Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களின் சமூக அக்கறையின்மையே வெள்ளத்திற்கு காரணம் -அரசாங்க அதிபர் க.மகேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் சமூக அக்கறையின்மையே வெள்ளத்திற்கு காரணம் -அரசாங்க அதிபர் க.மகேசன்

1-32.jpg
 43 Views

யாழ். மாவட்ட மக்களின் சமூக அக்கறையின்மையே வெள்ள நிலைமைக்கு காரணம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நிலை தொடர்பாக  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,    “நீர் வடிந்து ஓடாத நிலைமை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது.

உள்ளூராட்சி சபை முயற்சி எடுத்தும்,  பொதுமக்களின் ஒத்துழைப்பின்மை,  சமூக அக்கறையற்ற செயற்பாடு காரணமாக இந்நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

பொதுமக்கள் உள்ளூர் அதிகார சபையினருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். கழிவுப்பொருட்களை வீசுதல், வடிகால்களை மூடுதல், அல்லது தேவையற்ற பொருட்களை பொது இடங்களில் வீசுதல் போன்ற செயற்பாட்டை மேற்கொள்ளும் காரணத்தினாலும், வடிகால்களை சட்டவிரோதமாக தடுப்பதும் வெள்ள நீர் தேங்கும் அவல நிலை ஏற்பட காரணமாகிறது.

இந்த விடயத்தில் யாழ். மாநகர சபை மற்றும் மாநகர உத்தியோகத்தர்கள் இடர் ஏற்பட்ட பகுதிகளில் அதனை செயற்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது.

எதிர்காலத்தில் உடனடியாக சீர் செய்ய வேண்டியவற்றை உடனடியாகவும் ஏனையவற்றை அதனை உரியவாறு செயற்படுத்துவதற்கு உரிய தகவலைப் பெற்று அதனை செயற்படுத்துவதற்கு உள்ளோம்” என்றார்.

 

 

https://www.ilakku.org/மக்களின்-சமூக-அக்கறையின்/

  • கருத்துக்கள உறவுகள்

மிகச் சரியான கருத்து. ஆனாலும் அரச நிர்வாகத்திற்கு இதில் பங்கில்லையோ.... ☹️

  • கருத்துக்கள உறவுகள்

நிசாப்புயல் வந்தபோது, நம்மூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல நாட்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும் நிலை காணப்பட்டது. அப்போதிருந்த பெரிய பிரச்னை இராணுவத்தினர் தண்ணீர் வடிந்தோடி குளங்களுக்கு போகும் பாதையை மறித்து பாதுகாப்பு அரண்களையும், மண்ணணைகளையும் அமைத்திருந்தபடியால் எங்கள் ஊர் வெள்ளத்தில் மிதந்தது. எதுவாயினும் இயற்கைக்கு முன்னுரிமை கொடுத்து, விழிப்புணர்வுடன் எங்கள் தேவைகளை நிறைவேற்றினால் இயற்கையினால் ஏற்படும்  பாதிப்பு குறைவடையும்.

9 hours ago, Kapithan said:

மிகச் சரியான கருத்து. ஆனாலும் அரச நிர்வாகத்திற்கு இதில் பங்கில்லையோ.... ☹️

அதிகாரிகளின் பங்கு இருந்தாலும் , அரசியல்வாதிகளீன் தலையீடும் இருக்குதல்லவோ? அதிகாரிகள் சில வேளைகளில் அதை வாங்கிக்கொண்டு தவறு செய்வதுமுண்டு. இருந்தாலும் அரச அதிபர் சொல்வதுபோல மக்கள்தான் இதட்கு பொறுப்பு கூற வேண்டும்.

மக்கள் நேர்மையாய் செயட்படும் வரை, அதிகாரிகள் நேர்மையாய் செயட்படும் வரை, அரசியல் வாதிகள் நேர்மையாய் செயட்படும் வரை இது தொடரத்தான் போகின்றது. இங்கு மட்டுமல்ல இது பொதுவாக எல்லா இடங்களிலும் காணப்படுகின்றது.

அத்துடன், இவர்கள் சரியான தொழில் நுட்பத்துடன் வாடி கங்கள் அமைப்பதுமில்லை. வடி கான்கள் இருந்தாலும் தண்ணீர் ஓடாது. சாமான்ய மக்களுக்கும் தெரியும் எப்படி வடி கான் இருக்க வேண்டுமென்று. ஆனால் இவர்கள் பெரிய தொழில் நுட்பங்களை பாவித்து காட்டுவார்கள், தண்ணீர் ஓடாது. இதட்கு அதிகாரிகளும் பொறுப்பு கூற வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.