Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

லெப். கேணல் ஜோய்

Commander-Lieutenant-Colonel-Joy.jpg

மட்டக்களப்பு – அம்பாறை பிராந்தியத் தளபதி
லெப். கேணல் ஜோய் / விசாலகன்
கணபதிப்பிள்ளை ரகுநாதன்
செங்கலடி, மட்டக்களப்பு

பிறப்பு:- 20.05.1956
வீரச்சாவு:- 30.11.1991

முடுகு… முடுகு…

ஆ… ஆ… கிறுகு… கிறுகு…

மெல்லிய உயரமாக இருந்த ஒருவனைப் பார்த்து கமல் கத்திக் கொண்டிருந்தான்.

‘ஏன்டா, கமல் இப்படிக் கத்துது’ நான் சதீசைக் கேட்கிறேன்.

சத்தம் கேட்டுத் திரும்பிய கமல் “அண்ணை இவங்கள் தான் மறுகா கோஸ்டி” என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறான்.

இது என்ன புது கோஸ்டி. வியப்பாக இருந்தது. அதில் உயரமாக மெல்லியவனாக இருந்தவனைப் பார்க்கிறேன்.

“அப்பன் இங்கே வா” அவனை அழைத்தேன்.

“நான் மட்டக்களப்பில இருந்து வந்தனான்” என்கிறான் அவன்.

எனக்கும் ஜோய்க்குமான ஆரம்ப அறிமுகம் இப்படித்தான் நிகழ்ந்தது.

எங்களுக்கு மணலாறு காடு மட்டும் புதிதல்ல, மட்டக்களப்பு தமிழும் புதியது தான்.

நெய்தல், மருதம், முல்லை, குறிஞ்சி என 70 மைல்கள் அகண்டு கிடக்கும் மட்டக்களப்பு.

உழவு, வெட்டு, விதைப்பு எல்லாம் ஒன்றாக நடக்கும். தேனும் வயலும் கொட்டிக் கிடக்கும் அழகான வளமான எம் நிலம்.

1988…….1989

எம்மைச் சுற்றிவர இந்தியப் படை.

நாம் உழுது உழுது விதைத்து அறுவடைக்கு ஆயத்தமான போது, அறுவடையை அழிக்க வந்த அயலவனை மிரட்டி விட்டு அபகரிக்க வந்த வேற்றவன்.

10 தமிழர்களுக்கு ஒரு இந்தியன். இந்திய முற்றுகைக்குள் புலிகளா? புலிகளின் முற்றுகைக்குள் இந்தியனா?

எம் மீதான முற்றுகை கண்முன் தெரிந்தது. அவன் மேலான எம் முற்றுகை தெரியாமல் நடந்தது. தடக்கித் தடக்கி அழிந்தான்.

நயினாமடு இந்தியப் படை முகாமுக்கு அருகே அவனது ஆட்டுப்பட்டி, ஒரு போராளி இரகசியமாக பட்டிக்கருகே சென்று ஆடுகளை “பா பா” என அழைக்கின்றான்.

ஒவ்வொரு ஆடாக, பட்டியிலிருந்த 29 ஆடுகளும் வெளியேறி வருகின்றன. ஆடுகளைச் சாய்த்த படி அவன் நடக்கின்றான்.

இந்திய இராணுவத்தில் ஒருவன் ஆடுகள் போவதைக் கண்டு விட்டுக் கத்தித் தொலைக்கிறான்.

ஆட்டை வந்து பிடிக்க அவனுக்குத் துணிவில்லை. வெளியேவர வேண்டுமானால் குறைந்தது 50 சிப்பாய்கள் துணை வேண்டும்.

ஆட்டைத்தேடி உலங்கு வானூர்தி வந்து ஆடு சாய்ப்பவனைத் தேடித் தேடி சுடுகின்றது.

அடுத்தநாள் இந்திய இராணுவத்தின் வோக்கி எண்ணில் அவனது ஆடு கத்தும் சத்தம் கேட்டு அவன் கத்திக்கொண்டிருந்தான்.

தனது ஆட்டையே காப்பாற்ற முடியாத இந்தியப் பெரும் படை தமிழீழ நாட்டுக்கு ஆசைப்பட்டது.

இப்படி அவனது முற்றுகைக்குள் நாமும், எமது முற்றுகைக்குள் அவனும் ஓடிப்படித்து விளையாடும் காலத்தில் தான் ஜோய் மணலாற்றிற்கு வந்தான்.

மணலாறு காடே குண்டு வீச்சால் அதிர்ந்து கொண்டிருந்தது.

“பொங்கலுக்கு இந்தியன் வெடி கொளுத்துகிறான்” பொங்கலுக்கான நிகழ்ச்சிகள் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் ஜஸ்டின் என்னைப் பார்த்துக் கூறினான்.

“இரவு என்ன நிகழ்ச்சி” நான் கேட்கிறேன்.

“பாட்டு, டான்ஸ் இப்படிப் பல” ஜஸ்டின் அபிநயம் பிடித்துக் காட்டினான்.

பொங்கல்இ கிறிஸ்மஸ்இ போராளிகளின் நினைவு நாட்கள் எனச் சில நிகழ்ச்சிகள் காட்டில் நடக்கும்.

இரவு, ஏதோ ஒரு புது மொழியில் பாடி தனக்கேற்றாற் போல் தன் பெரிய உடம்பை ஒய்யாரமாய் வளைத்து, நெளித்து ஜஸ்டின் ஆடினான்.

அடுத்து மேளங்களான தகரங்கள் முழங்க “ஜோய் வழங்கும் பிறேக் நடனம்” அறிவிப்பு வருகிறது.

வளைந்து, நிமிர்ந்து, முறிந்து… என்ன உடம்படா, இப்படி வளைந்து முறிகின்றது.

“வடமோடி, தென்மோடி இவன் பிறந்த இடமோடி, இவன் கூத்து என்ன கூத்தோடி” நான் என்னுள் முணுமுணுத்தபடி அவன் நடனத்தை ரசித்துச் சுவைக்கிறேன்”

ஆர்.பி.ஜி தோளில் வைத்தபடி ஜோய் நிமிர்ந்து நின்றால், உடம்பில் வளைவிருக்காது.

தமிழீழ – சிறீலங்காப் போர் மீண்டும், தொடங்கியபின், யாழ். கோட்டையைக் கைப்பற்றும் முயற்சியில் ஜோய் காயமடைந்தான்.

ஒரு கால் சிறிது காலம் உணர்வு குன்றி இருந்தது.

மட்டக்களப்பு மண்ணுக்கே உரிய கலை இரசனையும்இ இலகுவாகப் பழகும் பண்பும், சூதுவாதற்ற பேச்சுக்களும் ஜோயை விட்டுப் பிரிந்தது கிடையாது.

மட்டக்களப்பை மேலிருந்து பார்த்தால் கடற்கரையை அண்டிய பகுதிகள் பெரும்வெளியாக இருக்கும்.

கடலுக்குச் சற்று மேலே வந்து நிற்கும் நீர் மூழ்கிக் கப்பல் போல, சுற்றிவர இருக்கும் ஏரியும் இடையிடையே தெரியும் நிலங்களும், வீடுகளும் கரந்தடிப் போராட்டத்திற்கு கடினமான பகுதி தான்.

“70ல் வந்த புயலோடு மரங்கள் எல்லாம் அழிந்து போயிற்று. அடுத்து வந்த இனவாதப் புயலோடு எல்லாமே போயிற்று” என்றார் ஒருவர்.

ஓவ்வொரு வீட்டிலும் சோகக் கதைகள் இருக்கும். சிங்கள, முஸ்லீம் காடையர்களினதும், சிறீலங்கா இராணுவத்தினதும் கொலைத் தடயங்கள் பதிந்திருக்கும்.

இந்தியப் படையுடனான போராட்ட காலத்தில் தமிழீழத்தின் மற்றைய பகுதிகள் போலவே, மட்டக்களப்பு, அம்பாறையிலும் அழிவுகள் தொடர்ந்தது.

இந்தியப் படையுடனான போராட்ட காலத்தில் தமிழீழத்தின் மற்றைய பகுதிகள் போலவே, மட்டக்களப்பு, அம்பாறையிலும் அழிவுகள் தொடர்ந்தது.

மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்த போதும் “எங்களுக்கு மிகப் பெரிய நெருக்கடி மிகுந்த துன்பத்திற்கு நடுவில் போராடுகின்றோம்” என ஒரு வார்த்தை மட்டக்களப்பு, அம்பாறை விசேட தளபதி கருணாவிடம் இருந்து வந்ததில்லை.

“எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை” என்றே எப்போதும் பதில் வரும்.

தலைவர் வளர்த்த பிள்ளை அவன் தளராது நின்றான். அவன் பாசறை தான் ஜோய் தவழ்ந்த வீடு.

அன்று தலைவரின் பாசறையான மணலாறுதான் அவன் வளர்ந்த வீடு.

இந்திய கூர்காப் படைகள் குறித்து பல வீரக்கதைகள் உண்டு.

ஒருமுறை ஒரு ஆங்கிலச் சிப்பாய் ஒரு கூர்க்காவைக் குறிபார்த்து “உன்னைச் சுடுவேன்” என்றான்.

அதற்கு கூர்க்கா அச்சிப்பாயைப் பார்த்து “முதலில் தலையை ஆட்டு பின் சுடு” என்றானாம்.

சிப்பாய் தலையை ஆட்ட தலை விழுந்து விட்டதாம்.

ஆங்கிலேயன் ‘சுடப்போகிறேன்’ என்று சொல்லும் போதே கூர்க்கா தனது கத்தியை அவனது கழுத்தைக் குறிபார்த்து வீசி விட்டானாம்.

அவ்வளவு விரைவு, கத்தி கூரானது. அதனால் வெட்டப்பட்ட தலை விழவில்லை. தலையை ஆட்டிய போது தலை விழுந்து விட்டதாம்.

இப்படி வீரக்கதை பேசும் கூர்க்காப்படையொன்று 02.03.1989 அன்று கேணல் பக்சியின் தலைமையில் மணலாற்றுக்குள் நுழைந்தது.

கமல், அரி, குகேந்திரன், சேவியர் இவர்களுடன் ஜோயும் அங்கு நின்றான்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தச் சண்டையில் கூர்க்காப்படை பக்சியின் உடலையும் விட்டு விட்டு ஒடியது. ஓடும் போது தமது கத்திகளை மண்ணில் புதைத்து புதைத்து ஓடியது.

கூர்க்காப் படை தமது கத்திகளை புதைத்துவிட்டு ஓடிய மணலாற்றில் ஜோயின் போரியல் கல்வி தொடர்ந்தது.

இவன் போன்றோரின் போரியல் கல்வியே இந்தியப் படைக்குப் போராட்டப் படிப்பினையாகியது.

தமிழீழ – சிறீலங்காப் போர் மீண்டும் தொடங்கிய போது சிறீலங்காப்படை, முஸ்லிம் காடையர், தேச விரோதக் கும்பல் இவற்றால் மட்டக்களப்பு, அம்பாறை தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள்.

வீடுகள் எரிந்தன. பாலியல் வன்முறைகள் தொடர்ந்தன. மதவுகளுக்குக் கீழ், காட்டு மரங்களுக்குக் கீழ் தமிழ் மக்களின் வாழ்க்கை தொடர்ந்தது.

“தென் தமிழீழத்தில் புலிகளா? அழிந்து விட்டார்கள். என சிறீலங்கா கொக்கரித்தது. வீட்டில் ரகுநாதன் எனவும் இயக்கத்தில் ஜோய் எனவும் இப்போது விசாலகன் ஆகிவிட்ட ஜோய் மீண்டும் மட்டக்களப்பில் காலடி எடுத்து வைத்தான்.

மிகக் குறுகிய காலத்தில் அவன் ஆற்றல் கண்ட மட்டக்களப்பு, அம்பாறை விசேட தளபதி அவனை மட்டக்களப்பு அம்பாறை தளபதி ஆக்கினார்.

புலிகளா? எங்கே? எனக் கேட்டு கொக்கரித்த சிறீலங்காப் படை “ஐயோ எல்லா இடங்களிலும் மீண்டும் புலிகள்” என அலற அலற தாக்குதல்கள் தொடர்ந்தன.

தொடர்ந்த தாக்குதல்களில் ஒன்று 25.10.1991 கொக்கட்டிச்சோலை இராணுவ முகாமில் இருந்து மண்முனைத்துறைக்கு சென்ற இராணுவத்தினர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்.

விசாலகன் (ஜோய்) தலைமையில் நடந்த இத்தாக்குதலில் எதிர்பார்த்தபடி தாக்குதல் வலயத்தில் சிறீலங்காப்படை வராததால் தான்னுதல் திட்டமிட்டபடி நடக்கவில்லை.

15 நிமிட தாக்குதலில் பல சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டனர் 6 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

“விடுதலைப் புலிகள் இல்லை என்கிறீர்கள், அக்டோபர் மாதம் மட்டும் நாம் எதிரியிடம் இருந்து பறித்த ஆயுதங்கள் ஒன்றா இரண்டா” என பெருமையோடு தளபதி ஓர் செய்தியாளரை கேட்டார்.

டிசம்பர் 20 வெளிவந்த புரண்ட்லைன் (frontline) சஞ்சிகையில் விசாலகனின் நேர்காணல் வந்திருந்தது.

“எங்களுக்கு மக்கள் ஆதரவில்லை என்கிறார்கள் இவ்வளவு சிங்களப் படை முகாம்களுக்கு நடுவில், படகில், உங்களை எங்களிடம் யார் அழைத்து வந்தார்கள்? ஆதரவில்லாமல் இது நடக்குமா?”

“முல்லைத்தீவில், அம்பாறையில் கைவிடப்பட்ட முகாம்களைத்தான் சிறீலங்காப் படை கைப்பற்றியது”

“மணலாற்றில் மைக்கல் முகாமுக்கு வந்த சிறீலங்காப் படை பின் வாங்கிய பின் அங்கு சென்ற நாம் கண்ணிவெடியில் சிக்கிய 100 காலணிகளைக் கண்டோம். எவ்வளவு இழப்பை அவர்கள் சந்தித்திருக்கிறார்கள்”

“மட்டக்களப்பு நகரத்துள் நாங்கள் இல்லை என்பது பொய். நாம் தேவைக்கேற்ப, சூழலுக்கேற்ப எங்கும் செல்வோம்”

“நாங்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டோம் எனச் சொல்கிறார்கள். அக்டோபர் மாதம் மட்டும் 51 ஆயுதங்களை எதிரியிடம் இருந்து கைப்பற்றியுள்ளோம். இது நாங்கள் தோற்கடிக்கப்பட்டதையா காட்டுகிறது?”

“நாங்கள் தோற்கடிக்கப்படவில்லை வென்று கொண்டு தான் இருக்கிறோம்” என மிக உறுதியோடும், பெருமையோடும் அவன் நேர்காணல் தொடர்கின்றது.

27.11.1991, 3000க்கும் மேற்பட்ட சிறீலங்காப் படையினர் “வட்டேறவும்” என்ற பெயரில் சுற்றி வளைப்பில் இறங்கினர்.

இந்த இராணுவ நடவடிக்கைக்கு பதிலடியாக சிறப்புத் தளபதியின் வேண்டுகோளுக்கமைய விசாலகன் தாக்குதல் ஒள்றைத் திட்டமிட்டான்

பன்குடாவெளி இராணுவ முகாமிலிருந்தும், முதிரையடி ஏத்தம் இராணுவ முகாமிலிருந்தும் உணவுப் பொருட்களை எடுக்க செங்கலடி நோக்கி வரும் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடாத்தத் தீர்மானித்தான்.

தாக்குதல் மையப்பகுதியில் உள்ள முக்கிய வீதியில் 25 மீற்றர் நீளமுள்ள கறுத்தப்பாலமும், அவ்வலயத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் 15 மீற்றர் நீளமுள்ள இன்னுமொரு பாலமும் இருந்தது.

29.11.1991 காலை 8.40 மணிக்கு தாக்குதல் தொடங்கியது. 7 சிறீலங்காப்படையினர் கொல்லப்பட்டனர். மற்றையோர் தப்பி ஓடினார்கள்.

தாக்குதல் வலயத்தில் நின்ற விசாலகனிடம் இருந்து கட்டளைகள் பிறந்து கொண்டிருந்தன.

தாக்குதலில் காயமடைந்து காட்டுக்குள் ஓடிமறைந்த சிறீலங்கா இராணுவ வீரன் சுட்ட ரவை ஒன்று விசாலகனின் தொண்டைக்கு கீழ் தாக்குகின்றது.

படுகாயமடைந்த ஜோய் 30.11.1991 அன்று காலை 5.30 மணிக்கு வீரச்சாவைச் சந்தித்துக் கொண்டான்.

இந்தியப் படை வெளியேறிய சிறிது காலத்தில் மட்டக்களப்புக்கும் அம்பாறைக்கும் செல்ல இருந்த தேனிசை செல்லப்பா குழுவினருக்காக திரு.காசி ஆனந்தன் அவர்கள் தான் முன்பு எழுதிய

மீன் மகள் பாடுகின்றாள்
வாவி மகள் ஆடுகின்றாள்
மட்டு நகர் அழகான மேடையம்மா – இங்கே
எட்டுத் திசையும் கலையின் வாடையம்மா

என்ற பாடலுக்கு புதிதாக கடைசியில் நாலு வரிகளை எழுதினார். அதன் கடைசி இரண்டு வரிகள்

போர்க்கலையில் வல்ல புலிக்கூட்டமும் உண்டு
பகையைப் பொடிப் பொடியாக்கும் போராட்டமும் உண்டு

. முடுகு – முன்னேறு
. கிறுகு – திரும்பு
. மறுகா – பின்புஇ பிறகு
(இவை இன்றும் மட்டக்களப்பு பகுதியில் வழக்கிலிருக்கும் பழந்தமிழ் சொற்களாகும்)

நினைவுப்பகிர்வு:
யோகரத்தினம் யோகி
வரலாற்றுத்துறைப் பொறுப்பாளர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (தை, 1992).

 

https://thesakkatru.com/batticaloa-ampara-district-commander-lieutenant-colonel-joy/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலையின் புயலாக எழுந்த எங்கள் தளபதி ஜோய்

Our-Commander-Joey-who-arose-as-a-storm-

வீரத்தின் ஊற்றாக, விடுதலையின் புயலாக எழுந்த எங்கள் தளபதி ஜோய்.

தமிழ்த்தேசிய இனத்தின் இழந்த தாய்நாட்டை மீட்பதற்கான விடுதலைப் போராட்டத்தில் தங்களின் உடல் பொருள் ஆன்மா என அனைத்தையும் ஆகுதியாக்கிய ஆயிரமாயிரம் மாவீரர் கல்லறைகள் எமது தாய்மண்ணில்

அகற்றப்பட்டு துயிலுமில்லங்கள், சிதைக்கப்பட்டபோதும் உலகப்பந்தின் எங்கோர் மூலையில் தன்மானமும் சிந்திக்கும் அறிவுமுள்ள கடைசித்தமிழன் வாழும் வரை மாவீரரின் நினைவும் அவர்களின் வரலாறும் அழியாது…. எம்மத்தியிலிருந்து உருவாகி எம்மோடு வாழ்ந்த வீரர்களின் வரலாற்றை பதிவு செய்யும் சிறுமுயற்சியே இத்தொடராகும். நிறைவானது என்று நிறுவ முடியாதெனினும் முயற்சிக்கின்றோம். ஆக்கéர்வமான கருத்துப்பரிமாற்றத்தை வேண்டி சுவடுகள் தொடரும்…

Lieutenant-Colonel-Joy-1.jpg

வீரத்தின் ஊற்றாக, விடுதலையின் புயலாக எழுந்த எங்கள் தளபதி ஜோய்

1991ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டம் தரவையில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலுமில்லத்தில் நடந்த மாவீரர் வீரவணக்க நிகழ்வில் தளபதி ஜோய் வீரவணக்க உரையாற்றிய போது அதில் பொதிந்திருந்த கருத்துக்களின் ஆழமும் உறுதியும் உணர்வும் தேசியத்தலைவரின் தெரிவின் அர்த்தத்தை எமக்கு அப்போது புரியவைத்தது. மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களுக்கான தளபதியாக விசாலகன் என்னும் பெயருடன் ஜோய் பணியாற்றத் தொடங்கியதிலிருந்து எங்கும் சிங்கள இராணுவத்தினருக்கெதிரான தாக்குதல்கள் நடத்தப்பட்டவண்ணம்மிருந்தன.

1991 ம் ஆண்டு நவம்பர் 29 ம் நாள் மட்டக்களப்பு -பதுளை வீதியில் கொடுவாமடு என்ற இடத்தில் நடந்த சிங்கள இராணுவத்தினருக்கான வழிமறிப்புத்தாக்குதலில் தளபதி ஜோய் விழிப்புண் அடைந்து நவம்பர் 30 ம் நாள் வீரச்சாவடைந்தார்.

இவருடன் மாதவன் வந்தாறுமூலை, தூசன் சித்தாண்டி , ரோயல் வந்தாறுமூலை, தான்தோன்றி கல்லடி ஆகியோரும் வீரச்சாவடைந்தனர். வெற்றிகரமாக நடந்த இத்தாக்குதலில் 20 க்கு மேற்பட்டசிங்கள அரசபடையினர் அழிக்கப்பட்டு அவர்களிடமிருந்து படைத்துறைக்கருவிகளும் கைப்பற்றப்பட்டன. தாக்குதல் முடிந்த வேளையில் எங்கிருந்தோ வந்த துப்பாக்கி ரவையொன்று ஜோய் அவர்களின் கழுத்தில் பாய்ந்ததனால் விழுப்புண் அடைந்தநிலையில் ஜோய் இறுதியாக தெரிவித்த கருத்துக்களை நினைக்கும்போது எதிர்காலத்தில் இம்மாவட்டத்தில் தளபதியாகயிருந்து இலட்சியத்தை அடைவதற்கு பெரும் பங்காற்றக்கூடிய ஒரு தளபதியை நாம் அன்று இழந்திருந்தோம் என்பதை இன்று எண்ணிப்பார்க்கின்றோம்.

இறுதியாக ஜோய் கூறிய வார்த்தைகள் ஒரு போராளியான நான் வீரச்சாவு அடைவதில் எந்தவித வருத்தமுமில்லை ஆனால் தலைவர் என்னிடம்கூறிய எல்லாவற்றையும் என்னால் நிறைவுசெய்ய முடியாமல் போய்விட்டது என்பதுதான் வருத்தமாகவிருக்கின்றது. கட்டளைபிறப்பிக்கும் தளபதி களத்தில் தான் நிற்கவேண்டும் அதைத்தான் நான் செய்திருக்கின்றேன் என்று கூறிய கருத்துக்கள் ஒரு உண்மையான போராளியின் முதிர்ச்சியை எமக்கு உணர்த்தியது.

தளபதி ஜோய் அவர்களின் சொந்த ஊர் கொம்மாதுறை. சாதாரண குடும்பத்தில் 20.05.1969ம் ஆண்டு பிறந்து சாதாரண தொழிலாளியாக வேலை செய்துகொண் டிருந்தபோது 1987 ம் ஆண்டு தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் . மட்டக்களப்பு -அம்பாறை மாவட்டத்தின் 7 வது பயிற்சிமுகாமில் பயிற்சியை முடித்துக்கொண்ட ரகுநாதன் என்னும் பெயரைக்கொண்ட ஜோய் அப்போது தலைவர் தங்கியிருந்த மணலாற்றுக்கு அனுப்பப்பட்டு தலைவரின் பாதுகாப்புப்பிரிவில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

எமது தேசியத்தலைவர் அவர்களின் பாதுகாப்புப்பிரிவில் கடமைசெய்த ஜோய் வட தமிழீழத்தில் பல தாக்குதல்களில் பங்குகெடுத்து தலைவரின் பாராட்டையும் பெற்றிருக்கின்றார். இந்தியப் படையினர் எமது மண்ணில் நிலை கொண்டிருந்த வேளையில் மணலாற்றில் கூர்க்கா படையினர் மீதான தாக்குதலில் ஜோய் அவர்களின் வீரம் செறிந்த போர் நடவடிக்கை பற்றி தலைவர் அவர்கள் தளபதிகள் போராளிகள் மத்தியில் குறிப்பிட்டுக்கூறியதையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

1990ம் ஆண்டு யாழ் கோட்டையில் தங்கியிருந்த சிங்கள அரச படையினருக்கெதிரான தாக்குதலை தான் வைத்திருந்த ஆர் .பி . ஜி உந்துகணையினால் தாக்கி தாக்குதலை ஆரம்பித்து வைத்ததை அப்போதைய யாழ். மாவட்டத் தளபதியாகயிருந்த பானு கூறியதை இங்கு பதிவு செய்கின்றோம். மட்டக்களப்பு மண்ணில் பிறந்த உறுதிமிக்க உணர்வான வீரமிக்க போராளிகளில் ஜோய் அவர்களும் ஒருவராகவிருந்தார் என்பதையிட்டு பெருமிதம் கொள்ளுகின்றோம். ஒரு போராளியாக இருப்பவன் தன்னையும் தனது குடும்பத்தை மட்டுமல்லாது தாய்நாட்டையும் மக்களையும் மேலாக நேசிக்கவேண்டும் என்பதற்கும் ஜோய் உதாரணமாகவிருந்தார்.

சித்தாண்டிக்கு அருகாமையில் அமைந்துள்ள சந்தனமடுவை அண்டிய குடாவட்டையில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் போராளிகளுடன் தங்கியிருந்த ஜோய் அவர்களை ஒரு முறை பி. பி. சி தமிழேசை ஆனந்தி அவர்கள் நிமலன் சவுந்தரநாயகத்துடன் சந்தித்தபோது ஜோயின் உறுதிமிக்க பதிலைக்கேட்டு ஆச்சிரியமடைந்ததையும் தமிழ்ப்பெண்ணாக ஆனந்தமடைந்ததையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். இந்த மண்ணிலிருந்து சிங்கள இராணுவத்தை ஓட ஓட விரட்டப் போகின்றேன் என்று ஜோய் கூறிய போது ஆனந்தி அவர்கள் உன்னைப் பார்த்தால் சிறுவனாக இருக்கின்றாய் உன்னால் முடியுமா ? என்று கேட்டதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என்ன நடக்கப்போகின்றது என்று ஜோய் கூறியதையும் பின்னாளில் தொடராக நடந்த தாக்குதல்களையும் நினைவுபடுத்துவது ஒரு போராளியின் உறுதிமிக்க நடவடிக்கையை எமக்கு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகின்றது.

எப்போதும் சிரித்தமுகத்துடன் மணலாற்றில் விழுப்புண்அடைந்து முழுமையாக இயங்காத ஒருகாலுடன் கெந்தி நடந்து வரும்போது ஜோயின் முகத்தில் தெரிகின்ற பிரகாசம் எம்மை எதிர்காலத்தில் மட்டக்களப்பில் வழிநடத்தப் போகின்ற தளபதி என்பதையிட்டு மூத்தபோராளிகள் உட்பட அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அந்த நம்பிக்கை ஜோயின் வீரச்சாவுடன் தகர்ந்துபோனது. மட்டக்களப்பு மண்ணில் கால்பதித்ததிலிருந்து அம்மண்ணிலே தான் விதையாகுமட்டும் தளபதி ஜோயின் வீரமிகு தாக்குதல்கள் சிங்களப்படையினரை சிதறடித்து அவர்களை சிந்திக்கவும் வைத்ததை சிங்களப்படைத் தளபதிகளின் வார்த்தைகளிலிருந்து நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள அரசபடையினருக்கெதிரான தாக்குதல்களில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய காலம் 1991 ம் ஆண்டு என்பதை இக்கட்டுரையில் பதிவு செய்வது காலத்தின் தேவை என்பதை உணர்கின்றோம். 1990 ம் ஆண்டு இரண்டாம்கட்ட ஈழப்போர் ஆரம்பமானது. ஒரேவேளையில் சிங்களக்காவல் நிலையங்கள், படைமுகாம்கள் தாக்கப்பட்டன. தமிழ்மக்களின் முழுமையான ஆதரவோடு தமிழீழ விடுதலைப் புலிகள் இத்தாக்குதலை திட்டமிட்டு நடத்தினர். நகரத்தின் தென்பகுதி, வடபகுதி, மட்டக்களப்பு வாவிக்கு தெற்கே அமைந்துள்ள வயல்சாந்த ஊர்கள், மட்டக்களப்பு -பதுளை வீதியில் அமைத்துள்ள ஊர்கள் என்பன குறிப்பிட்ட சிலகாலம் விடுதலைபுலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன.

இக்காலப்பகுதியில்தான் வந்தாறுமூலைகிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சம் புகுந்திருந்த தமிழ்மக்களில் 150 க்கு மேற்பட்ட ஆண்கள் சிறைபிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் இடம்பெற்றது. மட்டக்களப்பு அம்பாறையில் தமிழ்மக்கள் கூட்டம் கூட்டமாக படுகொலை செய்யப்பட்டதன் வரிசையில் இச்சம்பவமும் இணைக்கப்பட்டது. இதற்கு பிற்பட்ட காலங்களில் சிங்கள அரசபடையினருக்கெதிரான விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் மந்தகதியிலிருந்தன.

1991 ம் ஆண்டு முற்பகுதியில் எமது தேசியத் தலைவரின் பணிப்பின்பேரில் அவருடைய பாதுகாப்பு படைப்பிரிவில் பணியாற்றிய மூன்று இளநிலைத் தளபதிகளான லெப்.கேணல் ஜோய்,மேஜர் வினோத், லெப். கேணல் விஜயகாந் ஆகியோர் மட்டக்களப்புக்கு வந்து சேர்ந்தனர். இவர்களின் வருகையை த்தொடந்து தாக்குதல்கள் பரவலாக நடத்தப்பட்டன. தேசியத் தலைவர் அவர்களின் பார்வையில் இம்மூவரும் நேர்த்தியான வீரர்களாகத் தென்பட்டனர் . எதிர்கால நோக்கோடு இவர்கள் அனுப்பப்பட்டதை போராளிகள் உணர்ந்து கொண்டனர். எம்மண்ணில் இவர்களின் பணி நீண்டு செல்லாதது எமக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

வந்தாறுமூலை தொடரூந்துப்பாதையில் சிங்கள அரச படையினருக்கெதிரான தாக்குதல் மட்டக்களப்பு மண்ணில் தளபதி விசாலகனின் ( ஜோய்) முதல் தாக்குதலாக இருந்தது. இத் தாக்குதலில் ஒன்பது படையினர் அழிக்கப்பட்டு கருவிகளும் கைப்பற்றப்பட்டன. அடுத்து சித்தாண்டி காவல் நிலைய அழிப்புத் தாக்குதலும் இடம்பெற்றது. 25 .10 .1991 ம் ஆண்டு கொக்கட்டிச்சோலை ஊரிலிருந்து மண்முனைத்துறைக்குச் செல்லும்பாதையில் தளபதி விசாலகன் தலைமையில் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இத் தாக்குதல் வெற்றிகரமாக முடிந்தபோதும் தேசியத் தலைவரினால் அனுப்பப்பட்ட மூவரில் ஒருவரான மேஜர் வினோத் என்பவரை நாம் இழந்திருந்தோம். இவருடன் இன்னும் இரு போராளிகள் வீரச்சாவடைந்தனர் .

கொக்கட்டிச்சோலையை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட வினோத் வறுமை நிலையிலுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்த போதும் இவருடைய ஒவ்வொரு நிமிட எண்ணங்களும் தமிழ் மக்களின் விடுதலையையொட்டிதாக இருந்ததனால் களத்தில் வீரச்சாவு அடைவதில் இவர்களைப் பொறுத்தவரையில் மகிழ்வான ஒன்றாக இருந்தது. ஆனால் திறமை வீரம் பற்றுக்கொண்ட வீரர்களை இழப்பது எமக்கு எதிர்காலத்தில் போரை வழிநடத்த திறமையானவர்கள் இல்லாமல் போகும் என்பதுதான் முடிவாக இருந்தது. பழகுவதற்கு மிகவும் இனிமையானவராக இருந்த வினோத்தை இன்னும் எமது கண்முன்னே கொண்டுவரும்போது சாந்தமான முகமும், விடுதலையின்பால் கொண்டபற்றும் தான் நினைவுக்கு வருகின்றது. இவர்களைப்பற்றி எழுதும்போதுதான் இவர்கள் குடும்பங்கள் பற்றியும் எண்ணிப்பார்க்கமுடிகின்றது.

இவ்வாறானவர்களை விடுதலைப் போராட்டத்தில் நாம் இழந்திருந்தாலும் இவர்களை நாம் பெற்றதிலிருந்து பெருமைகொள்கின்றோம். அத்தோடு இவர்களைப் பெற்றவர்களையும் தலைவணங்குகின்றோம். தாய்மண்ணின் மீது அளவற்ற பற்றுக்கொண்ட இவர்கள் அம் மண்ணிலே விதைக்கப்பட்டார்கள். வரலாற்றில் அழியாத பதிவாக இவர்கள் இருப்பார்கள். கிரான் ஊரைப்பிறப்பிடமாகக் கொண்ட லெப். கேணல் விஜய்காந் பற்றி அடுத்து ஒரு மாவீரர் தொடர்களில் விரிவாகப்பார்ப்போம்.

தளபதி விசாலகனின் தாக்குதலில் வெலிக்கந்தை வடமுனைத்கிடையிலான சிங்கள அரசபடையினருக்கெதிரான வழிமறிப்புத் தாக்குதலை குறிப்பிடமுடியும். இத் தாக்குதல் ஆரம்பித்தவுடன் ஏற்பட்ட சிறுகுழப்பத்தால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த வேளையில் தளபதி விசாலகனின் அதிரடி நடவடிக்கைகள் பதட்டப் படாமல் நிதானமாக இருந்தன. சண்டையை நிறுத்தாமல் தொடருங்கள் என்று கூறி பின்புறமாக பiயினர் எதிர்பார்க்காதவிதத்தில் தாக்குதலை ஆரம்பித்தவுடன் படையினர் நிலைகுலைந்தனர். முன் பக்கதாக்குதலை நிறுத்துமாறு போராளிகளுக்கு கட்டளையிட்டார். இதனால் இத் தாக்குதல் வெற்றிகரமாக முடிந்தது. இத் தாக்குதலில் குருமண்வெளி, மட்டக்களப்பு சேர்ந்த 2 ம் லெப். நிலா வீரச்சாவடைந்தார்.

இவ்வாறு ஒவ்வொரு தாக்குதல்களிலும் தமிழனின் வீரத்தை வெளிக்காட்டி எதிரிபடைகளை எம் மண்ணிலிருந்து விரட்டும் பணியை தொடந்துகொண்டிருந்தான். இவ்வாறான தன்னலமற்ற ஒரு வீரன் காலம் பிந்தி எமக்கு கிடைத்தாராயினும். காலம் முந்தி நாம் அவரை இழந்தோம். இல்லையேல் எமது மாவட்டத்தின் நிலைமையே மாறியிருக்கும்.

நினைவுப்பகிர்வு: என்றும் எழுகதிர் .
மின்னஞ்சல் முகவரி – paramathevaranjan@yahoo.com.

 

https://thesakkatru.com/our-commander-joey-who-arose-as-a-storm-of-liberation/

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தளராது நின்ற தலைவர் வளர்த்த பிள்ளை லெப். கேணல் ஜோய்

spacer.png

முடுகு…. முடுகு…. ஆ…. ஆ….. கிறுகு….. கிறுகு….!

 
மெல்லிய உயரமான இருந்த ஒருவனைப் பார்த்து கமல் கத்திக்கொண்டிருந்தான்.
 
‘ஏண்டா, கமல் இப்படி கத்துது’ நான் சதீசைக் கேட்கிறேன்.
 
சத்தம் கேட்டுத் திரும்பிய கமல் “அண்ணை இவங்கள் தான் மறுகர கோஷ்டி” என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறான்.
 
இது என்ன புதுக் கோஷ்டி, வியப்பாக இருந்தது. அதில் உயரமாக மெல்லியவனாக இருந்தவனைப் பார்க்கிறேன்.
 
“அப்பன் இங்கே வா” அவனை அழைத்தேன்.
 
“எங்கிருந்து வந்தனீங்கள்” நான் கேட்டுவிட்டு அவனைப் பார்க்கிறேன்.
 
“நான் மட்டக்களப்பில் இருந்து வந்தனான்” என்கிறான் அவன்.
 
எனக்கும் ஜோய்க்கும் ஆரம்ப அறிமுகம் இப்படித்தான் நிகழ்ந்தது.
 
எங்களுக்கு மணலாறு காடு மட்டும் புதிதல்ல. மட்டக்களப்பு தமிழும் புதியதுதான்.
 
நெய்தல், மருதம், முல்லை, குறிஞ்சி என 70 மைல்கல் அகண்டு கிடக்கும் மட்டக்களப்பு.
 
உழவு, விதைப்பு, வெட்டு எல்லாம் ஒன்றாக நடக்கும். தேனும், தயிரும் கொட்டிக் கிடக்கும் அழகான வளமான எம் நிலம்.
 
1988……, 1989
 
எம்மைச் சுற்றிவர இந்தியப் படை.
 
நாம் உழுது உழுது விதைத்து அறுவடைக்கு ஆயத்தமான போது, அறுவடையை அழிக்க வந்த அயலவனை மிரட்டிவிட்டு அபகரிக்க வந்த வேற்றவன்.
 
10 தமிழர்களுக்கு ஒரு இந்தியன், இந்திய முற்றுகைக்குள் புலிகளா? புலிகளின் முற்றுகைக்குள் இந்தியனா?
 
எம் மீதான முற்றுகை கண்முன் தெரிந்தது. அவன்மேலாக எம் முற்றுகை தெரியாமல் நடந்தது. தடக்கித் தடக்கி அழிந்தான்.
 
 
 
 
நயினாமடு இந்தியப்படை முகாமுக்கு அருகே அவனது ஆட்டுப்பட்டி, ஒரு போராளி இரகசியமாக
பட்டிக்கருகே சென்று ஆடுகளை “பா பா” என அழைக்கிறான்.
 
ஒவ்வொரு ஆடாக, பட்டியில் இருந்த 19 ஆடுகள் வெளியேறி வருகின்றன. ஆடுகளைச் சாய்த்த படி அவன் நடக்கின்றான்.
 
இந்திய இராணுவத்தினன் ஒருவன் ஆடுகள் போவதைக் கண்டுவிட்டு ஏதோ கத்தித் தொலைக்கிறான்.
 
ஆட்டை வந்து பிடிக்க அவனுக்குத் துணிவில்லை. வெளியே வர வேண்டுமானால் குறைந்தது 50 சிப்பாய்கள் துணைவேண்டும்.
 
ஆட்டைத்தேடி உலங்கு வானூர்த்தி வந்து ஆடு சாய்ப்பவனைத் தேடித்தேடி சுடுகின்றது.
 
அடுத்தநாள் இந்திய இராணுவத்தின் வோக்கி எண்ணில் அவனது ஆடு கத்தும் சத்தம் கேட்டு அவன் கத்திக்கொண்டிருந்தான்.
 
தனது ஆட்டையே காப்பாற்ற முடியாத இந்தியப்பெரும் படை தமிழீழ நாட்டுக்கு ஆசைப்பட்டது.
 
இப்படி அவனது முற்றுகைக்குள் நாமும், எமது முற்றுகைக்குள் அவனும் ஓடிப்பிடித்து விளையாடும் காலத்தில் தான் ஜோய் மணலாற்றிற்கு வந்தான்.
 
மணலாறு காடே குண்டு வீச்சால் அதிர்ந்து கொண்டிருந்தது.
 
“பொங்கலுக்கு இந்தியன் வெடி கொளுத்துகிறான்” பொங்கலுக்காக நிகழ்ச்சிகள் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் ஐஸ்ரின் என்னைப் பார்த்து கூறினான்.
 
“இரவு என்ன நிகழ்ச்சி” நான் கேட்கிறேன்.
 
“பாட்டு, டான்ஸ் இப்படி பல” ஐஸ்ரின் அபிநயம் பிடித்துக் காட்டினான்.
 
பொங்கல், கிறிஸ்மஸ், போராளிகளின் நினைவு நாட்கள் எனச் சில நிகழ்ச்சிகள் காட்டில் நடக்கும்.
 
இரவு, ஏதோ ஒரு புது மொழியில் பாடி தனக்கேற்றாற் போல் தன் பெரிய உடம்பை ஒய்யாரமாய் வளைத்து, நெளித்து ஐஸ்ரின் ஆடினான்.
 
அடுத்து மேளங்களான தகரங்கள் முழங்க “ஜோய் வழங்கும் பிறேக் நடனம்” அறிவிப்பு வருகின்றது.
 
வளைந்து, நிமிர்ந்து, முறிந்து….. என்ன உடம்படா, இப்படி வளைந்து முறிகின்றது.
 
“வடமோடி, தென்மோடி இவன் பிறந்த இடமோடி, இவன் கூத்து என்ன கூத்தோடி” நான் என்னுள் முணுமுணுத்தபடி அவன் நடனத்தை ரசித்துச் சுவைக்கிறேன்.
 
ஆர்.பி.ஜி. தோளில் வைத்தபடி ஜோய் நிமிர்ந்து நின்றால், உடம்பில் வளைவிருக்காது.
 
தமிழீழ சிறிலங்காப் போர் மீண்டும், தொடங்கிய பின், யாழ் கோட்டையைக் கைப்பற்றும் முயற்சியில் ஜோய் காயமடைந்தான்.
 
ஒரு கால் சிறிது காலம் உணர்வு குன்றி இருந்தது.
 
மட்டக்களப்பு மண்ணுக்கே உரிய கலை இரசனையும், இலகுவாகப் பழகும் பண்பும், சூதுவாதற்ற பேச்சுக்களும் ஜோயை விட்டுப் பிரிந்தது கிடையாது.
 
மட்டக்களப்பை மேலிருந்து பார்த்தால் கடற்கரையை அண்டிய பகுதிகள் பெரும்வெளியாக இருக்கும்.
 
கடலுக்குச் சற்று மேலே வந்து நிற்கும் நீர் மூழ்கிக் கப்பல் போல, சுற்றிவர இருக்கும் ஏரியும் இடையிடையே தெரியும் நிலங்களும், வீடுகளும் கரந்தடிப் போராட்டத்திற்கு கடினமான பகுதிதான்.
 
“70ல் வந்த புயலோடு மரங்கள் எல்லாம் அழிந்து போயிற்று. அடுத்து வந்த இனவாதப் புயலோடு எல்லாமே போயிற்று” என்றார் ஒருவர்.
 
ஒவ்வொரு வீட்டிலும் சோகக் கதைகள் இருக்கும். சிங்கள, முஸ்லீம் காடையர்களினதும், சிறிலங்கா இராணுவத்தினதும் கொலைத் தடயங்கள் பதிந்திருக்கும்.
 
இந்தியப் படையுடனான போராட்ட காலத்தில் தமிழீழத்தின் மற்றைய பகுதிகள் போலவே, மட்டக்களப்பு, அம்பாறையிலும் அழிவுகள் தொடர்ந்தது.
 
மிகப்பெரிய நெருக்கடிகளைச் சந்தித்த போதும் “எங்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி மிகுந்த துன்பத்திற்கு நடுவில் போராடுகின்றோம்” என ஒரு வார்த்தை மட்டக்களப்பு, அம்பாறை விசேட தளபதி கருணாவிடம் இருந்து வந்ததில்லை.
 
“எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.” என்றே எப்போதும் பதில் வரும்.
 
தலைவர் வளர்த்த பிள்ளை அவன் தளராது நின்றான். அவன் பாசறைதான் ஜோய் தவழ்ந்த வீடு.
 
 
 
அன்று தலைவரின் பாசறையான மணலாறுதான் அவன் வளர்ந்த வீடு.
 
இந்திய கூர்காப் படைகள் குறித்து பல வீரக்கதைகள் உண்டு.
 
ஒரு முறை ஒரு ஆங்கிலச் சிப்பாய் ஒரு கூர்க்காவைக் குறிபார்த்து “உன்னைச் சுடுவேன்” என்றான்.
 
அதற்கு கூர்க்கா அச்சிப்பாயைப் பார்த்து “முதலில் தலையை ஆட்டு பின் சுடு” என்றானாம்.
 
சிப்பாய் தலையை ஆட்ட தலை விழுந்து விட்டதாம்.
 
ஆங்கிலேயன் ‘சுடப்போகிறேன்’ என்று சொல்லும்போதே கூர்க்கா தனது கத்தியை அவனது கழுத்தைக் குறிபார்த்து வீசி விட்டானாம்.
 
அவ்வளவு விரைவு, கத்தி கூரானது. அதனால் வெட்டபப்ட்ட தலையை ஆட்டியபோது தலை விழுந்து விட்டதாம்.
 
இப்படி வீரக்கதை பேசும் கூர்க்காப்படையொன்று 02.03.1989 அன்று கேணல் பக்சியின் தலைமையில் மணலாற்றுக்குள் நுழைந்தது.
 
கமல், அரி, குகேந்திரன், சேவியர் இவர்களுடன் ஜோயும் அங்கு நின்றான்.
 
வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தச் சண்டையில் கூர்க்காப் படை பக்சியின் உடலையும் விட்டுவிட்டு ஓடியது. ஓடும்போது தமது கத்திகளை மிக வேகமாக மண்ணில் புதைத்து, புதைத்து ஓடியது.
 
கூர்க்காப்படை தமது கத்திகளை புதைத்துவிட்டு ஓடிய மணலாற்றில் ஜோயின் போரியல் கல்வி தொடர்ந்தது.
 
இவன் போன்றோரின் போரியல் கல்வியே இந்தியப் படைகளுக்குப் போராட்டப் படிப்பினையாகியது.
 
தமிழீழ – சிறிலங்காப்போர் மீண்டும் தொடங்கியபோது சிறிலங்காப்படை, முஸ்லீம் காடையர், தேச விரோதக் கும்பல் இவற்றால் மட்டக்களப்பு, அம்பாறை தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள்.
 
வீடுகள் எரிந்தன. பாலியல் வன்முறைகள் தொடர்ந்தன. மதவுகளுக்குக் கீழ், காட்டு மரங்களுக்கு கீழ் தமிழ் மக்கள் வாழ்க்கை தொடர்ந்தது.
 
‘தென் தமிழீழத்தில் புலிகளா? அழிந்து விட்டார்கள். என சிறிலங்கா கொக்கரித்தது. வீட்டில் ரகுநாதன் எனவும் இயக்கத்தில் ஜோய் எனவும் இப்போது விசாலகன் ஆகிவிட்ட ஜோய் மட்டக்களப்பில் மீண்டும் காலடி எடுத்து வைத்தான்.
 
மிகக் குறுகிய காலத்தில் அவன் ஆற்றல் கண்ட மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட விசேட தளபதி , அவனை மட்டக்களப்பு அம்பாறை தளபதி ஆக்கினார்.
 
புலிகளா? எங்கே? எனக் கேட்டு கொக்கரித்த சிறிலங்காப்படை “ஐயோ எல்லா இடங்களிலும் மீண்டும் புலிகள்” என அலற அலற தாக்குதல்கள் தொடர்ந்தன.
 
தொடர்ந்த தாக்குதல்களில் ஒன்று 25.10.1991 கொக்கட்டிச்சோலை இராணுவ முகாமில் இருந்து மண்முனைத்துறைக்கு சென்ற இராணுவத்தினர் மீது நடாத்தபப்ட்ட தாக்குதல்.
 
விசாலகன் (ஜோய்) தலைமையில் நடந்த இத்தாக்குதலில் எதிர்பார்த்தபடி தாக்குதல் வலயத்தில் சிறிலங்காப்படை வராததால் தாக்குதல் திட்டமிட்டபடி நடக்கவில்லை.
 
15 நிமிடத் தாக்குதலில் பல சிறிலங்காப் படையினர் கொல்லபப்டடனர் 6 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.
 
“விடுதலைப் புலிகள் இல்லை என்கிறீர்கள், அக்டோபர் மாதம் மட்டும் நாம் எதிரியிடம் இருந்து பறித்த ஆயுதங்கள் ஒன்றா இரண்டா” என பெருமையோடு தளபதி ஓர் செய்தியாளரை கேட்டார்.
 
டிசம்பர் 20 வெளிவந்த புரண்ட் லைன் (Frontline) சஞ்சிகையில் விசாலகனின் நேர்காணல் வந்திருக்கிறது.
 
“எங்களுக்கு மக்கள் ஆதரவில்லை என்கிறார்கள் இவ்வளவு சிங்களப்படை முகாம்களுக்கு நடுவில், படகில், உங்களை எங்களிடம் யார் அழைத்துவந்தார்கள்? ஆதரவில்லாமல் இது நடக்குமா?”
 
“முல்லைத்தீவில், அம்பாறையில் கைவிடப்பட்ட முகாம்களைத் தான் சிறிலங்காப்படை கைப்பற்றியது.”
 
“மணலாற்றில் மைக்கல் முகாமுக்கு வந்த சிறிலங்காப்படை பின் வாங்கிய பின் அங்கு சென்ற நாம் கண்ணிவெடியில் சிக்கிய 100 காலணிகளைக் கண்டோம். எவ்வளவு இழப்பை அவர்கள் சந்தித்திருக்கிறார்கள்.”
 
“மட்டக்களப்பு நகரத்துள் நாங்கள் இல்லை என்பது பொய். நாம் தேவைக்கேற்ப, சூழலுக்கு ஏற்ப எங்கும் செல்வோம்”
 
“நீங்கள் நேரில் நின்று நிலைமையைப் பார்க்கலாம்”
 
“நாங்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டோம் எனச் சொல்கிறார்கள், அக்டோபர் மாதம் மட்டும் 51 ஆயுதங்களை எதிரியிடம் இருந்து கைப்பற்றியுள்ளோம். இது நாங்கள் தோற்கடிக்கப் பட்டதையா காட்டுகின்றது?”
 
“நாங்கள் தோற்கடிக்கப்படவில்லை வென்று கொண்டுதான் இருக்கின்றோம்” என மிக உறுதியோடும், பெருமையோடும் அவன் நேர்காணல் தொடர்கின்றது.
 
27.11.1991அன்று 3000க்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் “வட்டேறவும்” என்ற பெயரில் சுற்றிவளைப்பில் இறங்கினர்.
 
இந்த இராணுவ நடவடிக்கைக்கு பதிலடியாக சிறப்புத் தளபதியின் வேண்டுகோளுக்கமைய விசாலகன் தாக்குதல் ஒன்றை திட்டமிட்டான்.
 
பன்குடாவெளி இராணுவ முகாமிலிருந்தும், முதிரையடி ஏத்தம் இராணுவ முகாமிலிருந்தும் உணவுப் பொருட்களை எடுக்க செங்கலடி நோக்கி வரும் இராணுவத்தினர்மீது தாக்குதல் நடாத்த தீர்மானித்தான்.
 
தாக்குதல் வலயப் பகுதியில் உள்ள முக்கிய வீதியில் 25 மீற்றர் நீளமுள்ள கறுத்த பாலமும், அவ்வலயத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் 15 மீற்றர் நீளமுள்ள இன்னமொரு பாலமும் இருந்தது.
 
29.11.91 காலை 08.40 மணிக்கு தாக்குதல் தொடங்கியது. 7 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டனர். மற்றையோர் தப்பி ஓடினார்கள்.
 
தாக்குதல் வலயத்தில் நின்ற விசாலகனிடம் இருந்து கட்டளைகள் பிறந்து கொண்டிருந்தன.
 
தாக்குதலில் காயமடைந்து காட்டுக்குள் ஓடிமறைந்து கொண்ட சிறிலங்கா இராணுவ வீரன் சுட்ட ரவை ஒன்று விசாலகனின் தொண்டைக்கு கீழ் தாக்குகின்றது.
 
படுகாயமடைந்த ஜோய் 30.11.1991 அன்று காலை 5.30 மணிக்கு வீரச்சாவைச் சந்தித்துக் கொண்டான்.
 
 
 
இந்தியப் படை வெளியேறிய சிறிது காலத்தில் மட்டக்களப்புக்கும் அம்பாறைக்கும் செல்ல இருந்த தேனிசை செல்லப்பா குழுவினருக்காக திரு. காசி ஆனந்தன் அவர்கள் தான் முன்பு எழுதிய…..
 
மீன் மகள் பாடுகிறாள்
வாவி மகள் ஆடுகிறாள்
மட்டு நகர் அழகான மேடையம்மா – இங்கே
எட்டுத் திசையும் கலையின் வாடியம்மா.
 
என்ற பாடலுக்கு புதிதாக கடைசியில் நாலு வரிகளை எழுதினார். அதின் கதிரி இரண்டு வரிகள்….
 
போர்க்கலையில் வல்ல புலிக் கூட்டமும் உண்டு
பகையை பொடிப் பொடியாக்கும் போராட்டமும் உண்டு.
 
முடுகு – முன்னேறு
கிறுகு – திருப்பு
மறுகா – பின்பு, பிறகு
(இவை இன்றும் மட்டக்களப்பு பகுதியில் வழக்கிலிருக்கும் பழந்தமிழ் சொற்களாகும்.)
 
நினைவுப்பகிர்வு:- யோகி.
விடுதலைப்புலிகள் (குரல் 27)
  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.