Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'எங்கே.. எங்கே.. எங்கள் அப்பா எங்கே?': சிறுவர் தினத்திலும் வீதிக்கிறங்கி போராடும் சிறார்கள்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சர்வதேச சிறுவர் தினமாகும். அதனையொட்டி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  ஏற்பாட்டில்  மாபெரும்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது.
 

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இன்று காலை (01.10.2020) 11மணியளவில் ஆரம்பமானது.
spacer.png

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்களும் இராணுவத்தினராலும் துணை இராணுவக் குழுவினராலும் கடத்தப்பட்டும் கைது செய்யப்பட்டும் காணப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என கோரி கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் “வரவேண்டும்.. வரவேண்டும்.. ஐநா அமைதிப்படை வரவேண்டும்”,”எங்கள் குழந்தைகள் எங்கே இதற்கு பதில் கூற யாரும் இல்லையா?”,”எங்கே எங்கே எங்கள் அப்பா எங்கே?,”எங்கே எங்கள் சிறார்கள் கோத்தா அரசே பதில் சொல்..!” போன்ற பதாகைகளை தாங்கியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

spacer.png

https://www.virakesari.lk/article/91121
 

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகள் விவகாரத்தில் ஐ.நாவை தலையிட கோரிக்கை

இன்று உலகம் முழுவதும் சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது. இந்த சூழலில் கடந்த 2009ம் ஆண்டு தமிழர் தாயகப்பகுதியில் சிறீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட இறுதி யுத்த நடவடிக்கையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் யுத்த முடிவில் அரச படைகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய தமது குழந்தைகளுடன் பெற்றோர்கள் சரணடைந்தனர். ஆனால் இன்று வரையில் இவ்வாறு  சரணடைந்தவர்கள் குறித்து எந்த தகவலையும் சிறீலங்கா அரசு வெளியிடவில்லை. மேலும் பெற்றோருடன் சரணடைந்த குழந்தைகள் தொடர்பிலும் தகவல் இல்லை.

இந்நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் (வடக்கு கிழக்கு) ஐ.நாவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது.

அதில்,

“மாண்புமிகு உயர் ஆணையாளர் அவர்களுக்கு வணக்கம்,

சிறீலங்கா அரசாங்கத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகள் இருக்குமிடம் அறிந்திட உங்கள் உதவி நாடி எழுதுகிறோம். உங்கள் வழிகாட்டலில் எங்கள் குழந்தைகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று நம்பிக்கை கொண்டுள்ளோம்.

உலகிலேயே சிறீலங்கா அரசாங்கமே எட்டுமாதக் குழந்தைகளைக் கூட வலிந்து காணாமல் செய்த ஒரே நாடாகத் திகழ்கிறது. இந்தக் குழந்தைகள் அனைவரும் தமிழினக் குழந்தைகளே. எமது இந்தக் குழந்தைகளில் பலரும் பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு 2009 மே மாதம் போரின் முடிவில் எவ்விதக்கேடும் நேரிடாது என்ற உறுதிமொழிகளை நம்பி சிறீலங்கா படைகளிடம் பெற்றோர் தம் பிள்ளைகளோடு சரணடைந்த போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆவர். 11 ஆண்டு காலம் கழிந்த பிறகும் இந்தக் குழந்தைகளைப் பற்றியோ அவர் தம் பெற்றோர் பற்றியோ அரசினரிடமிருந்து பதிலேதும் இல்லை.

சில குழந்தைகள் சிறீலங்காப் படைகளால் பெற்றோர் சரணடைந்த போது உடன்சென்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆவர். இந்தக் குழந்தைகள் இவ்வாறு சரணடைந்து கடத்தப்பட்டதற்குக் கண்கண்ட சாட்சிகள் பலர் உள்ளனர். பல்லாண்டுக் காலமாய் இந்தக் குழந்தைகளின் உறவுகள் இந்தக் குழந்தைகளைத் தேடித் தவிக்கின்றார்கள். சிறீலங்காவில் மட்டுமின்றி, ஐநா மனிதவுரிமைப் பேரவையிலும் கூட சிறீலங்காப் படைகளும் இராணுவ உளவுத்துறையும் செய்யும் கேடுகள் உட்பட எத்தனையோ தடைகள் இருப்பினும் இந்தத் தேடல் தொடர்கிறது.

காணாமல் செய்யப்பட்ட எம் குழந்தைகள் பால், கவனம் ஈர்க்க வேண்டும் என்ற தவிப்பிலும் துடிப்பிலும், தொடர்ந்து அமைதிவழி போராட்டங்களும், உணவு மறுப்புப் போராட்டங்களும் செய்து வருகிறோம். ஜனாதிபதிக்கும் பிரதம மந்திரிக்கும் எத்தனையோ வேண்டுகோள்கள் விடுத்தும் கூட, சிறீலங்கா அரசாங்கம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இந்தத் தமிழ்க் குழந்தைகள் பற்றிய விவரங்கள் ஏதும் தர மறுத்து வருகிறது.

சிறீலங்காவின் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா 2016 ஜனவரி 15ஆம் நாள் வடக்கு மாவட்டத்திலுள்ள யாழ்ப்பாணம் நகரில் ஒரு பொது நிகழ்வில், ‘2009 மே மாதத்தில் போர்முடிவில் சிறீலங்கா பாதுகாப்புப் படைகளிடம் சரணடைந்தவர்கள் இப்போது உயிரோடு இல்லை.’ என சொன்னார். எங்கள் குழந்தைகளும் உயிருடனில்லையோ என்று கவலைப்படுகிறோம். இவர்கள் இன்றிருந்தால் ஆகச் சிறு குழந்தைக்கு இப்போது கிட்டத்தட்ட பதினொரு வயதாகியிருக்க வேண்டும்.

ஐ.நா. மன்றத்தின் கட்டாயப்படுத்தப்படும் சட்டங்களின் (Enforced Act) விதப்புரைகளில் முக்கியமான ஒன்றாக கருதப்பட்டு இருக்கின்ற சிறுவர் பாதுகாப்பு தொடர்பான சரத்துக்களுக்கு முரணாக எமது குழந்தைகள் சிறீலங்கா அரச படைகளால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

ஐ.நா நெறிமுறைகளுக்கு அமைவாக இது ஒரு அப்பட்டமான, மனித குலத்திற்கெதிரான குற்றமாக பார்க்கப்படுவதால் ஐ.நா உயர்ஸ்தானிகரும், ஐ.நா. சபையும் எமது குழந்தைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட விடையத்தில் நேரடியாக தலையிட்டு எமது குழந்தைகளை மட்டுமல்லாது இலங்கை அரசால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் அனைவரையும் மீட்டுத்தருமாறு மன்றாட்டமாக கேட்டுக்கொள்கின்றோம்.

இப்போது நாம் இந்த அரசை நோக்கி எமது குழந்தைகளை மீட்டுத்தரவேண்டியோ அல்லது எமது உறவுகளை மீட்டுத்தர வேண்டியோ அல்லது அடிப்படை உரிமைகளுக்கான அமைதி வழி ஒன்றுகூடலையோ செய்ய முடியாத அளவிற்கு இராணுவப் புலனாய்வாளர்களாலும் அரச படைகளாலும் புதிய உயிர் அச்சுறுத்தலகளுக்குள் ஆட்பட்டுள்ளோம்.

நாம் அரச விரோதிகள் என்றும் பயங்கரவாதிகளென்றும் அச்சுறுத்தப்படுகின்றோம். தொலைபேசி மூலமான மிரட்டல்களை அரசபுலனாய்வாளர்கள் மேற்கொள்கின்றனர். எமது அகிம்சைவழிப் போராட்டங்களுக்கு தடைகளை விதிப்பதும், உரிமைக்காக குரல் கொடுப்பவர்களை போலி புனைதல்கள் மூலம் வழக்கிட்டு கால வரையற்று சிறையிலடைக்கவும் கோட்டபாய அரசு முயற்சிக்கின்றது. இது ஐ.நா.சபையின் கட்டாயப்படுத்தப்படும் சட்டப்பிரிவுகளின் விதந்துரைகளின்படி’சட்டத்திற்கு புறம்பானவிதத்தில் துன்புறுத்தல், பயமுறுத்தல் மற்றும் பழிவாங்குதல் என வரைவிலக்கணப்படுத்துகின்றது. எனவே இதற்காக எமக்கான பரிகாரம்தான் என்ன?

இந்தக் குழந்தைகள் அனைத்தையும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதிலும், இனப்படுகொலைகளை செய்தது தொடர்பிலும் தற்போது இருக்கின்ற அரசுத்தலைமையே நேரடியாக பங்கேற்று செயற்படுத்தியிருந்தது. எனவே கறை படிந்த கைகளிடம் நீதி கோர முடியாது என்பதனால் ஐ.நா.மன்றத்திடமும் உலக சமுதாயத்திடமும் எமது குழந்தைகளை மீட்டுத்தருமாறு கண்ணீருடன் வேண்டி நிற்கின்றோம்.

எத்தனையோ தமிழ்க் குழந்தைகள் வலிந்து காணாமல் செய்யப்பட்டிருப்பினும் வலிந்து காணாமல் செய்யப்பட்ட இருபத்தொன்பது (29) தமிழ்க் குழந்தைகள் மற்றும் சிறார்கள் பற்றிய செய்திகள் — வலிந்து காணாமல் செய்யப்பட்ட நேரத்தில் இக்குழந்தைகளின் படம் பெயர் வயது ஆகியவை உள்ளிட்ட விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.https://drive.google.com/file/d/1DZoSpmQZFqnZJuSSerAJ5pgyCz_tIgpJ/view

எங்கள் குழந்தைகள் எங்கே என்று கண்டுபிடிக்க ஆவன செய்யுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

http://www.ilakku.org/disappeared-tamil-babies-of-sri-lanka/

அம்பாறையில் சிறுவர் தினத்தை கரி நாளாக அனுஷ்டித்து கவனயீர்ப்பு!

 

 

Batti-Protest-6-720x447-1.jpg?189db0&189db0

 

சிறுவர் தினத்தை முன்னிட்டு அம்பாறையிலும் இன்று (01) சிறுவர் தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பில் ஈடுபட்டபர்.

இதன்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது சிறுவர்கள் எமது கைவந்து சேரும் வரை சிறுவர்கள் தினம் எமக்கு கரி நாளே என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார். மேலும்,

10 வருடத்திற்கு முன்னர் யுத்தத்தின்போது சரணடைந்த எங்கள் குழந்தைகள் எங்கே?, சிறுவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய இலங்கை அரசு எமது சிறார்களை காணாமலாக்கியுள்ளது, இவ்வாறு காணாமலாக்கப்பட்ட குழந்தைகள் இலங்கை அரசிற்கு என்ன செய்தார்கள்? போன்ற கேள்விகளை இதன்போது எழுப்பினார்.

மேலும் இவ்வாறானதொரு நிலை எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதற்காகவே இந்த சிறுவர் தினத்தை கரிநாளாகவும் தங்களுக்கு சிறுவர் தினம் இல்லை எனவும் பிரகடப்படுத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

இதன்போது இலங்கை அரசால் காணாமலாக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பாக நீதி கோரி மகஜர் ஒன்றை மின்னஞ்சல் ஊடாக ஐ.நா உயர் ஆணையாளளுக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

போராட்டத்திற்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்; வீடுதேடிச் சென்று தலைவிக்கும் மிரட்டல்

 

 

received_778989512887902.jpeg?189db0&189db0

 

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (01) சிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து கறுப்புக் கொடிகளுடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்ட இடத்திற்கு அதிகளவான புலனாய்வாளர்கள் வருகைதந்து போரட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை புகைப்படம், மற்றும் காணொளி எடுத்து அச்சுறுத்தியிருந்தனர்.

அதேவேளை நேற்று (30) இப் போராட்டத்திற்கான ஒழுங்குபடுத்தலை மேற்கொண்டிருக்கும்போது, இராணுவ புலனாய்வாளர்கள் இருவர் இரவு 08.45 மணியளவில் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்படடோரின் உறவுகளின் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரியின் வீட்டிற்கு சென்று, மிரட்டும்தொனியில் போராட்டம் தொடர்பில் தகவல்களைச் சேகரித்துள்ளனர்.

இது தொடர்பில் மரியசுரேஸ் ஈஸ்வரி கருத்துத் தெரிவிக்கையில்,

“பயங்கரமான அச்சுறுத்தலின் மத்தியிலே நாங்கள் இந்தப் போராட்டத்தினை மேற்கொள்கின்றோம். நாம் போட்டத்தினை மேற்கொள்ளும்போது, குறித்த இடத்திற்கு இராணுவப் புலானாய்வாளர்கள் மற்றும், பொலிஸார் அதிகளவில் வருகை தருவதால் எமக்கு ஒருவித அச்சம் ஏற்படுகின்றது.

எமது உயிருக்குக்கூட உத்தரவாதம் இல்லை. எம்மையும் கடத்துவார்கள் என்ற அச்ச நிலை காணப்படுகின்றது. இருப்பினும் கையளிக்கப்பட்ட உறவுகளையும், சிறார்களையும் விடுவிக்கும்வரையில் நாம் தொடர்ச்சியாகப் போராடுவோம். எம்மால் கையளிக்கப்பட்ட சிறார்களையாவது முதலில் எம்மிடம் கையளிக்க அரசு முன்வர வேண்டும். அதற்காகத்தான் நாம் தொடர்ச்சியாக போராடி வருகின்றோம்.

பன்னாடுகளும் எமது இந்த போராட்டங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். தற்போது எது போராட்டங்களுக்கு பலவழிகளிலும் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.

நேற்றையநாள் இப் போராட்டத்திற்கான ஒழுங்குபடுத்தலை மேற்கொண்டிருக்கும் போது, இராணுவ புலனாய்வாளர்கள் இருவர் எனது வீட்டிற்கு வருகைதந்து, என்ன போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளீர்கள் என மிகவும் கடுமையான தொனியில் என்னைக் கேட்டார்கள்.

இவ்வாறாக இந்த அரசாங்கத்தினால் பாரிய அளவில் எம்மீது அழுத்தங்கள் பிரையோகிக்கப்படுகின்றது. எனவே அரசாங்கம் இத்தகைய அச்சுறுத்தல் நிலைமைகளை எம்மீது பிரையோகிப்பதை உடன் நிறுத்த வேண்டும். அத்தோடு விசாரணைகளுக்கு அழைப்பது உள்ளிட்ட விடயங்களையும் நிறுத்த வேண்டும்.

மேலும் அடுத்த சிறுவர் தினத்திற்குள்ளாவது கையளிக்கப்பட்ட எமது சிறுவர்களைக் எம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்” – என்றார். (246)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.