Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னைக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னைக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி

 
spacer.png

நான் சென்னைக்கு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக மக்கள் அளித்த அன்பான வரவேற்புக்கு நன்றி எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 14) சென்னை வந்துள்ளார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் காலை 10.35 மணிக்கு வந்த அவர், அங்கிருந்து 10.40 மணியளவில் ‘ஹெலிகாப்டரில் புறப்பட்டு, சென்னை நேப்பியர் பாலம் அருகில் உள்ள ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்குக் காலை 11 மணியளவில் வந்தார். சாலையின் இருபுறங்களிலும் நின்ற அதிமுக, பாஜக தொண்டர்கள் கலைநிகழ்ச்சிகளுடன் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர்.

அடையார் கடற்படை தளத்தில், பிரதமர் மோடியை ஆளுநர், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்கு கார் மூலம் வந்த பிரதமர் மோடி, அங்கு அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கியை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரானது.

இதைத்தொடர்ந்து விழா மேடைக்கு வந்த அவர், ஜெயலலிதா, எம்ஜிஆர் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது பிரதமருக்குக் கிருஷ்ணர் சிலை ஒன்றைப் பரிசாக வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்நிகழ்ச்சியில், ஆளுநர், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

spacer.png

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வரவேற்புரையாற்றிப் பேசினார். “சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கியதற்குப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. தமிழகத்திற்கு இரண்டு முக்கிய ரயில் திட்டங்களைக் கொடுத்தமைக்கு நன்றி. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையிலான நல்லுறவை வெளிப்படுத்துவது மெட்ரோ ரயில் திட்டம் தான். பிரதமரின் நடவடிக்கையால் தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினராக இருந்தாலும் நல்லதைப் பாராட்டத் தவறாதவர். பிரதமர் மோடியைப் போன்ற ஒப்பற்ற தலைவர்களைக் காண்பது அரிது” என்று புகழாரம் சூட்டினார்.

துணை முதல்வரைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கடந்த மாதம் 18ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தபோது தமிழகத்தில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கத் தமிழகம் வருமாறு வேண்டுகோள் விடுத்ததை அடுத்து இங்கு வந்தமைக்கு எனது சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் நன்றி” என தெரிவித்தார். தமிழகத்துக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களை அறிவித்ததற்கும், நீர் மேலாண்மைக்கான சிறந்த விருது தமிழகத்திற்குக் கிடைத்ததற்கும் பெருமைப்படுகிறேன் என்று கூறி அதற்கும் நன்றி தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு எனத் தமிழில் பேசத் தொடங்கிய பிரதமர், சென்னைக்கு வந்தது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துத் தொடர்ந்து பேசி வருகிறார்.

 

 

https://minnambalam.com/public/2021/02/14/16/chennai-modi-speech

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für மோடி

யாழ்ப்பாணத்துக்கு வந்த ஒரேயொரு இந்தியப் பிரதமர் நான்தான்- சென்னையில் ஈழத் தமிழர்கள் பற்றி மோடி உரை!!

தமிழகத்தின் சென்னை மாநகருக்கு இன்று விஜயம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஈழத் தமிழர்கள் மற்றும் யாழ்ப்பாணம் பற்றி உரையாற்றியுள்ளார்.

இதன்போது, இலங்கை தமிழர்களுக்காக இந்திய அரசாங்கம் செய்த பல்வேறு உதவித் திட்டங்கள் குறித்தும் சுட்டிக்காட்டியதுடன் பல்வேறு உதவித் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

அவர் உரையாற்றுகையில், “இலங்கை தமிழர்களின் யாழ்ப்பாணம் சென்றுவந்த ஒரே இந்தியப் பிரதமர் நான் தான். கடந்த கால அரசுகளைக் காட்டிலும் தற்போதைய மத்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கு உதவி வருகிறது.

இலங்கைத் தமிழர்களுக்காக சுமார் 50ஆயிரம் வீடுகளை மத்திய அரசு கட்டிக்கொடுத்துள்ளது. மலையக மக்களுக்கும் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையில் தமிழர்களின் உரிமையை உறுதிப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அத்துடன், சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவையும் தொடங்கப்பட்டுள்ளது

மேலும், யாழ்ப்பாணத்தில் இந்தியாவினால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ள கலாசார மண்டபம் விரைவில் திறக்கப்படும். அதேபோல், யாழ்ப்பாணம் – மன்னார் இடையிலான ரயில் பாதை சீரமைக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, இலங்கை தமிழர் உரிமைக்காக, இலங்கை மத்திய அரசாங்கத்தை இந்திய அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், ஈழத் தமிழர்கள் சமத்துவம், சம உரிமையுடன் வாழ்வதை உறுதி செய்வோம்.

இதனிடையே, இலங்கை அரசாங்கத்தினால் கைதுசெய்யப்படும் மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதுடன் இலங்கையில் உள்ள மீனவர்களின் படகுகளை மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இலங்கை வசமிருந்த சுமார் 300 படகுகளை இதுவரை திரும்பப் பெற்றுள்ளோம்” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

http://athavannews.com/யாழ்ப்பாணத்துக்கு-வந்த-ஒ/

  • கருத்துக்கள உறவுகள்

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்ற மாதிரி அரசியல்வாதியின்  போச்சு தேர்தல் முடிஞ்சா போச்சு.
அரசியல்வாதிகள் வாக்குக்காக எதையும் அடித்துவிடுவார்கள்( OV-OP)

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

சென்னைக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி

 

எவ்வளவோ அழிகள் நடந்த போதும் வராத மோடி தேர்தலுக்காக வந்து குனிந்து நிற்பது வேடிக்கையாக உள்ளது.

5 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்துக்கு வந்த ஒரேயொரு இந்தியப் பிரதமர் நான்தான்- சென்னையில் ஈழத் தமிழர்கள் பற்றி மோடி உரை!!

ஐயா வந்து நல்லூர் கோவில் மரபையே மாற்றப் பார்த்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.