Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை மிரட்டிய பிரிகேடியர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை மிரட்டிய பிரிகேடியர்

 
1-114-696x377.jpg
 68 Views

“பிரபாகரன், தமிழனே, நாங்கள் உங்கள் அனைவரையும் கொன்று விடுவோம்” என இலங்கை இராணுவ அதிகாரியான பிரிகேடியர் கே கே எஸ் பெராகும் பணியில் இருந்த மருத்துவர்களை மிரட்டியதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.

இலங்கை இயந்திர காலாட் படைப்பிரிவின் பிரிகேடியர் கே கே எஸ் பெராகும், மருத்துவ அதிகாரிகளை பார்த்து உங்களைக் கொன்ற விடுவேன் என்றும் இனவாத ரீதியிலும், “பற தெமிழா, பிரபாகரன், பயங்கரவாதிகள். உங்கள் எல்லாரையும் கொல்லுவேன். இது எனது ஏரியா” என்று தகாத வார்த்தைகளால் மிரட்டியதாகவும் இலங்கையின் மிக முக்கியமான மருத்துவ சங்கமான அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதாரத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

 

Sampathnuwara வில் உள்ள மாவட்ட  மருத்துவமனைக்கு பிரிகேடியர் பெராகும் சென்ற பொழுது இந்த மோசமான செயலில் அவர் ஈடுபட்டிருந்தார் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இதன் காரணமாக மருத்துவமனையின் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு தொழில்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ள வைத்திய அதிகாரிகள் சங்கம் வைத்தியசாலையின் பணிகளில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளது.

யுத்தகாலத்தின் போது பயங்கரவாதத்திற்கு எதிராக போராடிய படையினர் பொலிஸாரிற்கு உளவியல்ரீதியான மருத்துவ ஆதரவை வழங்குவதற்காக மருத்துவர்கள் படைத்தரப்பினரை கௌரவத்துடன் நடத்தினார்கள் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் குறிப்பிட்ட அதிகாரி தனது நடத்தைகள் மூலம் படைத்தரப்பிலிருந்து எதிர்பர்ர்க்கப்படும் நடத்தையின் தராதரத்தை எட்டதவறிவிட்டார் என மருத்துவர்கள் மக்களின் கௌரவத்தை உறுதி செய்ய தவறிவிட்டார் என அரச மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

https://www.ilakku.org/பிரபாகரன்-தமிழனே-அனைவரை/

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியசாலை சேவையிலிருந்து விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு

வடக்கு மாகாணத்தின் சம்பத்நுவர பிரதேச வைத்தியசாலை சேவையிலிருந்து தாம் விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

spacer.png

பிரிகேடியர் கே.கே.எஸ்.பரகும் குறித்த வைத்தியசாலையின் வைத்தியரை மிரட்டியதன் விளைவாகவே தாம் இந்த முடிவை எடுத்ததாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தாம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/93249

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் தமிழ் மக்களை காக்க போராடினார்களாம், விளக்கம் வேறு. எல்லோரின் மனநிலையை பிரிகேடியர் பதவியில் இருக்கும் ஒரு கேடி வெளிப்படுத்தியிருக்கு. இதற்கு வெள்ளையடிக்க ஒரு அறிக்கை, மறுப்பு தெரிவித்து ஒரு அறிக்கை, அவர் சொன்னது சரி என்று வேறொரு அறிக்கை வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம். இல்லை; அவர் ஒரு மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று மருத்துவ  அறிக்கை வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தட்டிக் கேட்க ஆளில்லை எதுவேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம் என்கிற நிலை இருக்கும்போது.

தமிழ் வைத்திய அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரிகேடியர்!

Army.jpg?189db0&189db0

 

முல்லைத்தீவு – வெலிஓயா, சம்பத்நுவர மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளை “ப.. தமிழா. பிரபாகரன், பயங்கரவாதிகள், உங்களை கொலை செய்வேன், இது என்னோட இடம்” என்று இராணுவ பிரிகேடியர் கே.கே.எஸ்.பராகும் மிரட்டல் விடுத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் குறித்த வைத்தியசாலைக்கு சென்ற பிரிகேடியர் அவ்வைத்தியசாலை தலைவர் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகளை மேற்கண்டவாறு மிக மோசமாக இனவாதத்தை கக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சிற்கு அறிக்கை மூலம் முறையிட்டுள்ளது. அதில்,

“இது தொடர்பாக கடந்த 26ம் திகதி இராணுவத் தளபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு எவ்வித பதிலும் கிடைக்காத காரணத்தினால் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும்,

போர் இடம்பெற்ற காலத்தில் நாட்டின் அனைத்து மருத்துவர்களும் இராணுவத்தினர் உள்ளிட்ட படைத்தரப்பினரை மிகுந்த மரியாதையுடன் நடாத்தி சிகிச்சை வழங்கியிருந்தனர்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரையில் சம்பத்நுவர வைத்தியசாலையின் கடமைகளிலிருந்து தமது அதிகாரிகள் விலகியிருக்க நேரிடும் என்பதனை வருத்தத்துடன் பதிவு செய்கிறோம்” என்றுள்ளது.

இதேவேளை இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம் என்று இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

5 hours ago, satan said:

இவர்கள் தமிழ் மக்களை காக்க போராடினார்களாம், விளக்கம் வேறு. எல்லோரின் மனநிலையை பிரிகேடியர் பதவியில் இருக்கும் ஒரு கேடி வெளிப்படுத்தியிருக்கு. இதற்கு வெள்ளையடிக்க ஒரு அறிக்கை, மறுப்பு தெரிவித்து ஒரு அறிக்கை, அவர் சொன்னது சரி என்று வேறொரு அறிக்கை வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம். இல்லை; அவர் ஒரு மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று மருத்துவ  அறிக்கை வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தட்டிக் கேட்க ஆளில்லை எதுவேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம் என்கிற நிலை இருக்கும்போது.

என்னை பொறுத்தளவில் இவர் அவசர பதவி உயர்வுக்காக இப்படி செய்துள்ளார். இவருக்கு சொட்ப காலத்தில் இராஜதந்திர பதிவு வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவார் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.