Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய

நாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல என்று அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். கெஹலிய ரம்புக்வல்ல மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா நிலவரத்தை அடுத்து இத்தாலியிலும் இவ்வாறான சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் பதிவாகியுள்ளது.

இது உலகின் முதல் முறையாக இடம்பெறும் சம்பவம் அல்ல. எவ்வாறாயினும், நாம் அரசாங்கம் என்ற ரீதியில் இந்தப் பொறுப்பிலிருந்து விலகிச் செல்லாமல் இதற்குரிய நடவடிக்கைகளை நிச்சயமாக மேற்கொள்வோம்.

இதற்கான பொறுப்பை நாம் நிச்சயமாக ஏற்றுக் கொள்வோம். எவ்வளவு பாதுகாப்புக்கு மத்தியிலும் சிறைச்சாலைகளில் போதைப்பொருள் வில்லைகள் பயன்படுத்தப்படுகின்றமையை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.

இதனை முற்றாக ஒழிக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும். 2014 ஆம் ஆண்டளவில் போதைப்பொருள் வர்த்தகர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள்.

இலங்கை தங்களுக்கு பாதுகாப்பான நாடு இல்லை என்றும் இலங்கையில் தங்களின் வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது என்றும் வெளிநாடுகளுக்கு அவர்கள் சென்றார்கள்.

பின்னர் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரசியல் நோக்கத்திற்காக அவர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டார்கள். தற்போது நாம் இதற்கெதிராக செயற்பட்டவுடன், மீண்டும் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள்.

இது ஓரிரு நாட்களில் முடிக்க வேண்டியப் பிரச்சினைக் கிடையாது. மாறாக இதற்கு நீண்ட கால செயற்றிட்டமொன்று அவசியப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளை நாம் மேற்கொள்ளும்போது, சில சவால்களுக்கும் முகம் கொடுக்கவேண்டியுள்ளது.

தற்போது இதுதொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, விரைவில் மஹர சிறைச்சாலை தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய | Athavan News

  • கருத்துக்கள உறவுகள்

ஏனென்றால்.... அதை செய்வதே, அரசியல்வாதிகள்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஏனென்றால்.... அதை செய்வதே, அரசியல்வாதிகள்தான். 

செய்வது அரசியல்வாதிகள்
வினியோகிப்பது பாதுகாப்புபடை.
அழிவது பொதுமக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல

போதைப்பொருள் வர்த்தகமா.?? 30 வருடங்களாகத் தன்கட்டுப்பாட்டில் இருந்த நாட்டில் போதைப்பொருளே இல்லாது செய்தானே ஒரு தமிழன். 

9 hours ago, Paanch said:

போதைப்பொருள் வர்த்தகமா.?? 30 வருடங்களாகத் தன்கட்டுப்பாட்டில் இருந்த நாட்டில் போதைப்பொருளே இல்லாது செய்தானே ஒரு தமிழன். 

அது உண்மை. தமிழர் பிரதேசங்களில் அதன் வாடையே இருக்கவில்லை. ஆனால், சிங்களவர்கள் வேறுவிதமாக சொல்லுகிறார்கள். அவர்கள் காலத்தில்தான் தங்கள் பகுதியில் கூடுதலாக இவை விநியோகாக்கப்பட்ட்தாகவும் , இந்த வியாபாரத்தினால் உலகம் முழுவதும் பெரும் பணம் இவர்களால் சம்பாதிக்கப்பட்ட்தாகவும் கூறுகிறார்கள். இப்படியான செய்திகள் முன்னர் யுத்த காலத்தில் அடிக்கடி கூறப்பட்ட்து. அது எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்கு தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Robinson cruso said:

அது உண்மை. தமிழர் பிரதேசங்களில் அதன் வாடையே இருக்கவில்லை. ஆனால், சிங்களவர்கள் வேறுவிதமாக சொல்லுகிறார்கள். அவர்கள் காலத்தில்தான் தங்கள் பகுதியில் கூடுதலாக இவை விநியோகாக்கப்பட்ட்தாகவும் , இந்த வியாபாரத்தினால் உலகம் முழுவதும் பெரும் பணம் இவர்களால் சம்பாதிக்கப்பட்ட்தாகவும் கூறுகிறார்கள். இப்படியான செய்திகள் முன்னர் யுத்த காலத்தில் அடிக்கடி கூறப்பட்ட்து. அது எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்கு தெரியவில்லை.

உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான் ரொம்பப் பக்கம்தான் பார்த்தால் இரண்டும் வேறுதான்.

பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேறுதான்.

சிங்களவர் நாங்கள்தான் இலங்கையின் பூர்வீகமக்கள் என்று பொய்யுரைத்தாலும்... தாங்கள் வட பாரதத்திலிருந்து வந்ததாக அவர்களுடைய மகாவம்சத்திலேயே உண்மையை வெளியிட்டுள்ளார்கள்.

முசுலீம்கள் நாங்கள்தான் இலங்கையின் பூர்வீகமக்கள் என்று பொய்யுரைத்தாலும். குதிரைக்கு என்ன உணவு கொடுப்பதென்று இந்த நாட்டு மக்களுக்குத் தெரியாது என்று தாங்கள் குதிரை விற்பதற்கு வந்த உண்மையை வெளியிட்டுள்ளார்கள்.

உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான். 😂🤣

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.