Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் நினைவு சின்ன இடிப்பும் மாணவர்களும் - யாழில் இருந்து பல்கலைகழக மாணவனின் ஆதங்கம்.

Featured Replies

சமீபத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிப்பும் அதனோடு தொடர்பான அரசியலும் பற்றி  யாழ்பாணத்தில் இருந்து பல்கலை கழக மாணவன் ஒருவர் தனது ஆதங்கத்தை தனது முக நூலில்  பதிவு செய்துள்ளார். அதன் வீடியோவில் தமிழர்கள் சிந்திக்கவேண்டிய பல விடயங்கள் இருப்பதால் அந்த வீடியோவின் பதிவை  இங்கு இணைக்கிறேன். இலங்கைத்தீவில் தமிழர்கள்  தமது இருப்பை நிலைநாட்ட தற்போது கல்வி ஒன்று தான் எஞ்சியுள்ளது அதையும் கெடுக்க வேண்டாம் என்று அரசியல்வாதிகளிடம் கேட்கிறார் அந்த மாணவன். 

வீடியோ இணைப்பு

 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாணவரின் ஆதங்கம் சரியானதுதான், எங்களுக்கு இருக்கும் ஒரேயொரு சொத்து கல்வி மட்டுமே.. மறுக்கவில்லை.. 

ஆனால் ஒரு நாடு ஒரு சட்டம் என்பதிலும் இலங்கையின் நீதித்துறையில் இவர் வைத்திருக்கும் நம்பிக்கையையும் கொஞ்சம் அதிகமே..

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

 

பகிர்வுக்கு நன்றி ருல்பன். இவ் மாணவர் சொல்லும் எல்லா விடயங்களிலும் ஒத்துப்போக முடியாவிடினும், அவர் கேட்கும் கேள்விகள் முக்கியமாக தமிழ் / தமிழக அரசியல்வாதிகளிடம் கேட்கும் கேள்விகளும், தமிழர்களின் இன்றைய நிர்க்கதியான நிலைபற்றிய விடயங்களும் ஏற்கக்கூடியதாகவே எனக்கு இருக்கின்றது. 

  • தொடங்கியவர்

எல்லா விடயங்களுடனும் ஒத்து போக முடியவில்லை தான். உதாரணமாக நீதி துறை மீது வைத்த நம்பிக்கை சற்று அதிகமானது. இருந்தாலும் அவரின் பிரதான கருத்தான,  கலவியை இழந்தால்  அனைத்தையும் இழந்து பெறுமதியற்ற மனிதர்கள் ஆகிவிடுவோம் என்பது நூறு வீதம்  உண்மை.

 மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும். அதிக உணர்சசிவசப்பட்டு சிந்திக்கும் ஆற்றலை இழந்துவிடக் கூடாது.  பலகலைக்கழக மாணவர் கள் தர்ககரீதியில் சிந்தித்து செயற்பட வேண்டுமே தவிர உணர்ச்சிக்கும் உசுப்பேத்தல்களுக்கும் இடமளிக்கக்கூடாது.

ஜந்து வருட வட மாகாணசபை ஆட்சியில் இதனை சட்டபூர்வமாக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை அல்லது ஏன் சட்டபூர வமான ஒன்றை அமைக்கவில்லை என்ற அவரது கேள்வி நியாயமானது. பலகலைக்கழகத்தில் மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற அமைதியான சூழலை ஏற்படுத்துவதே தற்போது அவசியமானது. மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.