Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா ஆணையாளரின் கருத்துக்கு இலங்கை கண்டனம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Sri-Lanka-dismisses-UN-rights-chief%E2%8

முன்மொழியப்பட்ட 20வது திருத்தம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டின் கருத்துக்கள் தேவையற்றவை மற்றும் அனுமானத்தின் அடிப்படையிலானவை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45வது அமர்வில் நிகழ்ச்சி நிரல் இரண்டின் கீழான பொது விவாதத்தின்போது ஜெனீவாவில் ஐ.நா.வின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி தயானி மென்டிஸ் அளித்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

“அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20வது திருத்தம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்தை எதிர்மறையாக பாதிக்கும் என உயர்ஸ்தானிகர் மைக்கேல் பச்லெட்டின் கடந்த திங்களன்று தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 20வது திருத்தம் ஒரு முழுமையான ஜனநாயக வழிமுறையைத் தொடர்ந்து விவாதிக்கப்படும். அங்கு அனைத்து உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைக்க வாய்ப்புக் கிடைக்கும்.

மேலும், இவ்வாண்டு பெப்ரவரியில் இலங்கையானத முப்பதின் கீழ் ஒன்று தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து விலகியதால் புதிய அரசாங்கம் ஐ.நா. சபைக்கு அளித்த உத்தரவாதங்கள் குறித்து உறுதியுடன் உள்ளது”- எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை,

சட்டவிரோத கொலைகள் தொடர்பாக நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்க்கு கடந்த மார்ச் மாதத்தில் வழங்கப்பட்ட மன்னிப்பு, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூத்த இராணுவ அதிகாரிகள் முக்கிய சிவில் திணைக்களங்களில் நியமிக்கப்படுதல் போன்றவை குறித்தும் மிச்செல் பச்லெட் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மூத்த இராணுவ அதிகாரிகள் அரச நிறுவனங்களின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படுவதற்கு எதிராக பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக இலங்கை இதுகுறித்து பதிலளித்துள்ளது.https://newuthayan.com/ஐ-நா-ஆணையாளரின்-கருத்துக/

ஐ.நா மனித உரிமை பேரவையிலிருந்து வெளியேறுகிறது ஸ்ரீலங்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் இன்று (17) தெரிவித்துள்ளது.

இன்றையதினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 45 ஆவது அமர்வில் இலங்கை குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள தயாரில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

2009 முதல் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை போலியான யுத்தக்குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றது இலங்கையை காட்டுமிராண்டி தேசமாக காண்பிக்க முயல்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் தொடர்பாக மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து பதிலளித்துள்ள ரம்புக்வெல சில அதிகாரிகள் 55வயதுக்கு முன்னர் ஓய்வுபெறுகின்றனர். ஆகவே அவர்கள் ஓய்வுக்கு முன்னர் சிறப்பாக செயற்பட்டிருந்தால் அரசாங்கத்தின் நடைமுறைக்கு ஏற்ப அவர்களுக்கு நியாயமாக நடக்கவேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கியநாடுகள்மனித உரிமை பேரவையின் சமீபத்தைய கருத்துக்கள் இலங்கைக்கு எதிரான கடந்த கால கருத்துக்களின் தொடர்ச்சி என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாடாக நாங்கள் சரணடைந்தால் மனித உரிமை பேரவை தெரிவிக்கும் அனைத்தையும் ஏற்கவேண்டியிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளித்துள்ள அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ்பத்திரன, உயர்பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதனை மனித உரிமை பேரவைக்கு தெரிவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/150776?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நாவின் பொறிக்குள் இருந்து தப்பவே முடியாது ராஜபக்ச அரசு; அநுரகுமார.!

Screenshot-2020-09-18-10-43-35-309-org-m

ஐ.நா. தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகினாலும் ஐ.நா. மனித சபையின் உறுப்புரிமை நாடுகளில் இலங்கை தொடர்ந்து அங்கம் வகிக்கின்றது. எனவே, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களை ராஜபக்ச அரசு நிராகரித்தாலும் ஐ.நா. வைத்துள்ள பொறியில் இருந்து ஒருபோதும் தப்பவே முடியாது."

- இவ்வாறு ஜே.வி.பியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"கோட்டாபய - மஹிந்த தலைமையிலான ராஜபக்ச அரசு மீது நாம் முன்வைத்திருந்த குற்றச்சாட்டுக்களையே தற்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் முன்வைத்துள்ளார். இந்தநிலையில், இந்தக் குற்றச்சாட்டுக்கள் போலியானவை என்று அரசு எப்படிக் கூற முடியும்?

இந்த ஆட்சி குடும்ப ஆட்சி; இராணுவ ஆட்சி; சர்வாதிகார ஆட்சி. குற்றங்கள்தான் இந்த ஆட்சியில் மலிந்து கிடக்கும். இந்த ஆட்சிக்கு ஆணை வழங்கிய மக்கள்தான் பாவப்பட்டவர்கள்" - என்றார்.

http://aruvi.com/article/tam/2020/09/18/16893/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.