Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியுசிலாந்து வரலாற்றில் முதன் முறையாக வெற்றி பெற்ற தமிழ் பெண்; இலங்கையின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்

Featured Replies

நியுசிலாந்து வரலாற்றில் முதன் முறையாக வெற்றி பெற்ற தமிழ் பெண்; இலங்கையின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்

  • நியூசிலாந்திலிருந்து ராதிகா தப்பிராஜா

நியுசிலாந்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் வரலாற்றில் முதன் முறையாக இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ்ப் பெண்மணியான வனுஷி வோல்ட்டேர்ஸ் இராஜநாயகம் வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையின் புகழ்பெற்ற அரசியல் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த வனுஷி வோல்ட்டேர்ஸ் இராஜநாயகம் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தொழிற் கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.

vanushi.jpgஇவரை வேட்பாளராகக் களமிறக்குவதற்கான அங்கீகாரத்தை தொழிற்கட்சி வழங்கியிருந்தது.

ஆக்லான்டில் போட்டியிட்ட இவர், தேர்தலில் வெற்றிபெற்றிருப்பதால் நியூசிலாந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இலங்கையில் பிறந்த முதலாவது உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

கோவிட் 19 க்கு மத்தியிலும் தன்னுடைய தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை அவர் தீவிரமாக முன்னெத்திருந்தார். இலங்கை அரசாங்கத்துடனும் உலகம் முழுவதிலும் பரந்து வாழும் தமிழ்ச் சமூகத்துடனும் உறகளைப் பலப்படுத்திக்கொள்வதற்குத் தான் விரும்புவதாக தன்னுடைய தேர்தல் பரப்புரைகளின் போது அவர் கூறிவந்தார்.

வனுஷி நியூசிலாந்து அரசாங்கத்திலும், சர்வதேச ரீதியாகவும் பல்வேறு பொறுப்புவாய்ந்த உயர் பதவிகளை வகித்ததன் மூலம் பரந்த நிபுணத்துவ அறிவையும், அனுபவத்தையும் கொண்டவர். சட்டத்துறையிலும், இலாப நோக்கமற்ற நிறுவனங்கள் பலவற்றிலும் முக்கியமான பதவிகளையும் வகித்திருக்கின்றார்.

தற்போது நியூசிலாந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஒரு சிரேஷ்ட முகாமையாளராகவும் பதவிவகிக்கும் அவர், சர்வதேச மன்னிப்புச் சபையின் சர்வதேச நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வனுஷியின் தந்தை வழிவந்த பாட்டி லூசியா சரவணமுத்து இலங்கையின் அரசுப் பேரவையின் உறுப்பினராக கொழும்பு வடக்கு தொகுதியிலிருந்து 1931 இல் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவரது கணவரான சேர் ரட்ணசோதி சரவணமுத்து கொழும்பு மாநகர சபையின் தெரிவு செய்யப்பட்ட முதலாவது மேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது பெயரிலேயே சரவணமுத்து ஸ்ரேடியம் அமைக்கப்பட்டது.

புகழ்பெற்ற சரவணமுத்துவின் அரசியல் குடும்பத்தில் வந்த வனுஷி, ஐந்து வயதாக இருக்கும் போதே அவரது தந்தை காலஞ்சென்ற ஜனா இராஜநாயகம், தாயார் பவித்திரா ஆகியோருடன் நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்தார். வோல்ட்டேர்ஸ் என்பவரைத் திருமணம் செய்த வனுஷிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளார்கள்.

தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் நியூசிலாந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இலங்கையில் பிறந்த முதலாவது உறுப்பினர் என்ற பெருமையை இவர் பெற்றுக்கொண்டுள்ளார்

https://thinakkural.lk/article/80598

  • கருத்துக்கள உறவுகள்

அம்மையாருக்கு வாழ்த்துக்கள்!

Edited by நியாயத்தை கதைப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

தொடக்க கதையே ஒரு மாதிரியிருக்கு...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, செண்பகம் said:

வனுஷியின் தந்தை வழிவந்த பாட்டி லூசியா சரவணமுத்து இலங்கையின் அரசுப் பேரவையின் உறுப்பினராக கொழும்பு வடக்கு தொகுதியிலிருந்து 1931 இல் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

வனுஷியின் தந்தை வழிவந்த பாட்டி லேடி லூசியா நேசம் சரவணமுத்துவின் கணவர் இரட்னஜோதி சரவணமுத்து 1931 இல் முதலாவது சட்டசபை தேர்தலில் தெரிவாகி பின் தேர்தல் குழறுபடி செய்தார் என குற்றம்சாட்டப்பட்டு தேர்தல் ஆட்சேபனை வழக்கொன்றில் தனது சட்டசபை உறுப்புரிமையையும் சிவில் உரிமையயும் இழந்ததன் காரணமாக அவர் இடத்தில் மனைவி  இடைத்தேர்தலில் போட்டியிட்டு தெரிவாகி சட்டமன்றம் சென்றார். இலங்கையில் சட்டமன்றத்துக்கு போட்டியிட்டு தெரிவான இரண்டாவது தமிழ் பெண் என்ற பெருமைக்குரியவர். 1941 இல் இறக்கும் வரை சட்டமன்ற அங்கத்தவராக பணிபுரிந்தார். நேசம் அம்மையார் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவர் யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் பயின்றவர்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பிரபல கிரிகெட் வீரர் பாக்கியசோதி சரவணமுத்து (கொழும்பு ஓவல் மைதானம் இவர் பெயரில் மாற்றப்பட்டது, இலங்கையின் முதல் டெஸ்ட் மைதானம்) மற்றும் அதே பெயரில் இப்போ இருக்கும் மனித உரிமை ஆர்வலர் இருவரும் கூட இதே குடும்பத்தவரே. வாழ்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் 1990 இல் இலங்கை அரசங்கதினால் படுகொலை செய்யப்பட்ட ரிச்சர்ட் சொய்சாவின் தாயாரின் (Dr மனோகரி சரவணமுத்து) நெருங்கிய உறவினர், அப் படுகொலையின் பின்னர் தான் அவர் மனித உரிமைகள் சம்பந்தமாக ஆர்வம் காட்டி, சட்டதரணி ஆனார். இவர் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் சிங்கள இனவெறிக்கு ஆளானார்.
 

https://www.ethniccommunities.govt.nz/news/spotlight-on-vanushi-walters/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.