Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில்... 5 இறப்புகள் மாத்திரமே, கொரோனாவால் ஏற்பட்டவை – இராணுவத் தளபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமகளம் கூட்டுப் படைகளின் பிரதானியாக சவேந்திர சில்வா - சமகளம்

இலங்கையில்... 5 இறப்புகள் மாத்திரமே, கொரோனாவால் ஏற்பட்டவை – இராணுவத் தளபதி.

இலங்கையில் 5 இறப்புகள் மாத்திரமே கொரோனாவால் ஏற்பட்டவை என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் இதை உறுதிப்படுத்தியதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளிகள் வீடுகளில் இறந்தது குறித்து இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், நாட்டின் 5 இறப்புகள் மாத்திரமே கொரோனாவால்  ஏற்பட்டவை எனவும் ஏனைய அனைத்தும் நாட்பட்ட நோய்களால் ஏற்பட்டவை எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோர் ஊரடங்கு மற்றும் முடக்கல் நிலைகளின்போது வீடுகளில் தங்கியிருக்காது தேவையான போது மருத்துவசிகிச்சை பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒரு சிறந்த சுகாதார சேவை உள்ளது என்றும் யாரும் மறைக்கவோ அல்லது மருத்துவ சிகிச்சை பெறுவதைத் தவிர்க்கவோ கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

முடக்கல் நிலையில் இருக்கும்போதுகூட அவசர மருத்துவ தேவைகள் தேவைப்படுவோர் அம்புலன்சில் மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய ஒரு பொறிமுறையை தாங்கள் நிறுவியுள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்

வைரஸ் பாதித்த அனைவருமே இறந்துவிட மாட்டார்கள் என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்யப்பட்டவர்களில்,  0.2 சதவீதம் பேர் கொரோனா காரணமாக இறந்தனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/இலங்கையில்-5-இறப்புகள்-மா/

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையில் 5 இறப்புகள் மாத்திரமே கொரோனாவால் ஏற்பட்டவை என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சிறீலங்க இராணுவ அதிகாரிகளை விடவும் கொரோனா மனிதநேயம் கொண்டதுபோல் தெரிகிறது. 🤔

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையில் 5 இறப்புகள் மாத்திரமே கொரோனாவால் ஏற்பட்டவை என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர் உண்மையை மறைக்கிறார். ஒரு கொலையாளியிடம் மனிதநேயம் இருக்குமா? முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களின் தொகையை துல்லியமாக கூறிய வல்லுநர்  இவராச்சே.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையில்... 5 இறப்புகள் மாத்திரமே, கொரோனாவால் ஏற்பட்டவை – இராணுவத் தளபதி.

நம்பீட்டம்
நம்பீட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

நாட்டின் 5 இறப்புகள் மாத்திரமே கொரோனாவால்  ஏற்பட்டவை எனவும் ஏனைய அனைத்தும் நாட்பட்ட நோய்களால் ஏற்பட்டவை எனவும் தெரிவித்துள்ளார்

78735eae74d26b480c6120ccb20bc540.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Paanch said:

சிறீலங்க இராணுவ அதிகாரிகளை விடவும் கொரோனா மனிதநேயம் கொண்டதுபோல் தெரிகிறது. 🤔

 

7 hours ago, satan said:

இவர் உண்மையை மறைக்கிறார். ஒரு கொலையாளியிடம் மனிதநேயம் இருக்குமா? முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களின் தொகையை துல்லியமாக கூறிய வல்லுநர்  இவராச்சே.

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

நம்பீட்டம்
நம்பீட்டம்.

 

8 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

78735eae74d26b480c6120ccb20bc540.jpg

இங்கு கருத்து எழுதியவர்கள்.... ஒருவரும், ஶ்ரீலங்கா இராணுவத் தளபதி கூறியதை நம்பாமல், காமெடி பீஸ் ஆக்கி விட்டதை நினைக்க சிரிப்பாக இருக்கு.

டிஸ்கி:   அவர் சொன்னதை... நம்பியவர்கள் ஒருவரும், இங்கு கருத்து எழுதவில்லை என்றே நினைக்கின்றேன். 😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.