Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரன், சிறிதரனுக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விரைவில் நடவடிக்கை.! - சி.வி.கே அறிவிப்பு .!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன், சிறிதரனுக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விரைவில் நடவடிக்கை.! - சி.வி.கே.!

Screenshot-2020-09-13-22-52-38-851-org-m

"இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் உள்ளிட்டவர்கள் பற்றிய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்."

- இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, தமிழரசுக் கட்சியில் இருந்து எம்.ஏ.சுமந்திரனை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி கட்சியின் தலைமைக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் இன்று ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதில் வழங்கும்போதே சி.வி.கே. சிவஞானம் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் ஓர் உறுப்பினர் என்ற வகையில் தவராசா அந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த கடிதம் எனக்கும் கிடைத்துள்ளது.

அவரால் அனுப்பப்பட்ட கடிதத்தை நான் இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை. அதனை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் சமர்ப்பித்து, விடயங்களை ஆராய்ந்து, அந்தக் குழுவில் யார் யார் இருக்கின்றார்கள் என ஆராய்ந்து அது பரிசீலிக்கப்படும். ஆனால், அது மட்டும் இல்லை. ஏற்கனவே வேறு பல முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன.

சுமந்திரன், சிறிதரன் மற்றும் குணாளனுடைய முறைப்பாடுகள் எனப் பல முறைப்பாடுகள் இருக்கின்றன. எனவே, இந்த விடயங்கள் தொடர்பில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விரைவில் நடவடிக்கை எடுக்கும்" - என்றார்.

http://aruvi.com/article/tam/2020/09/13/16698/

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன், ஶ்ரீதரன் குறித்த முறைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; சி.வி.கே.சிவஞானம்

 
 

பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோர் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அது தொடர்பில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விரைவில் தீர்மானம் எடுக்கும் எனவும் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து நீக்கப்படவேண்டியவர் எம்.ஏ.சுமந்திரன் என கட்சியின் தலைமைக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக நேற்றஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில்,

“இலங்கை தமிழரசுக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் ஒரு உறுப்பினர் என்ற வகையில் அவர் அந்தக் கடிதத்தினை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதம் எனக்குக் கிடைத்துள்ளது. அவரால் அனுப்பப்பட்ட கடிதத்தினை நான் இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை. அதனை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் சமர்ப்பித்து, விடயங்களை ஆராய்ந்து அந்தக் குழுவில் இருப்பவர்கள் யார் என்பதையும் ஆராய்ந்து தீர்மானித்து முறைப்பாடு பரிசீலிக்கப்படும்.

இதேவேளை,தவராசாவின் முறைப்பாடு மட்டுமல்லாது ஏற்கனவே வேறு பல முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. சுமந்திரன், ஸ்ரீதரன் மற்றும் குணாளனுடைய முறைப்பாடுகள் என பல முறைப்பாடுகள் இருக்கின்றன. எனவே, இவ்விடயங்கள் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கைக் குழு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்டார்.

 

http://www.ilakku.org/சுமந்திரன்-ஶ்ரீதரன்-குற/

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் மற்றும் ஸ்ரீதரன் தமிழரசு கட்சியில் இருந்து நீக்கப்படவேண்டியவர்கள்: சி.வி.கே. தெரிவிப்பு.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.