Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களத்தில் முக்கிய இதிகாசமான குருந்தி இதிகாசம் குருந்தனூர் மலையில் வைத்தே எழுதப்பட்டது : மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தில் முக்கிய இதிகாசமான குருந்தி இதிகாசம் குருந்தனூர் மலையில் வைத்தே எழுதப்பட்டது : மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

சிங்களத்திலுள்ள முக்கிய இதிகாசங்களில் ஒன்றான குருந்தி இதிகாசம், முல்லைத்தீவு குருந்தனூர் மலையில் வைத்தே எழுதப்பட்டுள்ளதாக ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழக பௌத்தபீட விரிவுரையாளர் பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அகழ்வு ஆராச்சி பணிகள் முன்னெடுக்கப்படும் குருந்தூர் மலைக்கு பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட பௌத்த மதகுருமார்கள் படை அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் (30) மாலை சென்று பார்வையிட்டுள்ளனர்.

பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அபயதிஸ்ஸ தேரர்,

மகாவம்சம் மற்றும் எமது இதிகாசங்களில் சொல்லப்பட்ட குருந்து விகாரை, குருந்தாசோக விகாரை ஆகியவற்றை பார்க்கவே வந்துள்ளோம்.

அங்கு ஒரு விகாரை இருந்தது பின்னர் அழிவடைந்து விட்டது. அந்த இடங்களில் அதன் சிதைவுகள் உள்ளன. சந்திரவட்டக்கல் போன்ற விகாரைக்குரிய சின்னங்கள் அங்கு சிததைவடைந்த நிலையில் உள்ளன.

சிங்களத்தில் உள்ள எட்டு இதிகாசங்களில் 2 பாளி மொழியில் உள்ளன. ஏனையவை சிங்கத்தில் உள்ளன. இதிலொன்று குருந்தி இதிகாசம் ஆகும். இது இந்த இடத்தில் வைத்தே எழுதப்பட்டது.

குருந்தகாசரியோ என்ற விகாராதிபதியினாலேயே இந்த இடம் உருவானது.

இலங்கையில் எல்லா சமூகமும் வர்க்க பேதமின்றி அவரவர்கள் தத்தமது இடங்களை உரிமை கொண்டாட முடியும். இ்த இடம் இலங்கையின் முக்கியமான இடம். அதனாலேயே பார்வையிட வந்தேன் என்றார்.
 

https://www.meenagam.com/சிங்களத்தில்-முக்கிய-இதி/

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

மகாவம்சம் மற்றும் எமது இதிகாசங்களில் சொல்லப்பட்ட குருந்து விகாரை, குருந்தாசோக விகாரை ஆகியவற்றை பார்க்கவே வந்துள்ளோம்.

யம்மோ ..! மின்னல் வேகமால்லொ கிடக்கு..

IMG-20210202-033934.jpg 

@ எடுப்பு.. கிந்தியனை நம்பாமல் தமிழகத்தவர் சார்பாக ஐ.நாவில் முறையிட அமைப்பு ரீதியாக ஏதாவது ஏற்பாடு செய்தல் வருங்கால சந்ததிக்கு நல்லம் ..👍

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு கணக்க  எழுதக்கூடாது கீழ் உள்ள வரியே காணும் விளங்குபவர்களுக்கு விளங்கினா சரி .

 

 

சிங்களவர்கள் முட்டாள் என்பது Fantasy?????????

தேரர்கள் ஒரு நாளும் எந்த உயிருக்கும் சேதத்தை விளைவிப்பதில்லை. ஒரு எறும்பைக்கூட அவர்கள் மிதிப்பதில்லை. எனவே அவர் கூறுவது நிச்சயமாக உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.

இந்த மலை தமிழர்களுக்கு சொந்தமானது என்று கூறுவதற்கு ஆதாரமாக ஏதாவது ஒரு வரலாற்று ஆவணமாவது எம்மிடம் உள்ளதா? ஆகக் குறைந்தது ஒரு இலக்கியம் சார்ந்த ஒரு வரலாற்று பதிவு தானும் எம்மிடம் உள்ளதா? சிங்களவர்கள் தேரர் சொன்ன விடயம் மட்டுமன்றி பல ஆதாரங்களை தம் ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் எம்மிடம் இப்படி ஒன்றுமே இல்லை.

எம் வரலாற்றில் தமிழ் பெளத்தம் இருந்ததற்கான போதுமான ஆதாரங்கள் இல்லாமல் போனது ஏன் என்று புரியவில்லை. அல்லது வரலாறு எமக்கு அவசியம் இல்லை என்று எம் முன்னோர் இருந்துவிட்டனரோ தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.