Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையானின் சொத்துக்களை விசாரணைசெய்யுமாறு மனித உரிமைகள் அமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்.

Featured Replies

On 28/1/2021 at 12:08, கிருபன் said:

எல்லாம் அடாத்தாகவும், பயமுறுத்தியும் எடுத்தவைதானே. வாவிக்கரை வீடு சாம் தம்பிமுத்துவின் பரம்பரை வீடு என்பதால் பசையும் செல்வாக்கும் உள்ள மகன் வழக்குப்போட்டார். அதனையும் வளைத்துப்போட 2 கோடி கொடுக்க ரெடிதானே!

செய்தியின்படி சுவிஸில் ஒரு நகைக்கடையும் புள்ளையான் பெயரில் இருக்கு. அவர் சுவிஸுக்கு வந்தா வாங்கினார்?

அதிகாரமும், ஆயுதமும் கையில் இருக்கும்போது அதை வைத்து ஊரைக்கொள்ளையடிக்க ஒரு கூட்டமே சேர்ந்துவிடும். சொத்துக்களை எப்படி கையகப்படுத்துவது, எப்படி முதலீடுவது என்று ஆலோசனை சொல்லவும், பினாமியாக இருக்கவும் பலர் வருவார்கள். 

 

புள்ளையான் தான் மறியலில் இருந்து கல்லுடைத்து உழைத்த காசிலா இத்தனை சொத்தையும்  வாங்கினார்?😂

வடக்கு என்றால் யாழ்ப்பாணம் என்று கருதும் சில யாழ் மையவாதிகள் போல கிழக்கு என்றால் மட்டக்களப்பு மாத்திரம் என்று நினைக்கும் புள்ளையான் கொள்ளையடித்ததை வைத்து மாபியா கும்பல் ஒன்றை வைத்திருக்கின்றார். ஆனால் இவரும் ராஜபக்‌ஷக்களின் அடிமைதானே.

பல வகையான முறைகளில் பிள்ளையான் கொள்ளையடித்திருக்கலாம். இயக்கத்தில் இருந்த காலத்தில் கிடைத்த பணத்தில் கொள்ளை. அது இவர் மட்டுமல்ல நிறையபேர் இருக்கிறார்கள். இன்று வெளி நாடுகளிலும் நிறைய பேர் அந்த பணத்தில் சுகபோகம் அனுபவிக்கிறார்கள். மற்றது அரசுடன் இணைந்து கட்டிக்கொடுப்புக்காக பணம் பெற்றிருக்கலாம். அது பெரும் தொகையாக இருந்திருக்கும். பின்னர் முதலமைச்சராக வந்ததில் நிறைய பணம் சுருட்டி இருக்கலாம். அப்படி நிறைய நடந்தது. சிலர் வேலையையும் விட்டுப்போன சரித்திரமும் இருக்குது. நிறைய எழுதலாம். எனவே 300 மில்லியன் வைத்திருக்கிறார் அல்லது அதட்கு மேலும் வைத்திருக்கிறார் என்பது பெரிய விடயமில்லை. எனவே பிள்ளையானுக்கு ஒரு அடியாள் கூடடம் இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் தவிர்க்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, satan said:

இதே மஹிந்த ஒருதடவை சொன்னார். நான் வடக்கு மக்களுக்கு வீதிகளை அமைத்தேன், புகையிரதம் ஓட வைத்தேன், பல அபிவிருத்திகளை செய்தேன் ஆனால் அவர்களது மனங்களை  என்னால் வெல்ல முடியவில்லை. அவர்கள் என்னை தேர்தலில் தோற்கடித்து விட்டார்கள். அந்தத் தோல்வியே  தொடர்ந்து நடைபெறுகிறது. இப்போ சிங்களவரை உசுப்பி, ஆசை காட்டி சிங்கள மக்களாலேயே வென்றோம் எனும் மாயை காட்டுகிறார்கள். அப்படிஎன்றால் ஏன் சில விலைபோன  முகவர்களை தம் கட்சியின் பெயரில் எம்மத்தியில்  களமிறக்க வேண்டும்? அவர் எங்களுக்கு உதவுவதாக நினைத்து எதை எதையோ செய்கிறார் ஆனால் அவை எல்லாம் எங்களுக்கு தேவைதானா என்பதை தெரிந்து கொள்வதில்லை.  நாங்கள் இழந்ததை, எமது உரிமையை திருப்பி தருமா? இதை செய்வதன்மூலம் எம்மிடம் இருந்து பறித்ததை நிலையாக தன் வசம் வைத்திருப்பதற்கு  வழங்கப்படும் கையூட்டு என்பதுமட்டுமல்ல எம்மை திசை திருப்பும் யுக்தி என்பது  எம்மில் பலருக்கு விளங்குவதில்லை. எம்மிடம் இருந்து பறித்த எமது  உரிமையைத் திருப்பித் தந்தால் எமக்கு எது தேவையோ அதை நாமே  நிறைவேற்றுவோம்.

இது பெளத்த நாடு  இதில் நாங்கள் வைத்தது தான் சட்டம் எல்லாம் அவர்கள் சொல்லும் போது 30 வருடம் போராடியாச்சு  விரும்பினால் தமிழ் மக்கள் இருக்கலாம் விருப்பம் இல்லாவிட்டால் வெளியேறலாம் என அவர்கள் மறைமுகமாக சொல்கிறார்கள் அதற்க்கான ஏற்பாடுகள் தான் இந்த தொல் பொருளியல் , விகாரைகள் அமைத்தல் . இதை தமிழ் மக்கள் ஒன்று பட்டு எல்லா கட்சிகளும் ஒருமித்த குரல் கொடுத்தாலும் தடுக்க முடியாது .

விலை போன தரகர்கள் தமிழர்களே அவர்களுக்கு வாக்களித்த மக்களைத்தான் நீங்கள் நோக வேண்டும்  ஆனால் இங்குள்ள மக்கள் எதை விரும்புகிரார்கள் என்பது இங்கு இருந்து பார்த்தால் விளங்கும் வேறிடத்தில் இருந்து பார்க்கும் போது நான் கூறுவதும் பலருக்கு எரிச்சலாகவும் விலைபோனதாகவும் ,தூரோகத்தனம் நிறைந்ததாகவும் இருக்கும் இருக்கும் என்ன செய்வது இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே கருத்துக்கள் சொல்லி .

சிங்கள மக்கள் சஜித்தை ஏன் வெல்ல வைக்க முடியவில்லை ஒட்டு மொத்தமாக கோட்டா பக்கம் ஏன் நின்றார்கள் தமிழர்களை அடக்கவேண்டும் அது ராஜபக்ச குடும்பத்தால் மட்டும் முடியும் இந்த நாட்டில் சிங்களவர்கள் முதன்மையானவர்கள் பெரும்பான்மையானவர்கள் எனவும் உலகுக்கு காட்ட நாம்  2009ல் இருந்து அவன் ற ஆள் இவன்ற ஆள் அவனால் தோல்வி கண்டம் இவனால் தோல்வி கண்டம் என அந்த இடத்தில் நிற்கிறம் .

அதே மகிந்த போட்ட ரோட்டால் சென்று படம் பிடித்து ஊர் உலகத்துக்கு காட்டுறம்  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தமிழர்களை அடக்கவேண்டும் அது ராஜபக்ச குடும்பத்தால் மட்டும் முடியும் இந்த நாட்டில் சிங்களவர்கள் முதன்மையானவர்கள் பெரும்பான்மையானவர்கள் எனவும் உலகுக்கு காட்ட

சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து தந்திரமாக விலைபோன, பதவி, புகழுக்கு ஆசைப்பட்ட தமிழ்த் தலைமைகளை கைக்குள் போட்டுகொண்டு, தமிழரைப்பற்றி சிங்களவருக்குள்  பிழையான கருத்துக்களை விதைத்து, வளர்த்து சுகம் கண்டு கொண்டு வருகிறது சிங்கள அதிகார வர்க்கம். கடைசியில் இவர்களின் சுயநலத்தால்  இரு இனமும் அடிமையாவது திண்ணம்.

 

6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

விரும்பினால் தமிழ் மக்கள் இருக்கலாம் விருப்பம் இல்லாவிட்டால் வெளியேறலாம் என அவர்கள் மறைமுகமாக சொல்கிறார்கள்

மறைமுகமாக அல்ல வெளிப்படையாகவே விடுதலைப்போர் முறியடிக்கப்பட்ட பின் சரத் பொன்சேகா, கோத்தா, பல சிங்கள அரசியல்வாதிகள்,  பிக்குகள் சொல்லிக்கொண்டும் நடைமுறைப்படுத்திக்கொண்டும் வருகிறார்கள். நம்மதுகள் சிலதும் ஒத்தூதிக்கொண்டு திரிகிறார்கள். கோத்தபாய வெளிப்படையாக வெளிநாட்டு ஊடக பேட்டியில் தெரிவித்திருந்தார்: புலிகளை முறியடித்துவிடடோம், பிரபாகரன் இப்போ  உயிரோடுஇல்லை, தமிழருக்கு அரசியற் தீர்வு ஒன்று அவசியமில்லை,  அவர்களுக்கு இங்கு பிரச்சனையுமில்லை, எங்களுக்கு கட்டுப்பட்டு இருப்பதென்றால் இருக்கலாம், அரசியற் தீர்வு என்கிற சொல்லுக்கே இடமில்லை என்று உறுதியாக சொல்லிவிட்டார். ஏன் சந்திரிகா அம்மையாரே ஓர் தடவை சொல்லியிருந்தார்: இது சிங்கள, பவுத்த நாடு. இங்கு அதற்கே முன்னுரிமை வழங்கப்படும்.  நாம் அற்ப சொற்பத்துக்கு விலை போகாமல்  ஒற்றுமையாக இருந்தால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை. இதற்கு அடிமைத்தனத்திலிருந்து விடுபட்ட பல நாடுகள் சாட்சி.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மகிந்த போட்ட ரோட்டால் சென்று படம் பிடித்து ஊர் உலகத்துக்கு காட்டுறம்

இல்லையே...  மஹிந்த றோட்டு போட முன்னரே நமது கிராமத்தில் இருந்த மண் தெருவில் நின்று, சென்று படம் பிடித்தவர்கள் நாங்கள். நீங்கள் எப்படியென்று தெரியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
On 31/1/2021 at 04:10, satan said:

இல்லையே...  மஹிந்த றோட்டு போட முன்னரே நமது கிராமத்தில் இருந்த மண் தெருவில் நின்று, சென்று படம் பிடித்தவர்கள் நாங்கள். நீங்கள் எப்படியென்று தெரியவில்லை?

நான் மகிந்த போட்ட பாதையால் தான்  யாழ்ப்பாணம் உட்பட  பல இடங்களுக்கு விரைவாக சென்று வர முடிந்தது இல்லயென்றால் பல மணித்தியாலங்கள் வீணாக்கி இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் மகிந்த போட்ட பாதையால் தான்  யாழ்ப்பாணம் உட்பட  பல இடங்களுக்கு விரைவாக சென்று வர முடிந்தது இல்லயென்றால் பல மணித்தியாலங்கள் வீணாக்கி இருக்கும் 

ஒரு அரசின் கடமையை சலுகை, பிச்சையாகப்  போட்டு அந்த  மக்களின் உரிமையை சுதந்திரத்தை பறிப்பது, சூறையாடுவது பொறுப்புள்ள அரசாங்கமாகாது. அதற்கு நாட்டை ஆளும் தகுதியும் கிடையாது. சீனன், இந்தியனுந்தான் அபிவிருத்தி செய்கிறான். அவர்கள் செய்வதற்கும் இவர்கள் செய்வதற்கும் ஒற்றுமை வேற்றுமைகள் உண்டா? எல்லாம் சுருட்டும் பறிக்கும் வேலைத்திட்டங்களே.   

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் மகிந்த போட்ட பாதையால் தான்  யாழ்ப்பாணம் உட்பட  பல இடங்களுக்கு விரைவாக சென்று வர முடிந்தது இல்லயென்றால் பல மணித்தியாலங்கள் வீணாக்கி இருக்கும் 

தான் அழித்த எங்கள் வளங்களை, அரைகுறையாக திருத்திவிட்டு தனக்கு விளம்பரம் தேடுவதும் அரசங்கமல்ல.   

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

ஒரு அரசின் கடமையை சலுகை, பிச்சையாகப்  போட்டு அந்த  மக்களின் உரிமையை சுதந்திரத்தை பறிப்பது, சூறையாடுவது பொறுப்புள்ள அரசாங்கமாகாது. அதற்கு நாட்டை ஆளும் தகுதியும் கிடையாது. சீனன், இந்தியனுந்தான் அபிவிருத்தி செய்கிறான். அவர்கள் செய்வதற்கும் இவர்கள் செய்வதற்கும் ஒற்றுமை வேற்றுமைகள் உண்டா? எல்லாம் சுருட்டும் பறிக்கும் வேலைத்திட்டங்களே.   

நாங்கள் ரோட்டுப் போடவில்லையெண்டுதானே 70 வருடங்கள் போராடினோம்?  லட்சக்கணக்கான எம்மக்கள் செத்ததுகூட இந்த ரோட்டுப் போட்டுத்தரவேண்டும் எண்டுதானே? அதுதான் இப்ப எல்லாம் மகிந்த மாத்தையா போட்டுட்டாரே?! இனியென்ன, எங்கட நாட்டில தேனும் பாலும் ஓடப்போகுது. இதுக்காக எங்களை நீங்கள் துரோகியெண்டோ, விலைபோனவர்கள் என்றோ, கொலைக்குழுவின் ஆதரவாளர்கள் என்றோ, சந்தர்ப்பவாதிகள் எண்டோ திட்டினாலும் பரவாயில்லை, எங்களுக்குத் தேவையானது கிடைச்சால் சரி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.