Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாற்று கொலைகளை செய்த கருணா அம்மான் முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்பவராவார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
FAROOK SIHAN - பாறுக் ஷிஹான்
வரலாற்று கொலைகளை செய்த

 கருணா அம்மான் என்னை தோற்கடித்து முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய தேர்தல் வியூகங்களை வகுத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பிரதி தலைவரும் வேட்பாளருமான எச்.எம்.எம். ஹரீஸ் குற்றஞ்சாட்டினார்.
 
 
அம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிடும் இவர் இன்று(11) விசேட செய்தியாளர் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
மேலும் அவர் தனது கருத்தில் தெரிவித்ததாவது
 
 
தேர்தல் பிரசாரம் என்ற போர்வையில் கருணா அம்மான் தமிழ் முஸ்லீம் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டு வருகின்றார்.அவரது பிரச்சாரத்தில் அண்மையில் முஸ்லீம்களை வந்தேறு குடிகள் என விழித்து கருத்துக்களை தெரிவித்திருந்தார்.ஆனால் கருணா தான் அம்பாறை மாவட்டத்தின் அரசியல் வந்தேறி குடியாவார்.46 வீதம் வாழும் முஸ்லிம் மக்களின் அடையாளம் எமது அம்பாறை மாவட்டமாகும்.எனவே பல்வேறு கொலைகளை செய்த இவர் போன்றவர்கள் தான் நேரடியான கொலைகளை செய்தது மாத்திரமன்றி வரலாற்று கொலைகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். பல இடங்களில் முஸ்லீம்களை இவர் தலைமையிலான புலிகளே கடந்த காலங்களில் கொன்றிருந்தார்கள்.
 
 
காத்தான்குடி கல்முனை அக்கரைப்பற்று பொத்துவில் மூதூர் போன்ற பகுதிகளில் முஸ்லீம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
 
கருணா அம்மானின் தேர்தல் வியூகம் என்பது கல்முனை தொகுதியில் என்னை தோற்கடித்து கல்முனை நகரத்தை கைப்பற்றலாம் என பகல் கனவு காண்கின்றார்.ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பிரதி தலைவர் என்ற ரீதியில் என்னுட்ன சகல பிரதேச மக்களுக்கும் கல்முனை நகர் பாதுகாக்கப்பட வேண்டும் அந்த பகுதியின் கல்முனை தொகுதி பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என இணைந்துள்ளனர்.
 
 
எனவே கோடிஸ்வரன் கருணா அம்மான் வியாளேந்திரன் ஆகியோர் இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றார்.
 
 
அத்துடன் கருணா என்பவர் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.கடந்த காலங்களில் சஹ்ரானின் தாக்குதலை பயன்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கோடீஸ்வரன் வியாழேந்திரன் உட்பட ஞானசார தேரர் போன்றோர் கல்முனை தரமுயர்த்தல் தொடர்பிலான உண்ணாவிரதம் இருந்த காலத்தில் அதனை தோற்கடிக்க முயற்சி செய்தனர்.
 
 
ஆனால் மக்களின் ஆதரவுடன் அதை முறியடித்து வெற்றி கண்டோம். கருணா இ கோடீஸ்வரன் போன்றோர் கல்முனை பிரச்சினையை முன் வைத்து அம்பாறையில் வெல்ல முடியாது . முஸ்லிம் சமூகம் வெல்ல வேண்டும் என்றால் அம்பாறையை நாம். வெல்ல வேண்டும் .
 
இன்று கல்முனையை போன்று பொத்துவில் மக்களும் அழுதுகொண்டிருக்கிறார்கள். புதிய அரசாங்கமும் அதன் தலைமைகள் வெல்ல வேண்டும் என தற்போது அடக்குமுறை கையாள்கின்றது. அதே போன்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் என்பவர் அம்பாறை மாவட்டத்தை தற்போது கைவிட்டு விட்டார் .அவர் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக பேசி வருகிறார்.
 
 
என்னை தோற்கடிப்பதற்காக மூன்று வேட்பாளர்களை எனது தொகுதியில் களமிறங்கியுள்ளார் .இவ்வாறு இருந்த போதிலும் சனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தற்போது சஜீத் பிரேமதாசவிடம் தன்னை சந்திக்க வரும்போது ரிஷாட் பதுர்தீனை அழைத்து வர வேண்டாம் என்று கூறுகின்றார்.
 
 
மேலும் இவரின் அமைச்சர் பதவியை கடந்த காலங்களில் பறிக்க வேண்டும் துறக்க வேண்டும் என பௌத்த துறவிகள் உண்ணாவிரதம் இருந்த போது நாங்களும் பதவியை துறந்து பக்கபலமாக இருந்தோம் இதனை மறந்து இன்று கருணாவுடன் இணைந்து கல்முனையை பறிகொடுத்த துணிந்து செயற்பட்டு வருகின்றார் என குற்றஞ்சாட்டினார்.
 
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, colomban said:
FAROOK SIHAN - பாறுக் ஷிஹான்
வரலாற்று கொலைகளை செய்த

 கருணா அம்மான் என்னை தோற்கடித்து முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய தேர்தல் வியூகங்களை வகுத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பிரதி தலைவரும் வேட்பாளருமான எச்.எம்.எம். ஹரீஸ் குற்றஞ்சாட்டினார்.
 
 
அம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிடும் இவர் இன்று(11) விசேட செய்தியாளர் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
மேலும் அவர் தனது கருத்தில் தெரிவித்ததாவது
 
 
தேர்தல் பிரசாரம் என்ற போர்வையில் கருணா அம்மான் தமிழ் முஸ்லீம் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டு வருகின்றார்.அவரது பிரச்சாரத்தில் அண்மையில் முஸ்லீம்களை வந்தேறு குடிகள் என விழித்து கருத்துக்களை தெரிவித்திருந்தார்.ஆனால் கருணா தான் அம்பாறை மாவட்டத்தின் அரசியல் வந்தேறி குடியாவார்.46 வீதம் வாழும் முஸ்லிம் மக்களின் அடையாளம் எமது அம்பாறை மாவட்டமாகும்.எனவே பல்வேறு கொலைகளை செய்த இவர் போன்றவர்கள் தான் நேரடியான கொலைகளை செய்தது மாத்திரமன்றி வரலாற்று கொலைகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். பல இடங்களில் முஸ்லீம்களை இவர் தலைமையிலான புலிகளே கடந்த காலங்களில் கொன்றிருந்தார்கள்.
 
 
காத்தான்குடி கல்முனை அக்கரைப்பற்று பொத்துவில் மூதூர் போன்ற பகுதிகளில் முஸ்லீம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
 
கருணா அம்மானின் தேர்தல் வியூகம் என்பது கல்முனை தொகுதியில் என்னை தோற்கடித்து கல்முனை நகரத்தை கைப்பற்றலாம் என பகல் கனவு காண்கின்றார்.ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பிரதி தலைவர் என்ற ரீதியில் என்னுட்ன சகல பிரதேச மக்களுக்கும் கல்முனை நகர் பாதுகாக்கப்பட வேண்டும் அந்த பகுதியின் கல்முனை தொகுதி பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என இணைந்துள்ளனர்.
 
 
எனவே கோடிஸ்வரன் கருணா அம்மான் வியாளேந்திரன் ஆகியோர் இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றார்.
 
 
அத்துடன் கருணா என்பவர் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.கடந்த காலங்களில் சஹ்ரானின் தாக்குதலை பயன்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கோடீஸ்வரன் வியாழேந்திரன் உட்பட ஞானசார தேரர் போன்றோர் கல்முனை தரமுயர்த்தல் தொடர்பிலான உண்ணாவிரதம் இருந்த காலத்தில் அதனை தோற்கடிக்க முயற்சி செய்தனர்.
 
 
ஆனால் மக்களின் ஆதரவுடன் அதை முறியடித்து வெற்றி கண்டோம். கருணா இ கோடீஸ்வரன் போன்றோர் கல்முனை பிரச்சினையை முன் வைத்து அம்பாறையில் வெல்ல முடியாது . முஸ்லிம் சமூகம் வெல்ல வேண்டும் என்றால் அம்பாறையை நாம். வெல்ல வேண்டும் .
 
இன்று கல்முனையை போன்று பொத்துவில் மக்களும் அழுதுகொண்டிருக்கிறார்கள். புதிய அரசாங்கமும் அதன் தலைமைகள் வெல்ல வேண்டும் என தற்போது அடக்குமுறை கையாள்கின்றது. அதே போன்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் என்பவர் அம்பாறை மாவட்டத்தை தற்போது கைவிட்டு விட்டார் .அவர் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக பேசி வருகிறார்.
 
 
என்னை தோற்கடிப்பதற்காக மூன்று வேட்பாளர்களை எனது தொகுதியில் களமிறங்கியுள்ளார் .இவ்வாறு இருந்த போதிலும் சனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தற்போது சஜீத் பிரேமதாசவிடம் தன்னை சந்திக்க வரும்போது ரிஷாட் பதுர்தீனை அழைத்து வர வேண்டாம் என்று கூறுகின்றார்.
 
 
மேலும் இவரின் அமைச்சர் பதவியை கடந்த காலங்களில் பறிக்க வேண்டும் துறக்க வேண்டும் என பௌத்த துறவிகள் உண்ணாவிரதம் இருந்த போது நாங்களும் பதவியை துறந்து பக்கபலமாக இருந்தோம் இதனை மறந்து இன்று கருணாவுடன் இணைந்து கல்முனையை பறிகொடுத்த துணிந்து செயற்பட்டு வருகின்றார் என குற்றஞ்சாட்டினார்.
 

தேர்தல் நிலவரம் தெரியவில்லை. இருந்தாலும்.... 46% முஸ்லீம் ஓட்டுக்கள், பல முஸ்லீம் கட்சிகளிடையே சிதறும் போலவே தெரிகிறது. 

அம்மான்... நல்ல குடைச்சல் கொடுக்கிறார் போலை கிடக்குது.. இந்த பயம் பயப்படுகினம்....

  • கருத்துக்கள உறவுகள்

அம்மான்  வரவேண்டும் என ஒரு கிழக்கு தமிழர்  கூறினார். முஸ்லிம்களின் கொட்டத்தை அடக்க கூடிய ஒரு ஆள் கருணா தான் என கூறினார். 

பல கட்சிகளாக இயங்கும் முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம் வாக்குகளை பிரிக்கிறார்கள். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.