Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களுத்து வெட்டு' பிரிகேடியர் வழக்கை முன்னெடுத்த தமிழ் வழக்கறிஞர் மீது லண்டனில் கொலை முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு கழுத்தறுப்பு சமிக்கை மூலம் கொலைமிரட்டல் விடுத்த சிறிலங்கா இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கை முன்னெடுத்த பிரித்தானியாவின் பிரபல சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாளருமான கீத் குலசேகரம் மீது நேற்று ஒரு கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.

அதில் அவர் அதிஸ்டவசமாக உயிர்தப்பித்துள்ள போதும் அவரது கார் படுசேதம் அடைந்துள்ளது.

இது அவர் மீது அண்மையில் நடாத்தப்பட்டுள்ள மூன்றாவது கொலை முயற்சி சம்பவம் என்று கூறப்படுகின்றது.

லண்டனில் சட்ட ஆலோசகராகவும் முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளமாக பணியாற்றிவருகிற கீத் குலசேகரம், இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தின் பணிப்பாளர்களில் ஒருவராகவும் கடமையாற்றி வருகின்றார்.

தமிழ்மக்களுக்கான பல்வேறு மனித உரிமை செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் இவர் குறிப்பாக இலங்கையில் புதிய அரசின்கீழ் தொடரும் ஆள் கடத்தல், காணாமல் போதல், சித்திரவதை மற்றும் பாலியல் துஸ்பிரயோகங்களை அல்ஜசீரா தொலைக்காட்சியில் யுடினரஉவழn ஐளடயனெ என்ற ஆவணப்படம் மூலம் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருந்தார்.

இதுமட்டுமன்றி இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு எதிரான முறைப்பாடுகளை ஐநாவிற்கு எடுத்து செல்வதில் பெரும்பங்கு வகிக்கும் இவர் அண்மையில் இலங்கையில் ஆட்கொணர்வுமனுக்களை தாக்கல் செய்யவும் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக கீத் நாங்கள் தொடர்புகொண்ட பொழுது, ‘லண்டனில் தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு கழுத்தறுப்பு சமிக்கை மூலம் கொலைமிரட்டல் விடுத்த சிறிலங்கா பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கை தான் முன்னெடுத்து, வழிநடத்தி வெற்றிபெறச்செய்ததைத் தொடர்ந்து தன்; மீதான கொலை முயற்சிகள், மிரட்டல்கள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு என்பது இராஜதந்திர பாதுக்காப்பு உள்ள அதியுயர் மட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரை முதல் முதலாக குற்றவாளியாக நிரூபித்த வழக்கு என்ற காரணத்தால், இது சர்வதேச மட்டத்தில் பிரபல்யம் அடைந்தது மட்டுமன்றி, தமிழர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் முதல் சட்ட வெற்றியாகவும் அந்த வழக்கு கருதப்படுகிறது.

இதனால் பிரியங்க பெர்னாண்டோ பதவியிழந்து லண்டனைவிட்டு இலங்கை திரும்ப நேரிட்டது மட்டுமன்றி, சிறிலங்கா அரசாங்கத்திற்கு இராஜதந்திர அரங்கில் பாரிய தலைகுனிவையும் ஏற்படுத்தியது.

இதன் காரணமாக, தன் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தான் சந்தேகிப்பதாகவும் கீத் தெரிவித்தார்.

கடந்த யூன் மாதம் நள்ளிரவிலும் இதேபோன்றதொரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இவரது பிரத்தியேக அலுவலகத்தினுள் புகுந்த ஒரு நபர் இவரை தாக்கவும் ஆவணங்களை திருடவும் முயற்சி செய்துள்ளார். தற்போது, இவரது கார் மீது இலக்குவைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடைபெற்ற விதம், நேரம் என்பன இது வெறும் களவு முயற்சி அல்ல என்பதையும், நீண்டநாட்களாக இவரை பின்தொடர்த்து, கண்காணித்து திட்டமிட்டு நடாத்தப்பட்ட தாக்குதல் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரித்தானிய பொலிசார் இதுதொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.png

https://www.tamilwin.com/uk/01/257941?ref=home-latest

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

லண்டனில் தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு கழுத்தறுப்பு சமிக்கை மூலம் கொலைமிரட்டல் விடுத்த சிறிலங்கா இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கை முன்னெடுத்த பிரித்தானியாவின் பிரபல சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாளருமான கீத் குலசேகரம் மீது நேற்று ஒரு கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.

அதில் அவர் அதிஸ்டவசமாக உயிர்தப்பித்துள்ள போதும் அவரது கார் படுசேதம் அடைந்துள்ளது.

இது அவர் மீது அண்மையில் நடாத்தப்பட்டுள்ள மூன்றாவது கொலை முயற்சி சம்பவம் என்று கூறப்படுகின்றது.

லண்டனில் சட்ட ஆலோசகராகவும் முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளமாக பணியாற்றிவருகிற கீத் குலசேகரம், இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தின் பணிப்பாளர்களில் ஒருவராகவும் கடமையாற்றி வருகின்றார்.

தமிழ்மக்களுக்கான பல்வேறு மனித உரிமை செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் இவர் குறிப்பாக இலங்கையில் புதிய அரசின்கீழ் தொடரும் ஆள் கடத்தல், காணாமல் போதல், சித்திரவதை மற்றும் பாலியல் துஸ்பிரயோகங்களை அல்ஜசீரா தொலைக்காட்சியில் யுடினரஉவழn ஐளடயனெ என்ற ஆவணப்படம் மூலம் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருந்தார்.

இதுமட்டுமன்றி இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு எதிரான முறைப்பாடுகளை ஐநாவிற்கு எடுத்து செல்வதில் பெரும்பங்கு வகிக்கும் இவர் அண்மையில் இலங்கையில் ஆட்கொணர்வுமனுக்களை தாக்கல் செய்யவும் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக கீத் நாங்கள் தொடர்புகொண்ட பொழுது, ‘லண்டனில் தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு கழுத்தறுப்பு சமிக்கை மூலம் கொலைமிரட்டல் விடுத்த சிறிலங்கா பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கை தான் முன்னெடுத்து, வழிநடத்தி வெற்றிபெறச்செய்ததைத் தொடர்ந்து தன்; மீதான கொலை முயற்சிகள், மிரட்டல்கள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு என்பது இராஜதந்திர பாதுக்காப்பு உள்ள அதியுயர் மட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரை முதல் முதலாக குற்றவாளியாக நிரூபித்த வழக்கு என்ற காரணத்தால், இது சர்வதேச மட்டத்தில் பிரபல்யம் அடைந்தது மட்டுமன்றி, தமிழர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் முதல் சட்ட வெற்றியாகவும் அந்த வழக்கு கருதப்படுகிறது.

இதனால் பிரியங்க பெர்னாண்டோ பதவியிழந்து லண்டனைவிட்டு இலங்கை திரும்ப நேரிட்டது மட்டுமன்றி, சிறிலங்கா அரசாங்கத்திற்கு இராஜதந்திர அரங்கில் பாரிய தலைகுனிவையும் ஏற்படுத்தியது.

இதன் காரணமாக, தன் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தான் சந்தேகிப்பதாகவும் கீத் தெரிவித்தார்.

கடந்த யூன் மாதம் நள்ளிரவிலும் இதேபோன்றதொரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இவரது பிரத்தியேக அலுவலகத்தினுள் புகுந்த ஒரு நபர் இவரை தாக்கவும் ஆவணங்களை திருடவும் முயற்சி செய்துள்ளார். தற்போது, இவரது கார் மீது இலக்குவைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடைபெற்ற விதம், நேரம் என்பன இது வெறும் களவு முயற்சி அல்ல என்பதையும், நீண்டநாட்களாக இவரை பின்தொடர்த்து, கண்காணித்து திட்டமிட்டு நடாத்தப்பட்ட தாக்குதல் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரித்தானிய பொலிசார் இதுதொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.png

https://www.tamilwin.com/uk/01/257941?ref=home-latest

ஆக சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக செயற்படுவோருக்கு பிரித்தானியாவிலேயே பாதுகாப்பில்லை 
இந்த லட்சணத்தில் இலங்கையில்   சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக  செயற்பட்டால் இலங்கையில் உள்ளவர்கள் நிலைமை....?  

  • கருத்துக்கள உறவுகள்

சட்ட ஆலோசகர் திரு. கீத் குலசேகரம் அவர்கள் தனது வீடு, வாகனம் போன்றவற்றில் கண்காணிப்பு கமெரா போன்றவற்ரை பொருத்தி... அதிக கவனமாக இருப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய அரசு கீத் குலசேகரம் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.