-
Tell a friend
-
Topics
-
7
தமிழ் சிறி · தொடங்கப்பட்டது
-
Posts
-
By நன்னிச் சோழன் · Posted
புலி வியாபாரிகளால் சிதைக்கப்பட்ட "பூபாளம்" இறுவட்டு https://pulikalinkuralradio.com/archives/album/pooballam இந்த புலி வியாபார வலைத்தளத்தினிளுள்ள "பூபாளம்" என்ற இவ்விறுவட்டிற்கென்று வழங்கப்பட்டுள்ள 11 பாடல்களும் இறுவட்டிற்கானவையன்று. அவை காலத்தால் அழிந்துபோனதாக கருதப்படும் கீழ்க்காணப்படும் 7 இறுவட்டுகளில் ஏதோ ஒன்றினதாகும். தயவு கூர்ந்து இந்தப் பதினொரு பாடல்களிற்கான மெய்யான இறுவட்டை அடையாளம் காண உதவுங்கள், உறவுகளே. சரியான வரலாற்றை நாம் ஆவணப்படுத்த வேண்டும். சிவந்த மண் தமிழ் சொந்தங்கள் இசையருவி புயலாகும் புது ராகங்கள் புலிகள் பாடல் விடுதலைத்தீ வீழமாட்டோம் மெய்யான பூபாளம் இறுவட்டிற்கான பாடல்களை கீழ்க்காணும் இவ் ஆவணத்தின் கொழுவியில் சென்று கண்டுகொள்ளவும். நடைமுறையரசின் "புலிகளின் குரல்" நிறுவனத்தின் பெயரால் 2009இற்குப் பிறகு வணிகம் செய்யும் இவ்வலைத்தளம் உவ்விறுவெட்டினை நாசமாக்கியுள்ளது; இதனது அட்டையின் மேல் தன் வணிகத் தளத்தின் முத்திரையை பொறித்தது மட்டுமின்றி, ஒவ்வொரு பாடல்களிற்கும் நடுவில் 'www.pulikalinkural.com' என்ற ஒலியை ஒலிக்கவிட்டு அப்பாடல்களை உடனடியாக மீளப் பாவிக்கேலாத நிலமைக்கு ஆக்கியுள்ளது. இது போன்ற புலி வியாபாரிகளால் தான் எம்மினம் இன்று இந்நிலைக்கு ஆளாகியுள்ளது. தேசத்தின் சொத்தை தனியார் சொத்தாக்குவதோடு மட்டுமின்றி வரலாற்றினையும் திரிக்கின்றனர்!! -
உக்ரேன் -ரஸ்ய போர் ஆரம்பித்தபோது இந்த யுத்தத்திற்கான அடிப்படைக் காரணத்தைப் புரிந்துகொள்ளாத பலர் நிறையவே உக்ரேனுக்காக எழுதினார்கள். ஆனால் உக்ரேன் ஒரு அம்பு மட்டுமே என சிலர் வாதிட்டபோது அவர்களை புட்டினின் விசுவாசி ஆதலால் நீ ரஸ்யாவுக்குப் போய் இரு என்பதுபோல பலர் எழுதிய காலமும் ஒன்று இருந்தது. அவர்கள் எல்லோரும் நாளடைவில் உண்மையை உணரத் தொடங்கியபோது மெளனமாகி, அநியாய உயிரிழப்பை எண்ணிக் கவலைகொள்ளத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் CNN ஐ மட்டுமே பார்க்கும் ஒரே ஒருவர் மட்டும் தற்பொழுதும் மீசையில் மண்படவில்லை என்று தனி ஆவர்த்தனம் வாசிக்கிறார். விரைவில் அவரும் அடக்கி வாசிப்பார். (ஏற்கனவே அடக்கித்தான் வாசிக்கிறார்) 😁
-
By தமிழ் சிறி · Posted
பாடலின் அர்த்தம் புரியாவிட்டாலும், பாடலை கேட்க இனிமையாக உள்ளது. அவர்களின் நடிப்பும் சிறப்பு. 👍🏽 இணைப்பிற்கு நன்றி ராஜவன்னியன். -
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்திரு சபாரட்ணம் அவர்கள் முன்னாள் டெலோ உறுப்பினருக்கு எழுதிய பதில் பங்குனி 30, 2005 நான் எழுதிய செய்தி தவறானது என்று நீங்கள் கருதினால், தற்போதைய டெலோ அமைப்பின் தலைவரான செல்வம் அடைக்கலநாதனுடன் நீங்கள் அதனை சரிபார்த்துக் கொள்ளலாம். இப்படுகொலைகளை நடத்திய நபரை எனக்கு நன்றாகவே தெரியும். 1986 ஆம் ஆண்டு டெலோ அமைப்பை புலிகள் முற்றாகத் துடைத்தழித்தபோது, புலிகள் அவரைக் கைதுசெய்திருந்தனர். புலிகளால் அவர் பின்னாட்களில் விடுவிக்கப்பட்டபின்னர் அவர் நோர்வேயிற்குச் சென்றுவிட்டார். புலிகளின் முக்கிய உறுப்பினரும் 1987 ஆம் ஆண்டு நாவற்குழியில் பொன்னம்மானுடன் பலியாகியவருமான வாசு, இப்படுகொலைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த டெலோ அமைப்பின் உறுப்பினர் ஒருவரை விசாரித்தபோது இப்படுகொலைகள் குறித்து அறிந்துகொண்டார். இதுகுறித்து வாசுவே என்னிடம் சில விடயங்களைத் தெரிவித்திருந்தார். நான்கூட ஒரு காலத்தில் புலிகளின் பாதுகாப்பில் இருந்தவன் தான். இப்படுகொலைகளைச் செய்துவிட்டு தப்பியோடிய குழுவை புலிகள் துரத்திச் சென்றிருக்கிறார்கள், ஆனாலும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. அக்குழு யாழ்ப்பாணக் கோட்டை இராணுவ முகாமை நோக்கியே வாகனத்தில் தப்பிச் சென்றதாக வாசு என்னிடம் கூறினார். ஆகவே, யாழ்ப்பாணத்தில் இயங்கிய ஒரு அமைப்பைக் கொண்டு இலங்கை இராணுவமே இப்படுகொலைகளைச் செய்ததாக புலிகள் அன்று நினைத்திருந்தார்கள். ஆனால், இதனை வெளியே சொல்ல அவர்கள் விரும்பவியிருக்கவில்லை. யாழ்ப்பாணத்திற்குள் இராணுவம் நுழையவே முடியாது என்று மக்களிடம் பிரச்சாரம் செய்துவந்த புலிகளுக்கு, தமது கட்டுப்பாட்டுப் பகுதியினுள் இராணுவத்தினர் நுழைந்து, படுகொலைகளில் ஈடுபட்டுப் பின்னர் தப்பிச் செல்வதென்பது கெளரவப் பிரச்சினையாக இருந்திருக்கும். இப்படுகொலைகள் ஈடுபட்டவர்களுக்கு எதிராக புலிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்று வினவினேன். அதற்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்த வாசு, "இல்லை, இன்றைக்கு நீங்கள் அவர்களைக் கொன்றிருக்காவிட்டால், நாங்கள் எப்போதோ ஒரு நாள் அவர்களைக் கொல்லவேண்டி இருந்திருக்கும். ஆனால் சிறீ அவர்களைக் கொன்றதற்கும், நாம் அவர்களைக் கொல்வதற்கும் இடையே பெரிய வேறுபாடு ஒன்று இருக்கிறது. சிறீ அவர்களைக் கொன்றது ரோவின் ஆதாயத்திற்காக. நாம் கொல்வதோ எமது (தமிழர்களின்) ஆதாயத்திற்காக" என்று என்னிடம் கூறினார். நன்றி த. சபாரட்ணம்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆளாளசுந்தரம், தர்மலிங்கம் ஆகியோரின் படுகொலைகள் தொடர்பாக முன்னாள் டெலோ உறுப்பினர் ஒருவர் திரு சபாரட்ணம் அவர்களுக்கு எழுதிய கடிதம் பங்குனி 26, 2005 அன்பான ஆசிரியருக்கு, உங்களின் முன்னைய அத்தியாயத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களைப் படுகொலை செய்தது டெலோ அமைப்பின் வடமாராட்சிப் பொறுப்பாளர் தாஸ் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இது முற்றிலும் தவறான தகவலாகும். யாழ்ப்பாணத்தில் அன்று வாழ்ந்துவந்த அனைத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொல்லவேண்டும் என்பதே சிறீசபாரட்ணம் எமக்கு விடுத்த கட்டளையாகும். ஆனால், வடமாராட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான துரைரட்ணத்தையோ, இராஜலிங்கத்தையோ கொல்வதற்கு தாஸ் மறுத்துவிட்டார். மேலும், டெலோவின் யாழ்ப்பாணப் பொறுப்பாளர் பொபி, வடமாராட்சியைச் சேர்ந்த எவரையும் கொல்வதையும் தான் அனுமதிக்கப் போவதில்லையென்றும் அவர் எச்சரித்திருந்தார். இவர்கள் இருவரையும் கொன்றது பொபியின் குழுவினர் தான். இந்தத் திருத்தத்தினை உங்களின் பதிவில் இணைப்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன் முடிக்கிறேன். நன்றி.
-
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
- 1 reply
Picked By
மோகன், -
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.- 1 reply
Picked By
மோகன், -
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.- 1 reply
Picked By
மோகன், -
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.- 20 replies
Picked By
மோகன், -
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.- 7 replies
Picked By
மோகன்,
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.