Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பட்ட சைக்கோகளை வெளியில் நடமாடவிடுவது பலருக்கு ஆபத்து, இன்று கருத்திடுவான் நாளை யாரிலாவது செயலில் காட்டிவிட்டால் இன்னும் பயங்கரம்,

வர வர வக்கிர புத்திக்கார ர்கள் அதிகமாகி கொண்டே போகின்றது, இந்த கொரோணாவும் காரணம், சும்மா இருக்க பல பிரச்சனைகள்

விஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்த இலங்கையரைப் பிடிக்க பொலிஸார் தீவிரம்!

vwfv56ro8pzxhrmg_1588738212.jpeg?189db0&189db0

 

நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் இலங்கையில் இருப்பது தெரியவந்துள்ளதாக தமிழக பொலிஸார் முதல்கட்ட விசாரணைகள் மூலம் தெரிவித்துள்ளனர்.

டுவிட்டர் சமூகவலைத்தளத்தின் மூலமாக போலி டுவிட்டர் கணக்கைப் பயன்படுத்தி முகம் தெரியாத நபர் ஒருவர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருந்தமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்ததோடு, இது தொடர்பில் பல்வேறு கண்டனங்களும் எழுந்தன.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தமிழக பொலிஸார், மிரட்டல் விடுத்தவரின் ஐபி முகவரி மூலம் சந்தேகநபர் இலங்கையில் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். இண்டர்போலின் உதவியுடன் இலங்கையில் உள்ளவரைப் பிடிக்க மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் தீவிரம் காட்டுவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

சமீபத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் டோனியின் மகளுக்கு டுவிட்டர் போலி கணக்கு மூலம் பாலியல் மிரட்டல் விடுத்த 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/விஜய்சேதுபதியின்-மகளுக்/

Edited by நியானி
படம் நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தமிழகத்தில் இருக்கும் ஈழ அகதிகளுக்கு எதிராகவும் 
ட்வீட் போட்டு இருக்கிறார் ஆகவே சாதாரண அடியாளாக இருக்க வாய்ப்பில்லை 
என்பதுதான் எனது எண்ணம். இவர் பிடிபடுவார் என்று நான் நம்பவில்லை. 
சும்மா ஒருவரை பிடித்து பழியை ஹூக்கி போடுவார்களோ தெரியவில்லை 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் - கைது செய்யக்கோரி ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் - கைது செய்யக்கோரி ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்

 

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க மாட்டேன் என்பதை, நன்றி!வணக்கம் என்று மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், அவர் இலங்கை தமிழர்களின் மனதை புரிந்துகொள்ளாமல் அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதை கண்டித்து, விஜய்சேதிபதியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவதாக டுவிட்டரில் மிரட்டல் விடுத்தார். 

மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களான மகேந்திர சிங் தோனியின் மகள் மற்றும் விராட் கோலி அவர்களின் மனைவி உள்ளிட்டவர்களை பற்றி சமூக வலைதளங்களில் ஆபாசமான பதிவிட்டுள்ளார் இதனை வன்மையாக கண்டித்தும் மேலும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் வண்ணம் இருக்க, திருவாரூர் SFI கூட்டமைப்புடன் திருவாரூர் மாவட்ட விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் கலந்து கண்டன ஆர்பாட்டம் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைப்பெற்றது.

ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்

 

சம்பந்தப்பட்டவரின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட வேண்டும் என்றும், பெண்கள் பாதுகாப்பு சட்டம், குழந்தையை பாலியல் வன்கொடுமை சட்டம், மேலும் லோக்பால் சட்டத்தின் கீழ் அவரை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்பாட்டம் நடைபெற்றது.

 

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/22183447/1996433/Vijay-Sethupathi-daughter-threaten-fans-protest.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்
On 21/10/2020 at 20:57, செண்பகம் said:

விஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்த இலங்கையரைப் பிடிக்க பொலிஸார் தீவிரம்!

vwfv56ro8pzxhrmg_1588738212.jpeg?189db0&189db0

 

நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் இலங்கையில் இருப்பது தெரியவந்துள்ளதாக தமிழக பொலிஸார் முதல்கட்ட விசாரணைகள் மூலம் தெரிவித்துள்ளனர்.

டுவிட்டர் சமூகவலைத்தளத்தின் மூலமாக போலி டுவிட்டர் கணக்கைப் பயன்படுத்தி முகம் தெரியாத நபர் ஒருவர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருந்தமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்ததோடு, இது தொடர்பில் பல்வேறு கண்டனங்களும் எழுந்தன.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தமிழக பொலிஸார், மிரட்டல் விடுத்தவரின் ஐபி முகவரி மூலம் சந்தேகநபர் இலங்கையில் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். இண்டர்போலின் உதவியுடன் இலங்கையில் உள்ளவரைப் பிடிக்க மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் தீவிரம் காட்டுவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

சமீபத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் டோனியின் மகளுக்கு டுவிட்டர் போலி கணக்கு மூலம் பாலியல் மிரட்டல் விடுத்த 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/விஜய்சேதுபதியின்-மகளுக்/

நம்பீட்டம் 😏

  • கருத்துக்கள உறவுகள்
On ‎21‎-‎10‎-‎2020 at 23:03, Ellam Theringjavar said:

 

விமர்சனத்துக்கு முன் பதிவு முழுவதையும் படித்திருக்கவேண்டும். 

இங்கே சம்பவத்தை நேரில் பார்த்தவர் யாரும் இல்லை. 

ௐருத்தரைப் பார்த்து ௐருத்தர் அத்தோடு கொஞ்சம் அவரவர் கற்பனை. இப்படியே போகுது.

குழந்தையைப்பற்றி பதிவு போட்டவரையும் சந்தேகத்தோடு சிலர்பதிவிட்டிருந்தனர்.

அதனால்த்தான் அவரையும் அவரின் பதிவையும் விசாரணைக்குட்படுத்த வேண்டுமென போட்டிருந்நேன்.

அவர் பதிவுக்கு பொறுப்பானவரென காணும்பட்சத்தில் அவருக்கரிய தண்டனை கிடைக்கும் அல்லது கிடைக்காது போகும்.

இங்கு தெரிவிக்கும் கண்டனத்தில் ௐன்றும் நடக்கப் போவதில்லை.

அதுசரி இசைப்பிரியா பற்றி உங்களுக்கு தெரியும். நடந்தவையெல்லாம் முழு உலகத்திற்கே தெரியும்.

சாட்சிகள், ஆவணங்கள் என எல்லாம் இருந்தும்.......

ஆண்டுகள் பதினொன்றாகிறது...

தமிழனா தெலுங்கனா யாருக்கென்ன. தானே சொல்லிப் போனார்.

உங்களுக்கு என்ன விருப்பமோ அதைக்கதையுங்கோ. யார் கேட்டா. 

 

சம்பவத்தை நேரில் பார்த்தவர் இல்லையா?...டூவிட்டரில் அவர் பதிவு செய்தது உலகம் பூரா பரவியது . தெரியாததோ?...உங்களுக்கு சிங்களவன் செய்தால் மட்டும் குற்றம் ...தமிழர்கள் பத்தரை மாத்து தங்கம் 


உங்களுக்கு இசைப்பிரியாக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் நீங்கள் போராடுங்கள் ...அதற்கும் சேதுபதியா வர வேண்டும்...முரளியின் படத்தில் சேதுபதி நடிக்க கூடாது என்று வெட்டியாய் போராடுவதை விட இசைப்பிரியாவுக்காக போராடலாம் 

1 hour ago, ரதி said:

சம்பவத்தை நேரில் பார்த்தவர் இல்லையா?...டூவிட்டரில் அவர் பதிவு செய்தது உலகம் பூரா பரவியது . தெரியாததோ?...உங்களுக்கு சிங்களவன் செய்தால் மட்டும் குற்றம் ...தமிழர்கள் பத்தரை மாத்து தங்கம் 


உங்களுக்கு இசைப்பிரியாக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் நீங்கள் போராடுங்கள் ...அதற்கும் சேதுபதியா வர வேண்டும்...முரளியின் படத்தில் சேதுபதி நடிக்க கூடாது என்று வெட்டியாய் போராடுவதை விட இசைப்பிரியாவுக்காக போராடலாம் 

எல்லோரும் செய்தியை பார்ததுண்டு. யார் எழுதியதென்பதை யாராவது பார்த்ததுண்டா?

இப்போ ஒருத்தரின் கணக்கில் இன்னொருத்தர் எழுதமுடியும். 

யாழ் நிர்வாகமே இன்னொருத்தரின் பெயரில் கருத்து எழுதுவதும் மாற்றுக்கருத்து பிடிக்காதபோது கழிப்பதும் நீங்கதானா?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.