Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடனடியாக வடக்கு- கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துங்கள்: நாட்டில் தமிழர்கள் இணைந்துவாழ முடியாது..! - சிறிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரஞ்சித் said:

ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். எனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை, ஆனால் எதிரிக்குச் சகுனம் பிழைத்தால் சரி. அதுபோலத்தான் கிழக்கு மக்களின் மனோநிலையும், எமது பிரதேசம் பறிபோனாலும் பரவாயில்லை, ஆனால் யாழ்ப்பாணியின் இணைந்த வடக்குக் கிழக்கு தாயக் கோட்பாடு சிதைக்கப்பட்டால் சரி.

வேணுமடா ...எங்களுக்கு 
ஜெயந்தன் ஓர்மம் மிக்க படையணி என்று   உசுப்பேத்த உசுப்பேத்த உந்தி உந்தி அடித்து கொத்துக்கொத்தாக செத்து விழுந்ததற்கு  நல்ல பாராட்டுக்கள், அப்படியே இந்த  உண்மையையும் சொல்லிப்போடுங்கோ 
மட்டக்களப்பானின் நிலத்தை முஸ்லிம்கள் விழுங்கினால் என்ன சிங்களவன் விழுங்கினால் என்ன , அவன் பட்டினியால் செத்தால் என்ன என்று தானே யாழ்ப்பாணி, திருமலை கூத்தமைப்பு தேசிக்காய்கள் எல்லாம்  நல்லாட்சியில் நவதுவாரங்களையும் பொத்திக்கொண்டிருந்தீர்கள் 

2 hours ago, ரஞ்சித் said:

நீங்கள்தான் சொல்கிறீர்கள் வடக்குக் கிழக்கு தாயகம் என்பது தமிழர்கள் அனைவரினதும் அபிலாஷையென்று. நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன், இங்கே கேள்விகேட்ட ரதியாகட்டும், அல்லது பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் வரிந்துகட்டிக்கொண்டு வக்காலத்துவாங்கும் ஏனைய இருவராகட்டும், தமது அபிலாஷையும் இணைந்த வடக்குக் கிழக்குத் தாயகம்தான் என்றும், இன்று சிங்களம் நடத்துவது பிரித்தாளும் தந்திரம்தான் என்றும் வெளிப்படையாகச் சொல்லட்டும், எனது கருத்தினை இப்போதே விலத்திவிடுகிறேன்.

உங்களிடம் முதலிலேயே சொல்லியிருக்கிறேன்
இந்த நிமிசம் இணைந்த வடக்கு கிழக்கை சாத்தியமாக்கி காட்டுகிறேன், என்று சாத்தியமாக்கும் ஒரு அரசியல் வாதியை காட்டுங்கள் உங்களுக்கு பின்னால் நான் நிற்பேன், திரும்ப போய் மாகாண சபை , மண்ணாங்கட்டி சபை என்று இந்தியாவுக்கு சோப்பு போட்டுக்கொண்டு இருப்பதென்றால் நீங்களே பின்னால திரியுங்க எங்களை கூப்பிடாதீங்க  ,உங்களை விட கருணாவின் காண்டு இருக்கும் பேர்வழி நான் அப்டியான என்னையே அவர் பின்னால போக வைத்தது   உங்கடை யாழ்ப்பாணி அரசியல்வியாதிகள்  

2 hours ago, ரஞ்சித் said:

ஆனால், கிழக்கில் என்ன நடந்தது? ஒரு ஆசனம் கூட கூட்டமைப்பிற்குக் கிடைக்கவில்லை. தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் கூட்டமைப்பின் தயவில் கிடைத்தது. எந்தக் கூட்டமைப்பிற்கு "வைச்சுச் செய்தோம், இனிவரும் தேர்தல்களிலும் இதைவிடச் செய்வோம்" என்று இக்களத்தில் கூறிச் சந்தோசப்பட்டார்களோ, அந்தக் கூட்டமைப்பின் தயவால் அது கிடைத்தது. காரணம் கேட்டால் அபிவிருத்தி வேலைவாய்ப்பென்று நீங்களும் அதே சப்பைக் கட்டுதலைச் செய்யவேண்டாம்.

இப்போது தெரிகிறதா மட்டக்களப்பானின் ஓர்மம், கூத்தமைப்பிற்கு அடிக்க இந்தியாவிற்கு எப்படி நெறி கட்டியது என்று, முதலில் இந்தியாவை உங்களது யாழ்ப்பாணி மூளையில் இருந்து தூக்கியெறியுங்கள் 
 நீங்கள் கருணாவை கொலைவெறியில் பார்த்துக்கொண்டு 
மக்கள் கொத்துக்கொத்தாக கொத்தியெறியும் போது  தொலைபேசியை அனைத்து விட்டு இந்தியாவில் ரெஸ்ட் எடுத்து விட்டு திரும்ப இன  விடுதலை வாங்கித்தர வந்த செயல்வீரர்களை தேசியத்திற்காக தோளில் தூக்கி வைத்து கும்பிடலாம், ஆனால் எனக்கு இந்த இருவரும் ஒன்றுதான், ஏனென்றால் அங்கு செத்து விழுந்த மக்களை நான் யாழ்ப்பாணிகளாக பார்க்கவில்லை, இன்று என்னுடைய இனத்தின்  இருப்பிற்கு அவருடன் பிசினஸ் செய்கிறேன் நாளைக்கே அபிவிருத்தி அரசியல் சொதப்பினால் ஒரு மாற்று தெரிவை செயல்படுத்தி பார்த்தவன் என்ற மனதிருப்தியாவது எனக்கு இருக்கும், எனது வீம்பை விட முக்கியம் எனது மக்களுக்கு ஒரு நேர சாப்பாடு முக்கி முக்கி இந்தியாவுக்கு சோப்பு போடுவதல்ல.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

நான் யாழ்ப்பாண மையவாதியில்லை. ஆனால் எனது தாயகமும் மக்களும் பிரியாது ஒன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறவன். அதை யாழ்ப்பாணி செய்தால் என்ன மட்டக்களப்பான் செய்தால் என்ன அவர்கள் போற்றுதற்குரியவர்கள். 

 

தமிழ்தேசியம் தேய்கின்றது என்பதற்கு பிள்ளையான், அங்கயன் போன்றோரை மக்கள் அதி விருப்பில் தேர்வு செய்ததே சாட்சி. ஆனால் உங்கள் கோபம் அதிகம் கிழக்கு மக்களின் தேர்வில்தான் இருக்கின்றது.  யாழில் வரும் ஒரு சிலரின் கருத்து தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கவில்லை என்பதனால், ஒட்டுமொத்தமாக பிரதேசவாதமாக பார்க்கக்கூடாது. மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்புக்கள்தான் தேசியத்திற்கு எதிரான கருத்துக்கள். அதற்கான வேர்கள் என்ன என்பதை அறிந்து அவற்றைத்தான் குணமாக்கவேண்டும். தொடர்ச்சியான உரையாடல்தான் பலவற்றை தெளிவாக்கும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் ஒரு ஒழுங்கானவர் அல்லது கட்ச்சி அபிவிருத்தி அரசியலில் இறங்கியிருந்தால்  கூட்டமைப்பு இன்னும் சரிவை சநதிச்சு இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

துவேசங்களை விதைப்பவர்கள் நீங்கள் தான். அன்று தொடக்கம் யாழ்ப்பாணி யாழ்ப்பாணி என்று சொல்லி புறம் கட்டியவர்கள். நான் மட்டக்களப்பில் இருந்தவன் என்ற முறையில் சொல்கின்றேன்.

பூ போட்டு கும்பிட வேண்டிய மண் அது. உங்களை போன்ற சிறுமைத்தனமான கீழ்போக்கு அரசியலால் சின்னாபின்னமாக போய்க்கொண்டிருக்கின்றது.

அண்ணா, நான் எங்கேயாவது யாழ்ப்பாணி என்று எழுதி இருக்கிறேனா?...நான் பிரதேசவாதம் கக்குகின்ற பதிவை காட்டுங்கள் உங்கள் காலில் விழுந்து கும்புடுறேன் ....நீங்கள் ஊரை விட்டு வரும் போது எப்படி இருந்ததோ இப்பவும் அப்படித் தான் இருக்கும் அல்லது இருக்க வேண்டும் என்பது உங்கள் போன்ற சிலரது எதிர் பார்ப்பு 
ரஞ்சித் எவ்வளவு வெளிப்படையாகவும் ,கீழ்த் தரமாகவும் பிரதேசவாதம் கக்குகின்ற மாதிரியும் , கிழக்கு மாகாணத்தார் யாழ்ப்பாணத்தாருக்கு அடங்கி இருக்க வேண்டும் என்ற மாதிரியும் எழுதியுள்ளார்...அதற்கு பச்சை கொடுத்து ஆதரவு கொடுத்து உள்ளீர்கள் ...முதலில் நீங்கள் திருந்ததுங்கோ😠
அவரிட்டை படிக்கும் மாணவர்களை நினைக்க   பரிதாபமாய் உள்ளது ...தான் பிரதேசவாதம் பார்க்கும் ஆள் இல்லை என்று சொல்லிக் கொண்டே இவரால் இவ்வளவு பிரதேசவாதம் கக்க முடியுது என்றால் ?...எழுதுறதையும் எழுதிப் போட்டு நான் அந்த 3 பேருக்கு எதிராய் எழுதினேன் என்று சப்பை கட்டு வேறு ...எப்படி தான் அடக்கினாலும்  உள்ளது தான் வெளியில் வரும் ..இப்படி கேவலமாய் அவர் எழுதியது இது முதற் பதிவல்ல 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஏனென்றால் அங்கு செத்து விழுந்த மக்களை நான் யாழ்ப்பாணிகளாக பார்க்கவில்லை, இன்று என்னுடைய இனத்தின்  இருப்பிற்கு அவருடன் பிசினஸ் செய்கிறேன் நாளைக்கே அபிவிருத்தி அரசியல் சொதப்பினால் ஒரு மாற்று தெரிவை செயல்படுத்தி 

இதுவே நான் சந்தித்த வியாழேந்திரன், சந்திரகாந்தனுக்கு வாக்கு போட்ட பலரின் நிலைப்பாடு.

ஆனால் ஞானம் அண்ணன் இந்த பிரதேசவாத புண்ணை நோண்டாமல் நேர்மறை விடயங்களில் கவனம் செலுத்தலாம். கூட்டமைப்பை விமர்சிப்பதற்கும் யாழ்பாணத்தவரை விமர்சிப்பதற்கும் வேறுபாடு உள்ளது. இரெண்டாவதை செய்வதால் நன்மை அடைய போவது ஒட்டுமொத்த தமிழர்களின் எதிரிகள் மட்டுமே.

முடிந்தால் இந்த செய்தியை சேர்ப்பித்து விடுங்கள்.

32 minutes ago, சுவைப்பிரியன் said:

வடக்கில் ஒரு ஒழுங்கானவர் அல்லது கட்ச்சி அபிவிருத்தி அரசியலில் இறங்கியிருந்தால்  கூட்டமைப்பு இன்னும் சரிவை சநதிச்சு இருக்கும்.

நூற்றில் ஒரு வார்த்தை.

வரும் வடக்கு மாகாண சபை தேர்தல் பலருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.