Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மசகு எண்ணை கப்பல் தொடர்பில் மக்களுக்கான எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மசகு எண்ணை கப்பல் தொடர்பில் மக்களுக்கான எச்சரிக்கை

September 4, 2020

sihan-55.jpg

மசகு எண்ணை கப்பல் தொடர்பில் அம்பாறை மாவட்ட மக்களுக்கு அவதான மாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சங்கமன்கண்டி கடற்பகுதியில்  மசகு எண்ணெய்க் கப்பல் தீப்பற்றி எரிகின்ற நிலையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு  மக்கள் அனைவரும் அவதானத்துடன் இருந்து கொள்ளுமாறு இன்று(4) அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்தது.

 மேலும் இவ்வெச்சரிக்கை திருக்கோவில்இ தம்பிலுவில், உமிரி, பொத்துவில் ,கல்முனை,ஆலையடிவேம்பு ,அக்கரைப்பற்று பிரதேச கடற்பிராந்தியத்தில் வாழும் மக்களை கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே வேளை சங்கமன் கண்டி கடற்பரப்பில் இருந்த 38 மைல் தொலைவில் தீ விபத்திற்குள்ளான  எரிபொருள் கப்பல்  பனாமா அரசுக்கு சொந்தமான “MT NEW DIAMOND“ என்ற கப்பலாகும்
கப்பலின் எஞ்ஜின் அறையில் ஏற்பட்டுள்ள தீ விபத்து இதுவரையில் பிரதான எரிபொருள் தாங்கி வரையில் பரவவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கப்பலில் 23 பேர் கொண்ட குழுவினர் இருப்பதாகவும் அவர்களின் உதவிக்காக இலங்கை கடற்படையின் மூன்று கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீப்பற்றி உள்ள கப்பலின் தற்போதைய நிலையின் அடிப்படையில் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள 2,70,000 மெற்றிக்தொன் எரிபொருளுக்கு இதுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என கடற்படை உறுதிப்பட தெரிவித்துள்ளது. #மசகுஎண்ணைகப்பல் #எச்சரிக்கை #அம்பாறை #பனாமா

df-1-461x1024.pngdf-6.jpgdf-7.jpg

 

https://globaltamilnews.net/2020/149659/

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் – கப்பல் சர்வதேச கடல் பரப்பில்

இலங்கைக்கு கிழக்கே கடலில் எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

 

spacer.png
தற்போது அந்தக் கப்பல் பாதுகாப்பாக சர்வதேச கடல் பரப்புக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
அம்பாறையிலிருந்து 35 கடல் மைல் தொலைவுக்கு அந்தக் கப்பல் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர், விமானப் படையினர் மற்றும் கடலோரக் காவல்படையினரின் இரண்டு நாள் போராட்டத்தின் பலனாக எம்டி நியு டயமன்ட் (MT New Diamond) கப்பலில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆனால் கப்பலில் தொடர்ந்தும் புகை வருவதாகவும் இதனால் இது தொடர்பாக அவதானமாக இருப்பதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் கப்பலில் இருந்து எண்ணெய்க் கசிவு எதுவும் ஏற்படவில்லையெனவும் கடற்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். -(3)

http://www.samakalam.com/செய்திகள்/எண்ணெய்க்-கப்பலில்-ஏற்பட/

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

மசகு எண்ணை கப்பல் தொடர்பில் அம்பாறை மாவட்ட மக்களுக்கு அவதான மாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

தீயை அனைத்துவிட்டதாக சொல்றாங்க தாங்கர்  அடியில வெடித்து விடடதோ ?

  • கருத்துக்கள உறவுகள்

MT-NEW-DIAMOND-FIRE.jpg

நியூ டயமன்ட் கப்பல் இலங்கையிலிருந்து 40 கடல் மைல்களுக்கு அப்பால் கொண்டுசெல்லப்பட்டது!

அம்பாறை, சங்கமன்கண்டி கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகிய நியூ டயமன்ட் என்ற கப்பல் தற்போது இலங்கையிலிருந்து 40 கடல் மைல்களுக்கு அப்பாலுள்ள கடல் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்த கப்பல் இலங்கையின் கிழக்குப் பகுதியில் இருந்து 30 கடல் மைல் தூரத்தில் விபத்துக்கு உள்ளாகியிருந்தது. இந்நிலையில் இலங்கை பாதுகாப்புத் தரப்பு, இந்திய தரப்புக்களின் தீவிர போராட்டத்துக்கு மத்தியில் தீப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் ALP Winger டக் என்ற படகு, விபத்துக்குள்ளான கப்பலை 40 கடல் மைல் (சுமார் 74 கி.மீ) வரை ஆழ்கடலுக்கு கொண்டு சென்று நிறுத்தியுள்ளது.

இதேவேளை, ஆழ்கடல் காற்று காரணமாக அவ்வப்போது தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளாவதாக தெரிவிக்கப்படுவதுடன் அவை டக் படகுகள் மற்றும் இந்திய கடலோர காவல்படை கப்பல்களால் கட்டுப்படுத்தப்படுவதாகவும் இதற்காக ஹெலிகொப்டர்களும் பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதன்படி, இலங்கை கடற்படைக்குச் சொந்தமான மூன்று மற்றும் மூன்று துரித தாக்குதல் கப்பல்கள், இலங்கை கடலோர காவல்படைக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள், இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான மூன்று கப்பல்கள், இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஒரு கப்பல், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுவின் இராவணா மற்றும் வசம்ப டக் படகுகள், பாதிக்கப்பட்டுள்ள கப்பலின் வெளிநாட்டு நிறுவனம் தயாரித்த ALP Winger டக் படகு, ஆழ்கடல் தீயணைப்பு வீரர்கள் கொண்ட டி.டி.டி-1 (TTT One) டக் படகு ஆகிய இந்த தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

அதேபோல், இலங்கை விமானப் படையின் எம்.ஐ-17 ஹெலிகாப்டர் மற்றும் பீச் கிராஃப்ட் ஆகியவை இந்த நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவி வழங்குகிறது.

மேலும், இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான இரண்டு டோர்னியர் விமானங்களும் அவசரகால பயன்பாட்டிற்காக மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

பேரழிவு நிவாரணத்தில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு வெளிநாட்டு தனியார் நிறுவனத்தை நியமிக்க கப்பலின் உரிமையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நிறுவனம் இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நியூ-டயமன்ட்-கப்பல்-இலங்/

  • கருத்துக்கள உறவுகள்

நெருங்கிய நட்பு நாட்டின் உயரிய தொழில் நுட்பங்கள் பாவிக்க பட வில்லையோ..😢

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.