Jump to content

பதவியேற்பில் பறக்கவிடப்பட்ட கொடிகள் அரசாங்கத்தின் உண்மை முகத்தைக் காட்டியது- சுமந்திரன்


Recommended Posts

பதவியேற்பில் பறக்கவிடப்பட்ட கொடிகள் அரசாங்கத்தின் உண்மை முகத்தைக் காட்டியது- சுமந்திரன்

 

 

   

M.A.Sumanthiran.jpg

அமைச்சரவைப் பதவியேற்பில் பறக்கவிடப்பட்ட கொடிகள் இந்த அரசாங்கத்தின் உண்மையான முகத்தை வெளிக்காட்டியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், மத விவகாரங்களில் அரசியல் தலையீடு இல்லாமல் இருப்பது நல்ல விடயம் எனத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு வைபவத்தில் பயன்படுத்தப்பட்ட கொடி இந்த அரசாங்கத்தினுடைய உண்மையான முகத்தை வெளிக்காட்டியிருக்கிறது.

எனவே, இந்த அரசாங்கத்துக்கும் அரசாங்கத்துக்கு சார்பாக உள்ளவர்களுக்கும் வாக்களித்த தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் உடனடியாக தமது தீர்மானத்தை மீண்டும் நினைத்துப்பார்க்க வேண்டும்.

தேசியக் கொடிகளில் இருந்தே இரண்டு சமூகங்களைக் குறிக்கின்ற வரிகளை விலக்கி, பாரதூரமான விடயத்தை மேற்கொண்டு அந்தளவுக்கு இனக் குரோதத்தோடு செயற்படுகின்றவர்களுக்குத்தான் எமது மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதனை நினைவில் கொள்ளவேண்டும். அத்துடன், வைபவத்தில் பௌத்த குருமார்களுக்குத்தான் இடங்கொடுக்கப்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஆனால், அமைச்சிலே மற்றைய சமயங்கள் தொடர்பாக எதுவும் சொல்லப்படாமை குறித்து எனக்கு வித்தியாசமான கருத்து இருக்கிறது.

என்னுடைய சிந்தனைப்படி, நாடு சமய சார்பற்ற நாடாக இருக்கவேண்டும். அரசியலானது சமய நிறுவனங்களுக்குள்ளே நுழையக்கூடாது. அது அந்த சமயங்களுக்குத்தான் பாதிப்பு. ஆகவே பௌத்த மதத்தைப் பாதுகாக்கப்போகிறோம் என்று சொல்லி பிரதம மந்திரி அதையெல்லாம் தூக்கி மடியில் வைத்திருந்தால் ஒன்றும் செய்யமுடியாது. பௌத்த மதம் பாதிக்கப்படும்.

ஆனால், நல்ல விடயம் மற்ற மதங்களில் கைவைக்காமல் அதனை சுயாதீனமாக இயங்க விடுவது நல்லது. ஆகவே, அந்த விதத்தில் பிரதம மந்திரியின் அமைச்சுக்குக் கீழ் ஏனைய மதங்கள்பற்றி சொல்லப்படாமல் இருப்பது நல்ல விடயம்.

இதேவேளை, ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் 19ஆவது திருத்தம் விலத்தப்படக்கூடாது. இந்த 19ஆவது திருத்தம் ஜனநாயகத்தை நாட்டில் முழுமையாக நிறைவேற்றுவதற்கு அரைவாசித் தூரம் வந்த விடயம்.

எனினும், அரைவாசித் தூரம் என்பதால் இந்தத் திருத்தத்தில் நடைமுறைக்குச் சாத்திமில்லாத சில விடயங்கள் இருக்கின்றன. ஏனென்றால் அது அரைகுறையாக செய்யப்பட்டது.

அவற்றை நிவர்த்திசெய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் நிவர்த்தி செய்யலாம். ஆனால், அந்தத் திருத்தத்தை முற்றிலுமான மாற்றவேண்டும் என முயற்சிப்பது, நாட்டில் ஜனநாயக்த்தை குழிதோண்டிப் புதைக்கிற 18ஆவது அரசியலமைப்பு செய்ததை செய்வதாக இருக்கும். அதற்கு எந்த ஜனநாயகவாதியும் ஆதரவு கொடுக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

  by : Litharsan

https://athavannews.com/பதவியேற்பில்-பறக்கவிடப்/

Link to comment
Share on other sites

Image may contain: cloud, sky and outdoor

01. இன்று பறந்த தேசியக்கொடியில் சிறுபான்மையினரை பிரதிபதிபலிக்குக் செம்மஞ்சள் நிறம் அகற்றப்பட்டிருந்தது....

02. நிகழ்வில் தேசியகீதம் சிங்களத்தில் மாத்திரம் இசைக்கப்பட்டது...

03. அழைக்கப்பட்டிருந்த மதத்தலைவர்களுள் தமிழ் முஸ்லிம் மதத்தலைவர்களை காணவில்லை...

04. இந்து மற்றும் முஸ்லிம் கலாச்சாரங்களுக்கான அமைச்சு நீக்கப்பட்டுள்ளது..

06. இன நல்லிணக்க அமைச்சு நீக்கப்பட்டுள்ளது..

07. அரச கரும மொழிகள் அமைச்சு நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nunavilan said:

01. இன்று பறந்த தேசியக்கொடியில் சிறுபான்மையினரை பிரதிபதிபலிக்குக் செம்மஞ்சள் நிறம் அகற்றப்பட்டிருந்தது....

02. நிகழ்வில் தேசியகீதம் சிங்களத்தில் மாத்திரம் இசைக்கப்பட்டது...

03. அழைக்கப்பட்டிருந்த மதத்தலைவர்களுள் தமிழ் முஸ்லிம் மதத்தலைவர்களை காணவில்லை...

04. இந்து மற்றும் முஸ்லிம் கலாச்சாரங்களுக்கான அமைச்சு நீக்கப்பட்டுள்ளது..

06. இன நல்லிணக்க அமைச்சு நீக்கப்பட்டுள்ளது..

07. அரச கரும மொழிகள் அமைச்சு நீக்கப்பட்டுள்ளது.

சிங்கள அடிவருடிகள் இதற்கு என்ன சொல்லப்போகின்றார்கள்

Link to comment
Share on other sites

8 minutes ago, உடையார் said:

சிங்கள அடிவருடிகள் இதற்கு என்ன சொல்லப்போகின்றார்கள்

சிங்க கொடி பிடித்த இரண்டு பேரையும் என்ன செய்யலாம்??

Sambanthan waving lion flag with Ranil Wickramasinghe

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.