்தக் கவிதையில் உங்கள் பாத்திரம் என்னவோ?

ரொம்ப அனுபவித்து எழுதியமாதிரியுள்ளது.

கொட்டும்

பனியில் கொட்டாவி

விடக்கூட மறந்து

அண்ணனுடன்

அப்பா சேர்த்து

அனுப்பும் பணம்

கையில்லாச் சட்டை

வாங்கவும்

அங்கம் கொப்பளிக்கும்

ஆடை வாங்கவும்

உதட்டுக்குச்

சாயம் அடிக்கவும்

இன்னும் பலப்... பல...

செய்யவும்

வீணாகக்

கரைகின்றது

நிஷமான வரிகள்.

  • தொடங்கியவர்

வல்வை மைந்தன் (உங்கள் பேரில எனக்கு ஒரு மயக்கம் உண்டு... கவர்ச்சியான பேர்.... ) அது இருக்க... பாராட்டுக்கு நன்றி.... பார்க்கிற விசயத்தை பதிவு செய்தனே தவிர வேறொன்றுமில்லை... (ரசிக்கவும் செய்தன் என்பதை மறந்துவிடுங்கள்.... அட எனக்கு கிடைக்கலையே என்ற ஆதங்கம் வேற.... அதையெல்லாம் மறந்து விடுங்கள்..... ஹா.......ஹா.......... ) என் பாத்திரம் என்ன என்றால் எப்படிச் சொல்ல.... ரசிகன் (ஆகா ரசிகன்... என்ற பாட்டு நினைவுக்கு வந்தால் என் தப்பில்லை.... )

என்ன மருமகன் நீங்க.... விலக்கு தீர்பீங்க என்று பார்த்தால் உசுப்பேத்தி விடுறீங்க... பிறகு நாங்கள் உண்மையாகவே உதைச்சுக் கொண்டாலும் கொள்ளலாம்.... நாங்க பேசினது உங்களுக்கும் கேட்டுவிட்டதா? (விகடகவி அப்ப இவரும் எமக்கு தெரிஞ்சவரோ? )

அப்படி இல்லை கவி உங்களுக்கும்

விகடகவிக்கும் இடையே இடம் பெறும்

சொல்லாடல்கள் மிகவும் ரசிக்கத்தக்கது.

எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

(அதுக்காக சண்டை பிடிக்காதிங்கோ

இது என்னுடைய அன்புக் கட்டளை

மீறினால் தெரியும் தானே???? )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.