Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணம்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடலோடு பிறக்கும்

அலைக்கு

கரையோடு மரணம்..

காற்றோடு பிறக்கும்

தென்றலுக்கு

தோப்போடு மரணம்..

பூவோடு பிறக்கும்

வாசத்திற்கு

அந்தியோடு மரணம்..

வானோடு பிறக்கும்

நிலவுக்கு

நிழலோடு மரணம்..

மலையோடு பிறக்கும்

நதிக்கு

கடலோடு மரணம்..

மனதோடு பிறக்கும்

ஆசைக்கு

நிராசையோடு மரணம்..

கருவோடு பிறக்கும்

குழந்தைக்கு

மூப்போடு மரணம்..

காசோடு பிறக்கும்

மனிதனுக்கு

நோயோடு மரணம்..

புத்தியோடு பிறக்கும்

கல்விக்கு

ஆயுளோடு மரணம்..

ஆணாகிப் பிறக்கும்

எனக்கு

பெண் காதலோடு மரணம்..

பெண்ணாகிப் பிறக்கும்

அவளுக்கு

கனவோடு மரணம்..!

கவிதையில் மரணம்..

மெய் விளக்கும் ரணம்..

நீங்கள் சொன்ன மரணச்சுழற்சியில்

இயற்கை மரணடைந்தும்

அழுவதில்லை

மனிதன் மரணமடைந்து ஏன் அழுகிறான்..

தெரியாது

தெளிய வைத்த கவிதை நன்று

ம் சரி மிச்சம்...

அலியாகிக் பிறக்கும் அதற்கு

அவமானத்தோடு மரணம்!

புலியாகப் பிறக்கும் வீரனுக்கு

புகழோடு மரணம்!

எலியாகப் பிறக்கும் கோழைக்கு

கிலியோடு மரணம்!

கழிவுத் தொட்டையில் எறியப்பட்ட குழந்தை

அநாதையாக மரணம்!

பொறியில் அகப்பட்ட எலி

உணவோடு மரணம்!

அறிவற்ற மனிதன்

அகங்காரத்துடன் மரணம்!

வறியவனின் வயிறு

பசியோடு மரணம்!

கதிரவனின் கதிர்கள்

இருளினுள் மரணம்!

அதிரவைக்கும் வெடி

உயிரோடு மரணம்!

உதிரும் இலைகள்

காம்போடு மரணம்!

பதிகின்ற இந்தக்கவிதை

பகிடியுடன் மரணம்!

யாராவது மிச்சம் தொடர்ந்து எழுதுங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சகோதரம் நெடுக்காலை போவான்!

உங்கள் கற்பனையின் வெளிப்பாடு மிகவும் நல்லாயிருக்கின்றது.

அத்துடன் வசன அமைப்பின் ஒழுங்குமுறை பாராட்டத் தக்கது.

''ஆணாகிப் பிறக்கும்

எனக்கு

பெண் காதலோடு மரணம்..

பெண்ணாகிப் பிறக்கும்

அவளுக்கு

கனவோடு மரணம்.".!

ஆனால் இந்த வரிகள் தேவை தானா?

பெண் என்பவளுக்கு கணவுகள் மட்டும் தானா

ஏன் அவள் சிஜத்தில் இல்லையா

ஏன் இது இப்படி நினைக்க தொனுது ஆண் மகனே

  • கருத்துக்கள உறவுகள்

''பெண் என்பவளுக்கு கனவுகள் மட்டும் தானா?

ஏன் அவள் நிஜத்தில் இல்லையா?"

இதே சந்தேகத்தைத் தான் நானும் கேட்டிருந்தேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

''பெண் என்பவளுக்கு கனவுகள் மட்டும் தானா?

ஏன் அவள் நிஜத்தில் இல்லையா?"

இதே சந்தேகத்தைத் தான் நானும் கேட்டிருந்தேன்

பெண்கள் (பலர்) அதிகம் நிஜத்துக்கு மதிப்பளிப்பதில்லை. தங்கள் மனக் கனவை வைத்தே வாழ்வை தீர்மானிக்க முனைகின்றனர்..! அதனால் தான் ஏமாற்றங்களை சந்திக்கும் போது ஆண்கள் மீது பழியைப் போட்டு விட்டு தப்பி விடுகின்றனர்..! தங்கள் பலவீனத்தை கண்டறிய அவர்களின் கனவுகள் அனுமதிப்பதில்லையோ என்னவோ தெரியல்ல.. பெண்கள் தொடர்ந்து தங்கள் இயலாமைக்கு ஆண்களைத் தான் காரணமாக்கிக் கொண்டிருக்கின்றனர். அது கனவுதானே. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை எனும் போது.. ஏன் ஆண்களை திட்டிட்டு இருக்கனும்..???! :P :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம் சரி மிச்சம்...

அலியாகிக் பிறக்கும் அதற்கு

அவமானத்தோடு மரணம்!

புலியாகப் பிறக்கும் வீரனுக்கு

புகழோடு மரணம்!

எலியாகப் பிறக்கும் கோழைக்கு

கிலியோடு மரணம்!

கழிவுத் தொட்டியில் எறியப்பட்ட குழந்தை

அநாதையாக மரணம்!

பொறியில் அகப்பட்ட எலி

உணவோடு மரணம்!

அறிவற்ற மனிதன்

அகங்காரத்துடன் மரணம்!

வறியவனின் வயிறு

பசியோடு மரணம்!

கதிரவனின் கதிர்கள்

இருளினுள் மரணம்!

அதிரவைக்கும் வெடி

உயிரோடு மரணம்!

உதிரும் இலைகள்

காம்போடு மரணம்!

பதிகின்ற இந்தக்கவிதை

பகிடியுடன் மரணம்!

யாராவது மிச்சம் தொடர்ந்து எழுதுங்கோ...

விபச்சாரிகளுக்கும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் உரிமை வழங்க வேண்டும் என்னும் உலகில் இயற்கையான பிறழ்வுகளால் ஏற்படும் விளைவுகளுக்கு மனிதன் அவமானப்படுகிறான் என்ற கருத்து அவசியமா..! அப்படியானவர்களை அவமானப்படுத்தலும் கூடாது அவமானப்படுத்தவும் கூடாது. கண்ணிருந்தும் குருடனாய் வாழும் மனிதர்கள் தான் குறையுள்ள மனிதர்கள். இயற்கை விட்ட தவறுக்காக பிறழ்வோடு பிறந்துவிட்ட எவரும் குறைவுள்ளவர் அல்ல..! அப்படி எண்ணவும் கூடாது என்பது எமது கருத்து..! அவர்களுக்குரிய மனித உரிமைகளை மதிக்கவும் உணரவும் திறனற்றவர்கள் முழு நிறைவுள்ள மனிதர்களும் அல்ல..! மேற்குலகில் ஆண் பெண்ணா மாறுறான் பெண் ஆணா மாறுறாள்.. அப்படி இருக்க...எது எப்படியோ எம்மைப் பொறுத்தவரை இந்தப் பதப்பிரயோகத்தை நிறைவான மனித உரிமை மதிப்பளிப்பு என்று கருத முடியவில்லை.

இவை மட்டுமல்ல.. பிச்சைக்காரன்.. குருடன்..செவிடன்.. இப்படி மனிதர்களை மனிதன் ஒப்பீட்டளவில் குறைகளை முன்னிறுத்தி குறிப்பிடுதல் ஒழிக்கப்பட வேண்டும்..! அவற்றிற்கு ஈடாக அனைவரினதும் உணர்வுகளை உரிமைகளை மனித உணர்வுகள் அடிப்படையில் நோக்கவும் பரிகரிக்கவும் பேணவும் செய்யும் வார்த்தைப் பிரயோகங்கள் அவசியம். வார்த்தையளவில் இருக்கும் சாதியத்தை எதிர்த்து குரல்கொடுக்கும் எம் சமூகம்.. ஏன் இன்னும் இப்படியானவற்றை அனுமதிக்குது....??? :D

Edited by nedukkalapoovan

மொத்தத்திலே எல்லாருக்கும் மரணம் என்று தாத்தா அழகாக சொல்லி இருக்கிறார் வாழ்த்துகள் தாத்தா.

ஆனால் தாத்தா காதலர்கள் மரணித்தும் காதல் இன்னும் மரணிக்காம அவையை பற்றி வரலாறு பேசுகிறதே அப்ப அதற்கு மரணம் இல்லையா?

:D

நீங்கள் கூறிய கருத்தில் நியாயம் உள்ளது, ஆனால் நான் எழுதியதில் யதார்த்தம் உள்ளது... யதார்த்தத்தை எழுதியுள்ளேன்..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனாகப் பிறந்தவனுக்கு

வடக்கில் கிழக்கில் தெற்கில்

எங்கும் மரணம் மரணம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்திலே எல்லாருக்கும் மரணம் என்று தாத்தா அழகாக சொல்லி இருக்கிறார் வாழ்த்துகள் தாத்தா.

ஆனால் தாத்தா காதலர்கள் மரணித்தும் காதல் இன்னும் மரணிக்காம அவையை பற்றி வரலாறு பேசுகிறதே அப்ப அதற்கு மரணம் இல்லையா?

:D

காதல் பேசல்ல.. பேசினா.. மோசடிகளைப் பற்றி சொல்லி அழுதுகொண்டே இருக்கும்..! மனிதர்கள் தான் காதலை வைச்சுப் பேசி காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறாங்க. காதலை காதலா பண்ணுறவங்களும் இருக்கிறபடியாதான் காதல் என்ற உச்சரிப்பாவது இன்னும் இருக்குது. இல்ல அது தொலைஞ்சு இப்ப வேறென்று வந்திருக்கும்...! காலம் மாறியும் காதல் மாறல்ல..! அது மனிதன் அழியும் வரை உச்சரிக்கப்படும்.. மனிதனால்.. ஆனால் இயற்கையால் அது அழிவின்றி தொடரும்..! :P :lol:

சரியாச் சொன்னீங்கள்... காதலை காதலா பண்ணுறவங்களில நானும் ஒராளாக்கும்! :icon_idea: என்னமாதிரி ஆக்களால்தான் உண்மையான காதல் இன்னும் வாழுது... :P

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரியாச் சொன்னீங்கள்... காதலை காதலா பண்ணுறவங்களில நானும் ஒராளாக்கும்! :icon_idea: என்னமாதிரி ஆக்களால்தான் உண்மையான காதல் இன்னும் வாழுது... :P

உங்களையே காணேல்ல.. அதுக்க எப்படி உங்கட காதலை காணுறது.. உண்மையா பொய்யா என்று மதிப்பிடுறது..! ஏமாற்றிறவனும் சரி ஏமாறிறவனும் சரி உண்மை என்றுதான் உச்சரிக்கிறான்..! :P :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.