Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வில்லிசை - 'வள்ளி திருமணம்'

Featured Replies

தமிழரின் கலைவடிவங்களில் ஒன்றான வில்லிசையை இலங்கையிலும் மலேசியா, இந்ததியா போன்ற நாடுகளிலும் 80ம் ஆண்டுகளில் மிகவும் பிரபலமாக நிகழ்த்தியோரில் கலாவிநோதன் சின்னமணி கணபதிப்பிள்ளை அவர்களும் ஒருவர். அவர் தாயகத்திலிருந்து வந்து சுவிஸ் நாட்டில் 2004ல் நிகழ்த்திய 'வள்ளி திருமணம்' என்ற வில்லிசை நிகழ்வு யாழின் ஒளித்தடம் பகுதியில் உள்ளது.

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரில எனக்கு பிடிச்சதே வில்லிசை தான்...

அதுவும் இடைக்கிட பக்கத்தில் இருந்து கேள்வி கேட்பார்களே...நல்ல நகைச்சுவையாக இருக்கும்..

நாட்டுபுற கிராமியக் கலைகளை ரசிக்கும் ரசிகன் யான் இணைத்த சோழியன் அண்ணாவுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் நீங்களும் ஒரு வில்லிசை மன்னர் தானே .உங்கள் சொந்த ஓடியோ வீடியோ ஏதாவது இருந்தால் இணைக்கலாமே.

சோழியன் நீங்களும் ஒரு வில்லிசை மன்னர் தானே .உங்கள் சொந்த ஓடியோ வீடியோ ஏதாவது இருந்தால் இணைக்கலாமே.

சின்னமணி குழுவில் "கொடி மாதிரி இருந்தால் கொடிச்சி. தடி மாதிரி இருந்தால் தடிச்சி என்றா சொல்லிறது" என்று சோல்லிறது யார் என்று நினக்கிறீர்கள். நம்ம சோழியன் தான்.. சோழியன் --- சும்மா ஆடுமா?

:lol:

  • தொடங்கியவர்

கிளம்பிட்டாங்கய்யா.. கிளம்பிட்டாங்க... சின்னமணி அறிஞ்சா யேர்மனிக்கு வந்து சோழியான்ரை குடுமியை வெட்டீடுவாரு..

எனது மாணவப் பருவத்திலே நான் வில்லிசையைப் பொறுத்தளவில் சின்னமணி அவர்களது இரசிகன். வில்லிசைப்பதையே.. அதாவது வில்லில் தடிகளால் தட்டும் விதங்களிலேயே பல வித்தியாசங்களைக் காட்டி.. அதிலும் ஒருவித கலைநயத்தை பிரதிபலிப்பார். மேற்கண்ட நிகழ்வில் 'என்னப்பனே என்னையனே..' என்ற பாடலில் கோலாட்டம் ஆடுவதுபோல தடிகளால் பாவனை காட்டுவதை பார்க்கலாம். இப்படி பல பாவனைகளை வெளிப்படுத்துவார்.

அதோடு அவர் ஒரு நாடகக் கலைஞரும்கூட. ஒரு நாடகத்தில் இயமனாக நடித்தபோது.. ஒரு வயோதிப மாது அதிர்ச்சியால் இறந்ததாகவும் கேள்விப்பட்டேன்.

இந்த நிகழ்வை சுவிசில் நிகழ்த்தும்போது அவருக்கு 64 வயது. எனினும் அவரது குரலினிமை மிகவும் இரசிக்கக் கூடியதாகவே உள்ளது. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரின் வில்லிசைக்கச்சேரியை எனது ஊர் கோவிலில் பலதடவைகள் பார்த்து இரசித்திருக்கின்றேன்.

  • தொடங்கியவர்

எந்த ஊர் கோயில் எண்டு சொன்னால்தானே... அங்கையும் வந்து பிரச்சசினையளுக்கை சிக்கின்னாங்களோ எண்டு தெரியும்!! :D :P

Edited by sOliyAn

எந்த ஊர் கோயில் எண்டு சொன்னால்தானே... அங்கையும் வந்து பிரச்சசினையளுக்கை சிக்கின்னாங்களோ எண்டு தெரியும்!! :D :P

சோழியன் வில்லிசையில் மகா"ராஜன்" என்று தெரியுது. அப்ப நீங்கள் கன கோயில்களிலை பிரச்சினைப் பட்டிருக்கிறீங்கள் எண்டு சொல்லுங்கோ..

இது மாதிரி ஒரு கதை.

ஒருவன் தன் நண்பனுக்கு சொல்லிக் கவலைப்பட்டானாம். " எனக்கு ஒரு கடிதம் வந்திருக்குது என்னுடைய மனுசியோடை இனியும் சேட்டை விட்டீரோ கொலை விழும் என்று எழுதியிருக்குது"

நண்பன் சொன்னானாம்,, "அப்ப அதை விட்டிடன்"

முதலாமவன் சொன்னான் " தன்னுடைய பெண்சாதி ஆர் எண்டு அவன் எழுத இல்லையே..அப்ப ஆர் என்று எனக்கு எப்படித் தெரியும்"

சம்பந்தம் இருக்கிற மாதிரி இருக்கு என்ன?

:D

Edited by Ponniyinselvan

மாலுசந்திப்பிள்ளையார் கோயிலில் நடந்த சின்னமணியின் சத்தியவான் சாவித்திரி வில்லிசை பார்த்தனான் நான். சில வருடங்களுக்கு முதல் கனடாக் கந்தசுவாமி கோயிலிலும் இவற்ற வில்லிசை நடந்தது.சோழியனண்ணா வந்தனீங்கிளோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கதையை, ஒரு தத்துவத்தை மக்களுக்குப் புரியக் கூடிய விதத்தில் கொண்டு செல்பவனே உண்மையான கலைஞன். இந்த வில்லுப்பாட்டைப் பார்க்கின்றபோது உண்மையில் சிறப்பாக இருக்கின்றது.

ஆனால் ஏற்படுகின்ற சோகம் என்னவென்றால், தமிழன் தான் தொடர்ந்து தாங்கிவந்த கலைகளையும், திறமைகளையும் காவிச்செல்ல அடுத்த தலைமுறை தயாராக இருக்கின்றதா என்பது தான், நாங்கள் எல்லாவற்றையும் துறந்து விட்டு, "ராப்" என்றும், பைலா என்றும் ஆடி எம் அடையாளங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றோம்.

பிற்பட்ட காலத்தில் இன்னுமொருவர் பிறந்து வந்து, தமிழர்களில் ஒரு பிரிவு தான் அதற்குப் பொறுப்பு என்று அவர்களை ஒதுக்கி வைத்து, வரலாற்றைத் திருத்தம் செய்வதில் இருந்து தவிர்க்கப்படுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த ஊர் கோயில் எண்டு சொன்னால்தானே... அங்கையும் வந்து பிரச்சசினையளுக்கை சிக்கின்னாங்களோ எண்டு தெரியும்!! :rolleyes: :P

அதுதான் தென்மராட்சிப்பக்கம் இருக்கின்ற கோவில்களில்தான் :rolleyes:

  • தொடங்கியவர்

மாலுசந்திப்பிள்ளையார் கோயிலில் நடந்த சின்னமணியின் சத்தியவான் சாவித்திரி வில்லிசை பார்த்தனான் நான். சில வருடங்களுக்கு முதல் கனடாக் கந்தசுவாமி கோயிலிலும் இவற்ற வில்லிசை நடந்தது.சோழியனண்ணா வந்தனீங்கிளோ?

கனடாக் கந்தசாமி கோயில்ல நடந்த வில்லிசை வேறு கதை எனில்.. அதையும் மோகனிடம் கொடுத்தால் நான் பார்த்து இரசிக்கலாம்தானே?! :rolleyes:

  • தொடங்கியவர்

சோழியன் வில்லிசையில் மகா"ராஜன்" என்று தெரியுது. அப்ப நீங்கள் கன கோயில்களிலை பிரச்சினைப் பட்டிருக்கிறீங்கள் எண்டு சொல்லுங்கோ..

இது மாதிரி ஒரு கதை.

ஒருவன் தன் நண்பனுக்கு சொல்லிக் கவலைப்பட்டானாம். " எனக்கு ஒரு கடிதம் வந்திருக்குது என்னுடைய மனுசியோடை இனியும் சேட்டை விட்டீரோ கொலை விழும் என்று எழுதியிருக்குது"

நண்பன் சொன்னானாம்,, "அப்ப அதை விட்டிடன்"

முதலாமவன் சொன்னான் " தன்னுடைய பெண்சாதி ஆர் எண்டு அவன் எழுத இல்லையே..அப்ப ஆர் என்று எனக்கு எப்படித் தெரியும்"

சம்பந்தம் இருக்கிற மாதிரி இருக்கு என்ன?

:rolleyes:

அட.. உப்பிடி ஏதாலும் வில்லங்கங்கள் வருமெண்டுதான் நம்ம கூத்துகளை கோயில்லை வைக்குறது.. நாம சிவப்பு பொட்டுக்காரங்களை நிமிர்ந்தே பார்க்க மாட்டமே... :lol::rolleyes:

கதாகால சேபம் என்பது வட மொழி கலாச்சாரத்தில் இருந்து தளுவப்பட்டது...! அங்கு அது நிலையாக இப்போதும் இருக்கிறது... ஆனால் வில்லுப்பாட்டு என்பதும் இந்து கடவுள்களின் பெருமையை சொல்கிறதே...! ஒருவேளை அது ஆரியர்கள் கொண்டுவந்து பூகுத்தியதோ எண்ட சந்தேகம் இருப்பதால், இதை தமிழர் கலையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை...

தமிழில் பாடப்படும் வெறும் ஒப்பாரி மட்டும்தான் தமிழர் கலை மற்றவை எல்லாம், கல்யாணத்துக்கு போக நகையை இரவல் வாங்குவது போல வாங்கப்பட்டது, இன்னும் திருப்பி கொடுக்கப்படவில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

கதாகால சேபம் என்பது வட மொழி கலாச்சாரத்தில் இருந்து தளுவப்பட்டது...! அங்கு அது நிலையாக இப்போதும் இருக்கிறது... ஆனால் வில்லுப்பாட்டு என்பதும் இந்து கடவுள்களின் பெருமையை சொல்கிறதே...! ஒருவேளை அது ஆரியர்கள் கொண்டுவந்து பூகுத்தியதோ எண்ட சந்தேகம் இருப்பதால், இதை தமிழர் கலையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை...

தமிழில் பாடப்படும் வெறும் ஒப்பாரி மட்டும்தான் தமிழர் கலை மற்றவை எல்லாம், கல்யாணத்துக்கு போக நகையை இரவல் வாங்குவது போல வாங்கப்பட்டது, இன்னும் திருப்பி கொடுக்கப்படவில்லை...

அதே தான். இவர்களின் வாதத்திற்கேற்ப வெளிக்கிட்டோம் என்றால் தமிழனுக்குச் சின்னக் கயிறுக்குக் கூட உரிமையில்லை என்று தான் முடியும். தமிழ் விரோதத் தலைவனுக்கும் அது தானே தேவை. தமிழனை அம்மணமாக்கி, கர்னாடக்காரனை உயர்த்த வேண்டும் என்று

  • தொடங்கியவர்

யேர்மனியில் வாழும் வில்லிசைக் கலைஞரான நாச்சிமார் கோயிலடி இராஜன் அவர்களது சிறுகட்டுரை ஒன்று ஓரளவவாவது வில்லிசையை தெளிவுபடுத்தும் என்று நினைக்கிறேன்..

இந்த இணைப்பில் அதை பார்வையிடலாம்!

http://tamilamutham.net/amutham/index.php?...2&Itemid=29

Edited by sOliyAn

அதே தான். இவர்களின் வாதத்திற்கேற்ப வெளிக்கிட்டோம் என்றால் தமிழனுக்குச் சின்னக் கயிறுக்குக் கூட உரிமையில்லை என்று தான் முடியும். தமிழ் விரோதத் தலைவனுக்கும் அது தானே தேவை. தமிழனை அம்மணமாக்கி, கர்னாடக்காரனை உயர்த்த வேண்டும் என்று

பட்டு வேட்டி, சால்வை, பட்டு புடவைகள் ஏதுமே தமிழரது கிடையாது எல்லாமே வெளிநாட்டுக்காறன் கொண்ட்டுவந்தவை... காந்தி உடுத்திய கதர் ஆடைகள் கூட ஆரியருடையது... வெறும் மரவுரிகள் மட்டுமே எங்கட முன்னோர் நாகரீக வளர்ச்சி அடைந்தால் போலையும் உடுத்தினார்கள்.... அப்பிடி இருக்கும் போது இயல் இசை எல்லாம் ( ஊன், உடை, உறைவிடத்துக்கு ) பிறகுதானே.... அனேகமாக கடன் வாங்கியதாக இருக்கவேணும்.... அதை வளர்த்து என்ன வள்ர்க்காமல் விட்டு என்ன.....??

யேர்மனியில் வாழும் வில்லிசைக் கலைஞரான நாச்சிமார் கோயிலடி இராஜன் அவர்களது சிறுகட்டுரை ஒன்று ஓரளவவாவது வில்லிசையை தெளிவுபடுத்தும் என்று நினைக்கிறேன்..

இந்த இணைப்பில் அதை பார்வையிடலாம்!

http://tamilamutham.net/amutham/index.php?...2&Itemid=29

மன்னிக்க வேணும் அண்ணா... ! இதிலை கட்டுரையாளரின் கூற்றுப்படி பஞ்ச பாண்டவரினால் இசைக்க பட்டு பின்னர் தொடரப்பட்டது எண்று சொல்லப்பட்டு உள்ளது... உண்மையான விடையமா அது...???

அர்ச்சுனன் வில் வித்தயை தவிர ஒண்றுக்குமே லாயக்கு இல்லாத்தால்தான் அஞ்ஞாதவாச காலத்தில் அலியாக வேடம் போட்டு சேடி பெண்போல விராட நாட்டுக்கு சேவகம் செய்ய போனான் என்பதுதான் பாரத கதை சொல்வது..... பாடுவதுக்கு அர்ச்சுணன் ஒரு கலைஞன் கிடையாது.... அதிலும் பீமன் மல்யுத்தத்தோடு சமைக்க தெரிந்தவன் அவ்வளவு மட்டுமே.... இசை மீட்டுபவன் என்பது பிமனின் தகப்பனாருக்கு பிறந்த ஆஞ்சநேயருக்கு(அனுமன்) தெரிந்ததாக சொல்லப்பட்டது......!

  • தொடங்கியவர்

தாங்கள் மேலெழுந்தவாரியாக கட்டுரையை வாசித்துள்ளீர்கள் தயா! அதாவது நுனிப்புல் மேய்ந்தமாதிரி.. அதிலே அர்ச்சுனன் வில்லிசைத்ததாக கதை ஒன்று கூறப்படுவதாகவும், ஆனால் அது உண்மையில்லை எனவும்தான் எழுதப்பட்டுள்ளது. தயவுசெய்து பொறுமையாக வாசியுங்கள் மீண்டும் ஒரு முறையாவது..!

சிலப்பதிகாரம்தான் பண்டைய தமிழ அரசமைப்பு முறைகளையும் தமிழர் வாழ்வையும் ஓரளவாவது வெளிப்படுத்தி நிற்கும் ஒரேயொரு பழைய நூல்.. பெரும்பாலான தரவுகளும் சான்றுகளும் குமரிக்கண்டத்தின் அழிவுடன் அழிந்ததாக கூறப்படுகிறது.

அந்த சிலப்பதிகாரத்திலே முத்துப்பரல்களாலான சிலம்பு கோப்பெருந்தேவியினுடையது எனவும்... மாணிக்கப்பரல்களாலான சிலம்பு கண்ணகியுடையது என்றும் வருகிறது.. ஆக.. சிலம்பு செய்ய வல்லமை படைத்த தமிழனுக்கா ஆடை நெய்ய முடியாது... கண்ணை மூடிக்கொண்டு இருந்தால்.. எதுவுமே தெரிய வாய்ப்பில்லைத்தான். :rolleyes:

தாங்கள் மேலெழுந்தவாரியாக கட்டுரையை வாசித்துள்ளீர்கள் தயா! அதாவது நுனிப்புல் மேய்ந்தமாதிரி.. அதிலே அர்ச்சுனன் வில்லிசைத்ததாக கதை ஒன்று கூறப்படுவதாகவும், ஆனால் அது உண்மையில்லை எனவும்தான் எழுதப்பட்டுள்ளது. தயவுசெய்து பொறுமையாக வாசியுங்கள் மீண்டும் ஒரு முறையாவது..!

சிலப்பதிகாரம்தான் பண்டைய தமிழ அரசமைப்பு முறைகளையும் தமிழர் வாழ்வையும் ஓரளவாவது வெளிப்படுத்தி நிற்கும் ஒரேயொரு பழைய நூல்.. பெரும்பாலான தரவுகளும் சான்றுகளும் குமரிக்கண்டத்தின் அழிவுடன் அழிந்ததாக கூறப்படுகிறது.

அந்த சிலப்பதிகாரத்திலே முத்துப்பரல்களாலான சிலம்பு கோப்பெருந்தேவியினுடையது எனவும்... மாணிக்கப்பரல்களாலான சிலம்பு கண்ணகியுடையது என்றும் வருகிறது.. ஆக.. சிலம்பு செய்ய வல்லமை படைத்த தமிழனுக்கா ஆடை நெய்ய முடியாது... கண்ணை மூடிக்கொண்டு இருந்தால்.. எதுவுமே தெரிய வாய்ப்பில்லைத்தான். :rolleyes:

பாண்டவர் பற்றி வந்ததை பார்த்ததும் கடுப்பாகி பாதியிலேயே விட்டுவிடேன்.....! தவறு என்னதுதான்...!

பட்டாடைகள் பற்றி அணிகலன்கள் பற்றியும் சொல்கிற்றீர்கள்... ஆனால் பட்டாடைகள் எல்லாம் வெளியாரது ( அன்னிய நாட்டு சாப்பாடுகள் போல ) வட நாட்டின் காந்தி அணியும் கதர் ஆடைகள்தான் எங்களுடையதும் எங்களுக்கு உகந்ததும் எண்று தமிழ் பெருந்தகை ஒருவரின் வரலாற்று திரைப்ப்படத்தில் அவர் சொல்வது போல காட்டினார்கள்....! அதனால் தான் பட்டாடைகள் ஒருவேளை சீனர்கள் எங்களுக்கு விற்றவையோ எண்டு ஒரு சந்தேகம் வந்திட்டுது....!

  • கருத்துக்கள உறவுகள்

பட்டு வேட்டி, சால்வை, பட்டு புடவைகள் ஏதுமே தமிழரது கிடையாது எல்லாமே வெளிநாட்டுக்காறன் கொண்ட்டுவந்தவை... காந்தி உடுத்திய கதர் ஆடைகள் கூட ஆரியருடையது... வெறும் மரவுரிகள் மட்டுமே எங்கட முன்னோர் நாகரீக வளர்ச்சி அடைந்தால் போலையும் உடுத்தினார்கள்.... அப்பிடி இருக்கும் போது இயல் இசை எல்லாம் ( ஊன், உடை, உறைவிடத்துக்கு ) பிறகுதானே.... அனேகமாக கடன் வாங்கியதாக இருக்கவேணும்.... அதை வளர்த்து என்ன வள்ர்க்காமல் விட்டு என்ன.....??

மரவுரி கூடத் தமிழனுக்குச் சொந்தமில்லையண்ணை. வரலாற்றை வடிவாகப் புரட்டிப் பாருங்கோ. ஆதாமும், ஏவாளும் முதல்ல நிர்வாணமாக நிண்டவை. அந்த நேரத்தில் ஆப்பிள் பழத்தை ஏவாள் சாப்பிட்டு, அதற்குப் பிறகு தான் வெக்கம் வந்து ஏவாள் உடலை மறைக்கத் தொடங்கினவாம்.

அப்படிப் பார்த்தால், ஆதாம், ஏவாள் தான் ஆடைக்குச் சொந்தக்காரர். உதையும் தமிழன் கண்டு பிடிக்காததால் உதுவும் நமக்குச் சொந்தமில்லை. எனவே அதையும் துறந்து விட்டுத் திரியவேண்டும். ( அந்தக் கொள்கையை வைச்சுத் தான் நம்ம பொஸ் ஐரோப்பவில் நிர்வாணக் கூத்துச் செய்தவரோ?) :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சிலப்பதிகாரம்தான் பண்டைய தமிழ அரசமைப்பு முறைகளையும் தமிழர் வாழ்வையும் ஓரளவாவது வெளிப்படுத்தி நிற்கும் ஒரேயொரு பழைய நூல்.. பெரும்பாலான தரவுகளும் சான்றுகளும் குமரிக்கண்டத்தின் அழிவுடன் அழிந்ததாக கூறப்படுகிறது.

அந்த சிலப்பதிகாரத்திலே முத்துப்பரல்களாலான சிலம்பு கோப்பெருந்தேவியினுடையது எனவும்... மாணிக்கப்பரல்களாலான சிலம்பு கண்ணகியுடையது என்றும் வருகிறது.. ஆக.. சிலம்பு செய்ய வல்லமை படைத்த தமிழனுக்கா ஆடை நெய்ய முடியாது... கண்ணை மூடிக்கொண்டு இருந்தால்.. எதுவுமே தெரிய வாய்ப்பில்லைத்தான். :unsure:

உது தயா அண்ணையின் பிழையில்லை.

சிலப்பதிகாரம் கூட, ஆரிய மாயைக்குள்ள சிக்குப்பட்டு இருக்குது என்று எங்களின்புலம்பெயர் வரலாற்று ஆய்வாளர்கள் கூட விளக்கமாக ஆராய்ச்சி செய்து முடிவெடுத்திருக்கின்றார்கள

Edited by தூயவன்

தமிழனின் ஒரே ஒரு சொத்து. வேப்பங்குச்சியிலும், உமிச் சாம்பலிலும் பல்லு மினுக்கின்றது தான். மற்றது எல்லாம் பார்ப்பானிகளாலும், ஆரியர்களாலும் தமிழனின் தலையில் திணிக்கப்பட்டது என்றதாக எங்களின் ஆராய்வாளர்கள் குழாம் முடிவெடுத்திருக்குது :unsure:

ஆமாம் தூயவன் அண்ணா தலைப்பு வில்லிசையில திடங்கி இப்ப இங்கே வந்து நிற்குது பிறகு என்னோட கோவிக்கிறதில்லை சும்மா சொல்லி பார்தனான்............. :P :lol: :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.