Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காரின் டயர் வெடித்ததால் காவுகொள்ளப்பட்ட இரு உயிர்கள் - யாழில் சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம், தென்மராட்சி நுணாவில் A - 9 வீதியில் கார் ஒன்றின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் நான்கு வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதோடு,மூவர் படுகாயமடைந்துள்ளனர். 

 

spacer.png

 

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11.50  மணியளவில்   இடம்பெற்றுள்ளது. 

யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கியப் பயணித்த  கார் ஒன்றின் டயர் வெடித்து, திருத்த வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவநேரத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உட்பட  ஐவர் காரில் பயணித்துள்ளனர்.

அவர்களில் நான்கு வயதுடைய சிறுவன், 35 வயதுடைய  பெண் ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ஏனையவர்கள் மூவரும் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரின் டயர் வெடித்ததால் காவுகொள்ளப்பட்ட இரு உயிர்கள் - யாழில் சம்பவம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். நுணாவில் A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணை தொடர்ந்து 4 வயது  சிறுவனும் பலி! - Today Jaffna News - Jaffna Breaking News 24x7

யாழில் இடம்பெற்ற விபத்தில்.. 4 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு – மூவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – தென்மராட்சி நுணாவில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நுணாவில் சந்திக்கு அண்மையில் ரயர் கடைக்கு முன்பாக ரயர் திருத்த வேலைக்காக எரிபொருள் தாங்கி வாகனம் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்று எரிபொருள் தாங்கியின் பின்புறமாக மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களில் நான்கு வயதுடைய சிறுவனும் 35 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ள நிலையில், ஏனையவர்கள் மூவரும் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ். நுணாவில் A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணை தொடர்ந்து 4 வயது  சிறுவனும் பலி! - Today Jaffna News - Jaffna Breaking News 24x7  சமகளம் யாழ்ப்பாணம் – தென்மராட்சி நுணாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4  வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு - சமகளம்

http://athavannews.com/யாழில்-இடம்பெற்ற-விபத்த-14/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சைக்கிளில் சென்றவரை முந்துவதற்கு முற்பட்டதாலேயே கார் விபத்துக்குள்ளானது  -  சாரதி வாக்குமூலம்

வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் நிலை தடுமாறி ஓட்டிச் சென்றதால் அவரை முன்னோக்கிச் சென்ற போது கார் விபத்துக்குள்ளாகியதாக இறப்பு விசாரணையில் சாரதி தெரிவித்துள்ளார்.

 

தென்மராட்சி நுணாவில் பகுதியில் வீதியோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது கார் மோதியதில் பெண் ஒருவரும் அவரது சகோதரியின் பிள்ளை ஒருவருமான இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர் . மேலும் மூவர் படுகாயமடைந்தனர். உயிரிழந்த பெண்ணின் கணவரான சாரதி காயங்களின்றித் தப்பித்தார்.

இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை முற்பகல் 11.50 மணியளவில் இடம்பெற்றது என்று சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

நுணாவில் சந்திக்கு அண்மையில் உள்ள டயர் கடைக்கு முன்பாக டயர் திருத்த வேலைக்காக எரிபொருள் தாங்கி வாகனம் ஒன்று வீதியோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்திலிருந்து ஏ-9 கண்டி வீதியில் பயணித்த கார் ஒன்று அந்த வாகனத்தின் பின் பகுதியில் மோதியதில் 5 படுகாயமடைந்தனர்.

அவர்கள் ஐந்து பேரும் உடனடியாகவே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் பெண் மற்றும் 6 வயதுச் சிறுவன் உயிரிழந்தனர்.

“யாழ்ப்பாணத்தை  சேர்ந்த திருமதி ஆன் டேரோளினி (வயது -30), அவரது சகோதரியின் மகன் யோகதாஸ் மகிழன் (வயது -6) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

ஆன் மக்கிலியோட் (வயது – 6) தலையில் படுகாயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றார்.

லேபோனியா என்ற பெண்ணும் கரோலின் (வயது-35) என்ற பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.

 

உயிரிழந்த இருவர் தொடர்பில் இறப்பு விசாரணை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னிலையில் இடம்பெற்றது.

“நான் திருமணம் முடித்து 10 மாதங்கள். எனது மனைவியின் சகோதரருக்கு இன்று திருமண ஆண்டு விழா. அதனால் அவரது வீட்டில் இடம்பெறும் நிகழ்வில் பங்கேற்க சரசாலைக்கு காரில் சென்றோம்.

விபத்து இடம்பெற்ற இடத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, வீதியால் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் நிலை தடுமாறி அதனை செலுத்திச் சென்றார். அவரை முந்துவதற்கு முயன்ற போதே கார் வேகக் கட்டுப்பாட்டையிழந்து எரிபொருள் தாங்கியுடன் மோதி விபத்துக்குள்ளாகியது. 

அப்போது கார் சக்கரங்களில் ஒன்று காற்றில்லாமல் போயிருந்தது” என்று சாரதியான உயிரிழந்த பெண்ணின் கணவர் வாக்குமூலம் வழங்கினார்.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கும் என்று திடீர் இறப்பு விசாரணை அதிகாரி தெரிவித்தார்.சைக்கிளில் சென்றவரை முந்துவதற்கு முற்பட்டதாலேயே கார் விபத்துக்குள்ளானது  -  சாரதி வாக்குமூலம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

அதிவேகத்தில் வண்டி போகும்போது ரயர் வெடித்தாலே வண்டி பிரண்டே ஒரு பக்கம் இழுத்தோ விபத்து வரலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.