Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`இலங்கை முஸ்லிம்களின் உரிமைப் பிரச்சினை அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் தமிழ் நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் போதிய தெளிவில்லை'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

`இலங்கை முஸ்லிம்களின் உரிமைப் பிரச்சினை அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் தமிழ் நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் போதிய தெளிவில்லை'

[21 - June - 2007]

இலங்கையில் இன அடையாளத்திற்கு அப்பால் மொழி அடையாளமே தமிழ், முஸ்லிம் நல்லுறவைப் பேணி வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அநர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி தமிழ்நாட்டு முஸ்லிம்களிடையே இலங்கை முஸ்லிம்களது உரிமைப் பிரச்சினை, அரசியல் அபிலாஷை என்பவற்றில் போதிய தெளிவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற 7 ஆவது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அமீர் அலி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாநாட்டில் அமைச்சர் ஆற்றிய உரை சுருக்கமாகத் தொகுத்துத் தரப்படுகிறது.

இலங்கைத் திருநாட்டின் ஓர் முஸ்லிம் அமைச்சர் என்ற அங்கீகாரத்துக்கப்பால் தமிழ் மீதும், தமிழ் நாட்டின் மீதும் பற்றுக்கொண்ட கோடிக்கணக்கான அபிமானிகளில் நானும் ஒருவன் என்ற அறிமுகத்தோடு உங்கள் முன்னிலையில் சில கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

இஸ்லாமியத் தமிழ் இலக்கிய முது சம்பவங்களை வெளிக்கொணரும் இவ்வுன்னத விழா தமிழ் வளர்த்த தாய் மடியில் கொண்டாடப்படுவது சாலச் சிறந்தது என்பதைக் குறிப்பிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.

தமிழ் எல்லோருக்கும் பொதுவான மொழி. சைவர், வைணவர், சமணர், பௌத்தர், கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்று எல்லோரும் கூடியிழுத்த தேர் தமிழ். வேற்றுமையில் ஒற்றுமையைக் காணலாம் என்ற பண்பாட்டுக்கு `யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற உன்னதமான சமத்துவக் குரலுக்கு உதாரண மொழியாகத் தமிழ் விளங்குகிறது. தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான தொப்புள் கொடி உறவு தொன்மை வாய்ந்தது. லெமூரியா கண்டத்தின் வரலாறு சொல்லும் இரத்தமும் சதையுமான பந்தத்தைத் தொடர்வதற்கு தாய்மொழி தமிழ் எமக்குப் பெரிதும் உறுதுணையாகக் காணப்படுகின்றது.

தமிழுக்கும் - இலக்கியத்துக்கும்- இஸ்லாமியருக்கும் இடையிலான பிணைப்பு மிக ஆழமானது. 16 தொடக்கம் 19 ஆம் நூற்றாண்டு வரை அந்நியரின் ஆதிக்கத்தின் கீழ் தென்னாசிய நாடுகள் சிறைப்பட்டிருந்த காலப்பகுதியில் தமிழும் தமிழ்ப் புலவர்களும் ஆதரிப்பாரற்றிருந்த இருண்ட காலப்பகுதியில் தமிழ்ச் சுடரை அணையவிடாமல் காத்த பெருமை இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களையே சாரும் என்று ஆய்வாளர்கள் கூறும்போது அதனைக் குறித்து நாம் மெய்யாகவே பெருமிதப்படுகின்றோம்.

இவர்கள் ஈன்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்ற ஒப்பற்ற கருவூலத்தின் கதவுகளைத் தனது கலாநிதிப்பட்ட ஆய்வின் மூலம் திறந்து விட்ட பெருமகன்தான் அல்லாமா எம்.எம்.உவைஸ். மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம் முதன் முதலில் தொடங்கிய இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துறைக்கு அவரையே துணைவேந்தராய் நியமித்ததன் மூலம் தமிழ் நாடும் அவரைப் பெருமைப்படுத்தியது. அவர்களைப் பெற்றெடுத்ததால் இலங்கைத் திருநாடும் என்றென்றும் பெருமையடைகின்றது.

இலங்கையில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் பற்றிய முன்னோடி ஆய்வுகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கலாநிதி சு.வித்தியானந்தன் போன்ற தமிழ் அறிஞர்கள் செய்துள்ளார்கள். கலாநிதி வித்தியானந்தன் அவர்களே நமது அல்லாமா உவைஸ் அவர்களை இவ்வாய்வு முயற்சியில் ஈடுபடுத்தியுள்ளார் என அறியும்போது இன அடையாளத்திற்கப்பால் - மொழி அடையாளம் எத்துணை ஆழமாக தமிழ் முஸ்லிம் நல்லுறவை இலங்கையில் பேணி வந்துள்ளது என்பதை நாம் உணர முடிகின்றது. எனவே தான் இஸ்லாமியத் தமிழ் இலக்கியமானது எமது தனித்துவத்தின் உரைகல் எனக் கூறமுடியும்.

இஸ்லாமிய ஏகத்துவ வரையறைக்குள் நின்று சுமார் 22 காப்பியங்கள் உட்பட ஈராயிரம் படைப்புகளை ஈந்து, நான்கு நூற்றாண்டுகளுக்குள் - ஈராயிரமாண்டின் தமிழின் சாதனைக்கு நிகராய் நிமிர்ந்த நமது புலவர்கள் ஆலிம்களாய் சமுதாயத் தலைவர்களாய் அறிஞர்களாய் திகழ்ந்தமைதான் எமது சமுதாயத்தின் பேறு.

இந்தியத் துணைக்கண்டத்தின் இணைப்புப் பாலமாக இலக்கியமே இருந்துள்ளது என்றால் அது மிகையல்ல.

வரலாற்றுக் காலந்தொட்டு தமிழ் நாட்டிலிருந்து பாரம்பரியமாக நமக்குப் பங்கிடப்பட்ட கலை, கலாசாரம், பண்பாடு என்பன எமது அறிவுத்தளத்திலும், உணர்வுத் தளத்திலும் தாக்கம் செலுத்தி வந்துள்ளன என்பதை நன்றியுடன் நினைவு கூர வேண்டும்.

இலங்கையில் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த தென்னிந்திய முஸ்லிம்களால்தான் முக்கியமான ஆத்மீகத் தலங்கள் நிர்மாணிக்கப்பட்டன. கொழும்பு மையப் பகுதியில் அமைந்துள்ள சம்மாங்கோடு முதல் மட்டக்களப்பு வரையான பல பள்ளிவாயல்களில் மிளிரும் அற்புதமான மொகலாய கட்டிடக் கலையழகை நாம் இன்றும் ஆச்சரியத்தால் பார்த்துக்கொண்டிருக்கின்றோ

என்ன சொல்ல வருகிறார் ஒன்றும் புரியவில்லை???????

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லீம்களில் பெரும்பாலோர் தாங்கள் தமிழர் அல்ல, முஸ்லீம்கள் என்று தான் சொல்லுகிறார்கள். ஆனால் இந்தியாவில் தமிழ் பேசும் முஸ்லீம்கள் தாங்கள் தமிழர் என்றும் இஸ்லாமிய மதத்தினைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்கிறார்கள்.

..

Edited by vettri-vel

நான் இரண்டு ஆண்டுகள் முன்பு..கிண்ணியா என்ற ஊரில் இருந்து வந்திருந்த ஒரு முஸ்லிம் இளைஞரை மதுரை செல்லும் ரயிலில் சந்தித்து உரையாடிய போது ...

உங்கள் பிரதேசத்தில் சிங்களர் மிகுதியாக உள்ளனரா என்று வினவினேன் அதற்கு அவர்...எங்கள் பிரதேசத்தில் சிங்களர் 20 சதவீதமும் தமிழர்கள் 50 சதவீதமும் முஸ்லிம்கள் 30 சதவீதமும் இருப்போம் என்றார்... அவர் தமிழர் முஸ்லீம் என்று பிரித்துப்பேசியது அதிர்ச்சியாகவே இருந்தது.

நீங்கள் தமிழர் இல்லையா என்றதற்கு அவர்..... இல்லை நாங்கள் முஸ்லீம்கள் .... ஆனால் எங்கள் தாய்மொழி தமிழ் என்றும் குழப்பினார்..... ஆனால் தமிழகத்தில் முஸ்லீம்கள் தங்களை தமிழரிடமிருந்து அன்ன்னியப்படுத்திக்கொள்வதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.