Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய உளவுச்சேவை முன்னாள் பணிப்பாளரின் சாட்சியத்தின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

( எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், வெளிநாட்டு உளவுச் சேவை ஒன்றிலிருந்து கடந்த 2019 ஏப்ரல் 4 ஆம் திகதி  முதல் தகவல் கிடைக்கப்பெற்றது முதல் பல தடவைகள்  அப்போதைய ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட போதும்,  தாக்குதல்கள்  நடாத்தப்பட இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அவருக்கு ஒரு போதும்  தான் கூறவில்லை என, அரச உளவுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜயவர்தன  தெரிவித்தார்.

 எவ்வாறாயினும் 2019 ஏப்ரல் 4 ஆம் திகதி வெளிநாட்டு உளவுச் சேவை ஒன்றிலிருந்து கிடைத்த தகவல், உளவுத் தகவல் அல்ல எனவும் அது ஒரு  தகவலாக மட்டுமே இருந்ததாக  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன  பின்னர் சுட்டிக்காட்டினார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க  விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி  விசாரணை ஆணைக் குழுவின்  சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில்  இடம்பெற்று வருகின்றது.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  நிசங்க பந்துல கருணாரத்ன,  ஓய்வுபெற்ற நீதிபதிகளான  நிஹால் சுனில் ரஜபக்ஷ,  அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில்    குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன. 

நேற்று முன் தினம் இரவு வரை நீண்ட, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவின் சாட்சியத்தை தொடர்ந்து, நேற்று முதல் அவரிடம் குறுக்கு விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டன,  ஆணைக் குழுவின் தலைவரின்  கேள்விகளுக்கு பதிலளித்தவாறும், தேசிய உளவுத் துறை முன்னாள் பிரதானி சிசிர மெண்டிஸ் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சானக ரணசிங்கவின் குறுக்கு விசாரணைகளுக்கும் பதில்  அளித்தவாறு   அரச உளவுச் சேவை முன்னாள் பணிப்பாளரும் தற்போதைய கிழக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜயவர்தன  மேற்படி விடயங்களை வெளிப்படுத்தினார். நேற்றைய தினம் 18 ஆவது நாளாக அவர் ஆணைக் குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தார்.

 நேற்று முன் தினம் 17 ஆவது நாளாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  நிலந்த ஜயவர்தன சாட்சியம் அளிக்கும் போது, அவர்  முன்னாள் ஜனாதிபதியின் பெஜட் வீதி உத்தியோகபூர்வ இல்லத்தின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகளை பேணியமை தொடர்பிலான தொலைபேசி அழைப்பு விபரப் பட்டியலை மையப்படுத்தி, ஆணைக் குழுவின் தலைவரால் கேள்விகள் எழுப்பட்டன.

 குறித்த தொலைபேசி விபரப்பட்டியலின் பிரகாரம், 2019 ஏபரல் 4 ஆம் திகதி வெளிநாட்டு உளவுச் சேவை ஒன்றிலிருந்து, தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் தகவல் கிடைத்த பின்னர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன அப்போதைய ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுடன் பின்வருமாறு  அழைப்புக்களை எடுத்து கலந்துரையாடியுள்ளார்.

2019 ஏபரல் 5 ஆம் திகதி  மு.ப. 7.59 இற்கு 28 செக்கன்கள்

2019 ஏபரல் 8 ஆம் திகதி  மு.ப. 7.18 இற்கு 17 செக்கன்கள்

2019 ஏபரல் 9 ஆம் திகதி  மு.ப. 8.02 இற்கு 4 நிமிடங்கள் 14 செக்கன்கள்

2019 ஏபரல் 12 ஆம் திகதி  மு.ப. 8.50 இற்கு 37 செக்கன்களும் அன்றைய தினமே  பி.ப. 08.07 இற்கு 16 செக்கன்களும்

2019 ஏபரல் 13 ஆம் திகதி  மு.ப. 6.27 இற்கு 15 செக்கன்கள்

2019 ஏபரல் 14 ஆம் திகதி  மு.ப. 9.39 இற்கு 38 செக்கன்கல்

2019 ஏபரல் 15 ஆம் திகதி  மு.ப. 7.47 இற்கு 3 நிமிடங்கள் 19 செக்கன்கள்

2019 ஏபரல் 20 ஆம் திகதி  பி..ப. 6.16 இற்கு ஒரு நிமிடம் 28 செக்கன்கள்

மேற்படி தொலைபேசி அழைப்பு விபரங்கள் அடங்கிய விஷேட அறிக்கையை மையப்படுத்தி, ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் தலைவர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், நிலந்த ஜயவர்தனவிடம் மேலும் பல கேள்விகளை தொடுத்தார்.

2019 ஏபரல் 4 ஆம் திகதி  மு.ப. 6.50 இற்கு 10 நிமிடம் 40 செக்கன்கள்

2019 ஏபரல் 08 ஆம் திகதி  மு.ப. 8.12 இற்கு 4 நிமிடங்கள்

2019 ஏபரல் 13 ஆம் திகதி  மு.ப. 7.11 இற்கு 9 நிமிடங்கள் 11 செக்கன்கள்

2019 ஏபரல் 15 ஆம் திகதி  மு.ப. 7.52 இற்கு 5 நிமிடம் 6 செக்கன்கள்

என பெஜட்  வீதி முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து  உமக்கு அழைப்பு கிடைத்துள்ளதல்லவா என இதன்போது ஆணைக் குழுவின் தலைவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சிர்டேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன  இருக்கலாம் என்றார்.

இதன்போது, ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து ஜனாதிபதி அல்லாது வேறு எவரேனும் உமக்கு அழைப்பினை எடுப்பார்களா என ஆணைக் குழ்வின் தலைவர் மீளவும் கேள்வி எழுப்பினார்.

 அதற்கு பதிலளித்த நிலந்த ஜயவர்தன்,  சிலர் தன்னை தொடர்புகொள்ள முடியாமல் போகும் சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லம் ஊடாக முயற்சிப்பர் என தெரிவித்தார்.

 

இந் நிலையில்,  கடந்த 2019 ஏபரல் 4 ஆம் திகதி தற்கொலை தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு உளவுச் சேவை தகவலினை தொடர்ந்து, பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியை தொடர்புகொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளமை தொலைபேசி அழைப்பு விபரப்பட்டியல் ஊடாக தெளிவாகிய நிலையில், அவ்வாறான சந்தர்ப்பங்களில் அப்போதைய ஜனாதிபதிக்கு தாக்குதல் குறித்த முன் கூட்டிய தகவலை தெரிவித்தீரா? என  ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் தலைவர் கேள்வி எழுப்பினார்.

 அதற்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன இல்லை என பதிலளித்தார்.

 அத்துடன், 2019 ஏபரல் 4 ஆம் திகதி வட்ஸ் அப் ஊடாக கிடைக்கப் பெற்ற குறித்த தகவல் ஒரு தகவல் மட்டுமே எனவும், அது தொடர்பில் மேலதிக விசாரணை நடாத்தி ஏபரல் 7 ஆம் திகதியே முழுமையான உளவுத் தகவலாக அதனை மாற்ற முடிந்ததாகவும் அதனாலேயே, குறித்த ஏபரல் 4 ஆம் திகதி கிடைக்கப் பெற்ற தகவலை ஜனாதிபதிக்கு கூறவில்லை எனவும் நிலந்த ஜயவர்தன தெரிவித்தார். 

எவ்வாறாயினும் 2019 ஏபரல்  15 அல்லது 16 ஆம் திகதி தேசிய பாதுகாப்புக் குழு கூட்டம்  நடாத்தப்பட்டிருந்தால், அங்கு வைத்து அந்த தகவலை பறிமாற சந்தர்ப்பம் இருந்திருக்கும் எனவும் அவர் சுட்டிக்கடடினார்

 இந் நிலையில் நேற்று முன் தினம் 17 ஆம் திகதி சாட்சியளிப்பு நிறைவுக்கு வரும் தருவாயில் மேற்படி விடயங்கள் வெளிப்படுத்தப்பட்ட பின்னர் '  நான் யாரையும் காப்பாற்றுவதாக எண்ண வேண்டாம்' என  தெரிவித்தார்.

 இதன்போது ஆணைக் குழுவின் தலைவர் '  நாம் , நீங்கள்  எவரையும் காப்பாற்றுவதாக கூறவில்லையே ' என தெரிவித்தார். அதற்கு மீளவும் நிலந்த ஜயவர்தன ' சிலர் கூறுகின்றார்கள் ' என குறிப்பிட்டார்.

 இந் நிலையில் நேற்று 18 ஆவது நாளாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன ஆணைக் குழுவுக்கு  சாட்சியமளிக்க வந்த நிலையில், அவரிடம் அவரின் சாட்சியத்திலிருந்து குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. நேற்று முன்னாள் தேசிய உளவுத் துறை பிரதானி  ஓய்வு பெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சானக ரணசிங்க குறுக்கு விசாரணை செய்தார்.

' ஏப்ரல் 4 ஆம் திகதி வெளிநாட்டு உளவுச் சேவை ஊடாக கிடைத்தது உளவுத் தகவல் அல்ல. அத்துடன் எந்த சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு உளவுச் சேவை ஒன்றிலிருந்து எமக்கு உளவுத் தகவல் கிடைக்கவில்லை.  குறிப்பிட்ட வெளிநாட்டு உளவுச் சேவை, சஹ்ரான் ஹஷீம் தொடர்பில் எந்த விடயத்தையும் அரிந்திருக்கவில்லை.  அவர்கள், சாத்தியமான ஒரு பயங்கரவாத தககுதல் குறித்து தகவல் மட்டுமே கொடுத்தனர். அந்த தகவலை பகுப்பாய்வு செய்து, மீள விசாரணை செய்து தேசிய உளவுச் சேவையே அதனை உளவுத் தகவலாக மாற்றியது.  ' என்றார்https://www.virakesari.lk/article/88751

  • 3 weeks later...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த தகவலைத் தரமுன் தொடர்பை துண்டித்த நிலந்த ; ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் சாட்சியம்

 

 

கடந்த 2019 ஏப்ரல் 20 ஆம் திகதி தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்தனவிடமிருந்து தான் தொலைபேசி அழைப்பொன்றைப் பெற்றதாகவும் அது சர்வதேச தீவிரவாதிகளின் ஒருங்கிணைந்த உடனடி பயங்கரவாத தாக்குதல் குறித்த நம்பகமான தகவல் பற்றியதாகும். ஆனால் மேலதிக தகவல்களை அவர் வழங்காது உரையாடலின் நடுவே தொலைபேசித் தொடர்பை துண்டித்ததாகவும் தேசிய புலனாய்வகத்தின் முன்னாள் தலைவர் (சின்ஐ) சிசிர மெண்டிஸ் கடந்த செப்டெம்பர் 15இல் இடம்பெற்ற ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.

கடந்த 2019 ஏப்ரல் 21இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கையில் சிசிர மெண்டிஸ் மேலும் கூறியதாவது,

“நான் நள்ளிரவு உயிர்த்த ஞாயிறு திருப்பலியில் பங்கேற்க தயாராகிக் கொண்டிருந்த போது தேசிய புலனாய்வகத்தின் முன்னாள் பணிப்பாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பைப் பெற்றேன். சர்வதேச புலனாய்வாளர்களிடமிருந்து ஒரு தகவலைப் அவர் பெற்றிருப்பதாக அவர் கூறினார். நான் அவரிடம் ஐஜிபி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கூறினேன். ஆனால் நிலந்த ஜெயவர்த்தன உடனடியாக தொடர்பை துண்டித்ததுடன் அதன்பின் ஒருபோதும் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை” என்றார்.

மேலும் அவர், புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்தன 2019 ஏப்ரல் 19 அன்று காத்தான்குடியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் குண்டுவெடிப்பின் பின்னர் தன்னைத் தொடர்பு கொண்டதாகவும் ஆனால் தேசிய தௌஹீத் ஜமா அத் இயக்கத் தலைவர் சஹ்ரான் ஹாசிமின் குழுவினர் இதன் பின்னால் இருப்பதாகத் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.

 

http://thinakkural.lk/article/69345

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ஷாக்களின் கூட்டத்தோடு மைத்திரிக்கும் தொடர்புண்டு இந்தக்குண்டு வெடிப்பில். எல்லாம்  தெரிந்துகொண்டே சிங்கப்பூர் சென்றார்.ஆனால் ஒருநாள் ராஜபக்ஷாக்கள் மைத்திரியையே கூண்டிலேற்றும்.

“சஹ்ரான் பயங்கரவாதியல்ல” என மைத்திரிக்குச் சொல்லப்பட்டதா? மறுக்கின்றார் நிலந்த ஜயவர்த்தன

 

 

தேசிய புலனாய்வகத்தின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் பரிசோதகருமான நிலந்த ஜெயவர்தன, “தேசிய தௌஹீத் ஜமா அத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹாசிம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ஒரு பயங்கரவாதி அல்ல அவர் ஒரு தீவிரவாதி என தனக்குத் தெரியப்படுத்தப்பட்டதாக” முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவின் குறிப்பிட்டதை மறுத்தார்.

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை பிரதிநிதித்துவபடுத்தும் சட்டத்தரணியின் குறுக்கு விசாரணையின் போதே ஜெயவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி சிறிசேன குறித்த தனியார் தொலைக்காட்சி நடத்திய அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் காணொளி காட்சி ஒன்றை சட்டத்தரணி காண்பித்தார். அந்தக் காணொளி சஹ்ரான் ஹாசிம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ஒரு பயங்கரவாதி அல்ல அவர் ஒரு தீவிரவாதி என மட்டுமே தனக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக சிறிசேன தெரிவிப்பதைக் காண்பித்தது.

இதனை நீங்கள் ஏற்றுக்கொளகின்றீர்களா எனக் கேட்கப்பட்ட போது, அதனைத்தான் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவித்த நிலாந்த, சஹ்ரானின் இஸ்லாமிய அரசு என்ற கோட்பாட்டைப் பிரச்சாரப்படுத்துவதாகவும், அது நாட்டுக்கு மிகப் பெரும் ஆபத்து என்பதை பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதிக்கும் தேசிய பாதுகாப்புச் சபைக்கும் தெரியப்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

“நான் சஹ்ரானை விபரிக்க பயங்கரவாதி எனும் பதத்தை பயன்படுத்தாமிலிருந்திருக்கலாம். ஆனால் அவர் இஸ்லாமிய இராச்சிய சித்தாந்தத்தை முன்னெடுப்பதாகத் தெளிவாகச் சொன்னேன். எல்லோருக்கும் ஐஎஸ் என்பது ஒரு பயங்கரவாத அமைப்பு எனத் தெரியும்” என அவர் சுட்டிக்காட்டினார்.

http://thinakkural.lk/article/69416

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.