Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலுக்கு பின்னர் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம் – மனித உரிமை கண்காணிப்பகம் கவலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்கு பின்னர் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம் – மனித உரிமை கண்காணிப்பகம் கவலை

August 8, 2020

தேர்தலுக்கு பின்னர் மாற்றுக்கருத்துடையவர்கள் அரசாங்கத்தின் கொள்கைகளுடன் முரண்படுபவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரிக்கலாம் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் அச்சம் வெளியிட்டுள்ளது.

மனித உரிமை ஆர்வலர்கள்,பத்திரிகையாளர்கள் சட்டத்தரணிகள் மற்றும் அரசாஙகத்தின் கொள்கைகளுக்கு சவால்விடுபவர்களுக்கு எதிராக கோத்தபாய ராஜபக்ச அரசாங்கம் அச்சத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

 

Human-Rights-Watch-300x181.jpg

 

சமீபகாலங்களில் கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கொரோனா வைரசினை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் அதிகளவு இராணுவமயப்படுத்தப்பட்ட நடவடிக்கை இதற்கு உதவியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக அச்சுறுத்தலகள் உடல்ரீதியான தாக்குதல்கள்,கண்மூடித்தனமான கைதுகள் இடம்பெற்றுள்ளன என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

 

2020 இல் இடம்பெற்ற தேர்தலில் ஜனாதிபதி ராஜபக்சவின் கட்சி நாடாளுமன்ற பெரும்பான்மையை பெற்றுள்ளது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இந்த தேர்தல் முடிவுகள் அரசாங்கம் இனசிறுபான்மையினர்மதசிறுபான்மையினருக்கு எதிரான கொள்களை தீவிரப்படுத்தும், இலங்கையின் 26 வருட உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும் விடயங்களுக்காக நீதிகோரும் மக்களின் மீதான ஒடுக்குமுறையை அதிகரிக்கும் என்ற கரிசனைகளை அதிகரித்துள்ளது என சதெரிவித்துள்ளது.

Meenakshi-Ganguli-DPS-20-Oct-2011-8-300x

கடந்த கால துஸ்பிரயோகங்களுக்காக பொறுப்புக்கூறலிற்கான வேண்டுகோள்களை கடந்த காலங்களில் விடுத்திருந்த ஐக்கியநாடுகளும் உலக நாடுகளும் நீதியை கோருபவர்களை இலக்குவைப்பதை இலங்கை அரசாங்கம் நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுக்கவேண்டு;ம் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வேகமாக முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் காணப்பட்ட ஒடுக்குமுறைகளை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றார் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
ஏனைய நாடுகள் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றன மீண்டும் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றால் பதில்நடவடிக்கை எடுக்கும் என்பதை இலங்கை அரசாங்கம் செவிமடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

http://thinakkural.lk/article/60911

 

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன தேவை இல்லாத குற்றச்சாட்டு. அவர் நாட்டுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். நீங்கள் வேற நாட்டில பதட்டத்தை உருவாக்க முயற்சிக்கிறீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலே இவர்களது வேலையென்ன அறிக்கையிடுவதா? அல்லது தீர்வு தேடுவதா என்று புரியமலுள்ளது. இலங்கைதொடர்பாக விட்ட அறிக்கைகட்டுகளை வைக்கவே பெரிய களஞ்கியம் தேவைப்படலாம். அறிக்கையைக் கடந்து ஆக்கபூர்வமாக  ஏதாவது செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அடக்குமுறை என்றால் என்ன என்றே தெரியாது இவையள் சும்மா குற்றம் சாட்டுகிறார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கிருபன் said:

ஏனைய நாடுகள் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றன மீண்டும் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றால் பதில்நடவடிக்கை எடுக்கும் என்பதை இலங்கை அரசாங்கம் செவிமடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

201605030825319874_Get-into-the-habit-Th

நீங்க எதுக்கு இருக்குறியள்.?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.