Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்ய தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

GettyImages-1210872967-720x450.jpg

ரஷ்ய தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து

உலகத்தின் முதல் தடுப்பூசியை பதிவு செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில், கடுமையான ஆய்வு தேவை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் தரிக் ஜசரேவிக் ஜெனீவாவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ‘ரஷ்யாவின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். தடுப்பூசிக்கு முன் தகுதி அளிப்பது குறித்த நடைமுறைகள் பற்றிய ஆலோசனை நடைபெறுகிறது.

எந்த ஒரு தடுப்பூசிக்கும் முன் தகுதி அளிப்பது என்பது தேவையான பாதுகாப்பு மற்றும் திறன் அம்சங்களை கடுமையாக மதிப்பாய்வு செய்த பின்னரே இருக்கும்’ என தெரிவித்தார்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸுக்கு எதிராக உலகமெங்கும் ஏறத்தாழ 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

இவற்றில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ‘கோவிஷீல்டு’ உள்ளிட்ட 6 தடுப்பூசிகள் மட்டும் பரிசோதனையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் ரஷ்யாவில் அந்த நாட்டின் இராணுவ அமைச்சகமும், கமலேயா தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமும் சேர்ந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.

இந்த தடுப்பூசி பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டுள்ள நிலையில், விரைவில் பதிவு செய்யப்படும் என தகவல்கள் வெளிவந்தன. அதன்படி, அந்த தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தயாராகி நேற்று பதிவு செய்யப்பட்டது.

இந்தத் தகவலை வெளியிட்ட ரஷ்ய அதிபர் புடின், கொரோனா தடுப்பூசிக்கு ‘ஸ்புட்னிக்-வி’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இது மிகவும் திறம்பட செய்படுகிறது என்றும் தெரிவித்தார்.

இது ஒரு நிலையான எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்பதோடு, இந்த தடுப்பூசியானது, தேவையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுவிட்டது என குறிப்பிட்டார்.

மேலும் இந்த தடுப்பூசி ஆற்றல்மிக்கது என்பது சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளதுடன், இது பாதுகாப்பானது என தெரிய வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, 3ஆவது கட்ட சோதனையை இன்று தொடங்க இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ரஷ்ய-தடுப்பூசி-குறித்து/

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்தின் செயல் திறனும், பாதுகாப்பும்தான் கவலைக்குரியது: நோபல் பரிசு விஞ்ஞானி கருத்து

safety-efficacy-main-concerns-with-russias-covid-19-vaccine-nobel-laureate-peter-doherty கோப்புப்படம்

கொல்கத்தா

ரஷ்யா தயாரித்துள்ள கரோனா தடுப்பு மருந்தின் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் அந்த மருந்தின் செயல்பாட்டுத் திறன், பாதுகாப்புப் பற்றி யாருக்கும் தெரியாது. நம்முடைய சந்தேகம் உறுதியானால் மற்ற தடுப்பு மருந்துகளையும் மறுக்க வேண்டியது வரும் என்று நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி பீட்டர் டோஹெர்டி தெரிவித்துள்ளார்.

உலகிலேயே கரோனா வைரஸுக்கு முதன்முதலாக தடுப்பு மருந்தை கண்டுபிடித்து உருவாக்கிவிட்டதாக ரஷ்யா அறிவித்தது. அந்த தடுப்பு மருந்து உடலில் நிலையான எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்தி வருவதாகவும், திறன்மிக்க வகையில் கரோனாவுக்கு எதிராகச் செயல்படுவதாக அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்தார்

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண்அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்கு செல்லவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தை செலுத்தினார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிஸ்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வரவில்லை. உலக சுகாதார அமைப்பும் இந்த மருந்தை அங்கீகரிக்கவில்லை.

1597661096756.jpg

இந்த சூழலில் 1996-ம் ஆண்டு நோபல் பரிசு வென்ற மருத்துவ விஞ்ஞானி பீட்டர் டோஹெர்டி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் உள்ள மைக்ரோபயாலாஜி மற்றும் நோய்தடுப்புவியல் பிரிவில் பீட்டர் டோஹர்டி பணியாற்றி வருகிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிஸ்-5 கரோனா தடுப்பு மருந்தில் இருக்கும் கவலைக்குரிய அம்சமே அதன் பாதுகாப்பும், செயல்பாட்டுத் திறனும்தான். ஒருவேளே நாம் சந்தேகப்படும்வகையில் அமைந்தால், இந்த தடுப்பு மருந்தை மட்டுமல்லாமல், பல்வேறு நோய்களுக்கு வழங்கப்படும் தடுப்பு மருந்துகளையும் நாம் மறுக்க வேண்டியதுவரும்.

ஆனால், கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் குறைந்தவிலையில் மருந்துகளை வழங்கும் அம்சத்தில் இந்தியா முன்னணியில் இருந்து வருகிறது. ஆதலால், கரோனா தடுப்பு மருந்துக்கான சந்தையில் இந்தியாவின் பங்கு எதிர்காலத்தில் மிகப்பெரியதாக அமையும். இவைஅனைத்துமே உலகத்தின் பொருளாதாரம் விரைவாக இயல்புநிலைக்கு வரவேண்டும் என்பதற்கான முயற்சிதான்.

ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்து எவ்வாறு கிளினிக்கல் பரிசோதனைக்கு வராமலே கண்டுபிடித்துவிட்டதாக அறிவிப்பட்டது, மருந்தின் பாதுகாப்பு , செயல்திறன் என்ன என்பது பற்றித்தான் இப்போது இருக்கும் கவலை.

ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் சார்பிலும் கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி நடந்து வருகிறது.

தற்போதுமுதல் கிளினிக்கல் பரிசோதனை முடிந்து, 2-ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனையில் இருக்கிறது. நாங்கள் இந்த மருந்தைக் கண்டுபிடித்துவிட்டால், ஏழை நாடுகளுக்குத்தான் முதலில் முன்னுரிமை அளித்து வழங்க உள்ளோம்.

இவ்வாறு டோஹெர்டி தெரிவித்தார்.

https://www.hindutamil.in/news/india/570355-safety-efficacy-main-concerns-with-russias-covid-19-vaccine-nobel-laureate-peter-doherty-2.html

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாட்டவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தாக இருந்தால் இந்தப் பயம் தோன்றியிருக்காதோ 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.