Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸில் வசிக்கும் இலங்கை குடும்பத்தில் வன்முறை: பெண், 4 குழந்தைகள் வெட்டிக்கொலை!

Featured Replies

இந்த தகவல்கள் இவரின் மனநிலை பற்றிய மருத்துவ ஆய்வு நடந்த பின்னர் தான் கொலை/தட்கொலை முயறசியின் மூலகாரணிகள் வெளிக்கு வரும். இந்த நிகழ்வுக்கு சிறிது காலம் முன்னர் அவரின் மனநிலை எப்படி இருந்தது இங்கு முக்கியம். ஆண்கள் பெரும்பாலும் தனிமையில் தமது பிரச்சினைகளை மண்டையில் வைத்து குடையும் தன்மை உள்ளவர்கள். எனவே இவரின் மனநிலை பற்றி மற்றவர்கள் தெளிவாக தெரிந்திருக்க வைப்புக்குறைவு தான். உற்ற மனைவியும் இப்ப விசாரணைக்கு உதவ உயிருடன் இல்லை. 😪

சைகோஸிஸ்  (psychosis) மாரடைப்பு போல ஒரு மெண்டல் எமெர்கெனசி (mental emergency). எனது நண்பர், ஆங்கிலேயர், இதனால் பாதிக்கப்பட்டவர். அவர் தனது குடும்பத்தை யாரோ தாக்க முயக்கிறார்கள் என்று நினைத்து குடும்பத்தை பாதுகாக்க கத்தியுடன் படுக்கைக்கு போகும் நிலை வந்த போதுதான் மருத்துவர்களை நாடினார்கள். அவரிடமிருந்து தான் நான் இந்த psychosis பற்றயும் hallucinations, delusions பற்றியும் மேலும் அறிந்துகொண்டேன். அவருக்கு Electroconvulsive Therapy வழங்கியும் அவ்வளவாக முன்னேற்றம் வரவில்லை. பின்னர் ஒவொரு மருந்தாக அவர்கள் ஆராய்ந்து இப்பொழுது அவர் அதை தொடர்ந்து எடுத்து வருகிறார். ஆளை பார்த்தால் இப்படி ஒரு வியாதியும் இல்லாத ஒரு சர்வசாதாரண ஆள் போலத்தான் இருப்பார். அனால் அவரின் பின்னணி இப்படி!

Edited by puthalvan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உண்மையிலேயே இவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரிய வேண்டும்...ஒருத்தருக்குமே இவர்களை பற்றி தெரியாதது ஆச்சரியம் ...இக் கொலைகளில் கணவர் சம்மந்தப்படாமல் யாராவது மூன்றாமர் இருப்பினமோ என்று சந்தேகமாய் இருக்கு 
 

46 minutes ago, ரதி said:

எனக்கு உண்மையிலேயே இவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரிய வேண்டும்...ஒருத்தருக்குமே இவர்களை பற்றி தெரியாதது ஆச்சரியம் ...இக் கொலைகளில் கணவர் சம்மந்தப்படாமல் யாராவது மூன்றாமர் இருப்பினமோ என்று சந்தேகமாய் இருக்கு 
 

அவர் தானே தன் குடும்பத்தை கொலைசெய்த பின்பு அக்கா குடும்பத்தையும் வீட்டிற்கு கூப்பிட்டு அவர்களையும் தாக்கியிருக்கிறார். தப்பி ஓடிய சிறுவன் ஒரு கடையில் போய் எனது மாமா எல்லோரையும் கத்தி சுத்தியலால் தாக்குகின்றார் என்று தானே கூறியுள்ளார். இதில் மூன்றாமவர் வருவதற்கு சாத்தியங்கள் மிகக்குறைவென்றே தெரிகின்றது ரதி.

வைத்தியசாலையில் இருப்பவர்கள் சுகமாகினால் எல்லா உண்மையும் வெளிவரும்.

எது எப்படியோ அநியாயமாக இத்தனை உயிர் இழப்புக்கள் :(:(

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[15:19, 10/10/2020] Nadd: Tamils Help Line "ஆற்றுப்படுத்தல்": குழுக் கலந்துரையாடல் - Panel Discussion

வணக்கம் உறவுகளே,
Tamils Help Line இனால் வழங்கபட்ட "ஆற்றுப்படுத்தல்" பயிற்சி, தமிழர் உதவிச் சேவை, எவ்வாறு மக்களுக்கு தொண்டாற்றுவது, எம் மக்கள் எதிர்கொள்ளும் உளவள சவால்களுக்கு எவ்வாறு உதவுவது என்பவை பற்றிய விரிவான ஒரு கலந்துரையாடலும், கேள்வி பதில் நிகழ்ச்சியுமாக இந்த அமர்வு அமையும். இந்த அமர்வில் கூடியவரையில் எமது அனைத்து உளவள பயிற்சியாளர்களும் பங்கு பெறுவார்கள். அவர்களுடன் நீங்களும் இணைந்து ஆரோக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்து எமது சமூகத்திற்கு உதவுவோம்.   

காலம்:10/10/2020 சனிக்கிழமை.
நேரம்: மாலை 5:00-7:00PM(UK), 9:30PM-11:30PM(Sri Lanka)  
Zoom இணைப்பு: https://us02web.zoom.us/j/9170245903

பயிற்சியாளர்கள், அமைப்பாளர்களை, தொண்டர்கள்  மற்றும் பயனாளர்கள் 
அனைவரையும் பங்குபெறுமாறு  அழைக்கின்றோம்      

நன்றி. 
Tamils Help Line

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.