Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கும் தடையா..? வெறும் அரசியல் இலாபத்திற்காக மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் நுழைந்த தமிழ் தேசியவாதிகள் - குதுகலிக்க போகும் தென்னிலங்கை.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கும் தடையா..? வெறும் அரசியல் இலாபத்திற்காக மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் நுழைந்த தமிழ் தேசியவாதிகள் - குதுகலிக்க போகும் தென்னிலங்கை.!

download.jpg

தமிழீழ மாவீரர் நாள் நவம்பர் 27ம் திகதி நினைவு கூரப்படவுள ்ள நிலையில் மாவீரர் நாள் நினைவு கூரலுக்காக துயிலும் இல்லங்களை துப்புரவு செய்ய சென்றிருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தி அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன், அவர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கும் முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

குறிப்பாக யாழ்.கோப்பாய் மற்றும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இதே வேளை துப்பரவு பணிகளுக்கான முயற்சியை தொடர்ந்து நீதிமன்ற தடை உத்தரவினை பெறுவதற்கு பொலிஸார் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

இதே வேளை குறித்த துப்புரவு பணிகள் அவசர அவசரமாக இப்போது தேவையா ? மாவீரர் நாளுக்கு நெருக்கமாக இதனை மேற் கொண்டிருக்க கூடாதா?

என பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக அரசாங்கத்தை உசுப்பேற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கிறார்களா? எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்த வருடம் தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் ஊடாக தடை விதிக்கப்பட்டது.

அது தொிந்திருந்தும் மாவீரர் நாளுக்கு இடையில் 11 நாட்கள் உள்ள நிலையில் 27ம் திகதிக்கு நெருக்கமாக இந்த துப்புரவு பணிகளை மேற்கொண்டிருக்க கூடாதா? எனவும், தற்போது பொலிஸாரை விழிப்படைய செய்துள்ளதால் வெறுமனே கோப்பாய், கனகபுரம் மட்டுமல்லாமல் வடகிழக்கு முழுவதும் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு நீதிமன்ற தடைவிதிக்கப்படும் அபாயத்தை வெறும் அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கி விட்டிருப்பதாக விமர்சனங்கள் கூறப்படுகின்றன.

தியாகி திலீபனின் நினைவேந்தல் மட்டுமல்லாமல், செஞ்சோலை படுகொலை நினைவேந்தலும் நிறுத்தப்பட்டது.குறிப்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி விசுவமடுவில் அந்த நினைவேந்தலை நடத்தாமல் யாழ்ப்பாணத்தில் நடத்தியிருந்த நிலையில் தற்போதும்  இந்த 'முந்திரிக்கொட்டை'  வேலையினால் மாவீரர் நாள் நினைவேந்தலையும் முற்றவெளியில் நடத்தும் நிலை வரப்போகிறதா? என்ற விமர்சனங்களும் கூறப்படுகிறது.

https://jaffnazone.com/news/21633

  • கருத்துக்கள உறவுகள்

 

 

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவு பணி: சிவஞானம் சிறிதரனிடம் வாக்குமூலம் பதிவு

கிளிநொச்சி- கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவு பணியில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம்  பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூறும் நாள் எதிர்வரும் 27ஆம் திகதி தமிழ் மக்களினால் அனுஷ்டிக்கப்பட இருக்கின்றது.

இந்நிலையில் அதனை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் துப்பரவு பணிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, குறித்த சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார், துப்பரவு பணிக்கு அனுமதி வழங்கியது யார் என வினவியதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மீது  வழக்கு பதிவு செய்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும்,  துப்பரவு பணியில் ஈடுபட்ட ஏனைய சிலரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

துயிலும் இல்ல துப்பரவு பணியில் ஈடுபட்ட சிறீதரன்! சம்பவ இடத்திற்கு விரைந்த  பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை - Ibctamil

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவு பணி: சிவஞானம் சிறிதரனிடம்  வாக்குமூலம் பதிவு! - Tamil Radar

http://athavannews.com/கனகபுரம்-மாவீரன்-துயிலும/

வருடாவருடம் மக்களை ஏமாற்றும் இந்த அரசியல்வாதிகள் இருக்கும் வரை , சிங்கள தீவிரவாத அரசுகளை அசைக்க முடியாது. இவர்கள் இருக்கும்வரை அவர்களுக்கு சந்தோசம்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.