Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனது 180 பேர்ச் காணியை இராணுவத்திற்கு அன்பளிப்பு செய்த மூத்த பிரஜை ..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

154732976_3829977037088600_5903123874391906470_o.jpg?_nc_cat=104&ccb=3&_nc_sid=110474&efg=eyJpIjoidCJ9&_nc_ohc=qrFR1QPwTioAX-NXpND&_nc_ht=scontent.fcmb3-1.fna&tp=14&oh=34fd27304b2e524740fe0f6b3d59f684&oe=605F50FB

 

நுவரெலியாவில் வசிக்கும் தோட்ட தொழில் துறையில் அனுபவம் மிக்க மூத்த பிரஜை ஒருவரின் குடும்பத்தினர் தாய்நாட்டின் பாதுகாவலராக இருந்துவரும் இராணுவத்தின் ஒப்பற்ற சேவையை பாராட்டும் வகையிலும், அந்த அர்பணிப்புக்களை அங்கீகரிக்கும் வகையில் நுவரெலியாவிலுள்ள தமக்கு சொந்தமான 180.2 பேர்ச்சஸ் காணித்துண்டை விடுமுறை நாட்களில் இராணுவத்தின் பயன்பாட்டிற்காக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவை சந்தித்து வியாழக்கிழமை (25) கையளித்தார்.

கந்தபொலை கோர்ட் லாட்ஜ் தோட்டத்தில் பகுதியில் வசிக்கும் திரு தொன் பேர்னார்ட் அலோசியஸ் குருகுலாதித்தியா மற்றும் திருமதி லாலனி பெட்ரியஸ் குருகுலாதித்தியா, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் காணியை நன்கொடையாக வழங்குவதற்கான ஆவணங்களில் கைசாத்திட்டனர்.

திரு தொன் பெர்னார்ட் அலோசியஸ் குருகுலதித்தியா தனது மூதாதையர்களிடமிருந்து சொத்துக்களைப் பெற்றுள்ளதுடன், பிரித்தானிய காலனித்துவ காலங்களில் பெறப்பட்ட காணிகள் என நன்கொடையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இயற்கையிடமிருந்து கிடைத்த பரிசை தனது கடின உழைப்பினால் பாதுகாத்து வந்த நன்கொடையாளர்கள் இராணுவத்தினரின் மன உறுதியை அதிகரிக்கும் வகையில் இந்த காணியை கையளித்தமைக்கு ஜெனரல் ஷவேந்திர சில்வா நன்கொடை வழங்கிய தம்மபதியிடம் நன்றிகளை கூறிக்கொண்டதுடன் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன், மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமஹேவா, இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, இராணுவ நிர்வாகம் மற்றும் விடுதி பணிப்பாளர் பிரிகேடியர் பிரியந்த ஹெரத், பிரிகேடியர் சரத் தென்னகோன், 3 வது இலங்கை சிங்கப் படையின் கட்டளை அதிகாரி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

https://www.madawalaenews.com/2021/02/180_27.html

அங்கு வேலை செய்யும் தமிழருக்கு 1000 ரூபா சம்பள பணம் கொடுக்க மனம் வராது ஆனால் தமிழ் இனத்தை அழித்த  சிங்கள ராணவத்துக்கு விடுமுறையில் கூத்தடிக்க இலவசமாய் கொடுப்பினம் இவர்களின் இனத்துவேசம் நம்ம மாற்று கருக்குகளுக்கு தெரியாது தெரிந்தாலும் தெரியாதது போல் ஒப்பாரி வைப்பார்கள் சிங்களத்துக்கு நோகுது என்று .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

நுவரெலியாவிலுள்ள தமக்கு சொந்தமான 180.2 பேர்ச்சஸ் காணித்துண்டை விடுமுறை நாட்களில் இராணுவத்தின் பயன்பாட்டிற்காக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவை சந்தித்து வியாழக்கிழமை (25) கையளித்தார்.

இதையும் சேர்த்து சீனாவிற்கு விலை பேசலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

154732976_3829977037088600_5903123874391906470_o.jpg?_nc_cat=104&ccb=3&_nc_sid=110474&efg=eyJpIjoidCJ9&_nc_ohc=qrFR1QPwTioAX-NXpND&_nc_ht=scontent.fcmb3-1.fna&tp=14&oh=34fd27304b2e524740fe0f6b3d59f684&oe=605F50FB

 

சிங்கத்தோடு சமரசம் பேசும் முயலின் மூஞ்சைகொண்ட பயம் தெரிகிறது அந்தப் பிரசையின் மூஞ்சையில். 😳

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.