Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில், 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்குவதற்கு தடை நீடித்ததால், பல திரையரங்குகள் செயல்படவில்லை.

தற்போது தமிழக தலைமைச் செயலாளர் கே. சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கொரோனா கால வழிமுறைகளை பின்பற்றி, திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

படங்களை திரையிடுவதற்கு முன்னதாக, எல்லா திரையரங்குகளிலும் கொரோனா விழிப்புணர்வு செய்திகள் வெளியிடப்படவேண்டும் என்றும் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதித்து செயல்படலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டபோதும், திரையரங்கு உரிமையாளர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து பல கட்டமாக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் பேசி வந்தனர்.

முன்னதாக, எதிர்வரும் பொங்கல் திருநாளின் போது வெளியாகவுள்ள படங்கள் 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி தரவேண்டும் என நடிகர் விஜய் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் ஒரு சுத்தமான மனிதர் என்ற நினைப்பில் மண்.

50 வீத பார்வையாளர் அனுமதியே கொரனோ  நோய்  தொற்று பரவாமல் இருக்க இவரின் வேண்டுகோள் அப்பாவிகள்  நொய்  தொற்றி செத்தாலும் பரவாயில்லை தன்னுடைய படம் தோல்வி அடையாமல்  ஓடணும் தமிழ் நாட்டு சனத்தை  முதலில் நடிகர்களிடம் இருந்து காப்பாற்றணும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, பெருமாள் said:

விஜய் ஒரு சுத்தமான மனிதர் என்ற நினைப்பில் மண்.

50 வீத பார்வையாளர் அனுமதியே கொரனோ  நோய்  தொற்று பரவாமல் இருக்க இவரின் வேண்டுகோள் அப்பாவிகள்  நொய்  தொற்றி செத்தாலும் பரவாயில்லை தன்னுடைய படம் தோல்வி அடையாமல்  ஓடணும் தமிழ் நாட்டு சனத்தை  முதலில் நடிகர்களிடம் இருந்து காப்பாற்றணும் .

தாங்கள் வாழ மற்றவன் செத்தாலும் பரவாயில்லை எண்ட நினைப்பு இதுகளுக்கு....
படங்களிலை மட்டும் ஆயிரம் புத்திமதி சொல்லுங்கள்.


பின்னோட்டங்களையும் வாசியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

தமிழ் நாட்டு சனத்தை  முதலில் நடிகர்களிடம் இருந்து காப்பாற்றணும் .

spacer.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாஸ்டர், ஈஸ்வரன் திரைப்படம் ரிலீஸ்: நடிகர் விஜய், தமிழக அரசுக்கு மருத்துவர் எழுதிய ஆதங்கப்பதிவு

திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ள தமிழக அரசின் நடவடிக்கை தொடர்பாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ளுறை மருத்துவராக பணியாற்றும் ஒருவர் மிகவும் உருக்கமான கடிதத்தை தமிழக அரசுக்கும் நடிகர் விஜயக்கும் எழுதியிருக்கிறார்.

இந்த கடிதத்தை தனது முகநூல் பக்கத்திலேயே அந்த மருத்துவர் பதிவிட்டிருந்தபோதும், அவர் எழுதியுள்ள கடிதம் சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த மருத்துவர் பதிவிட்டுள்ள கடிதத்தின் விவரம்:

அன்புள்ள விஜய் சார் மற்றும் மதிப்பிற்குரிய தமிழக அரசு,

நான் சோர்வாக இருக்கிறேன். நாங்கள் அனைவரும் சோர்வாக இருக்கிறோம். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் களைப்படைந்து இருக்கிறார்கள். சுகாதார ஊழியர்கள் களைப்படைந்துள்ளனர். காவல் அதிகாரிகள் சோர்வடைந்து விட்டனர். சானிட்டரி தொழிலாளர்கள் சோர்வாக உள்ளனர்.

இதுவரை நாம் கண்டிராத தொற்றுநோய்க்கு மத்தியில் ஏற்பட்ட பாதிப்புகள், எந்த அளவுக்கு குறைவாக இருக்க முடியுமோ அந்த அவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறோம். நான் எங்களுடைய வேலையை போற்றிப்பேசவில்லை. ஏனெனில் அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்பது எனக்கு தெரியும். எங்களுக்கு முன்னாள் கேமிரா இல்லை. நாங்கள் ஸ்டன்ட் சாகசங்களை செய்ய மாட்டோம். நாங்கள் ஹீரோக்களும் அல்ல. ஆனால் மூச்சுவிடவாவது கொஞ்சம் நேரத்தை பெறக்கூடியவர்களாக இருக்கிறோம். ஒருவரின் சுயநலத்திற்கும் பேராசைக்கும் நாங்கள் இரையாக விரும்பவில்லை.

கொரோனா தொற்று இன்னும் முடிந்து விடவில்லை, இன்றுவரையிலும் கூட அந்த வைரஸ் பாதிப்பால் மக்கள் இறக்கிறார்கள். நூறு சதவிகித திரையரங்க ஆக்கிரமிப்பு ஒரு தற்கொலை முயற்சி. மாறாக அது ஒரு கொலைக்கு ஒப்பாகும்.

கொள்கை வகுப்பவர்களோ கதாநாயகர்களோ பார்வையாளர்களுக்கு மத்தியில் படம் பார்க்கப் போவதில்லை. இது ஒரு அப்பட்டமான பண்டமாற்று முறை. உயிரை விலையாகக் கொடுத்து வணிகம் செய்வது போன்றது.

நாம் மெதுவாக இயல்பாக வாழ முயன்று கவனம் செலுத்தி வரும் வேளையில், மெதுவாக எரியும் தீ மேலும் வேகமாக பரவாமல் இருப்பதை உறுதி செய்ய முடியுமா?

இந்தப் பதிவை அறிவியல் பூர்வமாக உருவாக்கி, நாம் ஏன் இன்னும் ஆபத்தில் இருக்கிறோம் என்பதை விளக்க விரும்புகிறேன். பிறகு எனக்குள் நானே என்னதான் பிரச்னை என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு ஒரு ஏழை, களைப்படைந்த உள்ளுறை மருத்துவர் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இடுகையை பதிவு செய்தவரின் பெயர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்றும் அவர் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை கல்லூரியில் இளநிலை உள்ளுறை மருத்துவராக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

மாஸ்டர், ஈஸ்வரன் திரைப்படம் ரிலீஸ்: நடிகர் விஜய், தமிழக அரசுக்கு மருத்துவர் எழுதிய ஆதங்கப்பதிவு - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பிழம்பு said:

. நாங்கள் ஸ்டன்ட் சாகசங்களை செய்ய மாட்டோம். நாங்கள் ஹீரோக்களும் அல்ல. ஆனால் மூச்சுவிடவாவது கொஞ்சம் நேரத்தை பெறக்கூடியவர்களாக இருக்கிறோம்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kavi arunasalam said:

spacer.png

உலகெங்கெங்கும்..... மொதல்,  மொதலாக...  
தமிழக திரை..... அரங்க்க்குகளில்... 
கொரோனா  ஸ்பெஷல்...

(முக்கியமாக... முக்கி வாசிக்கவும்). 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதி ரத்து

தமிழ்நாட்டில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு வழங்கிய அனுமதியை தமிழக அரசு ரத்து செய்திருக்கிறது.

இது தொடர்பாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை மாலையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நீதிமன்றத்தில் இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கை கருத்தில் கொண்டும், மத்திய அரசின் அறிவுரையை கவனத்தில் கொண்டும் திரையரங்குகள், திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளிலும் மறு உத்தரவு வரும்வரை 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது," என்று கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் முக கவசம் அமிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ள தமிழக அரசு, கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்துக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னதாக, திரையரங்குகளில் நூறு சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையிலும் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன. இதில் சென்னையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசரணை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் கட்டுக்குள் இருப்பதால் நூறு சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பதில் சிக்கல் இருக்காது என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். ஆனால் நீதிபதிகள், கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதில் அலட்சியம் கூடாது. கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்வரை எச்சரிக்கையுடன் மாநில அரசு செயல்பட வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும், தற்போது உள்ள நடைமுறைப்படி, 50 சதவீத பார்வையாளர்களை கொண்டே திரையரங்குகள் செயல்பட வேண்டும் என்று அவர்கள் கூறினர். மதுரை கிளையில் ஜனவரி 11ஆம் தேதி இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதால், அதுவரை 50 சதவீத பார்வையாளர் அனுமதி என்ற நடைமுறையே தொடர வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

நூறு சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க தமிழக அரசின் அனுமதி கிடைத்து விட்டதால், பொங்கல் தினத்தன்று முழுவீச்சில் திரையரங்குகள் செயல்படத் தொடங்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர். இதனால், பொங்கல் நாளன்று நடிகர் விஜய் நடித்த மாஸ்டர், நடிகர் சிலம்பரசன் நடித்த ஈஸ்வரன் ஆகிய படங்கள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்போடு இருந்தனர்.

விஜய்

பட மூலாதாரம்,TWITTER

நடிகர் விஜய் சமீபத்தில் பொங்கல் தினத்தன்று படம் வெளியாகும்போது நூறு சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த சந்திப்பை அடுத்து, 100 சதவீத பார்வையாளர்களை திரையரங்குகளில் அனுமதிக்கும் உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது.

சிலம்பரசன்

பட மூலாதாரம்,TWITTER

ஆனால், கொரோனா பரவல் மற்றும் புதிய உருமாற்றம் பெற்ற கொரோனா பரவல் தணியாத நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் பலரிடையே அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். அத்துடன், அரசின் இந்த உத்தரவை எதிர்த்து இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த இரு வழக்குகளையும் உயர் நீதிமன்ற மதுரை கிளையே விசாரிக்கும் என்றும் வெள்ளிக்கிழமை விசாரணையினஅபோது தலைமை நீதிபதி குறிப்பிட்டார். இந்த நிலையில், தமிழக அரசு, திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்திருப்பதால், பொங்கல் திருநாளையொட்டி வெளியிட திட்டமிட்டிருக்கும் மாஸ்டர், ஈஸ்வரன் தயாரிப்புக்குழுவினர் குறித்த தேதியில் படத்தை திரையிடுவார்களா அல்லது தள்ளிப்போடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

"மாஸ்டர், ஈஸ்வரன்" படங்கள் ரீலிஸ் தேதியில் வெளிவருமா? திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதி ரத்து - BBC News தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.