Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்

spacer.png

தேர்தல் காலங்களில் 13 ஆவது திருத்தம் குறித்து கதைப்பது வழமையாகிவிட்டபோதும் இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.அதிகாரத்தைக் கோரும் தமிழ் அரசியல்வாதிகளோ, கொழும்பு வந்துசென்று சொகுசாக வாழ்கின்றனர் என்றும் எனவே, சாதாரண மக்கள் பக்கம் நின்றே இந்தப் பிரச்சினைக்கான தீர்வை காணவேண்டும் என்றும் குறிப்பிட்ட ஞானசார தேரர்இதற்காக நாமும் குரல் எழுப்புவோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

நிர்வாகத்தை வழங்குவதா, அதிகாரங்களைப் பகிர்வதா என்பது பற்றியும் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் எத்தனை வருடங்கள் இதற்கான பேச்சுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன என கேள்வியெழுப்பிய அவர், இதனால் சாதாரண தமிழ் மக்களே பாதிக்கப்படுகின்றனர்.இந்த நாட்டை இதுவரையில் சிங்கள தலைவர்களே நிர்வகித்துவந்தபோதும் அவர்களுடன் கூட்டணி வைத்து தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வை காண்பதற்கான வாய்ப்பை தமிழ்த் தலைவர்கள் தவறவிட்டனர் என்றும் எனவே, இந்த நிலைமைக்கு சிங்கள மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.அதேவேளை, 13 அல்லது 13 பிளஸ் என்பதெல்லாம் முக்கியம் அல்ல என குறிப்பிட்ட அவர் தமிழ் மக்களுக்கு நியாயத்தை வழங்குவதற்கான பேச்சுக்களை ஆரம்பித்து, இதோ, இந்தத் தீர்வைத்தான் எம்மால் வழங்க முடியும் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்-மக்களின்-பிரச்சின-15/

  • கருத்துக்கள உறவுகள்

இவரது முகப்புத்தக கணக்கினை, அந்நிறுவனம் மூடி விட்டது.

இது குறித்து, இரத்தின தேரர் தலைமையிலான குழு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.

கோத்தாவின் கணக்கு கொஞ்சம் தப்பு கணக்கா போகிறது அதானால் தான் இப்ப வந்து கெஞ்சிரார். 2/3 ஆவது எடுக்க வேணும் அல்லது அதற்கு எடுக்க வேணும் இல்லாவிட்டால்  எதிர்கட்சியும் கட்சி தாவுகிரவர்களும் சேர்ந்து 2/3 எடுத்து கோத்தாவை பதவி நீக்கம் செய்தாலும் செயலா அதற்கு தான் இப்பவே நாட்டை இராணுவமயப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

கோத்தாவின் கணக்கு கொஞ்சம் தப்பு கணக்கா போகிறது அதானால் தான் இப்ப வந்து கெஞ்சிரார். 2/3 ஆவது எடுக்க வேணும் அல்லது அதற்கு எடுக்க வேணும் இல்லாவிட்டால்  எதிர்கட்சியும் கட்சி தாவுகிரவர்களும் சேர்ந்து 2/3 எடுத்து கோத்தாவை பதவி நீக்கம் செய்தாலும் செயலா அதற்கு தான் இப்பவே நாட்டை இராணுவமயப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

மகிந்தாவின் கணக்கு தான் 2/3. அதன் முலம் அரசியல் அமைப்பினை மாத்தி, தம்பியை ராஜினாமா செய்ய வைத்து, பிரதமர் ஜனாதிபதியாகலாம் என்ற சட்டப்படி, தேர்தல் இல்லாமல், மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக கனவு காண்கிறார். இதன்மூலம், கோத்தாவின் மகன் இல்லை, மகிந்தா மகன் நாமல் 2025 தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்யமுடியும் என்பது அம்மணி, சிராணி ராஜபக்சேவின் வியூகம்.

இதுதான் நிலை. கோத்தாவுக்கு 2/3 விருப்பமில்லை அதனால் தான், தனக்கு ஒரு பாதுகாப்புக்காக ராணுவத்தினை கொண்டுவாறார். 

இலங்கையில் பதவிக்காக, மகன்மார் தந்தையும், பின்னர் அந்த சகோதரர்கள் ஒருவரை ஒருவர் அழித்ததையும் வரலாறு சொல்கிறது.

இந்த சகோதரர்களுக்கு போனமுறை பொது எதிரியாக புலிகள் இருந்தார்கள். இம்முறை தமக்குள் அடிபடபோகின்றனர்.

4 minutes ago, Nathamuni said:

மகிந்தாவின் கணக்கு தான் 2/3. அதன் முலம் அரசியல் அமைப்பினை மாத்தி, தம்பியை ராஜினாமா செய்ய வைத்து, பிரதமர் ஜனாதிபதியாகலாம் என்ற சட்டப்படி, தேர்தல் இல்லாமல், மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக கனவு காண்கிறார். இதன்மூலம், கோத்தாவின் மகன் இல்லை, மகிந்தா மகன் நாமல் 2025 தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்யமுடியும் என்பது அம்மணி, சிராணி ராஜபக்சேவின் வியூகம்.

இதுதான் நிலை. கோத்தாவுக்கு 2/3 விருப்பமில்லை அதனால் தான், தனக்கு ஒரு பாதுகாப்புக்காக ராணுவத்தினை கொண்டுவாறார். 

இலங்கையில் பதவிக்காக, மகன்மார் தந்தையும், பின்னர் அந்த சகோதரர்கள் ஒருவரை ஒருவர் அழித்ததையும் வரலாறு சொல்கிறது.

இந்த சகோதரர்களுக்கு போனமுறை பொது எதிரியாக புலிகள் இருந்தார்கள். இம்முறை தமக்குள் அடிபடபோகின்றனர்.

எமது இனத்தின் விடுவிக்கும் இதுவே வழி சமைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மொட்டை! அண்ணனுக்கா தம்பிக்கா வேலை செய்வது என்று தெரியாமல் முழிக்குது. மலிந்தால் சந்தைக்கு வருந்தானே, பொறுத்திருந்து பாப்போம். மஹிந்தர் எத்தனை கூத்தாடினாலும் நாமலுக்கு அந்த அதிஷ்டம் இல்லை என்றே நான் நினைக்கிறன். தமிழர் வாக்கு இல்லாமலே, எம்மால் அரசியலில்  எதுவும் செய்யலாம். என்று சவால் விட்டவர்கள் குழைவதன் காரணம்? தமிழர் இல்லாமல், வெற்றியாய் அரசியல் நகராது. இதுதான் யதார்த்தம் இலங்கையில்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.