Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தீச்சட்டி... போராட்டத்திற்கு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für தீச்சட்டி போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு!

தீச்சட்டி... போராட்டத்திற்கு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு!

எதிர்வரும் 20ஆம் திகதி தீச்சட்டி போராட்டத்திற்கு வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் 5.30 மணியளவில் கிளிநொச்சி ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு விலந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கவன ஈர்ப்ப போராட்டத்தை ஆரம்பித்து 20ஆம் திகதி 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் குறித்த தினத்தன்று தீச்சட்டி போராட்டமாக முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, குறித்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று அழைப்பு விடுத்துள்ளனர்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் தலைவி கனகரஞ்சினி மேலும் தெரிவிக்கையில், உண்மைக்கு நீதிக்குமான குறித்த போராட்டம் சர்வதேசத்தின் ஊடாக நீதியை பெற்றுக்கொள்வதற்காக குறித்த தொடர் போராட்டத்தை ஆரம்பித்திருந்தோம். எங்களுடைய உறவுகள் எமக்கு கிடைக்கும்வரையும், அவர்களிற்கான நீதி கிடைக்கும்வரையிலும் குறித்த போராட்டத்தை கைவிடப்புாவதில்லை.

வருகின்ற 20ம் திகதி வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளும் எமக்கு பலம் சேர்க்க வேண்டும். அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிராம மட்ட அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், போக்குவரத்து கழகங்கள், அரசியல் பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும் அன்றைய தினம் நடைபெறவுள்ள தீச்சட்டி பேரணியில் கலந்துகொண்டு எங்களிற்கான நீதி கிடைக்க வலு சேர்க்குமாறும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த தீச்சட்டி பேரணியானது கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலினை சென்றடையும். இந்த போராட்மானது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இடம்பெறவுள்ள நிலையில் எமக்ககான நீதியை சர்வதேசம் பெற்று தருவதற்காக சர்வதேசத்தில் உள்ள அனைவரினது நெஞ்சங்களிலும் பதியப்பட வேண்டும்.

எமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தவர்களும், எமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்ற அனைவரும் 20ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பேரணியில் கலந்து கொண்டு எமக்கு வலுச் சேர்க்க வேண்டும் என அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

http://athavannews.com/தீச்சட்டி-போராட்டத்திற்/

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

அரசியல் பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும் அன்றைய தினம் நடைபெறவுள்ள தீச்சட்டி பேரணியில் கலந்துகொண்டு எங்களிற்கான நீதி கிடைக்க வலு சேர்க்குமாறும்

ஊர் வம்பினை வான்டடாக வாங்கியெடுப்பதில் எங்கடை சனத்தை அடிக்க ஆக்கள் இல்லை 
கூப்பிட்டெடுத்து ஹிந்துவுக்கும் சந்துவுக்கும் பேட்டிகொடுத்து உங்கடை தன்னெழுச்சி  போராட்டத்தை 
ஹைஜாக் பண்ணவைத்து  இந்தியாவின் அஜெண்டாவுக்கு ரூட் கிளியர் பண்ணி கொடுங்கோ,

ஒருவேளை தீச்சட்டி டைரெக்ட்டாக  இந்தியாவில் ஓடர் பண்ணுப்பட்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுதோ   

  • கருத்துக்கள உறவுகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தீச்சட்டி ஏந்தி போராட்டம்

வடக்கு கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  இன்று காலை ஒன்பது மணிக்கு  தீச் சட்டி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

perani_1.JPG

10.JPG

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுத்த ஆடைகளை அணிந்து சர்வதேசமே இலங்கை  அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்து என்ற பிரதான கோசமாக  முன் வைத்து போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

1.JPG

4.JPG

இப்போராட்டமானது  கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகி ஏ -9 வீதி வழியாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் வரை சென்றடைந்தது.

perani_2.JPG

5.JPG

வடக்கு கிழக்கு விலந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கவன ஈர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன் (20.02.2021)  நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்  தீச்சட்டி போராட்டத்தை  முன்னெடுத்திருந்தனர்

perani_3.JPG

3.JPG

உண்மைக்கு நீதிக்குமான குறித்த போராட்டம் சர்வதேசத்தின் ஊடாக நீதியை பெற்றுக்கொள்வதற்காக  தொடர் போராட்டத்தை ஆரம்பித்திருந்தோம். எங்களுடைய உறவுகள் எமக்கு கிடைக்கும்வரையும், அவர்களிற்கான நீதி கிடைக்கும்வரையிலும் நாம்  எமது போராட்டத்தை கைவிடப்போதில்லை என சங்கத்தின் தலைவி கனகரஞ்சினி தெரிவித்தார்.

2.JPG

9.JPG

 

https://www.virakesari.lk/article/100824

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.