Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சாவும் அதன் சம்பிரதாயங்களும்

Featured Replies

பதிவுக்கு நன்றிகள்

சமபிரதாயங்களோ இல்லை சில முறைளையோ சாவுநிகழ்வில் கடைப்பிடிக்கும் போது இறந்தவரை சரியான முறையில் வழிஅனுப்பிவிட்டோம் என்ற ஆறுதல் சம்மந்தப்பட்ட உறவுகளுக்கு கிடைக்கின்றது. இந்த ஆறுதலே பிரதானமானது.

ஏகப்பட்ட சடங்கு சம்பிரதாயங்கள் முறைகள் என அவரவருக்கு நாட்டாமை செய்து இந்த ஆறுதுல் கிடைக்காமல் போகும்  நிலையும் அதிக சாவு வீடுகளில் நடக்கின்றது. இந்த முறைகளை ஒரு வரயறையோடு காலத்துக்கேற்ப நெறிப்படுத்துவதும் அவசியமாகின்றது.

(புகையிலை மற்றும் சுருட்டு ஒருகாலத்தில் சாவு வீட்டில் அவசியமானது. அது ஒரு தொற்று நீக்கியாக இருந்த காலத்தில்.- இந்தக் காலத்தில் அது நோயை ஏற்படுத்தும் ஒன்றாக மாற்றப்பட்டுவிட்டது)

சிலர் சாவு நிகழ்வை  சமூக அந்தஸ்த்து போட்டியோடு இணைத்து செய்கின்றார்கள். தாம் இதை செய்தோம் இவ்வளவு செலவழித்தோம் என்று பெருமை தேடுவதுண்டு, இதற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. 

இறந்த உறவுகளின் திகதி திதிகளில் விளக்கு வைத்து உணவு படைத்து வணங்குவதை (யாரையும் அழைக்கவேணுமென்றில்லை) ஒரு பழக்கமாக வைத்திருப்பது ஆரோக்கியமானது. நல்ல உணர்வு கிடைக்கும். சித்திரை பௌணமி ஆடி அமவாசையை கடைப்பிடிப்பதும் இவ்வாறே நல்ல உணர்வு கிடைக்கும். 

இறந்தவர் சாம்பலை விழைநிலத்திலோ ஆற்றிலோ குளத்திலோ இல்லை கடலிலோ தூவலாம். கங்கையில்தான் என்பது அவரவர் தெரிவுகள். 

On 3/9/2020 at 15:31, Sasi_varnam said:

நல்ல கருத்து .. கையில் பச்சை இல்லை. 
நான் எனக்கு எழுதக்கூடிய உயில் :) ... 
எனக்கு பிடித்த தமிழ் இசையை தவழ விடுங்கள்.
என்னை சுற்றி வாழ்ந்த என் உற்றார், உறவினர் நண்பர்களுக்கு என் வாழ்க்கையை அழகாக பகிர்ந்து கொண்டமைக்கு பெரிய தொரு நன்றி தெரிவியுங்கள். 
என் பெயரில் 100 மரங்கள் நடுங்கள். அது நல்ல படியாக வளர்வதை உறுதி செய்யுங்கள்.

முடிந்தால் தம்பட்டமில்லாமல் கொஞ்ச தான தர்மங்கள் ...அவர்களோடு சேர்ந்து வழங்கி மகிழுங்கள். 

முடியும் !!! 🙏

 

வன்னியில் இரண்டு வருடங்களுக்க முன்பு இறந்த எனது உறவினரின் ஒருவரின் அந்தியோட்டி நிகழ்வுக்கு வந்தவர்கள் அனைவருக்கும்  மரக்கன்றுகள் கூடுதலாக தென்னங்கன்றுகள் கொடுத்து அனுப்பினார்கள்.  அந் நிகழ்வு மிக நிறைவைத் தந்தது. பலர் இதை இப்போது செய்கின்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தமிழ் சிறி said:

அல்வாயன்... உங்களது, மகனின்...  இழப்பிற்கு... ஆழ்ந்த அனுதாபங்கள்.  
தந்தை.. மகனை... இழப்பது, கொடுமையிலும், கொடுமை  என்று சொல்வார்கள்.

நன்றி தமிழ் சிறி...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

இது என்னுடைய வீட்டில் நடந்தது...எனது 2 வது மகன் சுகவீனம் காரணமாக இறந்துவிட்டார்..சனி  ஞயிறு என்று எதிர்பாராமல்...செவ்வாய் புதனில் காரியங்கள்  செய்யப்பட்டன..அய்யர் வந்தார்..கிரியை செய்து கொள்ளியும் மண்டபத்திலையே வைக்கப்பட்டது.(கொள்ளிக்கட்டைசம்பிரதாயமானது)பின்பு  தகனக்கிரியை மண்டபத்தில் பெட்டியின்மேல் கற்பூரம் கொழுத்தப்பட்டது..பின் தகன வாயினுள் செலுத்தப்பட்டது..அவ்விடமிருந்து..நெருங்கிய உறவுகளூ ம் வீட்டிர்கு வந்தவுடன் உறவினரால் உ ணவு வழங்கப்பட்டது..சிலர் குழித்துவிட்டு வந்தார்கல்..அப்படியேயும் சில்ர் சாப்ப்ட்டார்கள்..1 மாதம்வரை உறவுகள், நண்பர்களேணா 3  நேரமும் சாப்பாடு வந்தபடியே இருக்கும்..இதனை விட சரி 8 ம்நாள்.. காடாத்தும் 8ம் நாள் காரியமும் மாமிச உ ணவுகளுடன் படைத்தபின் அதனை ஒரு பொட்டலமாக கட்டி..ஒரு பாலத்தின் கீழ் ஓடும் னீரோடையில் கொண்டு சென்றூ  வைத்துவிட்டு வந்தோம்..31ம் நாள் 3  அய்யர்கள் ..அதில் ஒருவர் அதிகாலை 3 மணீக்கே தன்னுடைய இடத்துக்கு  வரச்சொல்லி முறைப்படி சடங்கு செய்த்து பிறிம்லி பீச்சில் உள்ள தண்ணீரில் போடச்சொல்லுவர்...எமது குடும்பத்துக்கு முதலில் இந்த அனுபவம் இருந்தபடியால் நானும் மனையும்..தம்பி ஒருவனும் சென்று அஸ்தியை கரைத்துவிட்டு வந்தோம்..பின்னர் 2 குருமார் வந்து பிட்டம் வைத்து தானம் செய்தபின் பந்தி நடந்தது...இது கனடாவென்றாலும் எமது பாரம் பரியத்தை கடைப்பிடிக்க வே ணும் என்பதனால் இவை அனத்தும் செய்யப்பட்டது..பெற்றவர் நாம்  கனடாவில் பிறந்த பிள்ளைக்காக இதனைசெய்து  எமது மனதை ஆற்றிக்கொண்டோம் ....ஆற்றீக் கொண்டிருக்கின்றோ...ம்..

உங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என தெரியவில்லை, மிகப்பெரிய இழப்பு. அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன். 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அல்வாயான்,

முதலில் உங்களின் மகனின் இழப்பிற்கு எனது அஞ்சலியையும் மன ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீங்கள் இங்கே கனடாவில் தான் இருக்கிறீர்கள் என்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன்.
யாழ் களம் ஊடாக கிடைத்த டொரோண்டோ நண்பர்கள் வட்டம் இன்னும் தோழமையோடு தொடர்பில் இருக்கிறது. சேர்ந்திருங்கள்.

நீங்கள் கூறி இருந்த அதே வழிமுறைகளை தான் எனது மனைவியின் சித்தப்பா இறந்த போது கடைப்பிடித்தார்கள்.
உங்கள் கருத்து பகிர்விற்கு நன்றி. சாந்தி நிலவட்டும். 🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.