Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஆதரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஆதரவு |  Athavan News

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஆதரவு

தமிழின அழிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவை தெரிவிப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை குறித்த போராட்டத்தை முன்னெடுக்க வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகள் விடுத்த அழைப்புத் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் திணைக்களங்கள் ரீதியிலான ஆக்கிரமிப்பு தொடர்வதை வெளிக் கொண்டுவரும் வகையில் வடக்கு கிழக்கில் செயற்படும் சிவில் அமைப்புக்கள் பல இணைந்து விடுத்துள்ள அழைப்பிற்கு வலுச் சேர்க்கும் வகையில் கூட்டமைப்பும் தனது ஆதரவை வழங்கியுள்ளது.

இதேநேரம் குறித்த போராட்டத்தில் அனைவரும் பங்குகொண்டு வடக்கு கிழக்கில் உள்ள சுமார் 200 ற்கும் மேற்பட்ட பாரம்பரிய இந்து ஆலயங்களை கையகப் படுத்துவதற்கான முயற்சிகள், மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஊடகவியலாளர்கள் மீதான மனித உரிமை மீறல்கள், போராட்டங்களை முன்னெடுத்து வரும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதுடன் அவர்களை தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவதையும்.

தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சிங்கள குடியேற்றங்களை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றமை போன்ற செயல்களைக் கண்டித்து இடம்பெறும் இந்தப் போராட்டத்தில் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் என்ற அழைப்பினையும் கூட்டமைப்பு விடுத்துள்ளது.

http://athavannews.com/பொத்துவில்-தொடங்கி-பொலிக/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின அழிப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு சாணக்கியன் அழைப்பு.

 

வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழின எதிர்ப்புக்கு எதிராக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையிலான போராட்டத்திற்கு ஒரு தமிழன் என்ற வகையில் எனது முழு ஆதரவினையும் தெரிவிக்கின்றேன்.

அத்துடன் இதில் நானும் பங்கு கொண்டு முன் நடாத்துவேன் என உறுதி கூறுகின்றேன். தந்தை செல்வா மற்றும் சி.மூ இராசமாணிக்கம் ஐயாவின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தமிழரின் நீதிக்கான போராட்டத்தினை இன்று வரை எமக்கான உரிமை மற்றும் நீதி கிடைக்கும் வரை தொடர்வது எமது தலையாய கடமையாகும். இலங்கைக்கு சுதந்திரம் ஆங்கிலேயரினால் கிடைத்த போதிலும் இங்கு வாழும் பூர்வீக குடிகளான எம் தமிழ் இனத்துக்கு இன்று வரை சுதந்திரம் கிடைக்கவில்லை.எமது போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் தமிழர்களாகிய நாம் அனைவரும் தமிழின அழிப்புக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். வடக்கு, கிழக்கின் பூர்வீக குடிகளாகிய நாம் எமது உரிமைக்காக 60 ஆண்டுகளுக்கு மேல் போராடி வருகின்றோம். தமிழர்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்காத இலங்கை பேரினவாத அரசு தமிழர்களை அடக்குவதற்கான போராட்டங்களில் ஈடுபட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

வடக்கு, கிழக்கினை இராணுவ ஆட்சியாக மாற்றிக்கொண்டு வரும் இலங்கை அரசு தமிழர்களின் இருப்பினை இல்லாதொழிக்கவும், தமிழர்களின் பண்பாட்டுச் சின்னங்களை அழிப்பதற்காகவும் பல முயற்சிகளை இன்றுவரை முன்னெடுத்து வருகின்றது. பல்வேறு திணைக்களங்கள் மூலமாகவும் பௌத்த மயமாக்கலை முன்னெடுத்துவரும் இலங்கை அரசு தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் சமய வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் தடைகளை விதிக்கின்றது. வடக்கில் குருந்தூர் மலை ஐயனார் கோவில், வெடுக்குநாறி மலை சிவன் கோயில் மற்றும் கிழக்கில் கண்ணியா பிள்ளையார் கோயில், குசனார் முருகன் ஆலயம் போன்ற தமிழர்களின் பல்வேறு இடங்களிலும் தமிழர்கள் வழிபாடுகளை மேற்கொள்ள இடமளிக்காது பௌத்த ஆலயங்களை நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. தமிழர்களுக்கு மட்டுமல்லாது முஸ்லீம் சமுதாய மக்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது நீங்கள் அனைவரும் அறிந்த விடயமே.

மனித உரிமை மீறல்களுக்கெதிராக குரலெழுப்பும் ஊடகவியலாளர்கள் மீதும் பல்வேறு உரிமை மீறல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன்;; சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் அச்சுறுத்தல் பல்வேறு வகைகளிலும் மேற்கொள்ளப்படுகின்றது. ஊடகவியலாளர் சுதந்திரம் தற்போதைய இலங்கை அரசாங்கத்தில் இல்லை என்றே கூற வேண்டும்.

தமிழர்களுக்கான உரிமையினை வென்றெடுக்க உலக நாடுகள் வரை எம் தமிழர்களின் குரல் எழ வேண்டும். மேற்கொள்ளப்படும் இந்தப் போராட்டத்தில் எனது முழு ஆதரவினையும் வழங்குகின்றேன் என மீண்டும் ஒரு முறை கூறிக்கொள்கின்றேன்.

 

https://www.meenagam.com/தமிழின-அழிப்பிற்கு-எதிரா/

  • கருத்துக்கள உறவுகள்

எந்தச் சவால் வந்தாலும் திட்டமிட்டபடி போராட்டம் : வட,கிழக்கு சிவில் அமைப்புகள் உறுதி

(பட்டிருப்பு, ஆரையம்பதி நிருபர்கள்)

வட,கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றுதிரளுமாறு வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

20210131_123056-300x169.jpg

எதிர்வரும் 03.02.2021 தொடக்கம் 06.02.2021 வரை மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளமையால் மேற்படி போராட்டத்துக்கு ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் அமெரிக்க மிஷன் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் கிழக்கு மாகாண சிவில் சமூக ஏற்பாட்டில் இடம்பெற்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 தொற்று நோயைக் காரணம் காட்டி எமது அகிம்சைவழிப் போராட்டத்துக்கு அரசாங்கம் பல்வேறு வழிகளிலும் தடைகளை ஏற்படுத்தலாம். இத்தடைகளை எவ்வாறு எதிர்கொள்வது, அவற்றைத் தாண்டி போராட்டத்தை எவ்வாறு முன்கொண்டு செல்வது தொடர்பாக பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாநகர முதல்வர், பல்சமயத் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புகள், ஊடகவியலாளர்கள் என பலரும் தமது கருத்துகளை முன்வைத்தனர்.

எதிர்வரும் 4 திகதி இலங்கையின் சுதந்திர தினம் அன்று வடக்கு, கிழக்கு பகுதிகளில் கறுப்புக் கொடி தொங்கவிடப்பட்டு, அன்றைய தினம் கரிநாளாக அனுஷ்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழ்கின்ற சகோதர இனத்தவர்களான முஸ்ஸிம்களுக்கு ஏற்படுகின்ற அநீதிகள் குறிப்பாக கொவிட்-19 தொற்று நோயால் உயிரிழக்கும் அவர்களின் உறவுகளின் ஜனாசாக்கள் எரிக்கப்படுவது தொடர்பாகவும் கலந்துரை யாடப்பட்டது.  முஸ்ஸிம்களும் இந்த அகிம்சை வழிப் போராட்டத்துக்கு தங்கள் ஆதரவை வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

இறுதியில் இலங்கை அரசாங்கத்தினால் எவ்வாறான தடைகள் வந்தாலும் அனைத்தையும் சவாலாக ஏற்றுக் கொண்டு போராட்டம் முன்னெடுக்கப்படும் என ஏகமனதாக தீர்மானிக்கப் பட்டதுடன், இப்போராட்டத்துக்கு வட,கிழக்கு வாழ் பொதுமக்கள் அனைவரும் தமது ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டும் எனவும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

https://thinakkural.lk/article/108793

 

  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையானபோராட்டத்திற்கு சிவில் அமைப்புகள்,பொதுஅமைப்புகள்,அரசியல் கட்சிகள் ஆதரவு

 
IMG_6284-696x392.jpg
 36 Views

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலுக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவில் அமைப்புகள்,பொது அமைப்புகள்,அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மட்டக்களப்பில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இவ்வாறு அரசியல் கட்சிகளால் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த விசேட கூட்டம் அமெரிக்க மிசன் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்,கட்சிகளின் பிரதிநிதிகள்,சர்வமத அமைப்புகளின் பிரதிநிதிகள்,கால்நடை பண்ணையாளர்கள் சங்க பிரதிநிதிகள்,இளைஞர்,மகளிர் அணிகளின் பிரதிநிதிகள் என பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

IMG_6238.jpg

இந்நிலையில், நடைபெறவுள்ள இந்த பேரணிக்கு இனபேதங்களையும் கட்சி அரசியலையும் மறந்து அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை பொத்துவிலில் இருந்து மாபெரும் வாகன பேரணி வடக்கின் பொலிகண்டி வரையில் நடைபெறவுள்ளது.

இதனடிப்படையில், தொல்பொருள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக பௌத்தமயமாக்கல் திட்டங்களை அரசாங்கம் முனைப்போடு நடைமுறைப்படுத்திவருவதாகவும் அவற்றினை நிறுத்தி தமிழர்களின் தாயகத்தினை பாதுகாப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என்றும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழர் பகுதிகள் சிங்கள மயமாக்கல் என்னும் நிகழ்ச்சி திட்டத்தின் மூலமாக காணிகள் அபகரிக்கும் நிலையுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் சுட்டிக்காட்டினார்.

“இந்த மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு வடகிழக்கு எங்கும் உள்ள தமிழ் பேசும் உறவுகளும் ஆதரவினை வழங்கி மிகப்பிரமாண்டமான பேரணியாக இதனை நடாத்தவேண்டும். இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் பேசும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்ல ஆதரவு வழங்கவேண்டும்” என முலும் அவர் கேட்டுக்கொண்டார்.

IMG_6282.jpg

இந்நிலையில், “வடகிழக்கு தமிழர்களின் தாயகம்,தமிழர்களின் தாயகமாக அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த பேரணியானது தமிழர்களுக்கு மிகவும் முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கருத்து கூறுகையில், “இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக ஜனநாயக விரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கும், தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற அநீதிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்கு கிழக்கு மாகாண மக்கள் முழுமையான ஆதரவினை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றனர்” என்றார்.

இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு களுவாஞ்சிக்குடி  காவல்துறையினரால் குறித்த போராட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாதென நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தடை உத்தரவு குறித்து அவர் கூறுகையில், “இவ்வாறான தடை உத்தரவுகள் எதிர்பார்க்கப்பட்டவைதான். நீதி மன்றத்தின் கட்டளையை மதிக்கின்றோம்” என்றார்.

 

https://www.ilakku.org/?p=40953

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு வடக்கில் பூரண ஆதரவு!

வடக்கு, கிழக்கில் இடம்பெறும் பௌத்த மயமாக்கல் – தமிழருக்கு எதிரான அடக்கு முறைகளை கண்டித்து இடம்பெறவுள்ள தொடர் போராட்டத்திற்கு வடக்கு மாகாண சிவில் அமைப்புகள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள், மத அமைப்புக்கள் முழுமையாக ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளன.

அத்துடன் வடக்கு மாகாணத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொது அமைப்புகளையும் மக்களையும் ஒன்றிணைத்து மாபெரும் எழுச்சியை உருவாக்க மாகாண, மாவட்ட இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொத்துவிலில் ஆரம்பமாகும் பேரணி, முக்கிய நகரங்களில் நடை பவனியாகவும் ஏனைய இடங்களில் வாகனப் பேரணியாகவும் பொலிகண்டியை வந்தடையும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 
 

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வளாகத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் இன்று முற்பகல் 11.40 மணிக்கு ஆரம்பமாகி இந்தக் கூட்டம் 3 மணி நேரம் இடம்பெற்றது.

வடக்கு மாகாண, சமயத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உட்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடகிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த கோரியும் வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நாளைமறுதினம் 3ம் திகதி முதல் 6ம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தின் ஏற்பாடுகள் தொடர்பான அனைத்து விடயங்களும் ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்துவதற்கு அறிக்கை வெளியிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

தமிழர் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு வடக்கில் பூரண ஆதரவு! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்

‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ எழுச்சிப் போராட்டத்துக்கு முழு ஆதரவு-வடக்கு மாகாண மத அமைப்புகள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள்

(சி.எல்.சிசில்)

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டத்துக்கு வடக்கு மாகாண மத அமைப்புகள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் தங்கள் ஆதரவை முழுமையாக வழங்குவதாக அறிவித்துள்ளன.

poththuvil-300x169.jpg

அத்துடன் வடக்கு மாகாணத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொது அமைப்புகளையும் மக்களையும் ஒன்றிணைத்து மாபெரும் எழுச்சியை உருவாக்க மாகாண, மாவட்ட இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொத்துவிலில் ஆரம்பமாகும் பேரணி, முக்கிய நகரங்களில் நடை பவனியாகவும் ஏனைய இடங்களில் வாகனப் பேரணியாகவும் பொலிகண்டியை வந்தடையும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வளாகத்திலுள்ள தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் நேற்று முற்பகல் 11.40 மணிக்கு ஆரம்பமான இந்தக் கூட்டம் சுமார் 3 மணி நேரம் இடம்பெற்றது.
வடக்கு மாகாண சமயத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உள்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கை களுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடகிழக்கு தமிழ்க் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக் கோரியும் வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டத்தை 3ஆம் திகதி புதன்கிழமை முதல் 6ஆம் திகதி வரை நான்கு நாட்கள் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தின் ஏற்பாடுகள் தொடர்பான அனைத்து விடயங்களும் ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்துவதற்கு அறிக்கை வெளியிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/109006

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.