Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா - சீனா எல்லை பதற்றம்: தீர்வு காண ஐந்து அம்ச திட்டத்துக்கு இருநாடுகளும் ஒப்புதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - சீனா எல்லை பதற்றம்: தீர்வு காண ஐந்து அம்ச திட்டத்துக்கு இருநாடுகளும் ஒப்புதல்

 
இந்தியா - சீனா எல்லை பதற்றம்

ANI

இந்தியா, சீனா இடையே நிலவிவரும் எல்லை பதற்றத்தை குறைக்க, அமைதியை நிலைநாட்டுவது, மற்றும் துருப்புகளை பின்வாங்கிக் கொள்வதை வலியுறுத்தி ஐந்து அம்ச திட்டத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

வியாழக்கிழமை அன்று ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற சந்திப்பில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இருவரும் எல்லை பிரச்சனைக்கு தீர்வு காணும் வழியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இரண்டு மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையின் போது, கிழக்கு லடாக் பகுதியில் சமீபத்தில் நிகழ்ந்த ஆத்திரமூட்டும் சம்பவங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கவலை தெரிவித்ததாக ஏஎன்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பல்வேறு தருணங்களில் சீனப் படைகள் நிகழ்த்திய அத்துமீறல் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கிழக்கு லடாக் பகுதியில் உள்ள பாங்கோங் ட்ஸோவின் தெற்கு கரைப்பகுதியில் உள்ள மெய்யான கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) அருகே சீன படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக இந்தியா குற்றம்சாட்டிய நிலையில், அந்த பகுதியில் கூர்மையான கத்திகள் இணைக்கப்பட்ட கம்புகளுடன் துப்பாக்கி ஏந்திய சீன படையினர் நிற்கும் படங்கள் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தன.

இந்நிலையில், "மாஸ்கோவில் நடைபெற்ற கூட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில், சீன துருப்புகள் ஆயுதங்களுடன் கூடியது குறித்து இந்தியா வலுவான கருத்தை பதிவு செய்தது. இவ்வாறு எல்லைப்பகுதியில் அதிகளவிலான சீன துருப்புகள் கூடுவது 1993 மற்றும் 1996 ஒப்பந்தங்களை மீறுவதாக உள்ளது. இதற்கு சீனத் தரப்பில் இருந்து சரியான விளக்கமும் தரப்படவில்லை. சீன துருப்புகளின் இந்த ஆத்திரமூட்டும் நடத்தை இருதரப்பு ஒப்பந்தங்களை மீறுவதாகவும், விதிமுறைகளை மதிக்காமல் இருப்பதாகவும் கருதப்படுகிறது" என இந்திய தரப்பில் இருந்து பதிவு செய்யப்பட்டதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

1976ஆம் ஆண்டு தூதரக நிலையிலான இந்திய - சீன உறவுகள் மீண்டும் தொடங்கியது. 1981ல் நடந்த எல்லை பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேம்பட்டதாக குறிப்பிட்ட அமைச்சர் ஜெய்சங்கர், அவ்வப்போது எல்லைப் பகுதிகளில் சில சம்பவங்கள் நிகழ்ந்தாலும், அமைதி நிலவியதாக தெரிவித்தார்.

spacer.png

Getty Images

மேலும், "இந்தியா, சீனா எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காண நேரமும் முயற்சியும் தேவைப்படும் என்றாலும், இருநாட்டு உறவுகள் மேம்பட, இதற்கு தீர்வு காண்பது அவசியமாகிறது. எனினும், சமீபத்தில் லடாக்கில் நிகழ்ந்த சம்பவங்கள் இதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. எனவே, இரு நாட்டு நலனையும் கருத்தில் கொண்டு, தற்போதைய நிலைமைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்" என்று சீன தரப்பிடம் அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியதாகவும் ஏஎன்ஐ செய்தி கூறுகிறது.

பேச்சுவார்த்தையின் முடிவில் அமைதியை நிலைநாட்டுவது, மற்றும் துருப்புகளை பின்வாங்கிக் கொள்வதை வலியுறுத்தி ஐந்து அம்ச திட்டத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன

 

சீன தரப்பு கூறுவது என்ன? 

 

எல்லைப் பகுதியின் நிலை குறித்து சீனாவின் கடுமையான நிலைப்பாட்டை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி சுட்டுக்காட்டினார். 

இருநாடுகளும் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை மீறாமல் இருக்க வேண்டும் என்றும் துப்பாக்கி பிரயோகம், மற்றும் ஆபத்தான சூழல் நிலவுவதை உடனடியாக முடிக்க வேண்டும் எனவும் வாங் யி வலியுறுத்தியதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது.

spacer.png

Getty Images

"பதற்றத்தை குறைக்க, படைகளை பின்வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் துருப்புகள் எல்லையில் இருந்து வெளியேற வேண்டும்" என்றும் சீன வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காணவும் விருப்பம் தெரிவித்துள்ள சீனா, எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட, இந்திய தரப்புடன் ராஜீய ரீதியாகவும், ராணுவம் மூலமாகவும் தொடர்பில் இருக்கும் என்று கூறியுள்ளது.

சீன வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், இந்திய தரப்பின் கருத்துகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

"இந்தியா - சீனா உறவுகளின் வளர்ச்சி, எல்லை பிரச்சனையின் தீர்வைப் பொறுத்தது என்று இந்தியத் தரப்பு கருதவில்லை. இந்தியா பின்னோக்கிச் செல்ல விரும்பவில்லை. பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை குறைக்கவும் அமைதியை நிலைநாட்டவும் இந்திய தரப்பு தயாராக இருக்கிறது" என்று சீனாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

பேச்சுவார்த்தையின் முடிவு என்ன?

 

இந்தியா - சீனா ஆகிய இருநாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "இந்தியா மற்றும் சீனா இடையிலான வேறுபாடுகள் சர்ச்சையாக மாறாமல் பார்த்துக்கொள்வது போன்ற விஷயங்களை பின்பற்றுவதோடு, உறவுகளை மேம்படுத்த இருநாட்டு அமைச்சர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். 

இந்தியா சீனா எல்லை விவகாரங்கள் தொடர்பாக தற்போது இருக்கும் ஒப்பந்தங்கள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றி, இந்தப் பிரச்சனை பெரிதாகாமல் அமைதியை பேண இருதரப்பும் ஒப்புதல் அளித்துள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

https://www.bbc.com/tamil/global-54113182

  • கருத்துக்கள உறவுகள்

நடக்கும் என்பார் நடக்கா...து. நடக்காதென்பார் நடந்துவிடும்.......😂

 

எதுக்கும் கொஞ்சம் பொறுமையாக இருப்போம்..... 😜

Edited by Kapithan

Tipcat Playing Gulli Danda Game in Village | Gooti Billa Game Playing Boys  | Tipcat gaming - YouTube

  • கருத்துக்கள உறவுகள்
கிழக்கு லடாக்கில் சீன துருப்புகள் துப்பாக்கியால் சுட்டன -புதிய தகவல்
 
கிழக்கு லடாக்கில் சீன துருப்புகள் துப்பாக்கியால் சுட்டன -புதிய தகவல்
 

கிழக்கு லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், பங்கோங் சோ ஏரியின் வடக்கு கரையில், இந்தியாவின் முன்னேறிய நிலையை நோக்கி சீன துருப்புகள் கடந்த வாரம் முன்னேறின. ‘பிங்கர்-4’ என்ற மோதல் பகுதியில் நடந்த இந்த அத்துமீறல் முயற்சியை அங்கு குவிக்கப்பட்டிருந்த இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.


அதைத் தொடர்ந்து, ஆக்ரோஷமாக ஆயுதங்களுடன் வந்த சீன துருப்புகள் பின்வாங்கி திரும்பிச் சென்றன. அப்போது அவர்கள் இந்திய படை வீரர்களை அச்சுறுத்துவதற்காக 100-200 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர்.

இதை நேரில் கண்ட வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. சீனாவின் இந்த அத்துமீறல், மாஸ்கோவில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், சீன வெளியுறவு மந்திரி வாங் யியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துதற்கு முன்பு நடந்ததாகும்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/17043139/Before-Moscow-pact-Indian-and-Chinese-troops-fired.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.