Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.நகர அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட பணத்தின் பெரும்பகுதி திரும்பி செல்லும் நிலை..! பொறுப்பு வாய்ந்தவர்களின் அசமந்தம்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.நகர அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட பணத்தின் பெரும்பகுதி திரும்பி செல்லும் நிலை..! பொறுப்பு வாய்ந்தவர்களின் அசமந்தம்..!

Jaffna-EUEIE.jpg

சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் யாழ்.நகரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் செயற்படுத்தப்படும் யாழ்.தந்திரோபாய அபிவிருத்தி திட்டத்தின் பெரும் பங்கு நிதி திரும்பிச் செல்லும் அபாய கட்டத்தை எட்டியுள்ளது.

உலக வங்கியின் அனுசரணையுடன் செயல்படுத்தப்படும் குறித்த திட்டம் யாழ்.நகரை அழகுபடுத்தும் முகமாக நான்கு பிரதான அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது யாழ்.நகர வடிகாலமைப்பு திட்டம், குளங்கள் ஆழமாக்குதல், நகரை அழகுபடுத்துதல் மற்றும் யாழ்.மாநகர இயலளவு அபிவிருத்தி ஆகிய பிரிவுகளின் கீழ் குறித்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

குறித்த திட்டங்களில் ஓரிரு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஏனைய திட்டங்கள் உரிய திட்டமிடல்கள் இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது.ஒரு வருடத்தை கொண்டதாக குறித்த திட்டம் எதிர் வரும் 2021 ஆண்டில் நிறைவடைய உள்ள நிலையில் இவ்வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த திட்டங்கள் தயார் செய்யப்பட்டு உரிய நிறுவனங்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.

எனினும் 30 வீதமான திட்டங்கலே பூர்த்தி அடைந்துள்ளதாக அறியப்படும் நிலையில் குறித்த திகதிக்குள் தயாரிக்கப்படாத பல திட்டங்களுக்கான பெருமளவு நிதி திரும்பிச் செல்லும் அவல நிலையை எதிர் நோக்கியுள்ளது.

ஆகவே யாழ்ப்பாண மக்களுக்கென ஆரம்பிக்கப்பட்ட குறித்த திட்டம் கை நழுவிப் போகாமலிருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.

https://jaffnazone.com/news/21518

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஆகவே யாழ்ப்பாண மக்களுக்கென ஆரம்பிக்கப்பட்ட குறித்த திட்டம் கை நழுவிப் போகாமலிருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.

 

 

எங்கட அரசியல்வியாதிகளைச் சொல்லி வேலையில்லை.

ஒருவர் நெடுந்தீவை சிங்கப்பூராக்கிட்டு நீட்டி நிமிர்ந்து கிடக்கிறார்..

மற்றவர்.. வாட்ஸ் அப்பில் அனிமேசன் படங்களை எல்லாம் அனுப்பி.. என் கனவு யாழ்.. இதோ யாழ்நகரென்ன.. குடாநாடே டோக்கியோ அளவுக்கு வரும் வாக்குப் போடுங்கள் மக்களே என்றிட்டு.. நீட்டி நிமிர்ந்து கிடக்கிறார்..

வந்த காசை எல்லாம் விக்னேஸ்வரன் திருப்பி அனுப்பிட்டார் என்று கூடிக் கும்பி அடித்த கூட்டங்கள்... இப்ப இந்தச் செய்தியை பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் நீட்டி நிமிர்ந்து கிடக்கின்றனர்..

எங்கட புத்திசீவிகள்.. மண்டைக்குள் கறையான் புத்து வைச்ச கணக்கா நீட்டி நிமிர்ந்து கிடக்கினம்.

இதில.. யாழ் நகரை எப்படியுங்கோ அழகு படுத்திறது...???!

கேட்டால்.. அது அழகாத்தானே இருக்கு என்று நாகவிகாரைக்கு பூச்சுப் பூசி.. பூசை பண்ணும். யாழ் செயலகம். இப்படி இருக்கு அங்க நிலைமை..??!

உரியவன் இல்லாவிட்டால்.... இதுதான் நிலை... வீட்டில் மட்டுமல்ல.. எம்மவரைப் பொறுத்தவரை நாட்டிலும். 

image.jpeg.fd2809ba53ef7cc99833bb4c102366bf.jpeg

இலங்கைத் தேர்தல் விளம்பரங்கள். - Page 2 - நிகழ்வும் அகழ்வும் - கருத்துக்களம்

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 வடக்கின் அபிவிருத்திக்கு வந்த பணத்தை முதல்வர் விக்கினேஸ்வரன் திருப்பி அனுப்பிவிட்டார் என்று மூச்சுக்கு முன்னூறுதடவை கூறியதெல்லாம், அவர்மேல் சேறடித்து அரசியலில் இருந்து  வெளியேற்றவே என்பது இப்போ எல்லோருக்கும் நிரூபிக்கப்பட்டிருக்கும். முன்னாள் அரச அதிபர் சுரேன் ராகவன் உட்பட. இனி யாரை குறை கூறப்போகிறார்கள்?

ஆளுநர் சுரேன் ராகவன்.

  • கருத்துக்கள உறவுகள்

கொடுப்பதுபோல் கொடுத்து எடுப்பதுபோல் எடுக்கும் அரசாங்கத்தின் தந்திரம். இப்போ யாரையும் கைகாட்ட முடியாததால் மௌனம் சாதிக்கிறார்கள் தமிழ் அரசியல்வாதிகள். எங்கே அந்த  தவராசா? கூப்பாடு போட.

இப்போது மட்டுமல்ல எப்போதும் நடக்கும் கூத்துதான் இது. கடந்த அரசாங்கத்தில் பருத்தித்துறையில் 150 மில் அமெரிக்கா டொலர் பெறுமதியான திடடம் வந்து அதட்கான ஆய்வுகள் நடத்தி முடித்திருந்தார். இருந்தாலும் என்ன அதி மேதாவி புத்திசாலிகளினால் தடுத்து நிறுத்தப்பட்ட்து. அதில் பேராசிரியர்களும் (?) குடித்துவிட்டு மேதாவி கதை கதைத்தார்கள. இந்த அரசு வந்தவுடன் டக்ளஸ் அதை தொடங்க முட்படடாலும் அது இப்போது தடை செய்யப்பட்ட்து.

இன்னொரு கூடத்தில் ஒரு படடதாரி ஆசிரியர் றோட்டுக்கள் போடுவதட்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் மக்கள் இறக்கிறார்களாம். இப்படியாக நிறையவே எழுதலாம். இரணைமடு குளத்திலிருந்து குடிநீர் கொண்டு செல்வதட்கு எதிர்ப்பு, கடல் நீரை நன்னீராக மாற்றுவதட்கு எதிர்ப்பு.

இப்படியாக மெகா திட்ட்ங்களை நிறைவேற்றுவதென்பது இலகுவான காரியம் இல்லை. அரசியல்வாதிகள் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. அரசியல் காரணங்களுக்கு head  count ஐதான் அவர்கள் பார்க்கிறார்கள்.

எனவே பணம் திரும்பிப்போவது என்பது ஒரு பெரிய செய்த்யே இல்லை. இது கால காலமாக நடக்கும் ஒன்றுதான். எனது அனுபவத்தில் இதை நான் எழுதுகிறேன். இப்போது இந்த அரசு அப்படியான உலக வங்கி, ADB , IMF போன்றவற்றிலிருந்த கடன் பெற்று பெரிய திட்ட்ங்களை செய்யும் என்று கூற முடியாது. இவை பற்றி ஆராய ஒரு குழுவை நியமித்திருக்கிறார். அந்த குழுதான் இந்த US $ 50 M திடடத்தையும் இடைநிறுத்தியுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.