Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீண்டும் குஷ்பு!

Featured Replies

மீண்டும் கற்பு சர்ச்சையில் குஷ்பு! பாமக வக்கீல் நோட்டீஸ்!!

மீண்டும் கற்பு குறித்த விவாதத்திற்குள் நுழைந்து ஆறிப் போன புண்ணை நோண்டிப் பார்த்துள்ளார் குஷ்பு. அவரது புதிய பேச்சால் ஆத்திரமடைந்த பாமக வக்கீல் ஒருவர் குஷ்புவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சர்ச்சையைக் கிளப்பும் என்று தெரிந்தே, சென்சிட்டிவான விஷயங்களை பப்ளிக்காக பேசி பப்ளிசிட்டி தேடிக் கொள்வது சிலரின் வழக்கமாக உள்ளது. தாங்கள் பேசும் பிரச்சினைக்கு தீர்வு இருக்கிறதா என்பது குறித்தெல்லாம் யோசிக்காமல் பேசி விடுவார்கள்.

குண்டைப் போடுவதற்கு முன்பு அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து யோசிப்பதே இல்லை. அந்த வரிசையில் நடிகை குஷ்புவையும் சேர்க்கலாம். கொஞ்ச காலத்திற்கு முன்பு கற்பு குறித்துப் பேசி அவர் பட்ட பாட்டை நாடே அறிந்தது.

படு பட்டவர்த்தனமாக கல்யாணத்திற்கு முன்பு உடலுறவு, கற்பு குறித்து அவர் பேசி விட்டு பிறகு டிவியில் தோன்றி மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நிலைமை ரசாபாசமானது.

குஷ்பு மீது ஊர் ஊருக்கு வழக்குப் போட்டனர். அந்த வழக்குகளிலிருந்து ஒவ்வொன்றாக ரிலீஸ் ஆகி ஒரு வழியாக பிரச்சினையிலிருந்து வெளி வந்தார் குஷ்பு.

இந்த நிலையில் அந்த விவகாரத்தை மீண்டும் தோண்டித் துருவி எடுத்து மறுபடியும் ஒரு சர்ச்சை அலையை எழுப்பியுள்ளார் குஷ்பு. எப்.ஐ.சி.சி. நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார் குஷ்பு.

அந்த நிகழ்ச்சியில் பேசுகையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே கற்பு குறித்த விவகாரத்தில் தன்னைக் கைவிட்டு விட்டன, அநீதி இழைத்து விட்டன என்று கூறியுள்ளார் குஷ்பு.

குஷ்பு பேசுகையில், நான் சட்டத்திற்குப் புறம்பாக எதையும் சொல்லி விடவில்லை. உண்மையில், பாதுகாப்பான செக்ஸ் என்ற விஷயத்தில் அரசின் கொள்கையைத்தான் நான் கூறினேன்.

ஒவ்வொரு பெண்ணும், பாதுகாப்பான செக்ஸை மேற்கொள்ள வேண்டும், ஆணுறைகளை, பெண்ணுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் நான் சொன்னேன்.

கல்யாணத்திற்கு முன்பு ஒரு பெண் உடலுறவு வைத்துக் கொண்டால் கர்ப்பமடையும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க ஆணுறைகளை பயன்படுத்துவது நல்லது என்றுதான் நான் சொன்னேன். அப்படிச் செய்யாமல் பாதுகாப்பாற்ற முறையில் உடலுறவு வைத்துக் கொண்டால் அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினருக்கும் கூட பல பிரச்சினைகள் ஏற்படும் என்பதைத்தான் நான் எடுத்துரைத்தேன்.

இப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தவிர்க்க பாதுகாப்பான செக்ஸே சிறந்த வழி என்றுதான் கூறினேன். இதில் என்ன தவறு இருக்கிறது. ஆனால் பல அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி போராட்டங்கள் நடத்தின.

குறிப்பாக பாமகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் எனக்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்து விட்டன.

நான் அளித்த பேட்டியில் கூறிய கருத்துக்கள் அனைத்துமே மத்திய அரசின் கருத்துக்கள்தான். அதைத்தான் நான் பிரதிபலித்தேன். இதற்காக மத்திய அரசு மீது இந்த கட்சிகளால் வழக்கு போட முடியுமா? நான் ஒரு பெண் என்பதால் இந்தக் கட்சிகள் என்னைக் குறி வைத்து நடந்து கொண்டன என்று பேசினார் குஷ்பு.

மேலும் பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் தன் மீது 24 வழக்குகளை போட்டதாகவும் குஷ்பு குற்றம் சாட்டினார். குஷ்புவின் இந்தப் பேச்சு பாமக வட்டாரத்தில் கடுப்பைக் கிளப்பியுள்ளது.

பாமகவைச் சேர்ர்ந்த முருகன் என்கிற வழக்கறிஞர் நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும், கற்பு குறித்தும், பாமக குறித்தும் பொது இடத்தில் அவதூறாகப் பேசியதாகவும் கூறி குஷ்புவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அவர் கூறுகையில், வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை கற்பு குறித்தும், இதுதொடர்பான விவகாரம் குறித்தும் பொது இடத்தில் எந்தக் கருத்தையும் தெரிவிக்கக் கூடாது என்று மேட்டூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் அதை மனதில் கொள்ளாமல், பொது இடங்களில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதுகுறித்துப் பேசி வருகிறார் குஷ்பு. மேலும், அரசியல் கட்சிகள் தனக்கு எதிராக அநீதி இழைத்து விட்டதாகவும் பேசியுள்ளார் குஷ்பு.

சிலர் நீதியை விலைக்கு வாங்கி விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். யார் நீதியை விலைக்கு வாங்கினார்கள் என்பதை குஷ்பு விளக்குவாரா. எவ்வளவு பணம் கொடுத்து அதை வாங்கினார்கள் என்பதையும் குஷ்பு விளக்குவாரா?

தனது கருத்துக்களுக்கு குஷ்பு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும் என்று கூறினார் முருகன்.

குஷ்பு போட்ட குண்டு பாமக தரப்பில் போய் வெடித்துள்ளது. சிறுத்தைகளும் பாய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • தொடங்கியவர்

ஆமா...நானும் தெரியாமதான் கேக்கிறன்...

ஏதோ உடலாம் .... உறவாம் .... இதெல்லாம் என்னங்க??

கல்யானத்துக்கு முன் பின் என்டெல்லாம் சரி பிழை போடுறாங்க?

யாராச்சும் ரீச்சர்மார் இருந்தா சொல்லுகோ ஏன் பிழையென்டு :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான டீச்சர் ராமதாஸ்..இருக்கிறார்ங்கண்ணா..

ஆமா...நானும் தெரியாமதான் கேக்கிறன்...

ஏதோ உடலாம் .... உறவாம் .... இதெல்லாம் என்னங்க??

கல்யானத்துக்கு முன் பின் என்டெல்லாம் சரி பிழை போடுறாங்க?

யாராச்சும் ரீச்சர்மார் இருந்தா சொல்லுகோ ஏன் பிழையென்டு :unsure:

மாமா நானும் உங்களோட சேர்ந்து படிக்க வரவோ :lol:

  • தொடங்கியவர்

முதல்ல நல்ல ரீச்சர் வேனும் நமக்கு :angry:

முதல்ல நல்ல ரீச்சர் வேனும் நமக்கு :angry:

ஓ அப்படி ஒரு பிரச்சினை இருக்கோ.................சுண்டுட்ட சொன்னா நல்ல டீச்சரா அரேஞ் பண்ணுவார் :P

  • தொடங்கியவர்

ரொம்ப பெண்ணினவாதம் பற்றி கதைக்கிறவங்க தான் நல்லாருக்கும்..

விவாதம் சூடாபோகனும் :unsure:

ஓ அப்ப எனக்கு விளங்கிச்சு இப்ப அவரை இங்கே வர பண்ணுறேன்...........

பெண்கள் நாட்டின் கண்கல்

பெண்கல் இல்லாவில் நாடு இல்லை குடும்பம் இல்லை...........

இன்னும் கொஞ்ச நேரத்தால் எல்லாரும் வருவீனம் ஒருத்தரை செலக்ட் பண்ணி கொள்ளுங்கோ

:P :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜமுனா... எதையாவது எழுதும் போது கொஞ்ச நேரம் ஜோசித்து பார்த்து விட்டு எழுத வேண்டியது தானே... எல்லாரும் சிரிக்க போகின்றார்கள் நீங்கள் எழுதிய பொய்யைப்பார்த்து...

பல பெண்கள் ஒன்று அல்ல இரண்டு அல்ல அதற்கும் அதிகமான ஆண்களுடன் பழ்கி (??)விட்டு பின்னர் ஒரு அப்பாவியை எப்படி திருமணம் செய்கின்றார்கள்?

அனேக பெண்கள் அவர்கள் எக்ஸ் வை எல்லாம் மறைத்து ஒரு அப்பாவியை ( பெண் வாசமே என்ன என்று தெரியாத ஒருத்தன்) முறையாக காதலிக்க வைத்து விடுவார்கள்.. அவனும் பாவம் நம்பி காதலிப்பான்... ஒரு நாள் அல்ல ஒரு நாள் அந்த அப்பாவிக்கு இந்த எக்ஸ் வை எல்லாம் தெரியவர... பெண்கள் சொல்லும் ஒரே வார்த்தை...... ஜயோ... நீ கவலைப்படுவாய் என்று தான் நான் எல்லாத்தையும் மறைத்தேன்... நீ கவலைப்பட்டால் என்னால் தாங்க முடியாது அப்ப்டி இப்படி என்று ஒரு பில்டப்....

ஆக கற்பு என்பது மற்றவர்களுக்காக இல்லாததை இருப்பது போல காட்டிக்கொள்வது... இது பல புலப் பெ(பே)ண்(ய்) களுக்கு பொருந்தும்...

எனக்கு தெரித்த 3 ஆண்கள், நன்றாக படித்து மிகையாக சம்பாதிப்பவர்கள்... இப்படி பெண்களை வாழ்க்கையில் சந்தித்து வாழ்வை தொலைத்து நிற்கின்றார்கள்..

பலர் கேட்கலாம்.. எக்ஸ் வை இருந்தால் என்ன தப்பு என்று.. தப்பெல்லாம் இல்லை...அதை மறைத்து மற்றவரை ஏமாத்தாத வரை...

தப்பு பண்ணுபவர்கள் திருந்த மாட்டார்களா என்று கேட்டால்.... நாய் வாலை நிமித்த முடியுமா.... மனக்கட்டுப்பாடு இப்போது இல்லை என்றால்... பின்னாட்களில் மனக்கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள் என்பதில் என்ன நிச்சயம்?இது ஆண்களுக்கும் பொருந்தும்..

Edited by chumma....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் முக்கியமாக நாம் கருத்தில் கொள்ள வேண்டிய விடயம்... நாம், நானாக இருக்கட்டும் யாராக இருக்கட்டும், எந்த ஒரு விடயத்திலாவது சரியாக இல்லாதவிடத்து... இன்னும் பலர் அதே விடயத்தில் சரியாக இல்லை என்றால்... நமக்கு மனதில் பயம் இல்லாதிருக்கும்.... இது மனித இயல்பு...

அதிலும் சிலர் ஒரு தப்பான விடயத்தை செய்யும் போது, தம்மை நியாயப்படுத்த அவரை சுற்றி உள்ளோரையும் அந்த தப்பை செய்யத்தூண்டுவார்கள்... காரணம் அவர்கள் மனதில் இருக்கும் குற்ற உணர்வை குறைப்பதற்காக.. உதாரணமாக சொல்லப்போனால், ஒரு பெண் தனக்கு ஒரு ஆண் நண்பர் வைத்து கொண்டு ஊர் சுற்றும் போது, அவரது தோழிகளுக்கும் எவனாவது ஒருத்தனை அறிமுகப்படுத்தி வைக்க விரும்புவார்கள்... காரணம் அவர் செய்யும் சில தப்பான காரியங்களை அவரது தோழியும் செய்யும் போது மனதில் குற்ற உணர்வு குறைவதை உணர்வார்கள்... இது மேற்கத்தைய இனத்தவர்களுக்கும் பொருந்தும் (அவர்கள் ஒரு நீண்ட கால serious relationship ல் இல்லாத போது)

இன்னும் ஒரு உதாரணம்... ஒருத்தன் மட்டை போட்டு சம்பாதிக்கும் போது,.... நியாயமாக கஸ்டப்பட்டு சம்பாதிப்பவனை மட்டை போட்டு சம்பாதிக தூண்டுவான்...

இந்த கற்பு பற்றி சொன்னவரோ குஸ்பு.... அவர் கற்போடு இருந்தவாரா என்று கேட்டால்.. பதில் இல்லை என்று வரும்.. ( நீர் பார்த்தனீரா என்று கேட்டால்... என் பதில் ஆம்... காரணம் நான் ஒரு படம் பார்த்திருக்கின்றேன்..) ஆக குஸ்பு தான் செய்த விளையாட்டுக்களை அனைவரையும் செய்விக்க முயல்கின்றார்....

Edited by chumma....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கற்பு என்றால் பால் தானே???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கற்பு என்றால் பால் தானே???

மனதில் சுய நலத்தை வைத்துகொண்டு பால் போல மனம் உள்ளது போல பேசுவார்களே பெண்கள்... அதைத்தான் சொல்கின்றீர்களா வடிவேலு?

Edited by chumma....

ஜமுனா... எதையாவது எழுதும் போது கொஞ்ச நேரம் ஜோசித்து பார்த்து விட்டு எழுத வேண்டியது தானே... எல்லாரும் சிரிக்க போகின்றார்கள் நீங்கள் எழுதிய பொய்யைப்பார்த்து...

தம்பி மேல தாங்கள் வடிவா வாசிகவில்லை இப்படி ஒரு கருத்தை போட்டா தான் ஆட்கள் வருவீனம் நாங்கள் டீச்சரை செலக்ட் பண்ணலாம் என்று போட்டனான்,குட்டி மாமா நம்மன்ட பிளான் சக்சஸ்

:P :unsure:

மனதில் சுய நலத்தை வைத்துகொண்டு பால் போல மனம் உள்ளது போல பேசுவார்களே பெண்கள்... அதைத்தான் சொல்கின்றீர்களா வடிவேலு?

தம்பி நீங்க சொல்லுற்து எல்லாம் விளங்குது எல்லா பெண்களையும் நாங்கள் அவ்வாறு எடுக்க முடியாது தானே

:angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி மேல தாங்கள் வடிவா வாசிகவில்லை இப்படி ஒரு கருத்தை போட்டா தான் ஆட்கள் வருவீனம் நாங்கள் டீச்சரை செலக்ட் பண்ணலாம் என்று போட்டனான்,குட்டி மாமா நம்மன்ட பிளான் சக்சஸ்

:P :unsure:

அப்போ நீங்கள் சொன்னது பொய் என்று நீங்களே ஒத்துக்கொள்கின்றீர்கள்? சரிதானே....

குஷ்புவின் கருத்தில் தவறிருப்பதாகத் தெரியவில்லை.

சினிமாக்களிலும் தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் கற்பு பற்றிய மாயையைப் பரப்பிக்கொண்டிருக்கின்றனை. இந்தியாவில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையைப் பார்த்தாலே புரியும் கற்பு என்பது இந்தியாவில் எப்படி திரைமறைவில் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது என்பது.

கற்பு என்பது பெண்களுக்கு மட்டும்தான் என்றுவேறு இவர்களது எண்ணம்.

குஸ்புவின் கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

இந்தியா போன்ற நாடுகளில் பாதுகாப்பான செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு அவசியம்.

புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள பெரும்பாலானவர்கள் பாதுகாப்பு முறைகளை பற்றி அறிந்தவர்கள். அப்படியிருந்தும் சிலர் நோய்களை வாங்கி யாழ்ப்பாணம் வரை கொண்டு போய் கொடுத்திருக்கிறார்கள்.

அப்போ நீங்கள் சொன்னது பொய் என்று நீங்களே ஒத்துக்கொள்கின்றீர்கள்? சரிதானே....

கிளவர் போய் யாழில எனக்கு சமனா பிரிலியண்டா இருகிறது தாங்கள் தான் தம்பி எப்படி இப்படி எல்லாம் சொன்னது எல்லாம் பொய் என்றாலும் பாருங்கோ எல்லா பெண்களையும் ஒரே கூட்டத்தில் சேர்க்கம் முடியாது உலகத்தில நல்ல பெண்களும் இருகீனம் அதே நேரத்தில நீங்க சொல்லுற ஆட்களும் இல்லை என்று சொல்லவில்லை.................ஏன் ஆண்களில அப்படி ஆட்கள் இல்லையா??? :lol:

சோ என்ட கொன்குலுசன் தவறு விடுவது மனித இயல்பு மன்னிபது ஜம்முவின் இ.........யல்பு :P

அப்ப வரட்டா.......... :P

கற்பு என்பது பெண்களுக்கு மட்டும்தான் என்றுவேறு இவர்களது எண்ணம்.

இதும் நல்ல பொயிண்ட் தான் கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமா ஆண்களுக்கு இல்லையா என்ற விவாதத்தை நான் தொடக்கி விடுகிறேன் நீங்கள் தொடர்ந்து உங்கள் எண்ண கருத்துகளை வைக்கவும் :unsure:

Edited by Jamuna

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.