Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் என்றோ பாஸாகி விட்டேன்; போரை வென்ற கௌரவ பட்டத்துடன் ஜனாதிபதியாக போனஸ் புள்ளியும் பெற்றுள்ளேன்! - கோத்தா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நானோ இந்த அரசாங்கமோ ஈஸ்டர் ஞாயிறை விற்று அதிகாரத்துக்கு வரவில்லை. ஈஸ்டர் தாக்குதலை எம் மீது சுமத்தி அரசியல் இலாபம் பெற சிலர் முயற்சிக்கின்றனர். இந்த தாக்குதல் 2019ம் ஆண்டு நடந்தது.

இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று (6) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும்,

“ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில் உள்ளிட்ட அரசே பொறுப்பு. சிலர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மீது இதனை சுமத்திவிட்டு தப்பிக்க முயற்சிக்கின்றனர்.

 
 

19வது திருத்தத்தை கொண்டு வந்து அவரது அதிகாரத்தை குறைத்தோர் இப்போது மௌனமாக உள்ளனர்.

தாக்குதலுக்கு பொறுப்பானோர் யார் என்பது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் தெளிவாக உள்ளது. நாம் ஆட்சியில் இருப்பதால் தண்டனை கொடுக்கும் பொறுப்பு எமக்கு உள்ளது. அப்பொறுப்பை உரிய முறையில் செய்வோம்.

கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் வேதனை எமக்கு புரிகின்றது. தேவாலயங்கள் தாக்கப்பட்டன. அதனால் அவர் பேசுவது நியாயமானது. அந்தக்காலப்பகுதியில் அமைச்சர்களாக இருந்தோர் தாம் ஆட்சிக்கு வந்தால் பல்வேறு நடவடிக்கைகளை எடுப்போம் என கூறுகின்றனர்.

மரண தண்டனை விதிப்பதாக ஒருவர் கூறுகிறார். அரசாங்கம் எவ்வாறு மரண தண்டனை விதிக்கும் என்று எனக்கு புரியவில்லை. நீதிமன்றுக்கு அழுத்தம் கொடுத்து தண்டனை வழங்க நாம் தயாரில்லை. குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தொடருவோம். நீதிமன்றமே தீர்ப்பளிக்கும்.

நாம் தமிழ் பயங்கரவாதம், இஸ்லாம் பயங்கரவாதம் தலைதூக்க இடமளியோம்.

அனைத்து பாடத்திலும் பெயிலானவர்கள் என்னை பெயிலானவன் என்று கூறுகின்றனர். ஆனால் நான் பாஸாகி பல ஆண்டுகள் ஆகின்றது. 20 ஆண்டுகள் இராணுவத்தில் இருந்தேன். மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு செயலாளராக இருந்தேன். 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தேன். கௌரவமான பட்டத்தை பெற அது போதுமானது. அந்த கௌவர பட்டம், ஜனாதிபதி பதவி எனக்கு போனஸ் புள்ளி. இப்போது இரட்டை பிஎச்டி முடிக்க தயாராகி செயலாற்றுகிறேன்” என்றும் தெரிவித்தார்.

நான் என்றோ பாஸாகி விட்டேன்; போரை வென்ற கௌரவ பட்டத்துடன் ஜனாதிபதியாக போனஸ் புள்ளியும் பெற்றுள்ளேன்! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இப்போது இரட்டை பிஎச்டி முடிக்க தயாராகி செயலாற்றுகிறேன்

அப்ப யாருக்கோ இன்னும் சங்கு ஊதுறதுக்கு ரெடியாகிட்டிருக்கிறார் போல இருக்கு! யார் பெத்த பிள்ளைங்களோ அந்த அல்லாவுக்கே வெளிச்சம்! 😱

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிழம்பு said:

அரசாங்கம் எவ்வாறு மரண தண்டனை விதிக்கும் என்று எனக்கு புரியவில்லை. நீதிமன்றுக்கு அழுத்தம் கொடுத்து தண்டனை வழங்க நாம் தயாரில்லை. குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தொடருவோம். நீதிமன்றமே தீர்ப்பளிக்கும்.

ஜனாதிபதிக்கு அடிக்கடி மறதி நோய் வந்து துலைக்கிறதோ, அல்லது மற்றவர்கள் மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறாரோ சொல்லத் தெரியவில்லை? நீதிமன்றத்தால் மரணதண்டனை தீர்ப்பளித்த கொலைக்குற்றவாளிகளை தான் விடுவித்ததை, தமக்கு சார்பாய் தீர்ப்பளிக்காத நீதிபதிகளை  பதவியிலிருந்து விலக்கியதை, தமது கொள்ளைகளுக்கு, கொள்கைகளுக்கு அடிபணியாதவர்களை போட்டுத் தள்ளியதை, நீதியான விசாரணை செய்த அதிகாரிகளை பொய்குற்றம் சாட்டி  சிறையில் அடைத்ததை வசதியாய் மறைத்துவிட்டாரா? அல்லது வேஷம் போடுகிறாரா?  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.