Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்நிதி முருகனுக்கு காவடி, அங்கப்பிரதட்சணம், கற்பூரச் சட்டி எடுக்கத் தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-720x450.jpg

சந்நிதி முருகனுக்கு காவடி, அங்கப்பிரதட்சணம், கற்பூரச் சட்டி எடுக்கத் தடை

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத் திருவிழாவில் அங்கப்பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அறிவித்துள்ளது.

இதனால் நேற்று(வியாழக்கிழமை) ஆலயத்துக்கு வருகை தந்த காவடிகள் தடுக்கப்பட்டன.

தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய பெரும் திருவிழா சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் இடம்பெற்று வருகிறது. எதிர்வரும் செப்ரெம்பர் முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை தேர்த் திருவிழா இடம்பெறவுள்ளது.

ஆலயத்துக்கு வருகைதரும் அடியவர்கள், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, சமூக இடைவெளியை பேணுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

கொரோனோ தொற்றிலிருந்து அடியவர்களை பாதுகாக்கும் வகையில், இக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், பருத்தித்துறை பிரதேச செயலகம் தெளிவுபடுத்தியுள்ளது.

பிரதேச செயலகம் விடுத்துள்ள அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் உற்சவகாலத்தில் 150 அடியவர்கள் மாத்திரம் வழிபாடு செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

அடியவர்கள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தை எடுத்துவருதல் கட்டாயமானதாகும். இவை வீதித் தடைகளில் ஒவ்வொரு தடவையும் பதிவு செய்யப்படும். முகக்கவசங்களை அணிந்திருந்தல் கட்டாயமானதாகும்.

சமூக இடைவெளியை அடியவர்கள் பின்பற்ற வேண்டும். கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டவர்கள், சுய தனிமைப்படுத்தப்பட்டவர்கள், தனிமைப்படுத்தலை நிறைவு செய்தமைக்கான ஆவணத்தை தம்வசம் வைத்திருக்க வேண்டும். காய்ச்சல், தடிமன், தும்மல், இருமல் உள்ளவர்கள் ஆலயத்துக்கு வருவதை தவிர்க்கவேண்டும்.

தாகசாந்தி, அன்னதானம் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அங்கப்பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திருவிழாக் காலங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளின் போது 20 நபர்களுக்கு மாத்திரம் அனுமதி. விசேட போக்குவரத்துச் சேவை இம்முறை இடம்பெறமாட்டாது“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/சந்நிதி-முருகனுக்கு-காவட/

  • கருத்துக்கள உறவுகள்

‘“அங்கப்பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அறிவித்துள்ளது“ .  கொரோனா வைரஸ் இந்த நேர்த்திகடன்களை நிறைவேற்றுவதால் எப்படி பரவும்? மிகவும் தவறான முடிவு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கற்பகதரு said:

‘“அங்கப்பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அறிவித்துள்ளது“ .  கொரோனா வைரஸ் இந்த நேர்த்திகடன்களை நிறைவேற்றுவதால் எப்படி பரவும்? மிகவும் தவறான முடிவு.

அதானே.... எனக்கும் தெரியவில்லை.  
சொன்ன ஆள்... சிங்களவன் போலை இருக்கு.

இப்ப சந்தோசமா... கற்பகதரு.  :grin:  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, கற்பகதரு said:

‘“அங்கப்பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அறிவித்துள்ளது“ .  கொரோனா வைரஸ் இந்த நேர்த்திகடன்களை நிறைவேற்றுவதால் எப்படி பரவும்? மிகவும் தவறான முடிவு.

ஒரு வருசம் கற்பூரச்சட்டி எடுக்காட்டில் ஒண்டும் குறைஞ்சு போகாது....சாமியும் கோவிக்காது கற்பகதரு...😎

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் நிலங்களில் எச்சில் துப்புவார்கள், அதனால் அங்கபிரதட்ஷனம் , அடி அழித்தல் போன்றவைகளால் நோய் பரவலாம்.காவடி ஆடும்போது ஆட்டத்தின் வீச்சில் வியர்வையோடு வைரஸும் வீசுப்படும். .....!  🤔

10 minutes ago, குமாரசாமி said:

ஒரு வருசம் கற்பூரச்சட்டி எடுக்காட்டில் ஒண்டும் குறைஞ்சு போகாது....சாமியும் கோவிக்காது கற்பகதரு...😎

 

கற்பூரச்சட்டிக்கு பதில் மேலுள்ளது.....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, suvy said:

மக்கள் நிலங்களில் எச்சில் துப்புவார்கள், அதனால் அங்கபிரதட்ஷனம் , அடி அழித்தல் போன்றவைகளால் நோய் பரவலாம்.காவடி ஆடும்போது ஆட்டத்தின் வீச்சில் வியர்வையோடு வைரஸும் வீசுப்படும். .....!  🤔

 

கற்பூரச்சட்டிக்கு பதில் மேலுள்ளது.....!

சுவியர்... சரியான அப்பாவியான ஆள் என்று, எனக்கு இன்றுதான் தெரியும். 😋

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

ஒரு வருசம் கற்பூரச்சட்டி எடுக்காட்டில் ஒண்டும் குறைஞ்சு போகாது....சாமியும் கோவிக்காது கற்பகதரு...😎

 

6 hours ago, suvy said:

மக்கள் நிலங்களில் எச்சில் துப்புவார்கள், அதனால் அங்கபிரதட்ஷனம் , அடி அழித்தல் போன்றவைகளால் நோய் பரவலாம்.காவடி ஆடும்போது ஆட்டத்தின் வீச்சில் வியர்வையோடு வைரஸும் வீசுப்படும். .....!  🤔

 

கற்பூரச்சட்டிக்கு பதில் மேலுள்ளது.....!

நன்றிகள் பல. இந்த நடைமுறை சிக்கல்கள், சாத்தியப்பாடுகள் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.