Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா-சீனா எல்லை பதற்றம்: கைலாய மலையை கைப்பற்றியதா இந்திய இராணுவம்? #BBCFactCheck

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா-சீனா எல்லை பதற்றம்: கைலாய மலையை கைப்பற்றியதா இந்திய இராணுவம்? #BBCFactCheck

  • உண்மை கண்டறியும் குழு
  • பிபிசி இந்தி சேவை 
19 செப்டெம்பர் 2020
இந்தியா-சீனா எல்லை பதற்றம்

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, 

கோப்புப் படம்

லடாக்கில் மெய்யான கட்டுப்பாட்டு கோட்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் தொடர்கிறது.

இந்த வரிசையில், லடாக்கின் வெவ்வேறு இடங்களைப் பற்றி தினசரி செய்திகள் வெளிவருகின்றன.

இந்திய இராணுவம் கைலாய மலையையும் மானசரோவரையும் கைப்பற்றியதாக சமூக ஊடகங்களில் கடந்த ஒரு வாரமாக, கூறப்பட்டு வருகிறது.

இது பற்றிய செய்திகள் தினமும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. 

இந்த செய்தியுடன் ஒரு படமும் பகிரப்பட்டு வருகிறது. கைலாய மலையில் இந்திய வீரர்கள் மூவர்ண கொடியை அசைப்பதை பார்க்கமுடிகிறது.

இந்தியாவுடன் சேர்ந்த பிறகான கைலாய மலையின் படங்கள் இவை என்று கூறப்படுகிறது.

இந்தப் படம், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜி.டி.பக்க்ஷியின் ட்விட்டர் கணக்கிலிருந்தும் ட்வீட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்திய இராணுவம் கைலாய மலையை கைப்பற்ற அதை நோக்கி நகர்வதாக அதில் எழுதப்பட்டிருந்தது. இந்த ட்வீட் மூவாயிரத்திற்கும் அதிகமான தடவைகள் மறு ட்வீட் செய்யப்பட்டது.

இந்தியா-சீனா எல்லை பதற்றம்

பட மூலாதாரம், TWITTER

 
இந்தியா-சீனா எல்லை பதற்றம்

பட மூலாதாரம், TWITTER

 

கைலாய மலையின் கைப்பற்றல் பற்றிய இந்த செய்தி இத்துடன் நிற்கவில்லை.

இதன் பின்னர், சமூக ஊடகங்களில் ஒரு தனியார் தொலைக்காட்சி சேனல் செய்தியின் ஸ்க்ரீன் ஷாட்டை சித்தரித்து பல பயனர்கள், இந்திய இராணுவம் கைலாய மலைத்தொடரை கைப்பற்றியுள்ளதாக ட்வீட் செய்துள்ளனர்.

இந்தியா-சீனா எல்லை பதற்றம்

பட மூலாதாரம், TWITTER

 
இந்தியா-சீனா எல்லை பதற்றம்

பட மூலாதாரம், TWITTER

 

உண்மை என்ன?

வீரர்கள் மூவர்ணக்கொடியை அசைக்கின்றனர். பின்னால் கைலாய மலை தெரிகிறது. இந்தப் புகைப்படம் பற்றி முதலில் பார்ப்போம்.

கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் இந்த படத்தை நாங்கள் தேடியபோது, வீரர்கள் கொடி அசைக்கும் படங்கள் எங்களுக்கு பல இடங்களில் கிடைத்தன. ஆனால் அவற்றில் கைலாய மலை, பின்னணியில் காணப்படவில்லை.

இந்தியா-சீனா எல்லை பதற்றம்

பட மூலாதாரம், SOCIAL MEDIA 

 
படக்குறிப்பு, 

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் படம்

2020 ஜனவரி 26 அன்று இந்தியா டுடே இணையதளத்தில் ஒரு படத்தொகுப்பில் இந்த படம் பயன்படுத்தப்பட்டது. மேலும் 71வது குடியரசு தினத்தன்று ஜம்மு - காஷ்மீரில் உள்ள எல்.ஓ.சி.யில் குழந்தைகள் மற்றும் வீரர்கள் இந்த நாளை எவ்வாறு கொண்டாடினார்கள் என்பது அதில் விவரிக்கப்படிருந்தது.

ரிவர்ஸ் இமேஜ் தேடலின்போது, அதே 9 வீரர்களின் படம் , ஒரு ஃபேஸ்புக் பக்கத்தில் காணப்பட்டது. அதில் ஐந்தாவது வீரரின் கையில் மூவர்ணக்கொடி இருந்தது. இந்த படம் ஜூன் 17ஆம் தேதி பகிரப்பட்டது.

யான்டெக்ஸ் தேடல் போர்டல் மூலம் நாங்கள் ரிவர்ஸ் இமேஜ் தேடலை மேற்கொண்டபோது, இந்தப்படம் 2020 ஆகஸ்ட் 17ஆம் தேதி, ஒரு யூடியூப் வீடியோவில் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.

கைலாய மலையில் வீரர்களின் கொடியசைப்பு படத்தையும், இந்தப் படங்களையும் ஒப்பிடும்போது , அவற்றில் உள்ள பின்னணியைத் தவிர மீதி எல்லாமே ஒன்றுதான். வீரர்களின் படத்தில் மாற்றம் செய்யப்பட்டு, கைலாய மலை பின்னணியில் நிறுவப்பட்டுள்ளது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

இப்போது இரண்டாவது விஷயத்திற்கு வருவோம். சமூக ஊடகங்களில் ஒரு தனியார் தொலைக்காட்சி சேனல் மேற்கோள் காட்டப்பட்டு, கைலாய மலைத்தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டது.

கைலாய மலைத்தொடர் இந்திய எல்லைக்குள் இல்லவே இல்லை என்று தனது பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் டெல்லி பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தியா-சீனா எல்லை பதற்றம்

பட மூலாதாரம், TAUSEEF MUSTAFA/AFP VIA GETTY IMAGES

 

"மேற்கு திபெத்தின் டிரான்ஸ் இமயமலையில் கைலாய மலை உள்ளது. கைலாய மலைத்தொடரில் கைலாய மலை அமைந்துள்ளது. இது லடாக் மலைத்தொடரின் முடிவிற்குப் பிறகு ஆரம்பமாகிறது. லடாக்கில், உயர் இமயமலையின் லடாக் மலைத்தொடர் மட்டுமே உள்ளது. இது மேற்கு திபெத் சென்று முடிந்துவிடுகிறது. அங்கிருந்து கைலாய மலைத்தொடர் ஆரம்பமாகிறது," என்று பேராசிரியர் தெரிவித்தார்.

இந்திய ராணுவம் இப்போது எங்கே உள்ளது?

லடாக்கில் எல்.ஏ.சி தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றம் தொடர்பாக ஏப்ரல் மாதத்திலிருந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதே வரிசையில், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15 அன்று இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இருப்பினும், இந்த சம்பவத்தில் எத்தனை சீன வீரர்கள் இறந்தனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் சீனாவின் குளோபல் டைம்ஸ், ஜூன் 15 மோதலில் சீனாவுக்கு சேதம் ஏற்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளது.

இதன் பின்னர், ஆகஸ்ட் 29-30 இரவு, இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டதாக செய்திகள் வந்தன. ஆனால் ஆத்திரமூட்டும் நடவடிக்கையை மேற்கொண்டதாக, இரு நாடுகளுமே ஒன்று மற்றதன் மீது குற்றம் சாட்டியுள்ளன. 

எல்.ஏ.சி அதாவது மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு அருகே மற்றும் அந்த நாட்டின் உள்ளேயும் சீனா பெரும் எண்ணிக்கையில் துருப்புக்களை நிறுத்தியுள்ளதாகவும், ஏராளமான வெடிப்பொருட்களை குவித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை மக்களவையில், கூறினார்.

கூடவே எல்லை பதற்றம் குறித்து மாநிலங்களவையில் வியாழக்கிழமை அவர் ஒரு அறிக்கையை அளித்தார். லடாக்கில் இந்தியா ஒரு சவாலை எதிர்கொண்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் அந்த சவாலை நாடு எதிர்கொள்ளும் என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மக்களவை மற்றும் மாநிலங்களவையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லைப் பகுதியில் எந்த மாற்றத்தை பற்றியும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்தியா எந்த இடத்தையும் கைப்பற்றவில்லை என்பதை இது காட்டுகிறது.

கைலாய மலையைப் பற்றி கூறப்பட்ட படங்கள் முற்றிலும் போலியானவை என்றும், இந்திய வீரர்கள் கைலாய மலையை கைப்பற்றவில்லை என்றும் பிபிசியின் உண்மை கண்டறியும் ஆய்வில் நாங்கள் கண்டறிந்துள்ளோம்
 

 

https://www.bbc.com/tamil/india-54216968

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கிருபன் said:

வீரர்களின் படத்தில் மாற்றம் செய்யப்பட்டு, கைலாய மலை பின்னணியில் நிறுவப்பட்டுள்ளது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது

coreldraw-graphic-suite-x8-iso-multiling கிராபிக்ஸ் வேலையில் அடிச்சுக்க ஆளே கிடையாது..👍

சீனா - இந்தியா எல்லை மோதல்: 'இந்தியா துப்பாக்கிச்சூடு நடத்தினால் தாங்க முடியாத விளைவுகளை சந்திக்கும்' - சீனா

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான எல்லைப் பதற்றத்தை குறைக்க, ராஜீய மற்றும் ராணுவ நிலையிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், இருநாட்டு ஊடகங்களும் வெளியிட்டு வரும் செய்திகளால் நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது.

இந்தியத் தரப்பில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டால், அந்நாடு தாங்கமுடியாத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சீனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய எல்லையில் அதிக துருப்புகளை இந்தியா குவித்து, சீன ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடக்க அனுமதித்தால், அது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் இது இந்தியாவுக்கும் ஆபத்தாக முடியும் என்று அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா பதற்றத்தை குறைக்க ஒப்புக்கொண்ட நிலையில், இவ்வாறு நடந்து கொள்வதாக அந்நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையில், எல்லைகளில் துருப்புகளை அதிகப்படுத்த மாட்டோம் என்று இரு நாடுகளும் ஒப்புக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஆனால், தான் செய்து கொடுத்த சத்தியத்தை இந்தியா காப்பாற்றுவது போல தெரியவில்லை என்றும் குளோபல் டைம்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சீனா இவ்வாறான செய்தியை வெளியிட என்ன காரணம்?

 

இந்திய நாளிதழ் வெளியிட்ட ஒரு செய்தியை தொடர்ந்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இந்தியா சீனா எல்லை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

முன்னதாக, இந்தியாவிலிருந்து வெளியாகும் தி இந்து நாளிதழ் வெளியிட்ட செய்தியில், சீன ராணுவத்தினர் எல்லையை முன்னோக்கி வந்தால், அவர்களை இந்திய ராணுவத்தினர் சுடுவார்கள் என்ற செய்தி சீனாவுக்கு தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கிறது என மூத்த இந்திய அதிகாரி ஒருவர் தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

இந்திய ராணுவத்தினருக்கு தற்காப்புக்காக சுடலாம் என்ற அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதாக மேலும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கிழக்கு லடாக்கில் இந்தியா சீனாவுக்கு இடையே நடந்த மோதலில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் நிகழ்ந்தன.

இதனையடுத்து இரு நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் எந்த தரப்பும் எல்லைக்கு மேலும் அதிக துருப்புகளை அனுப்பப்போவதில்லை என முடிவு செய்யப்பட்டது.

பின்னர் எல்லையில் இந்தியாவின் இருப்பு வலுவாக இருக்கும் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதாவது சீனாதான் முதலில் அங்கு வந்தது, அதனால் அந்நாடுதான் முதலில் அங்கிருந்து திரும்பி செல்ல வேண்டும் என்பதில் இந்தியா தெளிவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

இந்நிலையில் எல்லைப்பகுதிகளில் இந்தியா ராணுவக் கட்டுமானங்களையும், ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்தியதே இல்லை என குளோபல் டைம்ஸ் பத்திரிகையிடம் சீனாவின் ஜின்ஹுவா பல்கலைக்கழக பேராசிரியர் கியன் ஃபெங் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் மற்றும் சீனாவின் எல்லைகளில் இரண்டில் இருந்து 3 லட்சம் துருப்புகளை இந்தியா நிலைநிறுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார்.

கடந்த ஜூன் 15ஆம் தேதி, கிழக்கு லடாக் எல்லைக்கு அப்பால் உள்ள மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுப் (எல்ஏசி) பகுதியில் இந்தியா, சீனா ஆகியவற்றின் படையினருக்கு இடையிலான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.

இந்த சண்டையில் சீன வீரர்கள் யாரேனும் உயிரிழந்தார்களா என்பதை குறித்து அந்நாடு இதுவரை சொல்லவில்லை. எனினும் அந்த சண்டையில் சீன ராணுவத்தினரும் இறந்ததாக குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

முன்னதாக இந்தியா, சீனா இடையே நிலவிவரும் எல்லை பதற்றத்தை குறைக்க, அமைதியை நிலைநாட்டுவது, மற்றும் துருப்புகளை பின்வாங்கிக் கொள்வதை வலியுறுத்தி ஐந்து அம்ச திட்டத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்தன.

இந்தியா - சீனா ஆகிய இருநாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "இந்தியா மற்றும் சீனா இடையிலான வேறுபாடுகள் சர்ச்சையாக மாறாமல் பார்த்துக்கொள்வது போன்ற விஷயங்களை பின்பற்றுவதோடு, உறவுகளை மேம்படுத்தவும் இருநாடுகளும் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/global-54316272

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.