Jump to content

திராவிட இயக்க அரசியல் இல்லை என்றால் தமிழை மாற்று மொழிக்கு இரையாக்குகின்ற பணிகள்தான் நடந்திருக்கும்!-


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளாக இந்தியை ஒழித்துவிட்டோம் என்று கூறுகிறார்கள். ஆனால், 60 ஆண்டு காலத் திராவிட இயக்க ஆட்சியில் இந்தியை மட்டுமல்ல தமிழையும் சேர்த்து ஒழித்து இரட்டைக் கொலை செய்திருக்கிறார்கள்” - திருச்செந்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இப்படிச் சொன்னார். இதை அதிமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் கடுமையாக மறுத்திருக்கிறார்.

இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் பேசிய வைகைச்செல்வன், “கடந்த 60 ஆண்டுகால திராவிட இயக்க அரசியலில்தான் தமிழ் மொழியானது மிக உன்னதமான உயரத்தைத் தொட்டிருக்கிறது. சீர்திருத்தத் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியது, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது, எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது. இவை எல்லாமே திராவிட இயக்க அரசியல்தான்.

அதுபோல, மூன்று உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தியது திராவிட இயக்க அரசியல்தான். இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டையொட்டி உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டையொட்டி உலகத் தமிழ்ச் சங்கமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும் உதித்தது. முதன்முதலில் மொழிக்கென்று ஒரு பல்கலைக்கழகம் உருவானது தமிழ்நாட்டில்தான். எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டின்போது நான்காம் தமிழையும் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. இப்படி எண்ணற்ற பணிகளைத் திராவிட இயக்க அரசியல் சாதித்திருக்கிறது.

உலக இலக்கியங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்தது, தமிழாய்ந்த தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கிக் கவுரவித்தது, தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தது உள்ளிட்டவையும் திராவிட இயக்க அரசியலால் நாம் கண்ட பலன்தான். தமிழனுக்குச் சுயமரியாதையைத் தந்ததும், இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு நின்றவர்களை தோளில் துண்டுபோட வைத்ததும் திராவிட இயக்க அரசியல்தான். இவ்வளவு ஏன்... துணிச்சலுடன் கேள்விகளைக் கேட்கலாம், துணிச்சலுடன் எதிர்த்து நிற்கலாம் என்பதை இன்றைக்குக் கேள்வி எழுப்பி இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கே பெற்றுத் தந்ததும் திராவிட இயக்க அரசியல்தான்.

ஒரு காலத்தில் அபேஷியர்கள், நமஸ்காரம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களை வேட்பாளர்கள், வணக்கம் என்று சொல்ல வைத்ததும், கணவரை ஸ்வாமி என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களை தலைவன் என்றும் தலைவி என்றும் சொல்ல வைத்ததும் திராவிட இயக்க அரசியல் தந்த மாற்றம்தான். தமிழுக்குச் செம்மொழி, இலக்கிய மொழி அங்கீகாரத்தைத் தந்ததும் திராவிட இயக்க அரசியலே.

இப்படி நமது சமூகப் பண்பாட்டுக்கும், மறுமலர்ச்சிக்கும் அடித்தளமிட்டதே 60 ஆண்டு காலத் திராவிட இயக்க அரசியல்தான். திராவிட இயக்க அரசியல் இல்லை என்று சொன்னால் தமிழை மாற்று மொழிக்கு இரையாக்குகின்ற பணிகள்தான் நடந்திருக்கும். அது மாத்திரமல்ல... பண்ணையார்கள், பிரபுக்கள், சட்டம் படித்த மேதைகள், பஸ் முதலாளிகள் என செல்வந்தர்கள் மாத்திரமே அரசியலுக்கு வரமுடியும், அவர்கள் மாத்திரமே சட்டப்பேரவைக்கும் நாடாளுமன்றத்துக்கும் செல்ல முடியும், அவர்கள் மட்டுமே அமைச்சர்களாக அதிகாரம் செலுத்த முடியும் என்ற நிலையே இன்னமும் தொடர்ந்திருக்கும்.

அந்த நிலையை மாற்றி, எங்கோ ஒரு மூலையில் இருக்கும் பாமரரும், எளியவரும், சாமானியரும் மக்கள மன்றத்துக்குச் செல்லமுடியும், அவர்களும் அமைச்சராக வரமுடியும் என்ற நிலையை நமக்குத் தந்தது திராவிட இயக்க அரசியல்தான் என்பதைப் பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் மறந்துவிடக் கூடாது” என்றார்.

‘இந்தி தெரியாது போடா’என்ற டி-ஷர்ட் ட்ரெண்டிங் குறித்துக் கேட்டதற்கு, “அண்ணா இருந்தவரை திமுக சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருந்தது. அதற்குக் காரணம், அவர் கொண்ட கொள்கையில், லட்சியத்தில் தடம் மாறாது பயணித்தார். அனைத்துக்கும் அப்பாற்பட்டவராக நேர்மைத் திறத்தோடு பணியாற்றினார். ஆனால், அவருக்குப் பிறகு தலைமைப் பதவிக்கு வந்த கருணாநிதி, சூழ்நிலைக்குத் தக்கவாறு முடிவுகளை எடுக்க ஆரம்பித்தார். அதனாலும் தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தவறான முடிவுகளை எடுத்த காரணத்தாலும் திமுக தனது பாதையை விட்டு விலகி கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போய்க் கொண்டிருக்கிறது.

‘தயாநிதி மாறனை மத்திய அமைச்சராக்கி இருக்கிறீர்களே?’ என்ற கேள்விக்கு, ‘அவருக்கு இந்தி தெரியும்’ என்று சொன்னவர் திமுக தலைவர் கருணாநிதி. அப்படிப்பட்டவர்கள்தான் இன்று பனியன் போட்டு பந்தா காட்டிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார் வைகைச்செல்வன்.https://www.hindutamil.in/news/tamilnadu/576599-if-it-was-not-for-the-politics-of-the-dravidian-movement-only-the-work-of-preying-on-tamil-as-an-alternative-language-would-have-taken-place-vaigai-selvan-1.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
    • இலங்கையின் தற்போதைய தேசிய வலைப்பந்தாட்ட வீராங்கனையும் முன்னாள் தலைவருமான செமினி அல்விஸ் ( Semini Alwis ) தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியுள்ளதாக,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் (SLADA) தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனைகளின்போது, சிறுநீர் மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் இருப்பதாக உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) அதிகாரபூர்வமாக செமினிக்கும்,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்துக்கும் தெரிவித்துள்ளது.   வலைப்பந்தாட்ட போட்டி இந்நிலையில், இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் மற்றும் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் ஆகிய அமைப்புகளால் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இலங்கை வலைப்பந்து வீரர் ஒருவர் தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால், குறித்த வீராங்கனை தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ‘பி’ மாதிரி சோதனையைத் தொடரலாம் எனவும் அதுவரை அவர் தேசிய பயிற்சி அமர்வுகளில் பங்கேற்பதில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஷிரோமி பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.   செமினி 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இரண்டு உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டிகளிலும், சில ஆசிய செம்பியன்சிப்களிலும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு மூத்த வீராங்கனை ஆவார். 2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி உலகக் கிண்ணப்போட்டியின்போது  இலங்கை அணியின் தலைவியாகவும் அவர் செயற்பட்டுள்ளார்.  இந்நிலையில், சவூதி அரேபியாவில் எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 13ஆவது ஆசிய வலைப்பந்து செம்பியன்சிப் போட்டிக்கு தயாராகும்  இலங்கை வலைப்பந்து சம்மேளனக் குழுவில் செமினி அல்விஸ் உள்ளடக்கப்பட்டுள்ளார். https://tamilwin.com/article/sri-lankan-player-failed-doping-test-1715314992?itm_source=parsely-special
    • வெற்றிலை மென்றதற்கு வழக்கா? பழுதடைந்த மரக்கறிகளை விற்றதற்கு வழக்கா ? வெற்றிலை மெல்லுவது யாழ்பாணத்தானின் சுய விருப்பம் அல்லவா ?  ( காவிக் கறையும் வாய்ப்பு ற்றையும் கொண்டு  வரும் ) தற்போது அதிகமாக பாவிக்கிறார்கள்  .😢
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.