Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவுடனான எல்லைப் பிரச்சினை ; வழக்கத்திற்கு மாறான போர் வாய்ப்புகளை உருவாக்கும் அச்சம் காணப்படுவதாக தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-720x450.jpg

சீனாவுடனான எல்லைப் பிரச்சினை ; வழக்கத்திற்கு மாறான போர் வாய்ப்புகளை உருவாக்கும் அச்சம் காணப்படுவதாக தகவல்!

சீனாவுடனான எல்லைப் பிரச்சினை அணுவாயுதம் உள்ளிட்ட வழக்கத்திற்கு மாறான போர் வாய்ப்புகளை உருவாக்கிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய இராணுவ தளபதி பிபின் ராவத் அச்சம் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான இராணுவ ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் காணொலி காட்சி வழியாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  “தற்போது சீனாவுடனான எல்லைப் பிரச்சினை மிகவும் சிக்கலானதாக உள்ளது. பிரச்சினை மிகவும் தீவிரமாக உள்ளது.  அணு ஆயுதம் உட்பட வழக்கத்துக்கு மாறான போர் வாய்ப்புகளை உருவாக்கிவிடுமோ என்ற அச்சத்தை தற்போதுள்ள சூழ்நிலை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு  சீனா தற்போது மிகவும் மூர்க்கதனமாக நடந்து கொண்டு வருகிறது.

அதே நேரத்தில்  சீனாவின் இந்த விஷமத்தனத்தை எப்படி முறியடிக்க வேண்டும்.  நம் எல்லையை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது நம் இராணுவத்துக்கு தெரியும்.

இந்தியா – சீனா இடையேயான இந்தப் பிரச்சினைக்கு இடையே  மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தான்  விபரீத நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சிக்கலாம். அவ்வாறு முயற்சித்தால்  பாகிஸ்தான் கடுமையான இழப்பை சந்திக்க நேரிடும். இதை முந்தைய அனுபவங்களில் இருந்து பாகிஸ்தான் உணர்ந்திருக்கும் என  நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீனா தற்போது தங்களிடம் இருக்கும் அணுவாயுதங்களை இரட்டிப்பாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பென்டகன் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/சீனாவுடனான-எல்லைப்-பிரச்/

  • கருத்துக்கள உறவுகள்

“லடாக் எல்லையில் மோதல் நடந்த பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுங்கள்” - சீன மந்திரியிடம் ராஜ்நாத் சிங் வற்புறுத்தல்

“லடாக் எல்லையில் மோதல் நடந்த பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுங்கள்” - சீன மந்திரியிடம் ராஜ்நாத் சிங் வற்புறுத்தல்

 

புதுடெல்லி,

எல்லை பிரச்சினையில் இந்தியாவுடன் சீனா தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.

கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவம் கடந்த மே மாதம் ஊடுருவியதில் இருந்து இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடந்து வருகிறது. இதில் ஜூன் 15-ந் தேதி ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் பலத்த உயிர்ச்சேதம் நிகழ்ந்தது.

இதனால் இந்திய-சீன எல்லையில் அமைதியை ஏற்படுத்துவதற்காகவும், அங்கிருந்து படைகளை வாபஸ் பெறுவதற்காகவும் இரு தரப்பிலும் ராணுவம் மற்றும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் இதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு இடையே கடந்த 29-ந் தேதி பங்கோங்சோ ஏரி பகுதியில் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவ முயன்றது. இதை இந்திய வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர்.

இந்த சம்பவத்துக்கு பின் எல்லையில் போர் மேகம் சூழ்ந்து உள்ளது. அங்கு சர்ச்சைக்குரிய பகுதிகளில் வீரர்களை நிறுத்தி உள்ள இந்தியா, ஏராளமான படைகளையும், ஆயுதங்களையும் எல்லையில் குவித்து வருகிறது. இதைப்போல சீனாவும் பின்வாங்க மறுப்பதால் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ராணுவ மந்திரிகளுக்கான சந்திப்பு நடைபெற்றது. இதில் சீன, ரஷிய ராணுவ மந்திரிகளுடன், இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கும் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தை தொடர்ந்து சீன ராணுவ மந்திரி வெய் பெங்கேவை ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். சீன மந்திரியின் வேண்டுகோளின்படி நடந்த இந்த கூட்டம் 2 மணி 20 நிமிடங்கள் நீடித்தது. இந்த கூட்டத்தில் லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இருநாட்டு மந்திரிகளும் வெளிப்படையாகவும், ஆழமாகவும் விவாதித்தனர்.

இந்த சந்திப்பின்போது சீன மந்திரியிடம் ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

எல்லையில் அதிக எண்ணிக்கையில் படைகளை குவித்தல், ஆக்கிரமிப்பு செயல்பாடுகள் மற்றும் அங்கு நிலவி வந்த இயல்பு நிலையை தன்னிச்சையாக மாற்ற முயற்சித்தல் உள்ளிட்ட சீன படைகளின் நடவடிக்கைகள் இருதரப்பு ஒப்பந்தங்களுக்கு எதிரானவை. உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோட்டை சீனா கண்டிப்பாக மதிக்க வேண்டும்.

அங்கு நீடித்து வரும் இயல்பு நிலையை தன்னிச்சையாக மாற்றக்கூடாது. தற்போது அங்கு ஏற்பட்டுள்ள சூழலை பொறுப்புணர்வுடன் கையாள வேண்டும். இரு தரப்பும் அங்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது. ஏனெனில் இது மேலும் பிரச்சினையை சிக்கலாக்குவதுடன், எல்லையில் பதற்றத்தை மேலும் அதிகரித்து விடும்.

எல்லையில் மிக விரைவில் பதற்றத்தை தணிப்பது மற்றும் படைகளை முழுவதுமாக விலக்குவது தொடர்பாக, ராணுவம் மற்றும் தூதரக மட்டத்திலான பேச்சுவார்த்தையை இரு தரப்பினரும் தொடர வேண்டும். இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட ஒருமித்த முடிவின்படி இருதரப்பும் அமைதிக்கான நடவடிக்கைகளுக்கு வழிகாட்ட வேண்டும்.

லடாக் எல்லையில் பங்கோங்சோ ஏரி உள்ளிட்ட மோதல் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து விரைவில் படைகளை முற்றிலுமாக வாபஸ் பெற வேண்டும். இந்த விஷயத்தில் இந்தியாவுடன் சீனா ஒத்துழைக்க வேண்டும்.

எல்லை மேலாண்மையில் இந்திய படைகள் எப்போதும் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்கின்றன. அதேநேரம் இந்திய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கான எங்கள் உறுதியில் எந்த சந்தேகமும் இல்லை.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

முன்னதாக இந்த கூட்டத்தில் சீன ராணுவ மந்திரி வெய் பெங்கே பேசும்போது, எல்லை விவகாரத்தில் மோடி-ஜின்பிங் இடையேயான பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட ஒருமித்த முடிவுகளை இருதரப்பும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்றும், தற்போதைய நிலவரம் மற்றும் நீண்டகால பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியாக தீர்க்க வேண்டும் என்றும், இதற்காக இரு தரப்பும் அனைத்து மட்டத்திலும் பேச்சுவார்த்தைகளை தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த தகவல்களை மத்திய அரசு அறிக்கை ஒன்றில் நேற்று தெரிவித்து உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இரு நாட்டு மந்திரிகள் நேரடியாக சந்தித்து பேசுவது இதுவே முதல் முறையாகும்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/06020830/Withdraw-troops-from-conflict-areas-on-Ladakh-border.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியே கதைச்சு காலத்தை வீணடிக்காமல்  சட்டு புட்டு என்று காரியத்தில் இறங்குங்கள். பார்ப்பம் யார் பெரியாள் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லை தாண்டி வந்து இந்திய வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர் - சீனா குற்றச்சாட்டு - அதிகரிக்கும் பதற்றம்

எல்லை தாண்டி வந்து இந்திய வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர் - சீனா குற்றச்சாட்டு - அதிகரிக்கும் பதற்றம்

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த ஜூன் 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. இரு நாடுகளும் எல்லை முழுவதும் படைகளை குவித்துள்ளன.


 
போர் பதற்றத்தை தணிக்கும் விதமாக பாதுகாப்பு மந்திரிகள் மட்டம் உள்பட பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த பேச்சுவார்த்தைகளில் பெருமளவு முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

இதற்கிடையில், அருணாசலபிரதேசத்தில் உள்ள எல்லையோர கிராமத்தில் வேட்டைக்கு சென்ற 5 பேரை சீன ராணுவம் கடத்தி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

இதற்கிடையில், இந்தியா-சீனா இடையே மோதலுக்கு மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படும் பகுதிகளில் லடாக்கின் லே-யில் உள்ள பாங்காங் ஏரி பகுதியும் ஒன்று. இரு நாட்டு எல்லைகளுக்கும் முக்கிய இடமாக உள்ள இந்த ஏரிப்பகுதியில் இந்திய-சீன படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், பாங்காங் ஏரி பகுதியில் அத்துமீறி நுழைந்து சீன படையினரை எச்சரிக்கும் விதமாக இந்திய படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீன செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,’ இந்திய ராணுவத்தினர் அத்துமீறி எல்லைக்கட்டுப்பட்டு கோட்டை கடந்து பாங்காங் ஏரியின் தெற்கு கரை மற்றும் ஷென்பவோ மலையோரப்பகுதிக்குள் நுழைந்துள்ளனர். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த சீன வீரர்கள் பேச்சுவார்த்தை நடத்த வந்தனர். 

ஆனால், சீன வீரர்களை எச்சரிக்கும் விதமாக இந்திய படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். நிலைமையை கட்டுப்படுத்த இந்திய படையினரின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதால் சீனா வீரர்களு பதில் தாக்குதல் நடத்தினர். 

இந்தியாவின் இந்த நடவடிக்கை மிகவும் மோசமான நிகழ்வாகும். அபாயகரமான நடவடிக்கைகள் எடுப்பதை இந்திய தரப்பு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என தெரித்துக்கொள்கிறோம்’ என்றார்.

இந்திய வீரர்களின் எச்சரிக்கை துப்பாக்கிச்சூட்டிற்கு சீன வீரர்கள் பதில் எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளது.

இந்திய வீரர்களும், சீன வீரர்களும் ஒருவரை ஒருவர் எச்சரிக்கும் விதமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீனா தெரிவித்துள்ள சம்பவம் எல்லையில் உச்சபட்ச பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://www.maalaimalar.com/news/topnews/2020/09/08031054/1855661/Indian-Soldiers-Fired-Warning-Shots-At-Bank-Of-Pangong.vpf

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ராணுவம் சுட்டதாக சீனா அபாண்டம்: எல்லையில் மீண்டும் உச்சகட்ட பதற்றம்

இந்திய ராணுவம் சுட்டதாக சீனா அபாண்டம்: எல்லையில் மீண்டும் உச்சகட்ட பதற்றம்

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லைப்பிரச்சினை நீடித்து வருகிறது. இதன் இடையே கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீற முயன்ற சீன துருப்புகளை இந்திய படைவீரர்கள் தடுத்து நிறுத்தியபோது ஏற்பட்ட மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகினர். சீன தரப்பில் 30 பேர் பலியானதாக தகவல் வெளியானது.


அதைத் தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில், கடந்த 29-ந் தேதி கிழக்கு லடாக் பகுதியில் பங்கோங் சோ ஏரி பகுதியில் சீன துருப்புகள் அத்துமீற முயன்றபோது, இந்திய வீரர்கள் அதை முறியடித்தனர். அதைத் தொடர்ந்து இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் தொடர் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் உடன்பாடு ஏற்படாமல் போர் பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இரவு, அசல் கட்டுப்பாட்டு கோட்டைக்கடந்து வந்து, இந்திய படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள் என்று சீனா அபாண்டமாக பழிபோட்டுள்ளது.

இதையொட்டி, சீன ராணுவ செய்தி தொடர்பாளர் கூறும்போது, “இந்திய படை வீரர்கள், அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியை சட்டவிரோதமாக தாண்டி வந்து, பங்கோங் சோ ஏரியின் தெற்கு கரையிலும், ஷென்பாவ் மலைப்பகுதியிலும் நுழைந்தனர். அவர்கள் அங்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த சீன எல்லை பாதுகாப்பு படையினரை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். சீன எல்லை பாதுகாப்பு படையினர் கள நிலைமையை உறுதிப்படுத்த, எதிர்நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது மிகவும் மோசமான இயல்புடைய தீவிரமான ஆத்திரமூட்டும் நடவடிக்கை ஆகும்” என குறிப்பிட்டார்.

இதற்கிடையே சீனாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்து உள்ளது.

இதையொட்டி இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில், படைகளை விலக்கிக்கொள்ளவும், பதற்றத்தை தணிக்கவும் இந்தியா உறுதியுடன் இருந்து வருகிறது. ஆனால் சீனா தொடர்ந்து ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீன துருப்புகள்தான் ஒப்பந்தங்களை மீறி, ஆக்கிரமிப்பு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில், ராணுவ, ராஜதந்திர, அரசியல் மட்ட நடவடிக்கைகள் தொடர்கின்றன.

கடந்த திங்கட்கிழமையன்று சீன துருப்புகள்தான், அசல்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமைந்துள்ள இந்தியாவின் முன்னோக்கிய நிலைகளில் ஒன்றை நோக்கி நெருங்கி வர முயற்சித்தன. இந்திய படை வீரர்களை அச்சுறுத்தும் வகையில் சீன துருப்புகள் வானத்தை நோக்கி சில ரவுண்டுகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இவ்வாறாக சீன துருப்புகள் கடுமையான ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதும், நமது படை வீரர்கள் மிகுந்த கட்டுப்பாட்டை கொண்டிருந்தனர். முதிர்ச்சியுடனும், பொறுப்பான முறையிலும் நடந்து கொண்டனர்.

இந்திய படைகள், எல்லையில் அமைதி மற்றும் சமாதானத்தை பேணுவதில் உறுதி கொண்டுள்ளன. இருப்பினும் தேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் என்ன விலை கொடுத்தேனும் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கின்றன.

சீன ராணுவத்தின் குற்றச்சாட்டு, தங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்வையாளர்களை தவறாக வழிநடத்தும் முயற்சி ஆகும்.

இவ்வாறு அதில் இந்திய ராணுவம் கூறி உள்ளது. இதன் காரணமாக எல்லைப்பகுதியில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில் சீனா தன் நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்துள்ளது. எல்லையில் படைகளை முடிந்தவரையில் விரைவாக திரும்ப பெற விருப்பம் தெரிவித்துள்ளது.

இதையொட்டி சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன், பீஜிங்கில் நிருபர்களிடம் நேற்று பேசும்போது, “நமது துருப்புகள், முகாம் பகுதிக்கு திரும்பி வருவார்கள் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம். எல்லைப்பகுதிகளில் இனி மோதல் இருக்காது. அந்த இடம் மிகவும் மோசமான இயற்கை சூழலை கொண்டுள்ளது என்பதை அறிவோம். அது 4 ஆயிரம் மீட்டர் உயரத்துக்கு மேலே உள்ளது. இது குளிர்காலமாக இருந்தால், மனிதர்கள் வாழ்வதற்கு அது நல்லதல்ல. எனவே ராஜதந்திரம் மற்றும் ராணுவ ரீதியிலான பேச்சு வார்த்தைகள் மூலமும், ஆலோசனைகள் மூலமும் நாம் கூடிய விரையில் படைகளை திரும்ப பெற முடியும், ஒருமித்த கருத்தை அடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என குறிப்பிட்டார்.

நடந்தது என்ன?

எல்லை பகுதியில் நடைபெற்ற மோதல் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அவை வருமாறு:-

அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பதற்றம் அதிகரித்த நிலையில், சீன துருப்புகள் 50, 60 பேர் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் பங்கோங் சோ ஏரிப்பகுதியில் அமைந்துள்ள இந்தியாவின் நிலை நோக்கி அணிவகுத்தனர். அவர்கள் கைகளில் இரும்பு ராடுகள், ஈட்டிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாக வந்தனர்.

இதே போன்றுதான் கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதியன்றும், இந்திய படைவீரர்கள் எதிர்பார்த்திராத வேளையில் இரும்பு ராடுகள், ஆணிகள் பதித்த குச்சிகள், கூர்மையான ஆயுதங்களுடன் வந்து இந்திய படை வீரர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி கொன்றனர்.

ஆனால் இந்த முறை அவர்களின் கனவு பலிக்கவில்லை. இந்திய படை வீரர்கள் சுதாரித்துக்கொண்டு, தீரமுடன் மோதினர், அவர்களை திரும்பும்படி இந்திய படை வீரர்கள் கட்டாயப்படுத்தினர். அப்போது அவர்களை பயமுறுத்தும் வகையில் வானத்தை நோக்கி சீன துருப்புகள் 10-15 ரவுண்டுகள் துப்பாக்கி சூடு நடத்தினர். லடாக் எல்லையில் 45 ஆண்டுகளுக்கு பிறகு நடந்துள்ள துப்பாக்கி சூடு இதுதான். இதுதான் அங்கு நடந்தது என நேரில் கண்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 3, 4 நாட்களாகவே லடாக்கில் உயரமான இடங்களில் இருந்து இந்திய படை வீரர்களை அகற்றி விட்டு, ஆக்கிரமிக்க சீன துருப்புகள் முயற்சித்து வந்தாலும், பங்கோங் சோ ஏரி பகுதியின் தெற்கு கரையைச் சுற்றியுள்ள சிகரங்களில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சீன ஊடகங்களுக்கு இந்தியா கண்டிப்பு

லடாக்கில் நேற்று முன்தினம் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியை தாண்டி வந்து இந்திய படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாக அபாண்டமாக சீனா பழிபோட்டுள்ளது.

இதையொட்டி சீன ஊடகங்களான சீனா டெய்லி, குளோபல் டைம்ஸ் ஆகியவை யூகத்தின் அடிப்படையில் தவறான தகவல்களுடன் செய்தி வெளியிட்டுள்ளன.

அதை இந்தியா கண்டித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “சீனா டெய்லி, குளோபல் டைம்ஸ் உள்ளிட்ட சீன அரசு ஊடகங்களில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு சில கருத்துகளை கூறி இருப்பதை கண்டோம். இந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை. அவை உண்மைகளை அடிப்படையாக கொண்டவை அல்ல. இப்படிப்பட்ட செய்திகளை வெளியிடுவதில் இருந்து விலகி இருக்குமாறு சீன ஊடகங்களை கூறுகிறோம்” என கூறப்பட்டுள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/09014535/China-blames-Indian-army-for-shooting-Tensions-rise.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

india-china-720x430.jpg

காணாமல்போன இந்தியர்கள் சீனா வசம் உள்ளனர் – மத்திய இணை அமைச்சர்

அருணாச்சலபிரதேசத்தில் காணாமல்போன இந்தியர்கள் ஐவர் தங்கள் பகுதியில் இருப்பதை சீனா உறுதிப்படுத்தியதாக மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முறைப்படி அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தனது ருவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்பர் சுபன்சிரி மாவட்டத்தில் இந்திய இராணுவத்திற்கு சுமை தூக்கிகளாகவும் வழிகாட்டிகளாகவும் பணியாற்றி வந்த 5 பேர் கடந்த வெள்ளிக்கிழமை காணாமல்போன நிலையில் சீன இராணுவத்தால் அவர்கள் கடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இதற்கு சீனா தரப்பில் மறுப்பு தெரிவித்த நிலையில், 5 இந்தியர்களும் தங்கள் பகுதியில் கண்டறியபட்டதாக சீனா தெரிவித்துள்ளது.

http://athavannews.com/காணாமல்-போன-இந்தியர்கள்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.