Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் சுயவிபரக்கோவை சேகரிக்கும் பணியை இராணுவம் நிறுத்தவேண்டும் – விஜயகலா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

viyakala.jpg

யாழில் சுயவிபரக்கோவை சேகரிக்கும் பணியை இராணுவம் நிறுத்தவேண்டும் – விஜயகலா!

இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று இளையோர்களிடம் அரச வேலைக்காக சுயவிபரக்கோவை சேகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள். இராணுவத்தினர் அரச வேலைவாய்ப்பு வழங்குவதற்கு சுய விபரக்கோவை சேகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த நடைமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இணுவிலில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மக்களின் வரிப்பணத்தில் அரசால் மேற்கொள்ளப்பட்டவேலை திட்டங்கள் தேர்தல் காலத்தில் சில அரசியல்வாதிகளினால் திறக்கப்படுகின்றன. இந்த விடயத்தை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும்.

அத்தோடு இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று இளையோர்களிடம் அரச வேலைக்காக சுயவிபரக்கோவை சேகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்த விடயம் ஜனாதிபதிக்கு தெரியுமா அல்லது அவரின் பணிப்பிலா இடம்பெறுகின்றது என அச்சம் தோன்றுகின்றது. இராணுவத்தினர் அரச வேலைவாய்ப்பு வழங்குவதற்கு சுய விபரக்கோவை சேகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது நிறுத்தப்பட வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறவில்லை.

இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டார்கள். எனினும் தற்போது மக்களின் அன்றாட செயற்பாடுகளில் இராணுவ தலையீடு அதிகரித்து வருகின்றது. இவை நிறுத்தப்பட வேண்டும்.

தேர்தல் காலங்களில் அரச அதிகாரிகள்கூட அரசியல்வாதிகளினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்ற நிலை தற்போது காணப்படுகின்றது. எமது ஆட்சிக் காலத்தில் அரசு அதிகாரிகள் சுயாதீனமாக தமது கடமைகளை செய்து இருந்தார்கள்.

தற்போது மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர்களாக தகுதியற்றவர்கள் நியமிக்கப்படுகின்றார்கள். அதாவது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்தான் முன்னைய காலங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் தற்பொழுது அவ்வாறு இல்லை. அந்த நிலமை இந்த அரசால் மாற்றப்பட்டுள்ளது.

தகுதியற்றவர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிற்கு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். எனவே எதிர்வரும் காலத்தில் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலமே சுதந்திரமாக வாழக்கூடிய நிலையை உருவாக்க முடியும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/யாழில்-சுயவிவரக்கோவை-சேக/

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இந்த விடயம் ஜனாதிபதிக்கு தெரியுமா அல்லது அவரின் பணிப்பிலா இடம்பெறுகின்றது என அச்சம் தோன்றுகின்றது. இராணுவத்தினர் அரச வேலைவாய்ப்பு வழங்குவதற்கு சுய விபரக்கோவை சேகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது நிறுத்தப்பட வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறவில்லை.

 

உண்மையை சொல்லக்கூடிய  சனாதிபதி சிறிலங்கா சரித்திரத்தில்  இல்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nunavilan said:

 

உண்மையை சொல்லக்கூடிய  சனாதிபதி சிறிலங்கா சரித்திரத்தில்  இல்லையே.

இனியும் இருக்க போவதில்லை 

தமிழீழத்தில் இருந்தார் எம் தலைவர் 🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.