Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முரண்பாடு

Featured Replies

எனக்கும்

அவனுக்கும்

வாழ்கையென்னும்

விடுதலையில்லா

சிறைச்சாலைக்குள்

புரிந்துகொள்ளா

முரண்பாடு

விரக்தியான நாட்கள்

கண்ணீர் சிந்தும்

கோலங்கள்

முகமூடியால் மறைத்துக்

கொள்ளும் முரண்பாடு

போலியான உறவிற்கள்

மலர்ந்து நிற்கும்

சின்ன மலர்கள்

சிக்கித் தவிக்கின்றது

பாசமென்னும்

முரண்பாட்டுக்குள்

யாரோடும் சொல்ல

முடியாச் சோகங்கள்

எம் முரண்பாட்டால்

நாளைய முதியோர்

இல்லத்திற்காய்

தயார்ராகின்றது

Edited by கஜந்தி

பல திருமண பந்தங்கள் முரன்பாடுகளுடன் மௌனமாக வாழ்ந்துகொண்டிருப்பதை அழகாகக் கூறியிருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கவி ஒன்று..

முரண்பாடுகளை முழுதாய் புரிந்து கொண்டால் தவிர்க்கலாம்.

இருந்தும் வருபவற்றை புரிந்து கொள்ள முயற்சித்தால் உடைக்கலாம்.

யாரோடும் சொல்ல

முடியாச் சோகங்கள்

எம் முரண்பாட்டால்

நாளைய முதியோர்

இல்லத்திற்காய்

தயார்ராகின்றது

முரண்பாடுகளின் முடிவு

முதியோரில்லமா..

இல்லை..இல்லை

முழு வாழ்வும் ஆகலாம்

நீ முரண்பாடுகளை கொஞ்சம்

முறியடித்தால்..

உன் மனம் உடன்பட்டால்..

அவன் மனம் ஒன்று பட்டால்

உள் மனங்கள் பேசிக்கொண்டால்..

முறையாக வாழ்வு கொண்டால்

முரண்பாடுகளை வெல்லலாம்..

எதுவும் உன் கையிலே..

இல்லை

உங்கள் கையிலே...

எனக்கும்

அவனுக்கும்

வாழ்கையென்னும்

விடுதலையில்லா

சிறைச்சாலைக்குள்

புரிந்துகொள்ளா

முரண்பாடு

ஒரு நாள் இருவருக்கும் விடுதலை கிடைக்கும் அன்று புரிந்து கொள்ள இருவரும் இல்லை :P

நல்ல கவி வரிகள் அக்கா

;)

சகோதரி,

//

யாரோடும் சொல்ல

முடியாச் சோகங்கள்

எம் முரண்பாட்டால்

நாளைய முதியோர்

இல்லத்திற்காய்

தயார்ராகின்றது

//

ஏற்கனவே முதியோர் இல்லங்களை நோக்கி இந்த முரண்பாடு நகர்ந்துவிட்டது... இந்த வெள்ளைக் காரனும் அன்னையர் தினம், தந்தையர் தினம், அந்தத் தினம் இந்தத் தினம் என்று அறிவிச்சது வேறெதற்கு? ஒரு நாள் சரி நினைப்பம் என்ற அடிப்படைச் சிந்தாந்தம் தான்.... எங்கட சனமும் காட் அனுப்புது... பரிசு அனுப்புது... "Wish u happy father's / mother's day" என்ற கோஷம் வேற... இதில என்ன சந்தோசம் இருக்கோ எனக்கு விளங்கல... நாங்கள் எப்பவும் பின்பற்றுபவர்களாக தானே இருக்க விரும்புகிறோம்... உனக்கு ஒரு நாள் என்று பிரிப்பது எல்லாம் பேத்தல்... உறவுகளின் அருமை எல்லா நாளிலும் சிறு மணித்துளியாவது கொண்டாடப்படணும்... (விரும்பியவர்கள் லீவு போட்டு கொண்டாடுங்கள் ... அது உங்க செளகரியம்.... ்-) )

என்னமோ போங்கள்.... என்னடா இவன் என்னோட முரண்படுறான் என்று யோசிக்காதீங்க... ஒரு விசயம் சொல்லட்டா... (சரி ...சரி சொல்லு... நீ சொல்லுறதை கேட்கணும் என்று தலைவிதி.... )

முரண்பாடுகள் இல்லாட்டி வாழ்கையின் உயிர்ப்பு இல்லாமல் போயிடும்... சின்ன சின்ன முரண்பாடுகள் வாழ்க்கையை அழகாக்கும்... ஆனால் என்ன முரண்பாடுகள் முள்ளாக குற்றாமல் ... குற்றியவுடன் ஒத்தடம் தருகின்ற உதடுகளாக இருக்கவேண்டும் என்பது தான் என் கருத்து .... (ம் ஏதோ கருத்து சொல்லுற மாதிரி தான் தோணுது.... )

  • தொடங்கியவர்

ஒரு நாள் இருவருக்கும் விடுதலை கிடைக்கும் அன்று புரிந்து கொள்ள இருவரும் இல்லை :P

நல்ல கவி வரிகள் அக்கா

;)

இதை புரிந்து கொண்டு தானே தப்பை செய்கின்றேம்

இன்றைய பொருளாதார தேடலில் எங்களை தொலைத்துகொண்டு இருக்கின்றேம்

இதனால் பாசத்தை வெளியில் தேடும் அவலம். அழகான வாழ்கை தனை

எங்கள் பிடிவாதத்தால் விதண்டாவாத்தால் அழித்துக்கொண்டு இருக்கின்றேம்

விட்டுக்கொடுத்தல் மறைந்து போகின்றது தீர்வுகள் பிரிவில் நிக்கின்றது

பேசி தீர்க்காமலே கற்பனைக்குள் வாழ்கை தொலைகின்றது இதனை புரிந்துகொள்வது

எப்போது

  • தொடங்கியவர்

பல திருமண பந்தங்கள் முரன்பாடுகளுடன் மௌனமாக வாழ்ந்துகொண்டிருப்பதை அழகாகக் கூறியிருக்கிறீர்கள்.

லிசான் எழுதிய கருத்தை நினைத்து தான் நான் எழுதினேன்

கவி இருப்பது எனக்கும் தெரியும் எனிவரும் நீங்களாவது இதில் மறுபடுங்கள்

கட்டிய முதியோர் இல்லம் எங்களோடு முடியட்டும் உங்கள் வாழ்கையிலாவது ்

மாற்றத்திற்கான வழியைத்தேடுங்கள் கருத்தை உங்கள் இதயத்தில் பதித்து

புதிய வாழ்கையை கட்டியெலுப்புங்கள் எம் இனத்தின் அழிவு வேகமாக

வளர்கின்றது இதில் மாற்றங்களை கொண்டுவரவேண்டும்

அழகாய் சொன்ன இவள்)சகோதரிக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையின் கோலங்களை கவிதையால் தத்துவரீதியாக கூறியுள்ளீர்கள்.

இப்படிப்பட்ட சித்தனைகள் வாழ்க்கையில் அனுபவரீதியாக பாதிக்கப் பட்டவர்களுக்குத்தான் ஏற்படுவதுண்டு.

இதற்குமேல் விமர்சனம் வைக்க முற்பட்டால் நானே உளறுவதாக தோன்றிவிடும்.

பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

வாழ்க்கையின் கோலங்களை கவிதையால் தத்துவரீதியாக கூறியுள்ளீர்கள்.

இப்படிப்பட்ட சித்தனைகள் வாழ்க்கையில் அனுபவரீதியாக பாதிக்கப் பட்டவர்களுக்குத்தான் ஏற்படுவதுண்டு.

இதற்குமேல் விமர்சனம் வைக்க முற்பட்டால் நானே உளறுவதாக தோன்றிவிடும்.

பாராட்டுக்கள்.

அனுபவத்தை இரண்டு வழிகளில் பெறலாம் தானே

மிகவும் அழகான முரண்பாடுகள்

முரண்பாடுகள் தோன்றினால்த்தானே தீர்வுகிடைக்கும்

முரண்படட்டும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

விரக்தியான நாட்கள்

கண்ணீர் சிந்தும்

கோலங்கள்

முகமூடியால் மறைத்துக்

கொள்ளும் முரண்பாடு .

???????????????

அனுபவத்தை இரண்டு வழிகளில் பெறலாம் தானே

நீங்கள் கூறுவது உண்மை தான் கஜந்தி!!!

உங்கள் கவிதையும் நன்றாக அமைந்துரிருக்கு!!!

  • தொடங்கியவர்

நீங்கள் கூறுவது உண்மை தான் கஜந்தி!!!

உங்கள் கவிதையும் நன்றாக அமைந்துரிருக்கு!!!

நன்றிகள் என் சகோதரி

நன்றிகள் இலக்கியன்

சகோதரா என்ன என் வாழ்கை தனை கதையாக்க

போகின்றீகளா அப்படியென்றால் தனிமடலில் விரிவாக தருகின்றேன்

அழகான கதையாக்கி வெளியிடவும்

அழகான கவிதை கஜந்தி

  • தொடங்கியவர்

அழகான கவிதை கஜந்தி

நன்றிகள் முரண்பாடு

இல்லாது ரசித்த உங்களுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாயுள்ளது கஜந்தி.

  • தொடங்கியவர்

கவிதை நன்றாயுள்ளது கஜந்தி.

நன்றிகள் என் உறவிற்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.