Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையிலும் பா.ஜ.க.அரசாங்கத்தை அமைக்க திட்டமுள்ளது- அமித்ஷா தெரிவித்ததாக வெளியான கருத்தினால் சர்ச்சை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für அமித்ஷா

இலங்கையிலும் பா.ஜ.க.அரசாங்கத்தை அமைக்க திட்டமுள்ளது- அமித்ஷா தெரிவித்ததாக வெளியான கருத்தினால் சர்ச்சை

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு நேபாளத்திலும் இலங்கையிலும் பாரதிஜனதா அரசாங்கத்தினை அமைக்கும் திட்டமுள்ளது என திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் டெப் தெரிவித்துள்ள கருத்தினால் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு பிப்லாப் டெப் தெரிவித்ததாக ஈஸ்ட் மொஜொ தெரிவித்துள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த சனிக்கிழமை திரிபுராவிற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உள்துறை அமைச்சர், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிபெற்ற பின்னர் பா.ஜ.க.விற்கு இலங்கையிலும் நேபாளத்திலும் அரசாங்கத்தை அமைக்கும் எண்ணமுள்ளது என குறிப்பிட்டார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையிலும் நேபாளத்திலும் எங்களது கட்சியை விஸ்தரிக்கவேண்டும். அங்கு ஆட்சியை அமைப்பதற்காக வெற்றிபெறவேண்டும் எனவும் அமித்ஷா  கூறியதாக  முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை திரிபுரா முதலமைச்சர் தெரிவித்துள்ள கருத்து குறித்து மத்திய அரசாங்கம் விளக்கம் அளிக்கவேண்டும் என திரிபுராவின் எதிர்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

முதலமைச்சருக்கு  ஜனநாயகம் மற்றும் அரசமைப்பு குறித்து எதுவும் தெரியாது என குறிப்பிட்டுள்ள எதிர்கட்சி, அமித்ஷாவின் கருத்துக்கள் வெளிநாடு ஒன்றின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு சமம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

http://athavannews.com/இலங்கையிலும்-பா-ஜ-க-அரசாங/

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für அமித்ஷா

இலங்கையிலும் பா.ஜ.க.அரசாங்கத்தை அமைக்க திட்டமுள்ளது- அமித்ஷா தெரிவித்ததாக வெளியான கருத்தினால் சர்ச்சை

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு நேபாளத்திலும் இலங்கையிலும் பாரதிஜனதா அரசாங்கத்தினை அமைக்கும் திட்டமுள்ளது என திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் டெப் தெரிவித்துள்ள கருத்தினால் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு பிப்லாப் டெப் தெரிவித்ததாக ஈஸ்ட் மொஜொ தெரிவித்துள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த சனிக்கிழமை திரிபுராவிற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உள்துறை அமைச்சர், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிபெற்ற பின்னர் பா.ஜ.க.விற்கு இலங்கையிலும் நேபாளத்திலும் அரசாங்கத்தை அமைக்கும் எண்ணமுள்ளது என குறிப்பிட்டார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையிலும் நேபாளத்திலும் எங்களது கட்சியை விஸ்தரிக்கவேண்டும். அங்கு ஆட்சியை அமைப்பதற்காக வெற்றிபெறவேண்டும் எனவும் அமித்ஷா  கூறியதாக  முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை திரிபுரா முதலமைச்சர் தெரிவித்துள்ள கருத்து குறித்து மத்திய அரசாங்கம் விளக்கம் அளிக்கவேண்டும் என திரிபுராவின் எதிர்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

முதலமைச்சருக்கு  ஜனநாயகம் மற்றும் அரசமைப்பு குறித்து எதுவும் தெரியாது என குறிப்பிட்டுள்ள எதிர்கட்சி, அமித்ஷாவின் கருத்துக்கள் வெளிநாடு ஒன்றின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு சமம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

http://athavannews.com/இலங்கையிலும்-பா-ஜ-க-அரசாங/

ஏற்கனவே முள்ளிவாய்க்காலில் அழித்து முடிந்து இப்ப மத ரீதியாக அழிக்க திட்டமிடுகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இலங்கையில் மீண்டும் தனது படைகளை இறக்க ஆயத்தமாகிறது என்று ஏற்கனவே இங்கு பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளேன். 

இவர்களின் கூற்றுக்கள் அதனை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. 

🤥

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சியை அல்ல, கட்சியினை.... இது தொடர்பில், சிங்களமும் குழம்பி உள்ளது.

இரண்டு நாடுகளிலும், இந்து மதம் இருப்பதால், அதன் மேன்பாட்டுக்காக, கட்சி கிளைகள் ஆரம்பிக்க உள்ளோம் என்று தெரிவித்ததாக ஒரு செய்தி... சொல்கிறது.

இரண்டொரு நாளில் தெரியும்... 

ஆனாலும், Times of India, அரசு அமைக்கும் என்று சொன்னதாகவே கொழும்பு டெய்லி மிரர் சொல்கிறது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பாஜக இலங்கையில் தனது அரசியல் பிரிவை உருவாக்கி தேர்தலில் போட்டியிடுவது சாத்தியமா ? இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கருத்து என்ன?

Digital News Team 2021-02-16T11:22:29

இந்தியாவின் ஆளும் பாரதியஜனதா கட்சி இலங்கையில் தனது கிளையொன்றை அல்லது அரசியல் பிரிவை ஸ்தாபித்து தேர்தலில் போட்டியிடுவது சாத்தியமற்ற விடயம் என தெரிவித்துள்ள இலங்கையின் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு இலங்கையின் சட்டங்கள் அதற்கு அனுமதியளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால்புஞ்சிவேவ இதனை தெரிவித்துள்ளார்.

Election-300x158.jpg

இலங்கையின் அரசியல் கட்சியோ குழுவோ வெளிநாட்டு கட்சி அல்லது அமைப்புடன் வெளித்தொடர்புகளை பேணமுடியும் ஆனால் வெளிநாடொன்றை சேர்ந்த அரசியல் கட்சி இலங்கையில் போட்டியிடுவதை எங்கள் சட்டம் அனுமதிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு நேபாளத்திலும் இலங்கையிலும் பாரதிஜனதா அரசாங்கத்தினை அமைக்கும் திட்டமுள்ளது என திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் டெப் தெரிவித்துள்ள கருத்தினால் சர்ச்சை உருவாகியுள்ள நிலையிலேயே இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்திய உள்துறை அமைச்சர் இலங்கையிலும் நேபாளத்திலும் பாஜக அரசாங்கத்தை அமைப்பதற்கான திட்டம் குறித்து தெரிவித்தார் என பிப்லாப் டெப் தெரிவித்ததாக ஈஸ்ட் மொஜொ தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை திரிபுராவிற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உள்துறை அமைச்சர் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிபெற்ற பின்னர் பாஜகவிற்கு இலங்கையிலும் நேபாளத்திலும் அரசாங்கத்தை அமைக்கும் எண்ணமுள்ளது என குறிப்பிட்டார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய சந்திப்பின்போதுபாஜக பல மாநிலங்களில் ஆட்சியமைத்துள்ளது குறித்து தெரிவிக்கப்பட்டபோது இலங்கையும் நேபாளமும் மிச்சமிருக்கின்றன என அமித்சா தெரிவித்தார் நாங்கள் இலங்கையிலும் நேபாளத்திலும் நாங்கள் கட்சியை விஸ்தரிக்கவேண்டும் அங்கு ஆட்சியை அமைப்பதற்காக வெற்றிபெறவேண்டும் என தெரிவித்தார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

திரிபுரா முதலமைச்சர் தெரிவித்துள்ள இந்த கருத்து குறித்து மத்திய அரசாங்கம் விளக்கம் அளிக்கவேண்டும் என திரிபுராவின் எதிர்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

முதலமைச்சருகு ஜனநாயகம் மற்றும் அரசமைப்பு குறித்து எதுவும் தெரியாது என குறிப்பிட்டுள்ள எதிர்கட்சி அமித்சாவின் கருத்துக்கள் வெளிநாடு ஒன்றின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு சமம் என குறிப்பிட்டுள்ளது.

 

https://thinakkural.lk/article/111057

 

  • கருத்துக்கள உறவுகள்

'இலங்கையில் பாஜக ஆரம்பிக்கும் நோக்கம் உள்ளது' - மறவன்புலவு க. சச்சிதானந்தன்

  • ரஞ்சன் அருண் பிரசாத்
பிப்லப் குமார் தேப்

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, பிப்லப் குமார் தேப்

பாரதீய ஜனதா கட்சி நேபாளம் மற்றும் இலங்கையில் தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான அமித் ஷாவை மேற்கோள்காட்டி திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் வெளியிட்ட கருத்து இலங்கையில் பேசு பொருளாக மாறியுள்ளது. 

இலங்கை பாஜகவை தொடங்க அங்குள்ள இந்துத்துவவாதிகள் விரும்புகின்றனர் என்கிறார் இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர்.

பிப்லப் குமார் தேப் வெளியிட்ட கருத்து தொடர்பான தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாக நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் க்யாவாலி ட்விட்டர் பயனர் ஒருவருக்கு பதில் அளித்துள்ளார். இந்தியாவில் உள்ள நேபாள தூதரகமும் இந்திய அதிகாரிகளிடம் தங்கள் எதிர் கருத்தைத் தெரிவித்துள்ளாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள், இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்கான உதவிகள், 5 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் உள்ளிட்டவற்றை இலங்கையில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் நோக்குடனேயே பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய அரசு செய்தது என்றும் பேச்சுகள் எழுந்துள்ளன.

'தமிழர் பகுதிகளில் தேவையற்ற அழுத்தம்'

VIDURA WECKRAMANAYAKE

பட மூலாதாரம், VIDURA WECKRAMANAYAKE FACEBOOK PAGE

இலங்கை தமிழர் பகுதிகளில் தேவையற்ற விதத்தில் அழுத்தங்களை உண்டாக்குவதற்காக இவ்வாறான கருத்தொன்று வெளியிடப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுவதாக ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். 

இலங்கை அரசாங்கத்தை நிர்க்கதி நிலைக்கு உட்படுத்தி, இந்தியாவிற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளா மேற்கொள்ளப்படுகின்றது எனவும் கேள்வி எழுவதாக அவர் கூறியுள்ளார். 

அதேபோன்று, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வழங்க மறுப்பு தெரிவித்த சந்தர்ப்பத்தில் இருந்தா, இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது எனவும் ராஜாங்க அமைச்சர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். 

இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் உள்ளக நோக்கம் என்னவென்பது தொடர்பில் முதலில் ஆராய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவிக்கின்றார். 

திடீரென வெளியிடப்பட்ட கருத்தின் ஊடாக, இதனை புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். 

'நோக்கம் உள்ளது' - இலங்கை சிவ சேனை 

மறவன்புலவு க சச்சிதானந்தன்

பட மூலாதாரம், மறவன்புலவு க சச்சிதானந்தன்

இலங்கைப் பாரதீய ஜனதாக் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கான நோக்கம் உள்ளதாக இலங்கை சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். 

இலங்கையிலுள்ள இந்துத்துவவாதிகளுக்கே இவ்வாறான நோக்கம் ஒன்று உள்ளதாகவும் தான் உறுதிப்படக் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள கட்சிகளின் பெயரை இலங்கையில் பெயராக்கிக் கட்சி தொடங்குவது புதிய செய்தி அல்ல என அவர் நினைவூட்டியுள்ளார். 

இந்தியாவின் விடுதலை இயக்கமான இந்திய தேசிய காங்கிரஸின் வெற்றிகரமாக செயலைப் பார்த்துக் கொழும்பில் சிங்களவரும் தமிழரும் இணைந்து உருவாக்கியது இலங்கைத் தேசிய காங்கிரஸ் என அவர் கூறியுள்ளார். 

இலங்கை வரலாறு இந்தியப் பண்பாட்டை தழுவியதாகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் என்ன சொல்கிறது? 

பாரதீய ஜனதா கட்சியின் நடவடிக்கைகளை இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளதாக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவராக அமித் ஷா கருத்தொன்றை வெளியிட்டதாக உறுதியான தகவல்கள் எதுவும் கிடையாது இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. 

UDAYA GAMMANPILA

பட மூலாதாரம், UDAYA GAMMANPILA FACEBOOK PAGE

அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார். 

இவ்வாறான கருத்தொன்றை அமித் ஷா தெரிவித்துள்ளதாக திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சரே இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவராக அமித் ஷா, இவ்வாறான கருத்தை வெளியிடும் வகையிலான காணொளி அல்லது அறிக்கை இதுவரை ஊடகங்களுக்கு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிடுகின்றார். 

அவ்வாறு பாரதீய ஜனதா கட்சி இலங்கையில் அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்து, தனது அரசியலை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு, இலங்கை வாழ் தேச பற்றாளர்கள், வெளிநாட்டு கட்சியொன்றுக்கு ஆதரவு வழங்குவார்கள் என தான் நம்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கட்சி இலங்கையில் போட்டியிட முடியுமா?

NIMAL PUNCHIHEWA

பட மூலாதாரம், NIMAL PUNCHIHEWA FACEBOOK PAGE

இலங்கை அரசியலமைப்புக்கு அமைய, வெளிநாட்டு கட்சியொன்றை இலங்கையில் பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடையாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். 

இலங்கையிலுள்ள கட்சிகளுக்கு வெளிநாட்டு கட்சிகளுடன் தொடர்புகளை பேண முடியும் என்ற போதிலும், வெளிநாட்டு கட்சியொன்று நாட்டிற்குள் பதிவு செய்ய முடியாது எனவும் அவர் கூறினார். 

இலங்கை குடியுரிமை பெறாத ஒருவரால், இலங்கையில் கட்சியொன்றை ஆரம்பிக்கவோ வாக்களிக்கவோ முடியாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-56094237

 

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பு புற்றில இருந்து வெளியில வந்திட்டுது... 😂😂

கிழக்கில செளதி அரேபியா, வடக்கில இந்தியா, மன்னாரில இத்தாலியின் றோம், தென்பகுதியில சாளுக்கிய லும்பினி  ...🤥

எம்மதமும் சம்மதம் என்பது இதுதானோ.., 

 

😂😂

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.