Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று உலக தூக்க தினம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Ist möglicherweise ein Bild von Text „தூக்கம் இமைகளின் அருட்கொடை! இரவுகளின் உறவு! கனவுகளின் வாழிடம்! கவலைகளின் தொலைவிடம்! பொய் கொள்ளும் மரணம்! "தூக்கம்" தூக்கம் பெரிய கள்ளன். பாதி வாழ் நாளை கொள்ளையடிக்கிறான். நன்றாக தூங்கினால் நலமாக வாழலாம் நன்றிகளும் பிரியங்களும்.“
 
இன்று உலக தூக்க தினம்: நன்றாக தூங்கினால் நலமாக வாழலாம்
இன்று உலக தூக்கம் தினம்.13.03.2021
ஒவ்வொருவருக்கும் ஆழ்ந்த தூக்கம் எந்த அளவுக்கு அவசியமானது என்பதை அறிந்து கொள்வதற்காக உலக நாடுகளில் இன்று தூக்கம் தினம் கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பேர், மற்றவர்களால் தாங்க முடியாத அளவுக்கு இரவில் குறட்டை விடுவதாக உலகச் சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்களில் 4–ல் ஒருவரும், பெண்களில் 9–ல் ஒருவரும் குறட்டை மற்றும் தூக்கமின்மை பிரச்சினையில் அவதிப்படுவதாக தெரிய வந்துள்ளது.
குறட்டை விட்டு மற்றவர்களை நோகடிப்பவர்களில் 90 சதவீதம் பேர் அதற்குரிய சிகிச்சை முறைகளை எடுத்துக் கொள்வதில்லை. நிறைய பேர் குறட்டையை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.
குறட்டையும், தூக்கமின்மையும் மிகவும் அபாயகர மானது. தூக்கமின்மை நீடித்தால் அது காலப்போக்கில் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி விடும்.
குறட்டை மற்றும் தூக்கமின்மையை உடனே கவனிக்க வேண்டும். இல்லையெனில் அது ரத்த அழுத்தம், நீரிழிவு, பக்கவாதம் உள்ளிட்ட பல விபரீத நோய்களுக்கு வழிவகுத்து விடும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
எனவே எப்படியாவது நன்றாக தூங்குங்கள். எந்த வகை பயிற்சிகளாவது செய்து ஆழ்ந்த, சீரான தூக்கத்தை வரவழைத்து கொள்ளுங்கள்.
தூக்கம் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும் என்றாலும் ஒரு நாளில் ஒருவர் 8 மணி நேரம் தூங்குவது நல்லது. குறைந்தபட்சம் 6 மணி நேர தூக்கமாவது அவசியம்.
சிலருக்கு அதிகம் தூக்கம் வரும். அதுவும் நோயின் அறிகுறியாகும்.
சிலருக்கு தூக்கமே வராது. இதுவும் நல்லதல்ல. நாளடைவில் இது சோர்வை ஏற்படுத்தி விடக்கூடும்.
தூக்கம் என்பது ஒவ்வொரு மனிதர்களுக்கும் மிகவும் இன்றியமையாதது. எனவே சீக்கிரம் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
படுத்தவுடன் சிலர் அடுத்த சில நிமிடங்களிலேயே தூங்கி விடுவர். ஒரு சிலருக்கு புரண்டு புரண்டு படுத்தாலும் கூட தூக்கம் வருவது சிரமம். வெகு நேரம் விழித்திருக்க வேண்டிய நிலைமை.
கடினமான உழைப்பு உழைத்துவிட்டு வந்தாலும் சிலருக்கு சாமான்யமாக தூக்கம் வராது.
தூக்கம் என்பது மனதோடு சம்பந்தப்பட்டது. மனது அமைதியாக இல்லை என்றால் எத்தனை நேரம் ஆனாலும் தூக்கம் என்பது வராது.
பொதுவாக கடுமையான உழைப்பிற்கு பின்பு தூக்கம் வரவேண்டும். ஆனால் மனது அமைதியின்றி இருந்தால் நிச்சயமாக தூக்கம் வராது.
மனது அமைதி இல்லாமல் இருப்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அவற்றில் சில நம்பிக்கை இழத்தல், பயம், பொறாமை, தோல்வி மனப்பான்மை, ஏமாற்றம் போன்றவை.
மனது இதுபோன்று காரணங்களால் பாதிக்கப்படும்போது அவைகளை பற்றியே சிந்தனையே இருக்கும். கண்ணை மூடினாலும் நம்பிக்கை இழத்தல், பயம், பொறாமை, தோல்வி மனப்பான்மை, ஏமாற்றம் போன்றவை திரைப்படம் மாதிரி ஓடி கொண்டு இருக்கும்.
சிலருக்கு எதையும் உடனேயே மறந்து விடும் சுபாவம் உண்டு. அதனால் அவர்கள் எப்பேர்பட்ட நிலையிலும் எந்த சூழ்நிலையிலும் எதை பார்த்தும் கேட்டும் கவலை படமாட்டார்கள். எதையும் டேக் இட் ஈசி என்று போய் விடுவர். இடியே பக்கத்தில் விழுந்தால் கூட கவலைபட மாட்டார்கள்.
அவர்களுக்கு தூக்கம் என்பது ஒரு பிரச்சனையே இருக்காது.
ஆனால் எது நடந்தாலும் அதை மனதிற்கு எடுத்து சென்று கவலைப்படுபவர்கள், அதையே நினைத்து கொண்டு இருப்பவர்களுக்கு கண்டிப்பாக தூக்கம் ஒரு பிரச்சனையாகத்தான் இருக்கும். இதுபோன்றவர்கள் தூக்க பிரச்சனையிலிருந்து விடுபட என்ன வழி?
ஒரே வழி அவர்கள் மனதை சரி செய்வதுதான்? மனதை எப்படி சரி செய்யமுடியும்?
தியானம் என்னும் உயரிய கலைமூலம் மனதை சரி செய்யலாம். ஒருவர் தியானம் தொடர்ந்து செய்யும்போது அவருடைய மனது சாமான்யமாக உணர்ச்சிகளுக்கு அடிமையாகாது. எந்த ஒரு செயலையும் சிந்தனையையும்
பகுத்து அறிய மனதினை தியானம் தயார் செய்கிறது. மனது பகுத்து அறியும்போது ஏன் கவலை படவேண்டும், ஏன் பயப்பட வேண்டும், ஏன் பொறாமை பட வேண்டும், ஏன் தோல்வியை நினைத்து வருத்தப்பட வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பித்து விடும். கவலைபட்டு ஒன்றும் ஆக போவதில்லை,
பொறாமை பட்டு ஒன்றும் ஆக போவதில்லை, தோல்வியை நினைத்து ஒன்றும் ஆக போவதில்லை என்று சிந்திக்க ஆரம்பித்து விடும். அப்படி ஒரு நிலை வரும்போது மனது இலகுவாகிறது. அங்கு எந்த அவ நம்பிக்கை, பயம், பொறாமை, தோல்வி போன்ற சிந்தனைகளுக்கு இடம் இல்லை. அதுபோன்ற மன நிலையினை தியானம் தயார் செய்கிறது.
எனவே இதுபோன்ற மனநிலை ஏற்படும்போது ஒருவருக்கு தூக்கம் என்பது ஒரு பிரச்னை இல்லை. மனதை சரி செய்யவில்லை என்றால் தூக்க மாத்திரை சாப்பிட்டால் கூட தூக்கம் வராது.
மேலும் தியானம் செய்வதினால் உடலுக்கும் மனதுக்கும் நல்ல ஓய்வு கிடைக்கிறது. ஒரு சில நிமிடங்கள் செய்யும் தியான பயிற்சியினால் கிடைக்கும் ஓய்வானது 6 மணி நேரம் தூங்கினால் என்ன ஓய்வு கிடைக்குமோ அந்த ஓய்வு
நன்றிகளும்
பிரியங்களும்.
 
முகநூலிருந்து......
  • கருத்துக்கள உறவுகள்

இன்று... வெள்ளிக்கிழமை... 
"தூக்க தினம்"  வருவதால்.
அதனை.. கண்டித்து, சனிக்கிழமை வரை,
தூங்காமல் இருக்க,  முடிவெடுத்துள்ளேன். 😎

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

ஒரு சில நிமிடங்கள் செய்யும் தியான பயிற்சியினால் கிடைக்கும் ஓய்வானது 6 மணி நேரம் தூங்கினால் என்ன ஓய்வு கிடைக்குமோ அந்த ஓய்வு

தியானம் என்ன மாதிரிச் செய்யிறது...?

ஆரைக் கேட்டாலும்...என்னை ஒரு மாதிரிப் பாக்கிறாங்கள்!

உங்களுக்கு ஏதாவது வசப் படுகுதா, அண்ணை?🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, தமிழ் சிறி said:

இன்று... வெள்ளிக்கிழமை... 
"தூக்க தினம்"  வருவதால்.
அதனை.. கண்டித்து, சனிக்கிழமை வரை,
தூங்காமல் இருக்க,  முடிவெடுத்துள்ளேன். 😎

உதென்ன இது......நோர்மலாயே   வெள்ளிக்கிழமை தொடங்கினால் உப்பிடித்தானே.....
ஏதோ புதிசு மாதிரி...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

உதென்ன இது......நோர்மலாயே   வெள்ளிக்கிழமை தொடங்கினால் உப்பிடித்தானே.....
ஏதோ புதிசு மாதிரி...:cool:

வேலை நாளில்... 20:00 மணிக்கு வாற, நித்திரை...
ஒண்டுக்கு இருக்க, 23:00 மணிக்கு எழுப்பி விட்டுடும்.
அதுக்குப் பிறகு, தூக்கம் வராமல்,  இருந்து...
 "அலாரம்"  அடிக்கும்  நேரம்... 
அந்த... ஒரு தூக்கத்திலிருந்து, விழித்து எழுவது மிகக்  கொடுமை.

இந்த... நித்திரை, முதலே வந்திருந்தால்... 
நல்லது, என்பது போன்ற வெறுப்புடன்..
வாழ்க்கைச்  சக்கரம் ஓடிக் கொண்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
41 minutes ago, புங்கையூரன் said:

தியானம் என்ன மாதிரிச் செய்யிறது...?

ஆரைக் கேட்டாலும்...என்னை ஒரு மாதிரிப் பாக்கிறாங்கள்!

உங்களுக்கு ஏதாவது வசப் படுகுதா, அண்ணை?🤔

வீட்டிலை தியானம் எண்டால் இடி விழுந்தாலும் ஒண்டும் தெரியாத மாதிரி சிவனே எண்டு இருக்க வேணும். அப்பதான் முழுப் பலனும் கிடைக்கும். எல்லாம் வசப்படும்.😎

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புங்கையூரன் said:

தியானம் என்ன மாதிரிச் செய்யிறது...?

ஆரைக் கேட்டாலும்...என்னை ஒரு மாதிரிப் பாக்கிறாங்கள்!

உங்களுக்கு ஏதாவது வசப் படுகுதா, அண்ணை?🤔

உங்களின் அருகில் இருப்பவரை அருகில்  வைத்து விட்டு  இதயத்தில் இருப்பவரை நினைவுக்குள்  இழுத்து வாருங்கள் தியானம் வசப்படும்........நான் கடவுளை சொல்கிறேன்......!   😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.