Jump to content

இலங்கைத் தீவில் தமிழர் உரிமைகள் மறுக்கப்பட்டதை உரத்துக்கூற தமிழர் நாம் ஒன்றிணைவோம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தீவில் தமிழர் உரிமைகள் மறுக்கப்பட்டதை உரத்துக்கூற தமிழர் நாம் ஒன்றிணைவோம்

 

பண்டைய தமிழர் தாயகம் ஈழம். இன்று சிங்களவர்களுக்கான சிறீலங்காவாக மாற்றப்பட்டுள்ளது. சிறீலங்காவை ஆட்சி புரிந்த, புரியும் சிங்களக் கட்சிகளால் அமுல்ப்படுத்தப்பட்ட சட்டங்களும், திட்டங்களும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சிங்கள அரச பயங்கரவாதமும் இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய இனத்தின் வாழ்வு நிலைகளையும், வாழ்வு இயக்கங்களையும் மாற்றியமைத்தது.

தமிழர்களின் வாழ்வுக்காக உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்களும் தீர்வுகளும் கிழிக்கப்பட்டதும், அழிக்கப்பட்டதும் அவை நடைமுறைப்படுத்தப்படாமல், போனைதே சிறீலங்காவில் மறைக்கப்பட்ட வரலாறாகியது.

சிங்களக் கட்சிகளின் அரச பயங்கரவாதத்திற்கும் இணைந்த ஆளுகைப் பயங்கரவாதம் தமிழர் தாயக பூமியை சிங்களமயப்படுத்தி அதற்கு உதவியாக இராணுவமயப்படுத்தியதும், சிறீலங்காவில் தமிழர் இனத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஒட்டுமொத்தமாக தமிழ் மொழியை அழித்து, தமிழர்களின் கலை, பண்பாட்டை சீரு்குலைத்து, தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, தமிழர் வரலாற்றைத் திரித்து, தமிழ்த் தேசியத்திற்கான எண்ணக்கருவை அழிக்கும் சிங்கள அரசுகளின் இச் செயற்பாடுகள் சிறீலங்காவில் தமிழர்களின் வாழ்வுரிமையையே மறுத்து வருகின்றது.

இதற்கு எடுத்துக்காட்டாக சிறீலங்காவில் அமுல்ப்படுத்தப்பட்ட பிரஜா உரிமைச் சட்டம், வாக்குரிமைச்சட்டம், தனிச் சிங்களச் சட்டம், பிரதேசசபைச் சட்டம், மாவட்ட அபிவிருத்திச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் ஆகியவற்றைக் கூறலாம். இச்சட்டங்கள் யாவும் தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிராகவும், சிங்கள இனத்திற்கு சார்பாகவும் அமைந்தன.

இதேபோன்று தான் சிங்களத் தலைமைகளால் உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்களும், திட்டங்களும்கூட தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக அமையவில்லை. மாறாக தமிழினத்திற்கு எதிராகவே அமைந்தன.

  • பண்டா – செல்வா ஒப்பந்தம்

சிங்களத் தலைவர் பண்டாரநாயக்காவுக்கும் தமிழ்த் தலைவர் தந்தை செல்வநாயகத்திற்கும் இடையேயான ஒப்பந்தம். 1957 ஜுலை 26இல் கையெழுத்தானது.

  • டட்லி – செல்வா ஒப்பந்தம்

சிங்களத் தலைவர் டட்லி சேனநாயக்காவிற்கும் தமிழ்த் தலைவர் தந்தை செல்வா என அழைக்கப்படும் செல்வநாயகத்திற்கும் இடையேயான ஒப்பந்தம். 1965 மார்ச் 24இல் ஏற்படுத்தப்பட்டது.

இந்த ஒப்பந்தங்கள் தமிழர் பிரச்சினைக்கான தீர்பாக பிரதேச மட்டத்தில் அதிகாரங்களை பரவலாக்கல் என்ற அம்சங்களை கொண்டிருந்தது.

  • ஜே.ஆர் – அமிர்தலிங்கம் ஒப்பந்தம்

சிங்களத் தலைவர் சிறீலங்கா ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனவிற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ.அமிர்தலிங்கத்திற்கும் இடையேயானது. இது மாவட்ட மட்டத்தில் மாவட்ட அபிவிருத்தி சபைகளை உருவாக்கி அதிகாரத்தை பரவலாக்கல் என்பது பற்றிக் கூறியது.

  • பிரேமதாசாவின் பிரதேச சபைகள் திட்டம்

சிறீலங்கா அதிபர்  ரணசிங்க பிரேமதாசாவால் கொண்டு வரப்பட்டது.  பிரதேச மட்டத்தில் பிரதேச சபைகளையும், பிரதேச செயலர் பிரிவுகளையும் உருவாக்கி அவற்றைப் பலப்படுத்துதல். இத்திட்டத்தல் உருவான பிரதேச செயலர் பிரிவுகளுக்கான பிரதேச செயலர்களுக்கு அரச அதிபருக்கு இணையான ஆளுகை அதிகாரத்தை வழங்குதல் என்ற விடயம் இருந்தது.

  • இந்திய – இலங்கை ஒப்பந்தம்

இது இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கும் சிறீலங்கா அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களுக்குமிடையே 29 ஜுலை  1987இல் கையெழுத்தாகியது. இந்த ஒப்பந்தம் தமிழர்களின் பிரதிநிதிகள் இன்றி எழுதப்பட்டது. இது தமிழர் தாயகத்தில் வடக்கு – கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைத்து, பின்னர் அவற்றை பிரிக்கும் சூழ்ச்சியைக் கொண்டிருந்தது.

  • சந்திரிக்காவின் கிழக்கு மாகாணத்தை துண்டாடும் திட்டம்

சிறீலங்கா அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க அவர்களால் முன்வைக்கப்பட்டது. இத்திட்டம் தமிழர் தாயகமான கிழக்கு மாகாணத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கென உருவாக்குதல். தமிழ்ப் பகுதியை வடக்கு மாகாணத்துடன் இணைத்தல் என்ற விடயத்தைக் கொண்டிருந்தது.

இந்த ஒப்பந்தங்களும் திட்டங்களும் சிங்களத் தலைமைகளாலும் இந்திய அரசாலும் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், தமிழர்களின் உரிமைகளுக்கான தீர்வாக அமையவில்லை. அவை தமிழர் தாயகத்தில் காணி (நில உரிமை), காவல் மற்றும் நிதி ஆளுகைகளை  தமிழர்களுக்கு தர மறுத்தது. சிங்களவர்களின் ஆளுகையையும், அதிகாரங்களையும் தமிழர் தாயகத்தில் மேலும் பலப்படுத்துவதாகவும் அமைந்தன. தமிழர்காளல் முன்வைக்கப்படட தமிழர்களுக்கான சுயாட்சித் திட்டங்களை இந்த ஒப்பந்தங்களும் திட்டங்களும் புறக்கணித்தன. இவை தமிழர் தாயகத்தில் தமிழர்கள் அதிகாரமற்றவர்களாக வாழும் நிலைகளை ஏற்படுத்தியது.

இதன் விளைவாகவே சாத்வீக வழியிலும், ஆயுதம் ஏந்தியும் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வாக தமிழீழம் என்ற நோக்க இலக்கை வைத்து போராடினார்கள். தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக்கி, சிங்கள அரசுகளும், உலக அரங்கும் இணைந்தும் உருவாக்கியுள்ள இன்றைய நிலை மாற்றப்பட வெண்டும். இந்த நிலை தமிழர்களின் பிரச்சினைக்கான எந்தத் தீர்வையும் முன்வைக்கப் போவதில்லை.

சிங்கள அரசுகளின் சூழ்ச்சியும் செயற்பாடுகளும் உலக அரசுகளின் நலனும் ஒன்றிணைந்து தமிழர் விடுதமலப்போராட்டத்தை மௌனமாக்கியுள்ளது. இதன் விளைவு

  • தமிழர் தாயகம் சிங்களமயப்படுத்தப்படும் வகையில் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளது.
  • சொந்த மண்ணில் தமிழர்கள் சுதந்திரமற்றவர்களாக பாதுகாப்பின்றி அவல நிலையில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
  • தமிழர்கள் அகதிகாளக புலம்பெயர்ந்து வாழும் நிலை உருவாகியுள்ளது.
  • தமிழர்களின் இனப்பரம்பல் குறைக்கப்பட்டுள்ளது.
  • தமிழ் மக்களின் உரிமைக்குரல் சிறீலங்கா பாராளுமன்றத்தில் பலவீனமாகி உள்ளது.
  • சிங்கள அரச பயங்கரவாதம் மறைக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் உலக அரங்கை ஏமாளியாக்கி மௌனமாக்கியுள்ளது.
  • தமிழர் விடுதலையை மறுத்து தமிழ் இனத்திற்கு எதிராக சிங்கள இனவாதம் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைகள் மாற்றப்பட வேண்டும். சாத்வீக வழியிலும், ஆயுதம் ஏந்தியும் தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராடிய தமிழினம், தமது போராட்டத்தை இராஜதந்திர வழியில் உலக அரங்கில் ஒன்றிணைத்து எழுச்சிபெற்று தமிழீழம் மற்றும் தமிழகத்துடன் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். உலகிற்கு உண்மையை உரக்கச் சொல்லி தமிழர் விடுதலைப் போராட்டம் என்பதை நிரூபிக்க வேண்டும்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கையில் தமிழர் தாயகம் இருக்கின்றது என்பதை உணர்ந்து செயற்பட ஒன்றிணைவோம். உலக அரங்கின் மனசாட்சியைத் தட்டியெழுப்புவோம்.

தொடரும்…

http://www.ilakku.org/இலங்கைத்-தீவில்-தமிழர்-உ/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.