Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். குடாவை கைப்பற்ற புலிகள் முயற்சித்தால் அது அவர்களுக்கு பேரழிவாகவே முடியும்: சரத் பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். குடாவை கைப்பற்ற புலிகள் முயற்சித்தால் அது அவர்களுக்கு பேரழிவாகவே முடியும்: சரத் பொன்சேகா

யாழ்ப்பாணக் குடாநாட்டை கைப்பற்றுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சித்தால் அது அவர்களுக்கு பேரழிவாகவே முடியும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரச சார்பு ஊடகமான 'டெய்லி நியூஸ்' நாளேட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்துள்ள முக்கிய பகுதிகள்:

அரச படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதால் போர் நிறுத்த உடன்பாடானது செயற்திறனற்றதாக உள்ளது.

தற்போது போர் நிறுத்த உடன்பாடு என்பது இங்கு இல்லை. போர் நிறுத்தம் தொடர வேண்டும் எனில் விடுதலைப் புலிகள் தம்மை பலப்படுத்தாதவாறும், தமது எதிர்த்தரப்பினரை கொல்லாதவாறும் அரச தலைவரால் நிபந்தனைகள் முன்வைக்கப்பட வேண்டும்.

யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதற்கு விடுதலைப் புலிகள் தம்மால் இயன்றவற்றை செய்ய முயற்சிப்பார்கள். அது அவர்களுக்கு பெரும் வெற்றிகரமானது. ஆனால், அவர்கள் மறுபடி முயற்சித்தால் நாம் நன்கு தயாராகவே இருக்கின்றோம். எனவே முன்னரை விட நாம் திறமையாக செயற்படுவோம். எனவே அவர்கள் எம்மை தாக்கினால் அது அவர்களுக்குப் பேரழிவாகவே முடியும்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரங்களை கருணா குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அவர்கள் எமக்கு உதவவில்லை. எமது படையினரே கிழக்கை மீட்டனர். கருணாவின் ஆட்கள் அல்ல. இம் மோதல்களில் நாம் நூற்றுக்கும் மேற்பட்ட படையினரையும் அதிகாரிகளையும் இழந்துள்ளோம்.

கருணா குழுவிற்குள் மோதல்கள் நடைபெறுவதாக நாமும் அறிந்தோம். அந்த குழுவில் உள்ள ஒரிரு உறுப்பினர்கள் ஏனைய உறுப்பினர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் ஆயுத வலுவின் 50 வீதத்தை அழித்து விட்டோம். குறிப்பாக அவர்களின் பீரங்கிகளை அதிகம் அழித்து விடடோம். படை வலுவிலும் கணிசமானோரை அவர்கள் இழந்துள்ளனர். தற்போது அவர்களால் கிழக்கில் படைச்சேர்ப்பை மேற்கொள்ள முடியாது. அவர்களால் கிளிநொச்சியில் மட்டுமே உறுப்பினர்களை சேர்க்க முடியும். யாழ். குடாநாட்டில் இருந்தும் அவர்களால் படைச் சேர்ப்பை செய்ய முடியாது. விடுதலைப் புலிகள் தற்போது மிகவும் பலவீனமாக இருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் வான்படை வடபோர் முனையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அவர்களால் ஒரு சில குண்டுகளையே வீச முடியும். அதனால் ஏற்படும் சேதங்கள் குறைவானவை. எவர் ஒருவர் தனியார் வானூர்தியைக்கொண்டிருந்தாலு

அதை சொல்லும் நபரை பாருங்களன் கேவலமான போர் இழப்புகளை சந்தித்துவரும் இலங்கை இப்படி பினாத்தத்தான் முடியும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பொன்சேகா வாயை கொடுத்து அடி வாங்க போகுது இப்போ :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பதுவதால் அவர்களிற்கு பெரிதாக எதுவித நன்மைகளும் இருக்காது என்று நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடித்தான் சந்திரிகா காலத்திலையும் ஒருவர் கத்தினார். பிறகு புலிகள் ஆனையிரவினைப் பிடித்து, யாழ்நகரை நெருங்கும் போது, உலக நாடுகளை நோக்கி உதவி என்று ஒட, கதிர்காமர் இந்தியா சென்று உதவி கேக்க, கடைசியில் போர் நிறுத்தம் என்ற போர்வையினால் யாழ்ப்பாணத்தை புலிகளிடமிருந்து காப்பாற்றினார்கள்.

இவர்கல் இப்படி அறிக்கை விடும் போதெல்லாம் வரும் சில நாட்களில் பதில் அறிக்கையாக இல்லாமல் செயலாக இருக்குமே...

பதில் அறிக்கை விடும் வழக்கம் புலிகளிடம் இல்லை செயல் முதல் பிறகே பேச்சு இதுதான் புலிகளின் ஸ்ரைல் புலி பாய்ந்த பின் தெரியும் அதன் பலமும் அதன் மவுனமும்

புலிகள் ஆனயிறவை வீழ்த்தியபோது யாழ்ப்பாணத்திலுள்ள 30 ஆயிரம் இராணுவத்தினரை இந்தியாதான் காப்பாற்றியதா பொன்சேகா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பதுவதால் அவர்களிற்கு பெரிதாக எதுவித நன்மைகளும் இருக்காது என்று நினைக்கின்றேன்.

வடிவேல் சொல்வதுபோல்தான் எனக்கும் படுகிறது. யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் இராணுவத்தை புலிகள் அடைத்து வைத்துள்ளனர்.

அப்படியென்றால், 3 லட்சம் மக்களை எதற்காக அங்கேயே விட்டு வைத்திருக்கிறார்கள்? ராணுவத்தின் தேவைகளுக்காகவா!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலி வீரர்களின் இலக்கு இப்போது புதியகோணங்களிள் செயல்படுத்தகப்படுகின்றது.

பாவம் பொன்சேகா! பயத்தில் புலம்பத் தொடங்கிவிட்டார். இவரை காப்பாற்றக் கூடிய ஒரே கவசம் இவர் வைத்திருக்கும் அமெரிக்கன் க்ரீன் கார்ட் மட்டும் தான்.

On your Mark!

Get Set!

.............

.......................................................

  • கருத்துக்கள உறவுகள்

முடியல்லைடா பொண்சேகா...:lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.